சனி, 16 நவம்பர், 2013

பாரம்பரியமான கம்பு உணவு

கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.


கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. 


தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.



வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் (நம்மில் பலர்) இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும். கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும். 


நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள். 

கம்பஞ்சோறு
* * * * * * * * *
கம்பு குருணையை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து குக்கர் (அ) மண்சட்டியில் வேகவிடவும்.
கம்பஞ் சோறுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து அரிசி உணவு மாதிரியே உண்ணலாம் (அ) சிறுசிறு உருண்டைகளாக்கி ஒரு மண்பானையிலிட்டு நீரை ஊற்றி வைத்து விட்டால் இரண்டு நாட்களுக்கு கெடாமல் இருக்கும். 


கம்பு இட்லி.
* * * * * * * * 
கம்பு - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


கம்பு அடை
* * * * * * * *
கம்பு மாவு- ஒரு கப்
சின்ன வெங்காயம்- 10
வர மிளகாய்- 4
சோம்பு- சிறிதளவு 
கொத்துமல்லி, கறிவேப்பிலை இலை- ஒரு கைப்பிடி 
நல்லெண்ணெய் மற்றும் உப்பு- தேவையான அளவு 


கம்பு சட்னி
* * * * * * * * 
கம்பு - கால் கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவியது- சிறிதளவு
வர மிளகாய் – 6
உப்பு தேவைக்கு ஏற்ப 
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க

இனிப்பு கம்பு அடை
* * * * * * * * * * * * *
கம்பு மாவு - ஒரு கப்
பனக்கற்கண்டு – 4 மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது -‍ ஒரு கைப்பிடி 
ஏலக்காய் – 1
நல்லெண்ணெய் ,உப்பு - தேவையான அளவு 


கம்பு உப்புமா
* * * * * * * * * 
கம்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 5 
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு
உளுந்து, கடலை பருப்பு கடுகு, சீரகம், கறிவேப்பிலை கொத்தமல்லி –சிறிதளவு.

கம்மங்கொழுக்கட்டை
* * * * * * * * * * * * * * *
கம்பு மாவு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 2

கம்பு புட்டு
* * * * * * * 
கம்பு மாவு - 1/4 லிட்டர்,
பனங்கற்கண்டு – தேவையான அளவு,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் – 2,
உப்பு - சிறிது,
நெய் - 2 தேக்கரண்டி.

கம்பு இனிப்பு, கார பொங்கல்
* * * * * * * * * * * * * * * * * * * 
கம்பு - 100 கிராம்
வெல்லம் - 50 கிராம் (இனிப்பு பொங்கல்)
மிளகு, சீரகம் -1 டீஸ்பூன் ( கார பொங்கல்)
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 1

கம்பங்கூழ்
* * * * * * * *
உடைத்த கம்புகுருணை : ஒரு கப்
தண்ணீர் : 3 கப்
மோர் : 2 கப்
சின்ன வெங்காயம் : 3 
உப்பு : தேவையான அளவு


கீழ்கண்ட அனைத்து கம்பு உணவுகளையும் மண்சட்டியில் செய்தால் சுவைகூடுவது மட்டுமில்லாமல் உடலிற்கும் மிகவும் நல்லது.



உணவே மருந்து

உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. அறுசுவைகளால் ஆனதே இந்த உடல்.

நாம் இப்போது எந்த வகை உணவு நம் உடலிற்கு உகந்தது இல்லையோ அதைத் தான் அதிகம்உண்கிறோம். நவீன உணவுகள் என்ற பெயரில் அதிக பட்சம் மைதாவால் ஆன நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகளை உட்கொள்வதுதான் நாகரீகம் என்ற விளம்பர மோகத்தில் சிக்கியதால் , நம் பழமையான பாரம்பரிய உணவு வகைகளை தீண்ட தகாத பொருட்களை பார்த்து விட்டதை போல எண்ணம் பலருக்கு. அதை உண்டால் நம் தரம் தாழ்ந்து விட்டது போல எண்ணுகிறார்கள்... கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை, சம்பா கோதுமை, மக்காசோளம், பார்லி, குதிரை வாலி, பனங்கற்கண்டு இந்த பெயர்களை எல்லாம் இனி வரும் காலங்களில் பிள்ளைகள் அறியாத விஷயமாக ஆகி விடும்.

இனியும் கூட இந்த வகை பாரம்பரிய உணவுகளை எடுத்து கொள்ளா விட்டால் வாழும் நாட்களை வியாதிகளுடன் நரகமாக வாழ வேண்டியது தான்.

வாரத்திற்கு ஒரு நாள் என பகல் நேரங்களில் கம்பு, புழுங்கலரிசி, தினை, வரகு, சாமை, கோதுமை ரவை, மக்காசோளரவை இவற்றில் சாதம் செய்து பச்சை காய்கறிகள், கீரை வகைகளை குழம்பாக்கி சேர்த்து உண்டு வர சர்க்கரை மட்டும் இல்லை நம் உடம்பில் இருக்கும் மற்ற பிரச்சனைகள் மொத்தமும் குணமாகும். கேரட், வெள்ளரி போன்றவற்றை சாலட் ஆகவும் இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.


இரவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பாத்தி மட்டுமே சாப்பிடாமல் கேழ்வரகு அடை, கம்பு அடை, கம்பு இட்லி என்றும் காலையில் வரகரிசிப் பொங்கல், திணை பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி, கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் என்று சாப்பிட்டால் உடல் எப்போதும் எந்த கோளாறும் இல்லாமல் இயங்கும்.

கம்பு, திணை, வரகு, சாமை, மக்காசோளம், சம்பா கோதுமை, மற்றும் கொள்ளு போன்றவற்றை ரவை போல (அரிசி நொய் போல ) உடைத்து கஞ்சியாக செய்து , இரவு வேளையில் இரண்டு அல்லது மூன்று டம்பளர்கள் குடித்தால் மிகவும் நல்லது .. அனைவருக்கும் ஏற்ற இரவு உணவு இது. பெரும்பாலும் இரவில் வயிறு நிறைய உணவு உண்ணக்கூடாது.. அதிலும் சர்க்கரை வியாதிக்காரர்கள் முழு வயிறு நிறையும் அளவு உண்ணவே கூடாது என்றாலும் கூட, இந்த கஞ்சியை சர்க்கரை வியாதிக்காரர்கள் இரவில் முழு வயிறு நிறையும் அளவு கூட குடிக்கலாம்... இதனால் உடலில் சர்க்கரையின் அளவு ஏறாது..இது இவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும்.
இஞ்சி,புதினா, கொத்துமல்லி, பிரண்டை, கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றில் துவையல் செய்து இந்த கஞ்சிக்கு தொட்டும் சாப்பிடலாம்.

கேழ்வரகு தானியங்களில் அதிக சத்துமிக்கது. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்தது.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச் உள்ளது. பி 11 வைட்டமின் ரைபோபிளேவின் நயாசின் சத்து உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது. வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் உள்ளது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகள் சோள உணவு சாப்பிட கூடாது.



வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. வரகு மாதவிடாய் கோளாறுகளை சரி பண்ணும்.

சாமை மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகமாக்கி ஆண்மை குறைவையும் போக்கும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் போக்கும்.

பார்லியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பார்கள். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். மலச்சிக்கலை போக்க வல்லது. காய்ச்சலை தடுக்கும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். சிறுநீர் தடையில்லாமல் செல்ல உதவும். எலும்புகளுக்கு உறுதி கொடுக்கும். இருமலை நிறுத்தும். குடல் புண்ணை ஆற்றும்.

பைபோலர் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder)

இரண்டு வெவ்வேறு குணாதிசயங்களை ஒரு சேரக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சில வேளைகளில் ஆத்திரம், கோபம், மன அழுத்தம், அதிக சந்தேகம் ஆகிய குணாதிசயங்களுடனும் , சில வேளைகளில் அளவுக்கு அதிகமான சந்தோஷத்துடன், அதிபுத்திசாலித்தனத்துடனும் காணப்படுவார்கள்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையும் செய்யாமல் யாருடனும் சேராமல் ஒரு மூலையில் அமைதியாக இருப்பார்கள். அதிக அளவு உணர்ச்சி வசப்படுவார்கள். எப்போதும் தூக்கமே இல்லாமல் படுக்கையிலேயே மணிக்கணக்காக விழித்திருப்பார்கள். இல்லையென்றால் நாள் முழுவதும் உறங்கிக்கொண்டே இருப்பார்கள்.

மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும், களைப்படையாமலும், சுறுசுறுப்புடனும், வேகமாவும் பேசிக்கொண்டு வேலை செய்வார்கள். திடீரென்று அமைதியாக, சோகமாக மிகுந்த கவலையுடன் காட்சியளிப்பார்கள்.
அதிக அளவில் பாதிப்பு உள்ளவர்கள் தன்னையோ (அ) அடுத்தவரையோ தாக்குவார்கள். தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் என மோசமான நிலைக்கு தன்னையுமறியாமல் தள்ளப்படுவர்.

மனநிலையை ஒழுங்குபடுத்துதல், தியானம், யோகா போன்றவற்றால் பைபோலர் டிஸ்ஆர்டரை வேகமாக குணபடுத்த முடியும்.

தன்னிலை மறந்து இருப்பவர்களை நாம் பேசி புரிய வைப்பது என்பது முடியாத காரியம். அவர்கள் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே அவர்களால் உணர முடியாது.. அவர்களை மிகவும் கவனத்துடனும், அன்புடனும் கரிசனத்தோடு கவனித்து சீர்படுத்தி கொண்டு வரலாம்.