எந்த வித அறிகுறியையும் காட்டாமல், நம் உடலில் ரகசியமாக உருவாகி, சிறிது சிறிதாக நம் மன உறுதியை உடைத்து இறப்பின் வாசலுக்கே அழைத்துச் செல்லும். சாகும் நாள் தெரிந்துவிட்டால் சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட வாழும் நாள் நரகமாகவே இருக்கும்.. பிறக்கும் எல்லோருமே இறக்கபோவது உறுதி என்று தெரிந்து இருந்தாலும் கூட, மரணத்தை வாசலில் உட்காரவைத்து விட்டு அது எப்போது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம் என்ற பயத்துடனே ஒவ்வொரு நொடியையும் வாழும் வாழ்க்கை நரகம் தான். உடலை வேதனைப்படுத்தி அதன் மூலம் மனதை, நம்பிக்கையை தளர்த்தி, தகர்த்தி கடைசியில் வெல்லும் ஒரு நோய்தான் புற்று நோய். அமைதி, மன உறுதி, நோயைப் பற்றிய தெளிவும் இருந்தால் எந்தவிதமான புற்றுநோயால் பாதிக்கப் பட்டாலும், அதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு சந்தோஷமாக வாழலாம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் நம்முடன் ஆரோக்கியமாக பலகாலமாக வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இதற்கு இறப்பு ஒன்று தான் முடிவு என்ற நிலை மாறி, பக்கவிளைவுகள் இல்லாத பலவிதமான மாற்று சிகிச்சை முறைகள் வந்து விட்ட நிலையிலும், மருந்து கால், மனசு முக்கால் என்ற வைத்திய மொழியின் அடிப்படையில், வீணான பயங்களை அகற்றி, நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழலாம் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கமே இந்த பதிவு
மார்பக புற்று பெண்களை தாக்காமலும், நோயால் தாக்கப்பட்டால் நோயிலிருந்து விடுபட பெண்கள் அனைவரும் சிறிதளவாவது விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். பெண்கள் தங்களை தாங்களே எப்படியெல்லாம் மார்பகத்தை சுயபரிசோதனை செய்துக்கொள்ளலாம் என இனி காணலாம்.
பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவு மற்றும் வடிவம் மாறி இருந்தாலோ, அக்குள், மார்பகங்களில் வழக்கத்துக்கு மாறாக தடித்தோ (அ) கட்டி மாதிரி இருந்தாலோ, மார்பகம் மேல் அசாதரணமாக சிவப்பு தடிப்புகள் தென்பட்டாலோ கண்டிப்பாக அதை சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது, வலி, காம்புகளில் இருந்து இரத்தமோ வேறு திரவமோ கசிந்தால் உடனடியாக தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது. புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. மார்பகத் திசுக்கள், மார்பகப் பகுதியில் மட்டுமே இருப்பதில்லை, அக்குள் பகுதியிலும் உண்டு. அக்குள் பகுதிகளில் உருண்டையாக தசைக் கோளங்கள் போல உருவாகி இருந்தால் சில சமயம் அது கட்டியாக கூட இருக்கலாம், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்
புற்று நோய்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
முதல் வகை புற்றுநோய் நாளங்கள் தடிப்பதின் மூலம் தொடங்கும்.
இரண்டாம் வகை புற்றுநோய் மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் தொடங்கும்.
மூன்றாம் வகை புற்றுநோய் மார்பகம் முழுவதும் பரவிய பின், அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களிலும், எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் எல்லா லிம்ப் நோட்களிலும் புற்று நோய்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
முதல் வகை புற்றுநோய் என்பது, நாளங்கள் தடிப்பதின் மூலம் தொடங்கும்.
இரண்டாம் வகை புற்றுநோய் என்பது, மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் தொடங்கும்.
மூன்றாம் வகை புற்றுநோய் என்பது மார்பகம் முழுவதும் முற்றிலும் பரவிய பின், அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களிலும், எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் எல்லா லிம்ப் நோட்களிலும் பரவியிருக்கும்.
மார்பகப் புற்று நோயில் நான்கு நிலைகள் உள்ளன.
1. வேறு எங்கும் பரவாமல் மிகச் சிறிய அளவில் மட்டுமே கட்டியாக முதலில் மார்பகம் மட்டுமே தாக்கிய நிலை.
2. மார்பகம் மற்றும் அக்குள் பகுதியையும் பாதித்து விட்ட நிலை.
3. மார்பக தோல் மற்றும் மார்பக சுவரை தாண்டியும், அக்குள் பகுதியிலுள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவிய நிலை.
4. மூளை, எலும்புகள் என உடலின் மற்ற பாகங்கள், லிம்ப் நோட்கள் அனைத்திலும் முற்றிலும் பரவி விட்ட நிலை.
சிறுவயதிலிருந்தே தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு உடலில் உருவாகி, கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனக் கூறலாம். மேலும் கேரட்டில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் (நோய் எதிர்ப்பு சக்தி) அதிகம் உள்ளதால், அடிக்கடி உணவில் கேரட்டை சேர்த்துக் கொண்டால் புற்றுநோயை அடியோடு வராமல் தடுக்கலாம். ஆம் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது கேரட்.
அகத்திக்கீரை, முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
மேலும் உணவில் முளைக்கட்டிய பயறு, நெல்லிக்காய், முட்டைக்கோஸ், கேரட், பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை, சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ், ஆப்பிள், மாதுளை, திராட்சை, பப்பாளிப் பழம் மற்றும் தர்பூசணிப் பழங்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நோயால் தாக்கப்பட்டால் அதன் பின் உணவு வகைகளில் அசைவத்தில் அறவே தவிர்க்க வேண்டியவை ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி.
மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் வேப்பிலையும், மஞ்சளும் தினமும் ஆண்/பெண் இருபாலரும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் அணுக்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டு, எந்த வகையான புற்று நோயும் நம்மை அண்டாது