வியாழன், 19 நவம்பர், 2015

http://www.dinamalar.com/supplementary_detail.asp…
நான் எழுதுகின்ற உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான செய்திகள் அனைவரையும் சென்றடைய பாதை அமைத்துக்கொடுத்த தினமலர் நிறுவனத்தாருக்கும், ஆதரவளித்த உங்களுக்கும் நன்றிகள்.
தொடர்ந்து படித்து- படித்ததை செயல்படுத்தி ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள். 
காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, மலேரியா குணமாக.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஏழை-பணக்காரர், கிராமம்-நகரம், குடிசை-மாடி வீடு என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாவற்றையும் “வெள்ளம்” என்ற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தெருவில் நிறுத்தி இருக்கும் மாமழை, சாக்கடை-நல்லநீர் என்ற வித்தியாசமும் இல்லாமல் செய்திருக்கிறது.
அரசும், அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் , பொதுமக்களும் பாதிக்கப்பட்டோரை வெள்ளத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இப்போதைய நேரடி பாதிப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல வெள்ளம் வடிந்தபின் வரப்போகும் ஆரோக்கிய பிரச்சினைகளும்.
எங்கும் நிறைந்திருக்கும் சாக்கடை கலந்த நீர் ஆங்காங்கு தேங்கி கொசுக்களின் சொர்க்கமாய் மாறிவிடும். கொசுக்கள் மிகவும் ஆனந்தமாக மலேரியா முதல்- டெங்கு வரை நோய்களை பரப்பும்.
இந்த நேரத்தில் பொதுமக்கள் கூடுதல் விழிப்புடனும், அக்கறையுடனும் இருக்க வேண்டும். தேங்கி இருக்கும் நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தேங்காய் சிரட்டை முதல், விளையாட்டு பொம்மைகள், டயர்கள் என எங்கே சிறிதளவு நீர் தேங்கி இருந்தாலும், அதனை அலட்சியம் செய்யாமல் வெளியேற்ற வேண்டும்.
காய்ச்சல் வருவது போல தோன்றினால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் இருந்தால் நிலவேம்பு கஷாயம் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை என ஒரு நாளில் நான்கு முறையும், விட்டு விட்டு காய்ச்சல் இருந்தால் பப்பாளி இலை சாறு 2 டீ ஸ்பூன் மூன்று நாளைக்கு வெறும் வயிற்றில் காலை உட்கொள்ள, சாதாரண காய்ச்சல் முதல், உயிர் கொல்லும் மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்கள் கூட குணமாகும்.
கவனம் ஆரோக்கியமே முதல் மூலதனம்...
வாழ்க வளமுடன்.
வெண் புள்ளி (Leukoderma)
* * * * * * * * * * * * * * * * * * * * *
தன்னுடைய தாய் தன்னுடைய சாப்பாட்டு தட்டை கழுவி வீட்டிற்கு வெளியே வைத்ததை பார்த்த மகன் (குடும்பத்தில் மற்ற அனைவரின் சாப்பாட்டு தட்டுகளும் வீட்டிற்கு உள்ளே வைக்கப்படும்) மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்.
பெற்ற தாயே இந்த ஒரு மகனை மட்டும் வேறுபடுத்தி, ஒதுக்கி வைக்க காரணம் என்ன தெரியுமா?? லூக்கோடெர்மா என்று சொல்லக்கூடிய வெண்புள்ளி, வெண்குட்டம், வெண்படை எனவும், ஆங்கிலத்தில் "மெலனின் நிறமி குறைபாடு"
இதற்கு இது யாரிடமிருந்தும் யாருக்கும் தொற்றாது. பரம்பரை பாதிப்பும் கிடையாது. அதனால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அதைப் பற்றி இங்கு மக்களிடையே பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள் தான் அதிகம். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் உலக அளவில் 2 சதவிகித மக்களும், இந்தியாவில் 4 சதவிகித மக்களும் என தகவல்கள் கூறுகின்றன.
மனித மனங்களை பெரிய அளவில் தாக்கும் ஒரு சில வியாதிகளில் மிக முக்கியமானது வெண் புள்ளி (leukoderma). நித்ய கண்டம், பூரண ஆயுள் என்பார்கள், அதுபோல மரணபயமில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் ஒருவித மன அழுத்தத்தை இந்த வியாதி உருவாக்கி தினசரி மனத்தால் மரணத்தை சந்திக்க கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.
நமது உடலில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால் தான் வெண்புள்ளிகள் உருவாகிறது. இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, எதிர் வினையை ஏற்படுத்துவதால், நிறப்பொருள் அணுக்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும், நிறப்பொருள் அணுக்கள் தம்முடைய பணியைச் சரிவரச் செய்யாது.
இந்த நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தைராய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள், நீரிழிவு, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைவு, வைட்டமின் குறைபாடு ஆகியவைகளால் இவை உருவாகும்.
கதிரியக்க வலைக்குள் கட்டுப்பட்டு கிடக்கும் வாழ்க்கை முறையும், அசைவ உணவுகளுடன் பால் பொருள் உணவுகளை சேர்த்து சாப்பிடுவதும் மிக முக்கிய காரணங்கள். தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அதிகம் வருகிறது. அமீபியாஸ், குடல் நோய்கள், குடற் பூச்சிகள், இரத்தச்சோகை, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின் தாக்குதலாலும் இவை ஏற்படும். இந்தக் குறைபாடு எப்போதுவேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றலாம்.
பொதுவாகவே அசைவ சாப்பாடு உடலுக்கு அத்தனை நலம் பயப்பதில்லை என்றாலும். நம் வாழ்க்கை – உணவு முறை அசைவத்திற்கு நம்மை அடிமையாக்கியே வைத்திருக்கிறது.
ஆனால் அந்த அசைவ உணவுடன், சிக்கன்-மட்டன்-மீன் போன்ற உணவுகளை சாப்பிடும் போது பால்-தயிர் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் ஆபத்தின் அளவை குறைக்க முடியும். நம் முன்னோர்கள் நமக்கு பலவழிகளில், பலமுறை இவ்வுணவு முறைகளை அறிவுறுத்தி இருந்தாலும், நாம் அவர்களின் கூற்றுகளை புறக்கணித்ததின் விளைவே இந்நோய்.
படுப்பதற்கு முன் குழந்தைகள் பால் குடித்தால் நல்லது என்று யாரோ கிளப்பி விட்ட வதந்தியை பிடித்துக்கொண்ட நம்மூர் மக்கள், இரவில் வறுத்த-பொறித்த மீன்- இறைச்சிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு, சற்று நேரத்திற்குள்ளாகவே பாலையும் காய்ச்சி குடிக்க கொடுப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு பதிலாக வெண்புள்ளி நோயை விருந்து வைத்து அழைப்பது போலாகும். ஒருமுறை இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி விட்டால் அதை குணப்படுத்துவதற்கு எத்தனையோ செலவுகள் செய்து இரசாயண மருந்துகளை உட்கொண்டும் கூட, நோய் முற்றிலும் குணமாகாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுபவர்களை கண்கூடாக காண்கிறோம்.
இந்த நேரத்தில் இன்னொரு தகவலையும் பதிவு செய்தே ஆக வேண்டும். இன்றைய உலகின் பெரும்பாலான மருத்துவ கண்டுபிடிப்புகள் இராணுவ தேவைகளுக்கான ஆராய்ச்சியின் பலனே ஆகும். யுத்தகால ராணுவ உதவிக்காக ராணுவ-மருத்துவ ஆய்வு துறை கண்டுபிடித்து, பின்னாளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களே அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.
அந்த வகையில் இந்த வெண்புள்ளி நோயால், தினம் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக, மிக குறைந்த செலவில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், நோய் முற்றிலும் குணமாகக் கூடிய மருந்தை நம் நாட்டு "மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்" கண்டுபிடித்திருக்கிறது. பக்கவிளைவுகளே இல்லாமல் என்ற உடன் நீங்கள் நம் பாரம்பரிய மூலிகைகளை நினைத்தால்... உங்கள் புரிதலும்- தெளிவும் முற்றிலும் சரியானது.
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்து முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆங்கில மருந்தை நீண்ட நாள் சாப்பிட்டு வருபவர்களுக்கு அதில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், மூலிகை மருத்துவத்தில் ஆரோக்கியம் மட்டுமே உங்களிடம் மீட்டு அளிக்கப்படும். இலவச இணைப்பாக வேறு எந்த பக்க விளைவுகளையும் இணைப்பதில்லை.
உடலியக்கத்தைச் சீராகச் செயற்பட வைப்பது தான் இதற்கான சரியான சிகிச்சைமுறை. இந்த நோய்க்கான சிகிச்சையை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத மூலிகை - இயற்கை வைத்திய முறைகளை மட்டுமே பயன்படுத்தி, நிரந்தர குணமாக்கும் சேவையை மிக குறைந்த செலவில் வழங்குகிறது எங்களின் "பீனிக்ஸ் ஹெல்த் கேர்" நிறுவனம். 
“ பீனிக்ஸ் ஹெல்த் கேர்” "PHOENIXX HEALTH CARE"
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அக்குபஞ்சர் சிகிச்சை முறை மற்றும் பாரம்பரிய உணவு முறைகளால் மட்டுமே பக்கவிளைவுகளற்ற மருத்துவத்தை மக்களுக்கு கொடுத்து ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், தக்கவைக்கவும் முடியும் என்பதே என்னுடைய மாறாத நம்பிக்கை.
இந்த நம்பிக்கையின் அடுத்தகட்டமாக உடல்நலனில் பாதிப்படைந்தவர்களுக்கு நிரந்தர தீர்வளிக்கும் நோக்கத்துடனும் , மருந்தில்லா மருத்துவமுறைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் எண்ணத்துடனும், உணவே மருந்து என்பதின் அவசியத்தை வலியுறுத்தும் நல்லெண்ணத்தில் சென்னை – வடபழனி, நூறடி சாலையில் அமைந்துள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டல் எதிரில்
“ பீனிக்ஸ் ஹெல்த் கேர்”
என்ற பெயரில் ஒரு உடல்நல பாதுகாப்பு மையத்தை திறக்க இருக்கிறோம்.
இரத்த கொதிப்பு, சர்க்கரை, தலைவலி இது போன்ற பல நாள்பட்ட ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டவர்கள் தகுந்த ஆலோசனையும், அக்குபஞ்சர் சிகிச்சையும் பெற்று நிரந்தர குணம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
மருந்தில்லா மருத்துவம். நிரந்தர ஆரோக்கியம்.
அன்புடன்,
“நலம் வாழ” ஈஸ்வரி,
அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர்.
நாயுருவி இலை குழம்பு
---------------------------------------------
நாயுருவி இலை - ஒரு கைப்பிடி,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - பத்து பல்,
புளி - எலுமிச்சை அளவு,
குழம்பு மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
உப்பு, மஞ்சள் பொடி - தேவையான அளவு,
எண்ணெய் - தாளிக்க.
மண்சட்டியில் அரைடீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் நாயுருவி இலையை வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து, விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சப்பொடி சேர்த்து, மண்சட்டியில் எண்ணெய் விட்டு தாளித்து, பின் இந்த கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மிளகாய் தூள் வாசம் போனதும் இறக்கி விடலாம்.
குழம்பு கொதிக்கும் போதே வாசம் சாப்பிட தூண்டும். சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். உண்ட உணவு இரண்டு-மூன்று மணி நேரத்துக்குள் சீராக செரிமாணம் ஆகி இருப்பதை உணராலாம்.
சரியான செரிமாணம் இல்லாதவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பாருங்கள். மிகவும் எளிதான செய்முறை கொண்ட இம்மூலிகையின் பலன்களை ஏற்கனவே
பதிவில் கூறி இருக்கிறேன்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நாயுருவி (Achyranthes aspera)
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
நாயுருவி கண்டால் வசீகரமாம் காண் - சித்தர் கூற்று.
கிராமபுறங்களில் கொல்லைக்காடுகளிலும், நகர்ப்புறங்களில் சாலையோரங்களிலும் வெகு சாதாரணமாய் தென்படும் இந்த நாயுருவி (Achyranthes aspera) ஒரு வெகுசக்தி வாய்ந்த மருத்துவ மூலிகைகச் செடியாகும்.இது ஒரு குத்துச்செடி வகையை சார்ந்தது.
எல்லா இடங்களிலும் தானே வளரும் தன்மை கொண்ட நாயுருவிச் செடியில் அரிதான மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கின்றது. எப்போதும் போல நல்லவற்றை எல்லாம் நாம் கண்டுகொள்வதே இல்லைதானே.
நீள நீளமான குச்சிகளில் கீழ்நோக்கியபடி ஒட்டவைத்த நூற்றுகணக்கான அரிசிகள்தான் இதன் விதைகள். ஏதேனும் சிறு விலங்குகள் இந்த செடியை உரசியபடி ஓடும்போதோ, மனிதர்கள் இந்த செடியை உரசியபடி கடக்கும் போதோ இந்த விதைகள் அவற்றுடன் ஒட்டிக்கொண்டு விடும். அந்த விதை நன்கு காய்ந்த பின் உதிர்ந்தும் விடும். இந்த செடியின் விதைகள் பரவுவதற்காக இயற்கை அமைத்த வழிதான் இது.
இதில் செந்நாயுருவி, கருநாயுருவி, வெண்நாயுருவி என மூன்று வகைகள் இருக்கின்றன. இந்த மூன்று வகைகளுமே மருத்துவ குணம் சார்ந்தது என்றாலும் கருநாயுருவி ("கரு"நாயுருவி) தான் கிடைத்தற்கரியது. கருநாயுருவி கஷாயத்தை கர்ப்ப காலத்தில் மூன்று வேளை கொடுத்தால் சுகப்பிரசவம் ஆகும் என்கிறது சித்தர்களின் மூலிகை ஆராய்ச்சி முடிவுகள்.
சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம் என்று பல பெயர்களில் இந்த மூலிகை சித்தர்களின் குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.
மலைகளில் பாறைகளுக்கு இடையே வளரும் நாயுருவிச் செடியானது, பாறையில் துளையிட்டு வளரும் ஆற்றல் பெற்றது. இதனால் இதற்கு கல்லுருவி என்றொரு பெயருமுண்டு.
இந்த செடியின் வேரை வாயினுள் சில மணி நேரங்கள் வைத்து இருந்தால் நா வன்மை பெருகுமாம். நாவுருவி என்ற இதன் உண்மையான பெயர் மருவி நாயுருவி ஆகி இருக்கலாம்..
நாயுருவியின் இலை முதல் வேர் வரை எல்லாப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. மனிதனின் சிறுநீரக உறுப்புகளை சரிவர இயங்கச் செய்யும். நோய்களை நீக்கி உடலைத் தேற்றும். தேவையற்றச் சதைகளை நீக்கும். நரம்புகளை சரிவர இயங்கச் செய்யும். இதுவே இவற்றின் பொதுவான மருத்துவ குணங்கள் ஆகும்.
நாயுருவிச்செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக்கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். (நாயுருவியுடன் கிராம்பு, வேம்பு, சுக்கு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், ஏல அரிசி, கருவேலப்பட்டை, இந்துப்பு போன்றவற்றைச் சேர்த்து பற்பொடியும் தயாரிக்கலாம்.)
நாயுருவி வேர் மற்றும் பட்டையைக் கொண்டு பல் துலக்கினால் கறைகள் இல்லாமல், பற்கள் பளிச்சென்ற வெண்மை நிறம் பெறும்.
பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி, பற்களில் உண்டாகும் கூச்சம், சொத்தை, ஈறுகளில் உண்டாகும் வலி, வீக்கம் என வாய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும், நீக்குவதுடன் பற்களை பளபளவென மின்னச் செய்யும்.
நாயுருவி வேரால் 48 நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பற்களோடு சேர்ந்து முகம் அழகு பெறும். வசீகரம் கூடும். வாக்கு வன்மை உண்டாகும். சொன்னது பலிக்கும். நம்முள் நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும். மனசக்தி அதிகமாகும். நினைத்தவை நடக்கும்.
முகம் பொலிவு பெற்று, பேச்சில் தெளிவு கூடும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் தன்னம்பிக்கை பெருகும். தன்னம்பிக்கை பெருக பெருக அது ஏற்படுத்தும் சக்தி அலைகள் மற்றவரை வசியம் செய்யும். அதனால் இதை ஒரு வசிய மூலிகை என்றும் கூறலாம்.
மேலும் நாயுருவி செடியின் இலை முதல் வேர் வரை மருத்துவ மகிமைகள் கொட்டிக் கிடக்கின்றன. இம் மூலிகையைக் கொண்டு நம் சித்தர்கள், முன்னோர்கள் அதீத பசி, மூலம், கண் நோய்கள், பல், ஈறு சம்பந்தப்பட்ட வியாதிகள், காதில் சீழ் வடிதல், இருமல், அனைத்து வகையான காய்ச்சல்கள், இருமல், பேதி , மலசிக்கல், மூலம், நீர்கட்டுபோன்ற வியாதிகளில் இருந்து எளிய முறையில் தீர்வும் கண்டுள்ளனர்.
சிறுநீரகக் கட்டி, சிறுநீரகக் கற்கள், இரத்தத்தில் உப்பு மற்றும் கிரியாட்டினைன் அதிகரித்த நிலை போன்ற மனிதர்களை மிரட்டும் வியாதிகளில் இருந்தும் முழுவதுமாய் குணமாக்கும் ஆற்றல் மிக்கது இந்த நாயுருவி.
மாதவிடாய்க் கோளாறுகள் ,வெள்ளைப்படுதல், பால்வினை நோய்களால் ஏற்பட்ட புண்கள், வெப்பக்கட்டிகள், தேமல், படை, சொறி, தொழுநோய் போன்றவற்றைக் குணப்படுத்தவும் இம்மூலிகைப் பயன்படுகிறது. உடம்பில் நீர் கோர்த்தல், ஊதுகாமாலை, நீரிழிவு நோய், ஆறாத புண்கள், சீழ்வடியும் புண்கள், வெட்டுக் காயங்கள், விஷக்கடி போன்றவையும் முற்றிலும் குணமடையும்.
மன நோய்கள், மன பயம், மன உளைச்சல், தூக்க மின்மை, படபடப்பு போன்ற மனம், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளில் இருந்தும் அதிசயத்தக்க வகையில் பூரண குணம் பெறலாம்.
இதன் விந்தையான குணத்தால் சித்தர்கள் இரகசிய முறையாக தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளனர். நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டு, பசியையும், உணவையும் தவிர்த்து, காட்டிலேயே மனிதர்கள் கண்ணில் படாமல் இருக்க அவர்கள் மேற்கொண்ட எளிய வழிகளில் இதுவும் ஒன்றாம்.
மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, உடல் இரும்பைப் போல் உறுதியாகும். யானை பலத்தையொத்த அபார உடல்திறன், உடல் வனப்பு, முக வசீகரம் ஆகியன உண்டாகும்.
நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினசரி காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சிறு நீரக நோய்கள் அனைத் தும் தீரும்.
நாயுருவி இலையை வதக்கி மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து வைக்கும் குழம்பு மிகவும் அருமையான ருசியில் இருக்கும். யார் வைத்தாலும் அம்மாவின் கைமணம் கட்டாயம் இருக்கும். வாரம் ஒரு முறையாவது இதை உட்கொண்டு வந்தால், இம் மூலிகை தன்னுள்ளே கொண்டுள்ள மருத்துவ குணத்தால் உடல்நலனை பாதுக்காக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
உட்கொண்டாலும் மருந்து, அரைத்து பூசிக்கொண்டாலும் மருந்து.
அதுமட்டுமல்ல காய்ந்த செடிகளை எரித்து அதன் புகையை சுவாசித்தாலும் அதுவும் மருந்து. எறிந்த சாம்பலை குழைத்து பூசினாலும் மருந்து.
இந்துக்களின் பூஜை முறைகளில் ஹோமம் வளர்க்கும் முறையில் ஆல், அரசு குச்சிகளுடன் நாயுருவியும் இருப்பதை நாம் கண்டிருப்போம். ஆம். இது ஒரு தேவ மூலிகை.
ஃபார் எக்ஸ்டெர்னல் யூஸ் ஒன்லி என்று எச்சரிக்கை தாங்கிவரும் இரசாயண மருந்துகளை தவிர்த்து நாயுருவி போன்ற இயற்கை கொடுத்த சீதனங்களை உபயோகிப்பதன் மூலம் பக்கவிளைவுகளை தவிர்த்தும், உடலுக்கு வலுவூட்டியும் ஆரோக்கியம் காக்கலாமே!!!
ஓரிரு தொட்டிகளிலோ, காம்பவுண்ட் /வேலி ஓரத்திலோ ஓரிரு செடிகள் வளர்த்தால் போதுமானது. உங்கள் பொன்னான நேரத்தை வீணடித்து கூண்டு அமைத்து, உரம் போட்டு எல்லாம் வளர்க்க வேண்டிய கட்டாயமில்லை.
மக்கள் நலனிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணிக்கும் இந்த அற்புத மூலிகைக்கு கொஞ்சமே கொஞ்சம் தண்ணீரும், எப்போதாவது கொஞ்சம் இயற்கை எருவும் போனால் போகிறதென்று கொடுங்கள்.
இனி வேறொரு அரிதான மூலிகையோடு சந்திக்கறேன்.
மூலிகைகள்- சிறு தேடல்கள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
சித்தர்கள் இயற்கையில் விளைந்த மூலிகைகள் மூலம் மனித இனத்தை நோயில்லாமல் பாதுகாக்கவும், மனிதர்களைத் தாக்கும் நோய்களை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தவும், பல அரிய நூல்கள் மூலம் இன்றும் நமக்கு வழிகாட்டிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
சிறு வயதில் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் மூலிகைகளை கண்டும், உண்டும் இருக்கலாம். இப்போது மூலிகைகளின் பெயர்களை கேட்கத்தான் முடிகிறது. பார்ப்பது, உண்பது எல்லாம் அரிதாகி விட்டது. நம்மில் பலர் அதை கண்ணால் கூட கண்டதில்லை.
சித்தர்கள், முன்னோர்கள் நமக்கு அறிவுறுத்திச் சென்ற பல அதிசய மருத்துவ மூலிகைகளின் பலன்களை நம்மில் உணர்ந்தவர்கள் எத்தனை பேர்???
குழந்தைப் பருவத்திலிருந்தே இனம் புரியாத பல்வேறு நோய்களின் பிடியில் இன்று மனித இனம் சிக்கித் தவிப்பது மறுக்க முடியாத உண்மை. நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்ததைப் போல் நாமும் வாழ்கிறோமா என்ற கேள்வி நம்முள் வராமல் இல்லை.
இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம். நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை, அதன் அருமை, பெருமை புரியாமல் தவிர்த்து விட்டு, இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது, மூலிகைகள் எதுவுமே நம் கண்ணுக்கெட்டும் தூரத்தில் இல்லை.
இதற்கு தீர்வு தான் என்ன?
இனி வரும் காலங்களில் நம் வீடுகளில் பத்து மூலிகை செடிகளையாவது வளர்த்து, நோயில்லா உலகைப் படைப்போம்.

திங்கள், 27 ஜூலை, 2015

தாய்ப்பாலில் விஷம்



ஒரு பெண் குழந்தை வளர வளர பதின்பருவ தொடக்க காலத்தில் 
பெண்களுக்கான பாலியல் உறுப்புகள் வளர்ச்சி அடைகின்றன. இன்னொரு உயிரை தாங்கும் கருப்பை முதல், அந்த உயிருக்கு உணவு உற்பத்தி செய்யும் பால் சுரப்பிகள் வரை அந்த காலகட்டத்தில்தான் வளர ஆரம்பிக்கிறது.

இவைகள் வளர வளர பெண்ணுக்குள் கனிவு, கருணை, கர்வம், பயம் எல்லாம் கூடவே சேர்ந்து வளர்கிறது.கருப்பையில் வளர ஆரம்பிக்கும் உயிர் கருப்பையை விட்டு வெளியேறி வெளி உலகத்தின் காற்றை சுவாசிக்க தயாராகும் நேரத்தில், உயிரின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய பால் சுரப்பிகள் தங்கள் வேலையை தொடங்குகிறது.

இதுநாள் வரையில் கருப்பையில் வளர்ந்த உயிரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்த உடல், வெளிஉலக வாழ்க்கை முறைக்கு அந்த குழந்தையை பழக்கும் வரை, வெளியில் கிடைக்கும் உணவை உட்கொண்டு தமக்கு தேவையான சக்தியை சுயமாய் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் பெறும் வரை, தாய்ப்பால் தான் அக்குழந்தைக்கு ஆதராம்.

இந்த பால் சுரப்பிகள் ஒரு உணவுத் தொழிற்சாலை. இதில் புரதம், கார்போ-ஹைட்ரேட், அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்பிற்கான என்சைம்கள் ஆகியவை தேவையான அளவில் கலந்தே இருக்கும். இந்த சரிவிகித உணவானது பிறந்த உயிருக்கு தேவையான சக்தியை கொடுப்பதுடன் வெளிப்புற வாழ்க்கை முறையில் தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாக்கும் மருத்துவ சக்தியையும் கொடுக்கிறது.
சரி.

இதெல்லாம் நாம் ஏற்கெனவே கேள்விப்பட்ட தகவல்கள் தான். இப்போது ஒரு புதிய அதிர்ச்சியூட்டும் செய்தி. இதுநாள் வரையில் கலப்படமில்லாத உணவு என்று நாம் எதை நம்பிக்கொண்டிருந்தோமோ, அந்த தாய்ப்பாலில் விஷம் இருக்கிறது என்பதுதான் அந்த அதிர்ச்சி செய்தி.
அதெப்படி தாயின் உடலில் உற்பத்தியாகி நேரடியாக குழந்தையின் வாயில் புகட்டப்படும் தாய்பாலில் எப்படி விஷம் கலக்கும்? கலந்தது வேறு யாருமல்ல. நாமே தான், ஆம்....புதிய பசுமை புரட்சி கொடுத்த தீமைகளில் இதுவும் ஒன்று.

இது பற்றி கொஞ்சம் வேறொரு தளத்திற்கு பயணித்து உண்மை அறிவோம்.
பயிரிடும் விவசாயிகள் தங்களது பயிர்களை காக்க இரசாயண பூச்சிக்கொல்லிகளை உபயோகிக்க தொடங்கி ஆண்டுகள் பலவாகி விட்டது. முன்பெல்லாம் சாதாரணபூச்சிக் கொல்லிகளை பயன் படுத்தினார்கள். அந்த சாதாரண பூச்சிக்கொல்லிகளுக்கு பழகிய, வீரியம் பெற்ற பூச்சிகளை அழிக்கவும், மீண்டும் மீண்டும் தாக்கும் பூச்சிகளை அழிக்கவும் பயிரிலேயே சுமார் பத்து முதல் பதினைந்து நாட்களா வரை தங்கி வேலை செய்ய கூடிய ஊடுருவும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். (பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிய விஷ/ய/ம் இவைகள்) பயிர்கள் இளமையாய் இருக்கும்போது தெளிப்பது கூட பரவாயில்லை. ஆனால் பயிர்களில் உணவு உற்பத்தி தொடங்கிய பிறகு அவ்வாறு தெளிக்கப்படும் விஷம் பயிரில், தானியத்தில் ஊடுருவி அங்கு தங்கி விடுகிறது.

கைப்பு தொடங்கி, ஓரளவு விளைந்து நிற்கும் காலத்தில் அந்த விளைச்சலை தாக்கும் பூச்சிகளில் இருந்து பயிர்களை காக்க (??!!) அவர்கள் ஊடுருவும் பூச்சிக்கொல்லிகலான சிந்தெடிக் பைரித்ராய்டு வகையை சேர்ந்த சைபர் மெத்ரின், ஆல்பா மெத்ரின் போன்ற பூச்சிக்கொல்லிகளை தெளிக்கிறார்கள்.. விளைபொருளில் தாங்கும் அந்த விஷம் தன்னுடைய சக்தியை இழக்கும் முன்பாகவே அறுவடை செய்யப்பட்டு நுகர்வோருக்கு செல்கிறது. அதை வாங்கி உட்கொள்ளும் நுகர்வோர் உடலில் அந்த விஷம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கிறது.

விளைவு??
தாய்ப்பாலிலும் விஷம். அமெரிக்கா-ஐரோப்பிய யூனியன் போன்ற வளர்ந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட என்டோசல்பான் என்னும் அதிதீவிர விஷம் இந்தியாவில் தாராளமாய் விற்பனைக்கு உள்ளது. இதன் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத்தொடங்கி இருப்பதன் விளைவே, தாய்ப்பாலில் விஷம், கேன்சர், மலட்டுத்தன்மை எனும் மனித குலத்தை வேரறுக்கும் பல கொடிய வியாதிகள் வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பாலிலேயே விஷம் என்றால் கருப்பையில் வளரும் குழந்தைக்கு எப்படி சுத்தமான சத்துக்கள் கிடைக்கும்?

கொஞ்சம் யோசிப்போம். ஒரு சங்கிலி தொடர் நிகழ்வில் எதிர்கால சந்ததிகளை எப்படி முடக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கிறோம் என்பது புரிகிறதா??

நாம் எப்போது நம் முன்னோர்கள் கற்றுத்தந்த இயற்கை முறைக்கு திரும்ப போகிறோம்??? இதற்கு நவீன கால விஷம் தெளிக்கும் விவசாயியை மட்டும் குறை சொல்லி பயனில்லை.

இயற்கையை அவர்கள் கொண்டாடி பயிர் செய்த காலத்தில் அவர்களை புறக்கணித்து, அவர்களை வறுமையில் தள்ளியவர்கள் நாம் தானே.

இயற்கை விவசாயத்தை ஆதரிப்போம். நம் சந்ததிகளை ஊனமிலாமல் உருவாக்குவோம்!!!

ஞாயிறு, 21 ஜூன், 2015

வேர்க்கடலை பர்பியில் வெள்ளை விஷம்!!

வேர்க்கடலை பர்பியில் வெள்ளை விஷம்!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இராணுவத்தினர் காடு-மலைகளில் நீண்டகாலம், தூரம் பயணம் செய்யும் போதும், மலைச்சிகர பயணம் மேற்கொள்வோருக்கும் மிக முக்கியமாக கொடுக்கப்படும் உணவு என்ன தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள்!! நம்மூர் வேர்க்கடலை பர்பிதான் அது.
வேர்க்கடலையை ஒரு புரத வங்கி என்று சொன்னால் மிகையாகாது. வெல்லமும் வேர்க்கடலையும் சேர்ந்த பர்பி தமக்குள்ளே ஒரு புரதக்கடலையே வைத்திருக்கிறது. மிகக்குறைந்த எடையில் பெரிய சக்தியை கொடுப்பதால் தான் ராணுவத்தினரும், மலையேற்ற பயணிகளும் அதை கொண்டுச் செல்கிறார்கள்.
வெறும் புரதம் மட்டுமல்ல, முப்பது விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு. வேர்கடலையில் வைட்டமின் A, நீரில் கரையக்கூடிய வைட்டமின் B3, புரதம், லைசின் எனும் அமினோ அமிலம் உள்ளது. வேர்க்கடலை உடல் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அதிக அளவில் பாதுகாக்கும். இரத்தம் ஓட்டம் சீராக்கும். நரம்புகள் நன்றாகச் செயல்பட உதவும். வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும். புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழிக்க உதவும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் B3 அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவுப் பொருள் இந்த வேர்க்கடலை.
இப்படிப்பட்ட வேர்க்கடலையை வெல்லத்தோடு சேர்த்து நம் வீடுகளில் கடலை உருண்டை, பர்பி செய்வார்கள். இதே முறையில் தான் தேங்காய், எள்ளுருண்டையும் செய்வார்கள்.
ஆனால் கடைகளில் கிடைக்கும் இந்த உருண்டை, பர்பிகளில் க்ளுகோஸ் சேர்க்கப்படுகிறது. (glucose- its chemical formula is C6,H12,O6 and this empirical formula is shared by other sugars.) உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள் என்ற அடிப்படையில் கடைகளில் எளிதாக கிடைப்பதால் அனைவரும் வாங்குகிறோம். ஆனால் அவர்கள் சர்க்கரையை கூட்டி, வெல்லத்தை குறைத்து வெள்ளை விஷத்தை நமக்கு விற்பனை செய்கிறார்கள்.
வழக்கம் போல வாழை இலையை தொலைத்துவிட்டு, வாழை இலை மாதிரியே இருக்கும் பாலித்தீனினாலான கம்ப்யூட்டர் வாழை இலை என்றும், பருத்தித் துணியிலானான இயற்கைக்கு தீங்கு செய்யாத மஞ்சள் பைகளை தொலைத்துவிட்டு பைபர் இழைகளினாலான மஞ்சள் நிறப் பைகளையும் கொண்டு வந்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் வியாபாரிகள் கடைசியில் இந்த வேர்க்கடலை பர்பியையும் விட்டு வைக்கவில்லை.
கரும்பில் சாறு எடுத்து அதை காய்ச்சி வரும் கரும் பழுப்பு நிற வெல்லத்தின் வண்ணத்தை, செயற்கையான பொருட்களாலும், நிறமிகளாலும் வெளிர் மஞ்சள் கலராக்கி மக்களைக் கவர்ந்து ஏமாற்றி சந்தைப்படுத்துகிறார்கள். நாமும் அந்த வண்ணத்தை கண்டு ஏமாந்து விஷம் என்று தெரியாமல் உட்கொள்கிறோம்.
வெல்லப்பாகு காய்ச்சி அதில் வறுத்த வேர்க்கடலையை கொட்டி உருண்டை பிடித்தால் அதுவே வேர்க்கடலை உருண்டை. தட்டில் போட்டு வெட்டி எடுத்தால் அதுவே பர்பி. இத்தனை எளிய சத்துக்கள் நிறைந்த இது போன்ற உணவு வகைகளை வீட்டிலேயே செய்து கொண்டால், ஏமாற்று வியாபாரிகள் இனி வரும் காலங்களில் மாறுவார்கள் அல்லது காணமல் போவார்கள்.
கவனிக்கவும்....
இந்த வேர்க்கடலை பர்பியை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துபவர்கள் கார்ப்ரேட் கம்பெனிகள் அல்ல. நமது ஊரில், நமது தெருவில் இருக்கும் நம்மில் ஒருவர் தான் அந்த வியாபாரிகள். மக்களின் நலனை அடகு வைத்து சம்பாதிக்க நினைப்பதில் கார்ப்ரேட்-உள்ளூர் களவாணிகள் எல்லாமே ஒன்றுதான். 

உடல் மற்றும் மனதில் அதீத சோர்வா?

உடல் மற்றும் மனதில் அதீத சோர்வா?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நம்முடைய உடல் தனக்கு ஏற்படும் பாதிப்புகளை ஏதாவது ஒரு அறிகுறியாக வெளிப்படுத்தும். இது உடல்நிலை மற்றும் மனநிலை மாற்றமாகவும் இருக்கலாம்.
அதீத உடல், மனச் சோர்வு, மனநிலையில் மாற்றம், கவலையுடன் கூடிய மனஅழுத்தம், அடிக்கடி கோபப்படுதல், கவனக்குறைவு, உறக்கமின்மை, இரவில் வியர்த்தல், ஞாபக மறதி, காய்ச்சல், தலைவலி, உணவுக்குழாயில் பிரச்சனைகள் அல்லது வலி, பசியின்மை, தசைப்பிடிப்புக்கள், தசை மற்றும் மூட்டுகளில் வலி, அடிக்கடி சுவாசக்குழாயில் உண்டாகும் தொற்று, தொண்டைப்புண், நோய் எதிர்ப்பு திறன் குறைபாடுகள், கண்களைச் சுற்றி கருவளையங்கள், சுருக்கங்கள் என பலவித அறிகுறிகளாக இருக்கும்.
தற்கால வாழ்க்கை முறையில் அனைவருக்குமே மேற்சொன்ன பிரச்சினைகள் இருக்கிறது. குறைந்தபட்சம் இவற்றில் ஒரு நான்கைந்து அறிகுறிகளாவது இருக்கும்.
இப்படிப்பட்ட அறிகுறிகளை வைத்து, பாதிக்கப்பட்ட உறுப்பு எது, எதனால் அந்த உறுப்பு பாதிக்கப்பட்டது என்பதை எளிய முறையில் கண்டறிந்து, இதற்கான தீர்வையும் காணலாம்.
மருந்தில்லாமல், பக்கவிளைவுகள் இல்லாமல் நம் உண்ணும் உணவோடு, அக்குபஞ்சர் மருத்துவமுறையில் எவ்வாறு நிரந்தர தீர்வு காண முடியும் என்பதை ஒவ்வொன்றாக காணலாம்.
குறிப்பு : மேற்கூறியவற்றில் நம் உடலில் என்ன பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிய ஸ்கேன் மற்றும் இரத்த பரிசோதனை என்று எதுவுமே தேவை இல்லை. நமக்கு நாமே மருத்துவர் என்ற முறையில் நம் உடலின் மொழியை நாமே உணர முடியும்.
உங்களில் யாருக்கேனும் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் கமெண்டில் தெரிவிக்கவும். 
உள்ளுறுப்புகளின் பாதிப்பையே உடல் தன் மொழியின் மூலம் அறிகுறிகளாக வெளிப்படுத்துகிறது. அந்த அறிகுறிகளை பற்றியும், அந்த அறிகுறி தென்பட்டால் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றியும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஒரு உறுப்பை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அந்த உறுப்பு நமது உடலில் அமைந்துள்ள இடம், அதன் வேலைகள் பற்றி தெரிய வேண்டும். அதன் பிறகு அதற்கு ஏற்படும் பாதிப்புகள், அந்த பாதிப்பு உடலின் மற்ற உறுப்புகளை எவ்விதம் பாதிக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதனால் நமது ஆரோக்கியத்தை பற்றிய கவனமும், உடல் மொழியை மொழிபெயர்த்து புரிந்துகொள்ளும் விபரமும் கிடைக்கும்.

முதல் அறிகுறி
கண்களை சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்.
கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் பாதித்து இருக்கிறது என்பதன் அறிகுறியே ஆகும்.
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. மனிதனின் உடல் சீராக இயங்க தேவையான ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்களை செய்வதோடு மட்டுமில்லாமல், கெட்டுப் போனாலோ அல்லது அடிபட்டாலோ , மீண்டும் தன் பழைய நிலைக்கு வளர்ந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டுமே. மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலது பக்கம் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு .
கல்லீரல் மட்டும் தான் உணவை ஜீரணம் செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது என நம் உடலின் இரசாயனத் தொழிற்சாலையாக இயங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை கல்லீரல் தான் உருவாகுகிறது. கருவில் இருக்கும் குழந்தைகளின் சீரான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை உருவாகுகிறது.
இரத்த சிவப்பணுக்களைச் சீர்செய்து இரத்ததை தூய்மைப்படுத்தும். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரலின் பங்கு மிக முக்கியம் வாய்ந்தது. உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பதோடு நோய்த் தொற்றுக் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. உடல் இயக்கத்திற்கு தேவையான குளுகோஸ், கார்போஹைட்ரேட் , கொழுப்புச் சத்து போன்றவைகளை தேவைக்கேற்ப சேமித்து வைப்பதோடு இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றையும் சேமித்து, உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரதச் சத்துகளையும் உருவாக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்பு கல்லீரல்.
சிறுகுடலிலிருந்து உறிஞ்சப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அவையாவும் உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றப்படுகிறது. மேலும் அதில் இருக்கும் நஞ்சுகளைக் கழிவுப் பொருட்களாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றுகிறது.
இவ்வளவு வேலைகளை செய்யும் கல்லீரல் எதனால் பாதிக்கப்படுகிறது???
முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், பசிக்கும் நேரத்தில் உண்ணாமல் இருப்பது, இரவு பத்துமணிக்கு மேல் அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, இரவு அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி பழக்கமுள்ளவர்கள் , மது அருந்துவது, பான்பராக் போடுவது, புகை பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது, நீண்ட நாட்களாக வியாதிகளுக்கு மாத்திரைகளை உட்கொண்டு இருப்பது, மன அழுத்தம், மனக் கிளர்ச்சி போன்ற செயல்களால் கல்லீரல் வீக்கம் அடைகிறது. முக்கியமாக புகை, மது குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டுவதால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகிய நோய் வர வாய்ப்பு காரணமாக உள்ளது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கொழுப்பு படிந்த கல்லீரல் என கல்லீரல் சுருங்கி புற்று நோய் உண்டாக வழி வகுக்கும்.
கல்லீரல் சரியாக இயங்காத பட்சத்தில் கண்களை சுற்றி கருவளையம் தோன்றும். கண்கள் சோர்வாக காணப்படும். தொடர்ந்து , சருமத்தில் பாதிப்பு, தசைகள், மூட்டுகளில் வலி ஏற்படும்.
கல்லீரல் பாதிகக்கபட்டவர்கள் அசைவ உணவுகள், எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், ஜங்க் புட், எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகள், மது, புகைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உப்பு, புளி குறைக்க வேண்டும், அதிக அளவு கீரைகள், பச்சை காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மண்ணீரல் கோளாறுகள் ௭ல்லாம் வந்த சுவடு தெரியாமலும், பக்கவிளைவுகள் இல்லாமலும் போகும்.
கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளை வராமல் தடுக்க இனி புகை ,மது, கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ளும் முறைகளை தவிர்த்து சீரான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு கல்லீரல் காப்போம். கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிப்பதால் ஆரோக்கியமாக வாழ கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமாகும்.
நலம் வாழ வாழ்த்துகள்!
தொடர்வோம்...!!! 

புதன், 25 பிப்ரவரி, 2015

எட்டு நடை பயிற்சி

எட்டு நடை பயிற்சி
* * * * * * * * * * * * * * * *
நவீன விஞ்ஞானத்தின் செயற்கை வெளிச்சத்தாலும், உடனடியாக கிடைக்கும் தற்காலிக நிவாரணத்தாலும், அதிகபட்ச விளம்பரத்தாலும் மக்கள் மனதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்த நம்முடைய பாரம்பரிய உணவு முறைகளும் , வாழ்க்கை முறைகளும், வைத்திய முறைகளும் இயற்கையான நிரந்தர வெளிச்சத்திற்கு வரத்தொடங்கி இருக்கிறது.
ஆங்கில மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டு வந்த நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்றைக்கு அவர்களாலேயே ஒவ்வொன்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்கவிளைவுகளை அவர்களே இப்போது ஒத்துக் கொள்கிறார்கள்.
பல்வேறுபட்ட சொந்த அனுபவங்களாலும், கேள்வி ஞானத்தாலும் அதனை உணரத்தொடங்கிய மக்களும், அந்த செயற்கை வெளிச்ச மாயையில் இருந்து மீண்டு, பக்கவிளைவுகளை தரும் உடனடி நிவாரணத்தை விட, "கொஞ்சம் கால அவகாசம் எடுத்தாலும் பரவாயில்லை" என்று ஆரோக்கியத்தை மீட்டுத்தரும் இயற்கை-பாரம்பரிய வைத்திய முறைகளை நாடத்தொடங்கி இருக்கிறார்கள்.
ஆங்கில மருத்துவ முறையை விட்டு வெளியேறும் நோயாளிகள் எத்தனை பேர் என்பதை இன்று வரை சரியான முறையில் கருத்துக் கணிப்பு நடத்தப்படவில்லை என்றாலும் அக்கம் பக்கம் பார்க்கும் பொழுது அந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாமே கண் கூடாக உணரலாம். இருந்தாலும், "ட்ரக் மாஃபியா" என்று சொல்லப்படுகின்ற மருத்துவ/மருந்து வியாபாரிகளின் தந்திரத்தால் நம் நாட்டு பாரம்பரிய மருத்துவ முறைக்கு சரியான முறையில் அங்கீகாரம் கிடைக்க வில்லை என்பது வருந்தக்கூடிய நிகழ்வு.
இருநூறு ஆண்டுகள் கூட நிறைவடையாத ஆங்கில மருத்துவம், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட இயற்கை வைத்திய முறைகளை, "மாற்று மருத்துவம்" என்று சொல்வது நகைச்சுவையான விஷயம். நியாயமாய் பார்த்தால் நம் பாரம்பரிய வைத்தியத்திற்கு மாற்றாகத்தான் ஆங்கில மருத்துவம் வந்தது. இந்த உலகத்தின் நகர்வை பணம் தான் தீர்மானிக்கிறது.பணத்தால், இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை "இல்லை" என்று சாதிக்கவும் முடிவதால் , நம் பாரம்பரிய வைத்திய/உணவு /வாழ்க்கை முறைகள் எல்லாம் "மாற்று மருத்துவம், மாற்று வாழ்க்கை முறை" என்ற அடை மொழியை சுமக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.
இவையெல்லாம் நமது ஆதங்கம். நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளால் எப்படி ஆரோக்கியத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் இப்போது "எட்டு நடை பயிற்சி" பற்றியும், அதன் செயல்முறை, பலன்கள் பற்றியும் ஒரு சிறு பதிவு .
இந்த எட்டுநடை கொரியா, தைவான், ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி முறையாக கற்றுகொடுக்கிறார்கள். நம்ம நாட்டிலும் ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திடறேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய் வந்திறேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தவறான புரிதல் என்றே தோன்றுகிறது.
வீட்டிலேயே காற்றோட்டமும், வெளிச்சமும் இருக்கும் இடமாக தேர்வு செய்து ஆறு அடி விட்டமுள்ள இரு வட்டங்களை ஒன்றை ஒன்று தொட்டிருக்கும் படியாக எட்டு (8) வடிவில் தரையில் வரைந்து கொள்ள வேண்டும். அந்த பாதையில் கூழங்கற்களை பதித்தால் பலன் இன்னும் அதிகம். அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டு தான் இந்த நடைபயிற்சி அமைந்திருக்கிறது.
பாதையில் செய்யும் நடை பயிற்சியில் கவனச் சிதறல் இருக்கும். மற்றவர்கள் மீதும் வாகனங்கள் மீதும் கவனம் போகும். நம்மோடு பாதையில் நடை பயிற்சி செய்பவர்கள் இருந்தால் அவர்களோடு பேசுவது டீ, காபி குடிப்பது என்று பல இடையூறுகள் வரும். ஆனால் இந்த எட்டு வடிவ நடை பயிற்சியில் அவ்வாறான கவன சிதறல்கள் இடையூறுகள் இருக்காது.
எட்டுநடையால் ஏற்படும் பலன்கள்
தினசரி இந்த பயிற்சி செய்வதால் அதிக தொல்லை தரும் வியாதிகள் நம் உடலை விட்டு வெளியேறும். பாதங்களும், கால்களும் பலம் பெறும். இப்பயிற்சியால், குதி கால் முதல் உச்சந்தலை வரை பயன் பெறுகிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோயாளிக்கு இது மிகச் சிறந்த நிவாரணி. கண் பார்வை மற்றும் செவித் திறன் அதிகரிக்கும். உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறும். சுவாசம் தொடர்பான கோளாறுகள் உடலில் இருந்து வெளியேறும். மனமும், சுவாசமும் சீரடைவதால் இரத்த ஓட்டமும் சீராக நடைபெறும். குடலிறக்க நோயும் இதனால் குணமாகும்.
இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தலைவலி, மலச்சிக்கல், மூட்டுவலி, தூக்கமின்மை என எல்லா வியாதிகளும் எந்தவிதமான மருந்து, மாத்திரைக்களுமில்லாமலே முற்றிலும் குணமாகும் என்பது அனுபவப்பூர்வ உண்மை. எட்டு நடைப்பயிற்சி தொடர்ந்து முப்பது நிமிடங்கள் செய்வதால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஒவ்வொரு முறையும் எட்டு போன்ற திருப்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் உடல் சிறிது திருப்பம் அடைகிறது. உடலின் எல்லாப் பகுதிகளும் சமமான அசைவுக்கு உட்படுகின்றன. சாதாரண நடை பயிற்சியால் உண்டாகும் உடல் சோர்வு, இந்த எட்டு நடையில் இருக்காது. எட்டு நடை அரைமணி நேரம் நடந்தால் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்ததுக்கு சமம். நேராக நடந்துவிட்டு வருவதை விட, எட்டு நடையால் கிடைக்கும் பலன்கள் அதிகம்.
வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்கள் வீட்டிற்குள்ளேயே (அ) வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது.
'எட்டு' நடைபயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்வதால் மூட்டு வலியும், இரத்த அழுத்தமும், ஒரு மணி நேரம் செய்தால் நீரிழிவு வியாதியில் இருந்தும் விடுபடலாம். மற்ற நடை பயிற்சியை விட நான்கு மடங்கு இது சிறந்தது. இப்பயிற்சியால் மன அழுத்தமும் குறையும். தினமும் எட்டு நடை முறைப்படி செய்தால், நோய் எட்ட நிற்கும் என்று பயிற்சி செய்பவர்கள் கூறுகிறார்கள். 

வியாழன், 12 பிப்ரவரி, 2015

கோபம்!!!!

கோபம்!!!!
* * * * * * * *
கோபப்படும் மனிதனால் அதிக அளவு சிறப்பாக வேலைகள் செய்ய முடியாது. அமைதியான, மன்னிக்கக்கூடிய, சம நோக்குடைய, நிலைகுலையாத மனமுடையவனே அதிக அளவு செயல்பட முடியும்.
-சுவாமி விவேகானந்தர்
சாந்தம், அன்பு என்பவை மனிதனிடமும் உள்ளவை. அதே போல மனிதனுக்கு கோபமும் இயற்கையானது தான். கோபமே வராது, கோபமே வரக்கூடாது என்று எல்லாம் வரையறுக்க முடியாது. அதிகக் கோபதிலிருந்து வெளி வர, கோபத்தைக் குறைக்க, அறவே அழிக்க அதற்குரிய முயற்சியை மேற்கொண்டால் நிச்சயம் பலன் உண்டு. ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாக இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும். நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதையே பெறுகிறீர்கள் என்று ஈர்ப்பு விதி கூறுவதை நினைவில் கொள்ளுங்கள்.
கோபதிற்கு மூல காரணம் அறியாமை, இயலாமை, அதிகாரம், தாழ்வு மனப்பான்மை, வறுமை, கண்மூடித்தனம், திறமையின்மை, தனக்கு எல்லாம் தெரியும் என்கிற அகங்காரம், ஆணவம், கர்வமும் தான்.
எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ, அவன் தன்னுடைய பெரிய எதிரியை வெற்றிகொண்டவன் ஆகிறான்.
-லத்தீன்
ஒருவர் நம்மை திட்டினால் அவரை விட மோசமாக திட்டி பழி வாங்கும் வரை நம் மனம் ஓயாது. மோசமான வார்த்தைகளால் திட்டி விட்டோம் என்று சந்தோஷப்படுபவருக்கு ஒரு குட்டித் தகவல் உடலளவில் பாதிப்பு உண்டாவது அதிக கோபப்பட்டவருக்கு மட்டும் தான்.
கோபம் கொள்வதால் உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள், பாதிப்புகள் உண்டாகும் என்பதை இனி பார்க்கலாம்.
கோபத்தால் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. மூளையில் உள்ள இயக்க கட்டுப்பாட்டு மையங்கள் வேகம் அடைவதால், உடல் உறுப்புகள் வேகமாக இயங்குவதோடு உடலில் உள்ள சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பு நீர்களை சுரக்கும். வியர்வை சுரப்பிகள் வேகமாக செயல்பட்டு உடல் முழுவதும் வியர்க்கிறது. தசைகள் விரைக்கும். முகம் இறுகும். இதயம் வேகமாக துடிக்கும். தசைகளில் எரிதல் நடப்பதால் கல்லீரலிலிருந்து அதிகப்படியான சர்க்கரை செலவாகும். உடலின் சூடு இயல்பு நிலை விட அதிக சூடாகும். உடலில் இரத்த நாளங்கள் சூடாவதால், நரம்பு மண்டலத்தின் வேகம் அதிகமாகிறது. இதனால் மூளையில் உள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்பட்டு கோபம் அதிகமாகும்.
பேச்சு சப்தம் கூடிக்கொண்டே போய் உச்சஸ்தாயில் முடிவடையும். இப்படியே தொடரும் கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும். பேச்சு பாதித்து வாய் குளறும். தொண்டை வறட்சி உண்டாகும். அதிகப்பட்ச கோபத்தில் கை, கால்கள் நடுங்க ஆரம்பிக்கும். மனம் செயலாற்றும் தன்மையை இழக்கும். மறதி உண்டாகும். அதிகப்படியான சோர்வு, அசதி, பலவீனம், தூக்கமின்மை, பசியின்மை, அஜீரணம், மலசிக்கல், தலைவலி, மயக்கம் உண்டாகும்.
உடல் அடிக்கடி அதிக சூடானால் இதய நோய், சிறுமூளை, பெருமூளை பாதிப்பு, பித்த தொடர்பான நோய்கள் உண்டாகும். முகத்தில் உள்ள இரத்தக் குழாய்கள் விரிவடைந்து அதிக இரத்தம் பாய்வதால் கண்களும், முகமும் சிவந்து விடும். தொடர் கோபத்தால் முகம் விகாரமாய் தோன்றுவதோடு, இள வயதிலேயே முதுமை தோற்றமும் உண்டாகும். இதோடு சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு என மிகப் பெரிய பரிசை நமக்கு இலவசமாக வாரி வழங்கும் வள்ளல் தான் இந்த கோபம்.
கோபம் தலைதூக்கும்போது, அதன் பின்விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள். அமைதியாக இருந்தால் கோபம் நம்மை அசைக்க முடியாது என்பது தான் உண்மையும் கூட. அமைதி உள்ளுணர்வுக்கு வலிமை அளிக்கிறது. வலிமை பெற்ற உள்ளுணர்வால் கோபத்திலிருந்து விலக, விலக்க முடியும். வெறுப்பை கைவிட்டு, மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை ஆராய்ந்தால் போதுமானதே!
உடல் நலத்தை மனதில் கொண்டு நோயின்றி வாழ விருப்பமா? இனி கோபம் வரும் போது முதலில் தண்ணீர் குடியுங்கள். கோபமூட்டும் சூழலை விட்டு அகலுங்கள். குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள். திறந்த வெளிக்கு சிறிது நேரம் செல்லுங்கள். மனதிற்கு பிடித்த பாடல்களை கேளுங்கள். மனம் அமைதியாகும் வரை 1லிருந்து 100 வரை எண்ணுங்கள். இதுவே கோபம் போக்க மிகச் சிறந்த எளிய வழிகள்.
எல்லாம் இழந்து விட்டு காலம் கடந்து யோசிப்பதை விட, கோபம் எனும் அரக்கனை வேரோடு வீசி எறியுங்கள்.
கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவன் தான் உண்மையான பலசாலி. இனி நாம் யாவரும் பலசாலிகள் தானே!!! 

புதன், 14 ஜனவரி, 2015

தீராத தலைவலியா- விரல் நுனியில் ஆரோக்கியம்

தீராத தலைவலியா- விரல் நுனியில் ஆரோக்கியம் 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
தலைவலி வந்துவிட்டால் உடனே கைவசம் இருக்கும் உடலுக்கு கேடான "பெய்ன்கில்லர்' போடும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு உண்டு. இந்த மாத்திரைகள் ஐம்பது வயதைத் தாண்டியதும், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பதை யாருமே உணருவதில்லை. உணரும்போது காலங்கள் கடந்து இருக்கும்.

உடலுக்கு தேவையான ஓய்வு, தூக்கம் இல்லாதது, சட்டென்று உண்டாகும் மனஅழுத்தம், எரிச்சல், சோர்வு போன்றவையே தலைவலிக்கு முக்கிய காரணங்கள்.

தலைவலி வந்துவிட்டால் உடனே எந்த வேலை இருந்தாலும் நிறுத்திவிட்டு, சிறிது நேரம் திறந்த வெளியில் இயற்கை காற்றை சுவாசித்தால் தலைவலிக்கு உடனே நிவராணம் கிடைக்கும். யோகா பயிற்சியும் நல்ல பலனை தரும்.

அக்குபஞ்சரில் தலைவலி தீர எளிய வழி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தலையின் முன்பக்கம், பின்பக்கம் விடாத (அ) அடிக்கடி தலைவலி, ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) அவதிப்படுபவர்களா? கவலையே வேண்டாம். உங்கள் விரல் நுனியிலையே ஆரோக்கியம் இருக்கிறது. கை கட்டை விரலின் மேல்பகுதியின் முன்பக்கம், பின்பக்கம் என கட்டைவிரலை சுற்றி (படத்தில் காட்டியுள்ளபடி) ஒரு சில நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வந்தால் நாட்பட்ட தீராத தலைவலிகள் எல்லாம் தீர்ந்து போகும். அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தவிதமான பாதிப்பும், பக்கவிளைவுகளும் இல்லாத எளிய முறை. முயற்சி செய்து தான் பாருங்களேன். அக்குபஞ்சர் அறிவோம்Aaranyam

மூங்கில் அரிசி மற்றும் மூங்கில் தளிர்

மூங்கில் அரிசி மற்றும் மூங்கில் தளிர்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
மூங்கில் அரிசி - பதிவின் தொடர்ச்சி 
https://www.facebook.com/photo.php?fbid=902332106466535&set=a.177058772327209.38706.100000692633521&type=1&theater
உலகத்திலேயே அதிவேகமாக வளரும் தாவரங்களில் மூங்கிலும் ஒன்று. நீண்ட காலம் வளரக்கூடிய, புல் இனத்தைச்சேர்ந்த தாவரம் மூங்கில். மூங்கில் மரம் ஏறக்குறைய 60 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. அதன் மொத்த உயரமான 60 மீட்டரை, 59 நாட்களிலேயே மூங்கில்கள் அடைந்து விடுகின்றன. இந்தியாவில் 175 வகை மூங்கில்கள் வளர்கின்றன. இதை பச்சைத்தங்கம், ஏழைகளின் மரம் என்றும் அழைப்பது உண்டு. ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். மூங்கில்கள் லேசானவை. அதே வேளையில் இரும்புக்கு நிகரான வலுவும் கொண்டவை. பெரும்பாலானவர்களால் கூரை வேய்ந்த வீடுகள் கட்டவும், வேலி - தடுப்புகள் அமைக்கவும், கைவினைப்பொருட்கள் செய்ய பயன்பட்டாலும், குறிஞ்சி நில மக்களுக்கு மிக முக்கிய உணவாக இருந்தது. மூங்கிலில் தயாரிக்கப்பட்ட இருக்கைகளில், எவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தாலும் உடலில் வெப்பம் ஏறாது. வியர்வையோ, எரிச்சலோ ஏற்படாது.
காடும்-காடு சார்ந்த நிலப்பரப்பான குறிஞ்சி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் இந்த மூங்கில் குருத்துக்களையும், மூங்கில் அரிசியையும் ஆரம்ப காலங்களில் அதன் சுவைக்காக உணவாக உட்கொண்டார்கள். நாளடைவில் அவர்களால் அதில் இருந்த சத்துக்களையும்- மருத்துவ குணங்களையும் உணர முடிந்தது. காடுகளில் வாழும் பழங்குடி மக்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணமான உணவு வகையில் இந்த மூங்கில் அரிசியும் முக்கியமான ஒன்று.
மூங்கில் மரங்கள் அவ்வளவு எளிதில் பூப்பதில்லை. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். 40 ஆண்டுகள் கழித்து பூத்தாலும் அதில் அதிசயங்கள் நிரப்பி அரிசியாய் விளையும் என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. எளிய உணவாக இருந்தாலும் வலிமையைத் தரும் சத்துணவு. 100 கிராம் மூங்கிலரிசியில் 60.36 கிராம் கார்போஹைட்ரேட்டும், 265.6மிகி கலோரிகளும் குவிந்து கிடக்கும் என்றால் அது அதிசயம் தானே.
மூங்கில் மரம் மொத்தமுமே மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது. மூங்கிலிலிருந்து பெறப்படும் மூங்கிலரிசி, மூங்கில் தளிர் ஆகியவற்றை முறையே உணவாக உட்கொண்டு வந்தால் எப்படிப்பட்ட கொடுமையான வியாதியாக இருந்தாலும் விலகி ஓடும். உடலில் நோய் ஏதிர்ப்பு சக்தியை உருவாக்குவதால் நோய்கள் நம்மை அண்டாது.
மூங்கில் அரிசி- குருத்து உணவுகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு யானை பலம் கொடுத்து, இரும்பை போல வலுவாக்கி, வஜ்ஜிரம் போல் இறுக்கி, தீராத நோய்களெல்லாம் தீர்த்து வைக்கும். எவ்வளவு கட்டுமஸ்த்தான உடலமைப்பை பெற்றவர்கள் கூட சர்க்கரை நோய் பிடித்தால் உருக்குலைந்து போவார்கள். ஆனால் அப்படி சர்க்கரை வியாதியால் உருக்குலைந்தவர்கள் கூட இந்த மூங்கில் உணவுகளை உட்கொண்டு வந்தால் மீண்டும் பழைய உடலமைப்பை பெறுவார்கள் என்றால் இது அதிசய உணவா?? இல்லையா???
மேலும் மூங்கிலரிசி பாலுணர்ச்சியின் உந்துதலை சீர் செய்து, கருப்பை கோளாறுகளையும் முறையாக்கி கருவுற பேருதவியாக இருக்கிறது.
மூங்கில் தளிர்கள்
இதற்குள் இருக்கும் சத்துக்குள் கணக்கில் அடங்காதவை. நார்ச்சத்துக்கள் நிரம்பியது . பிராணசக்தியை தன்னுள் அதிகம் கொண்டுள்ளதால் நீரிழிவு நோய், கான்சர், இதய நோய்களுடன் மலசிக்கலும் வராமல் தடுக்கும். பொட்டாசியம், ப்ரோடீன், ரைபோபிலேவின்(riboflavin), மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் B6 போன்ற உடலுக்கு தேவையான மிக முக்கிய சத்துக்கள் நிறைந்தது மூங்கில் துளிர்கள். பொட்டாசியம் பொதுவாக உடல் நலத்திற்கும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான தாது பொருள். எலும்பு மண்டலத்திற்கு மக்னீசியமும், இரத்த சிவப்பு அணுக்கள் உருவாக தாமிரச்சத்தும் , நரம்பு மண்டலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு B6ம் என உடலுக்கு மிகவும் அவசியமான தாதுக்களை உள்ளடக்கியது. நரம்புத்தளர்ச்சியை சீர் செய்யும். தோலை நல்ல முறையில் பாதுகாக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கு, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட, மூங்கில் தளிர்களை முறையாக உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வலி, அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். மேலும் பிரசவ காலங்களில் வலி இல்லாத பிரசவம் உண்டாக்க உதவும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். கொழுப்புக் குறை உணவு இது. புண்களை ஆற்றும். அல்சருக்கு சிறந்த நிவாரணி. இந்த தளிர்கள் செரிமானத்திற்கும், வயிற்றுப்போக்கிற்கும் உடனடி தீர்வு கொடுக்கும். வாசனை பொருட்களிலும், அழகுசாதன பொருட்களிலும், தலைமுடி தைலங்களிலும் பெரும் பங்கு வகிக்கிறது.
இப்போது சொல்லுங்கள் அதிசயத்தின் அடையாளம் தானே இந்த மூங்கில்...??அக்குபஞ்சர் அறிவோம் Aaranyamhttps://www.facebook.com/photo.php?fbid=889052224461190&set=a.177058772327209.38706.100000692633521&type=1&theater

மூங்கில் அரிசி

மூங்கில் அரிசி
* * * * * * * * * * * *
குழந்தை பேறு இல்லையா? கருவுறுதல் பிரச்சினையா? இது வரை நீங்கள் பார்த்த வைத்திய முறைகள் எதுவுமே பலனளிக்கவில்லையா? கவலையே வேண்டாம். 

மிக எளிய முறையில் இதற்கு தீர்வு காண முடியும். மூங்கில் அரிசியை உணவாக்கி தினமும் உண்டு வந்தால் ஓரிரண்டு மாதங்களிலேயே குழந்தைப் பேறு உண்டாகும். முயற்சித்துப் பார்க்கலாமே...

மூங்கில் அரிசி மற்றும் மூங்கில் தளிர் இவற்றில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் பற்றி விரிவாக அடுத்த பதிவில். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

நீரிழிவு, இரத்த அழுத்தம் - சிறுநீரகச் செயல் இழப்பு

நீரிழிவு, இரத்த அழுத்தம் - சிறுநீரகச் செயல் இழப்பு
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் இரண்டும் சிறுநீரகச் செயல் இழப்பு உண்டாக காரணங்கள். மேலும் புகை பிடிப்பதால் சிறுநீரகங்கள் செயலிழப்பதோடு, சிறுநீரக புற்று உண்டாகும் என்பதும் உறுதி. ஆண்மைக்குறைவு மற்றும் குழந்தையின்மை போன்ற மிக மோசமான குறைபாடுகளும், புகைப்பதால் கிடைக்கும் கூடுதல் பரிசு. frown emoticonஅக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

ஆப்பிள் - PLU code (price lookup number)

ஆப்பிள் - PLU code (price lookup number) 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

நன்றி: Maalaimalar தமிழ் Aaranyam அக்குபஞ்சர் அறிவோம்

பிராண சக்தி தொழிற்சாலை - மூங்கில் மற்றும் புங்கை

பிராண சக்தி தொழிற்சாலை - மூங்கில் மற்றும் புங்கை 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
"அட நீங்க வேறங்க...நாங்க இருக்கிறது வாடகை வீடு... அங்க மரம் எல்லாம் வளர்க்க முடியாது!...நாங்க அபார்ட்மெண்ட்ல போர்த் புளோர்ல இருக்கோம்.. நாங்க எப்படி மரம் வளர்க்க முடியும்? வறட்சி, தண்ணி கிடைக்கிறதே பெரும்பாடா இருக்கு.. இதுல எங்க மரம் வச்சு தண்ணி ஊத்துறது?"

புவி வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்று சூழல் மாசு படாமல் காக்கவும், மழை வரவேண்டியும் மரம் நடுங்கள்.. என்று சொன்னால் நம்மவர்கள் சொல்லும் பதில்தான் மேற்கூறியவைகள்...

சரி விடுங்க.... அதெல்லாம் யாராவது "சமூக ஆர்வலர்" பட்டம் வாங்கினவங்க .பார்த்துக்கட்டும்... நம்ம வீட்டுக்குள்ள இருக்கவங்க ஆரோக்கியம் மேம்படவும் , கேன்சர் மற்றும் பல வியாதிகள் வராம தடுக்கவும் ஒரு மரம் நடலாமே...

என்ன இது ஆரோக்கியத்திற்கும் கேன்சர் வராம தடுக்கிறதுக்கும் , மரத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

நாம சின்ன வயசுல ஸ்கூல்ல படிச்சிருப்போம்....தாவரங்கள் காற்றில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது.( படிச்சோமா? இருக்கும் இருக்கும்.... மார்க்குக்காக படிச்சதால இதெல்லாம் எங்க ஞாபகத்துல இருக்கு) பொதுவாக எல்லா தாவரங்களும் ஆக்சிஜனை வெளியிட்டாலும் குறிப்பாக மூங்கிலும்- புங்கை மரமும் வெளியிடும் ஆக்சிஜனின் அளவு அதிகம். ஆக்சிஜனை அதிகமாக வெளியேற்றும் மூங்கில் மற்றும் மரங்கள் இரண்டும் நம் ஆரோக்கியத்தை காப்பாற்ற இயற்கை அளித்த வரங்கள் என்றே சொல்லலாம்.

மூங்கிலும், புங்கையும் புவி வெப்பமயமாதலை தடுக்கும், வெப்பத்தின் தன்மையை உறிஞ்சி சீரான சீதோஷ்ண நிலையை ஏற்படுத்தும், தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி இரண்டையும் தாங்கி நன்கு வளரும். மூங்கில் மற்றும் புங்கை தனது வாழ்நாளில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுகிறது.

இந்த மர நிழலில் ஒரு இளைப்பாறினால் உடல் உடனே புத்துணர்ச்சி அடைவதை நாமே உணரலாம். சரி.. இதற்கும் கேன்சருக்கும் என்ன சம்பந்தம்??
இருக்கே...சம்பந்தம் இருக்கே....

நம்ம ஒவ்வொருத்தர் உடம்புலயும் கேன்சர் செல் இருக்கு.. ஆனா அது எல்லாமே ஸ்லீப்பர் செல்லா இருக்கு....உடம்புல எப்போ பிராண சக்தி குறையுதோ..அப்போதான் அடங்கி இருக்க கேன்சர் செல்கள் வேகமாக வளர்ச்சி அடையவும், பரவவும் ஆரம்பிக்கும்... இந்த புங்கை மற்றும் மூங்கில் மரம் காற்று நம் மீது வீசும் போது நாம சுவாசிக்கிற ஆக்சிஜன் அளவு அதிகமாகி அந்த கேன்சர் செல்களை வளரவே விடாம ஸ்லீப்பர் செல்லாகவே முடக்கி வைக்கும்....அது மட்டுமில்லாம சின்ன சின்ன சில்லறை நோய்களையும் அண்டவே விடாது.

நம்ம வீட்டுல நடணும்னா நாலாவது புளோர்ல தான் நடணும்னு அவசியம் இல்லையே....அந்த அபார்ட்மெண்ட் காம்பவுண்ட் உள்ளேயோ- வெளிலையோ கூட நடலாமே.... நாமளும் இலவசமாக பிராண சக்தியை பெறலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம்.

ஆக்ஸிஜனை அதிகளவு உற்பத்தி செய்யும் மூங்கில் மற்றும் புங்கை மரம் வீட்டிற்கு ஒன்று இருந்தால் சுற்றுச்சுழல் பாதிப்பு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் போய்விடும். ஒவ்வொரு வீடுகளிலும் இவ்விரண்டு மரங்களை வளர்த்தால் போதுமாம் காற்று மண்டலம் தூய்மைப்படும் என்று உலக சுற்றுச்சூழல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவை இரண்டும் இயற்கை கொடுத்த வரம்ன்னே சொல்லலாம்.

இம் மரக்கன்றுகளின் விலையோ ஹோட்டல்களில் ஒரு பில்டர் காபி குடிக்க ஆகும் செலவு தான். நம்ம ஆரோக்கியத்துக்கும், மத்தவங்க ஆரோக்கியத்துக்கும் இந்த மரங்களை நடக்கூடாதா?

இன்னொரு டிப்ஸ்...மூங்கில் பல அரிய மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது. கை, கால் முட்டிவலியால் (joint pain) அவதிப்படுபவர்கள் மூங்கிலின் கணுக்கள் உள்ள பகுதியை அரைத்து, லேசாக உடல் தாங்கும் அளவிற்கு சூடாக்கி வலியுள்ள இடத்தில் வைத்து மெல்லிய துணியால் கட்டினால் போதும். வலி காணமல் போகும்.

என்னங்க.. எங்க கிளம்பிட்டீங்க.... மூங்கில், புங்கை மரம் நடத் தானே....??

அதானே.. எவ்வளவோ பண்றோம்.... இத பண்ண மாட்டோமா....!!! அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

தலைமுடி நன்கு வளர, வழுக்கை தலையில் முடி வர எளிய வழி


தலைமுடி நன்கு வளர, வழுக்கை தலையில் முடி வர எளிய வழி
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
தேங்காய் எண்ணையில் மல்லிகை பூவை போட்டு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். மூங்கிலின் வேரை எரித்து அதன் சாம்பலை எண்ணெயுடன் கலந்து தலைக்கு பூசி வர வழுக்கை மறையும். (எர்வாமாட்டின்க்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காது)

இதோடு மிகவும் எளிய பயிற்சியாக காதில் படத்தில் காட்டியுள்ளபடி அக்குபஞ்சர் புள்ளியில் நேரம் கிடைக்கும் போது இரண்டு நிமிடங்கள் அழுத்தம் கொடுப்பது மேலும் நல்ல பலனை கொடுக்கும். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam

உணவு - உடல் - உயிர்

உணவு - உடல் - உயிர் 
* * * * * * * * * * * * * * * * * * *
உலகில் பட்டினிச்சாவு எந்த அளவிற்கு நிகழ்கிறதோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் அதிக உணவாலும் மரணம் ஏற்படுகிறது. "இறப்பதற்கென்றே உண்ணுகிறார்கள்" என்ற ஆங்கிலேயப் பழமொழிக்கேற்ப பல பேர் விருப்பம் போல் உண்டு இறந்தும் விடுகிறார்கள்.

ஒரு வியாதி வர மூல காரணம் எதுவாக இருந்தாலும், மிக முக்கிய காரணம் முறையற்ற, கேடான உணவுப் பழக்கமே அனைத்து வியாதிகளுக்கும், வியாதியை வளர்க்கும் காரணிகளாக அமைந்துவிடும்.

உடல் அழிவதற்கான காரணங்களை ஐந்து பங்காக பிரித்தால், அதில் ஒரு பங்கு காரணம் பயம், தூக்கமின்மை, தீய பழக்கங்கள்- எண்ணங்கள். மீதமுள்ள நான்கு பங்கு காரணம் உணவு மட்டுமே என்கிறார் வள்ளலார்.

அவரவர் உடல்நிலைக்கு ஏற்பவும், தேவைக்கேற்பவும் உண்ணுதல் வேண்டும். உணவின் அளவு கூடினாலும், குறைந்தாலும் உடலில் நோய் ஏற்படும்.

ருசிக்காகச் சாப்பிடக் கூடாத பொருள்களை அளவில்லாமல் உண்பதும், பசிக்காக அளவுக்கு மீறிச் உண்பதும் தான் பிணிகளுக்கு காரணம். "நொறுங்கத் தின்றால் நூறுவயது" என்ற நம் முன்னோர்கள் கூற்றுக்கு ஏற்ப, உணவை வாயிலையே நன்றாக மென்று கூழாக்கி தான் விழுங்க வேண்டும். நாம் உண்ட உணவு செரிமானமாவதற்கு நான்கு மணி நேரம் ஆகிறது.

சில நேரங்களின் பரிமாறுபவரின் அன்பின் காரணமாகவோ- சாப்பிடுபவரின் ஆசையின் காரணமாகவோ அளவுக்கதிகமாக சாப்பிடுவார்கள். இப்படி அளவுக்கதிகமாகச் சாப்பிடும் உணவு செரிக்க குறைந்தது ஏழு முதல் எட்டுமணி நேரம் ஆகும் என வாஷிங்டன் சானிடோரியத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கூறப்பட்டுள்ளது.. இதனால் கல்லீரல், பித்தப்பை போன்ற ஜீரண உறுப்புகள் பாதிக்கப்பட்டு அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப்புண் போன்றவற்றால் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளனர்

பலர் காலையில் ஒன்பது மணிக்கு காலை சிற்றுண்டியை சாப்பிட்டாலும், மதியம் ஒரு மணி ஆகிவிட்டால் மதிய சாப்பாட்டிற்கு தயாராகி விடுவார்கள். இவர்கள் பசிக்காக சாப்பிடுவது இல்லை. நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்ற மனநிலையில் பசிக்காமலே சாப்பிடுபவர்கள். இப்படி செரிமானமாவதற்கு முன்பே சாப்பிடும் உணவால் எளிதில் ஜீரணமாகாமலும், செரிமான மண்டலம் தொடர்ந்து உழைக்க வேண்டிய கட்டாயமும் உண்டாகிறது. மேலும் செரிமான மண்டலம் வெகுவிரைவில் தன்னிலை இழப்பதோடு, கட்டாய ஓய்வெடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுவதால் மற்ற உறுப்புகளும் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழக்க ஆரம்பிக்கும்.

மேலும் நம்மவர்கள் உடல் உழைப்புமின்றி, அதிகம் விரும்பி உண்ணும் இறைச்சி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளில் உள்ள தேவையான கொழுப்பு மட்டுமே உடல் எடுத்துக் கொள்கின்றது. மற்ற தேவையற்ற கொழுப்பு இரத்தத்திலும், உடலில் ஆங்காங்கேயும் தங்கிவிடுகின்றது. கொழுப்பு இரத்தத்தில் கலந்து அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்தக் குழாயில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படச் செய்கின்றது. கொழுப்பு உணவு, போர்வாளைக் காட்டிலும் அதிகம் பேர்களை கொன்று விடும் என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.

உலக மக்கள் அனைவருமே தங்களது வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள அவரவர்க்குத் தகுந்தவாறு பல்வேறு வகையான மருந்துகளோ, பஸ்பங்களோ, காயகல்பங்களோ உட்கொள்கின்றனர். இதையெல்லாம் தேடி அலைவது வீணானான செயலாகும். வாழும் காலம் ஆரோக்கியத்துக்கு. முறையான உணவு பழக்கங்கள், பசி அறிந்து அளவோடு உண்ணுதல், எளிய உடற்பயிற்சி,, தியானம் என்று வாழ்ந்தாலே போதும். வேறு ஒன்றுமே தேவையில்லை.

நமது அன்றாட உணவு என்பது நம் அனைவரின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், பாதுகாக்கவும் இயற்கை உணவை பழக்கப்படுத்திக் கொண்டால் நீண்ட ஆயுளையும், வளமான வாழ்க்கையையும் பெறலாம். அக்குபஞ்சர் அறிவோம் Aaranyam