புதன், 18 டிசம்பர், 2013

கல்லீரல் (LIVER)

மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. மனிதனின் உடல் சீராக இயங்க தேவையான ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்களை செய்வதோடு மட்டுமில்லாமல்,கெட்டுப் போனாலோ அல்லது அடிபட்டாலோ , மீண்டும் தன் பழைய நிலைக்கு வளர்ந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டுமே. மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலது பக்கம் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு .

கல்லீரல் மட்டும் தான் உணவை ஜீரணம் செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது என நம் உடலின் ரசாயனத் தொழிற்சாலையாக இயங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை கல்லீரல் தான் உருவாகுகிறது. கருவில் இருக்கும் குழந்தைகளின் சீரான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை உருவாகுகிறது.

இரத்த சிவப்பணுக்களைச் சீர்செய்து இரத்ததை தூய்மைப்படுத்தும். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரலின் பங்கு மிக முக்கியம் வாய்ந்தது. உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பதோடு நோய்த் தொற்றுக் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. உடல் இயக்கத்திற்கு தேவையான குளுகோஸ், கார்போஹைட்ரேட் , கொழுப்புச் சத்து போன்றவைகளை தேவைக்கேற்ப சேமித்து வைப்பதோடு , இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றையும் சேமித்து, உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரதச் சத்துகளையும் உருவாக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்பு கல்லீரல்.
Photo: கல்லீரல்  (LIVER)
* * * * * * * * * * * 
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. மனிதனின் உடல் சீராக  இயங்க தேவையான  ஐநூறுக்கும் மேற்பட்ட  செயல்களை  செய்வதோடு மட்டுமில்லாமல்,கெட்டுப் போனாலோ  அல்லது அடிபட்டாலோ , மீண்டும் தன் பழைய நிலைக்கு வளர்ந்து  செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும்  கல்லீரல் மட்டுமே. மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலது பக்கம் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு .

கல்லீரல் மட்டும் தான் உணவை ஜீரணம் செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது  என   நம் உடலின் ரசாயனத் தொழிற்சாலையாக இயங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை  ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை கல்லீரல் தான் உருவாகுகிறது.  கருவில்  இருக்கும் குழந்தைகளின்   சீரான  இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை உருவாகுகிறது.

இரத்த சிவப்பணுக்களைச்  சீர்செய்து இரத்ததை தூய்மைப்படுத்தும். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரலின் பங்கு மிக முக்கியம் வாய்ந்தது. உடலுக்கு  தேவையான சக்தியை கொடுப்பதோடு நோய்த் தொற்றுக்  கிருமிகளை எதிர்த்துப்  போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. ரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், ரத்த நாளங்களுக்குள் ரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. உடல் இயக்கத்திற்கு  தேவையான  குளுகோஸ், கார்போஹைட்ரேட் , கொழுப்புச் சத்து போன்றவைகளை தேவைக்கேற்ப சேமித்து வைப்பதோடு ,  இரும்புச்சத்து,  வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றையும்  சேமித்து, உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரதச் சத்துகளையும்   உருவாக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்பு கல்லீரல்.

சிறுகுடலிலிருந்து உறிஞ்சப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அவையாவும்  உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றப்படுகிறது. மேலும் அதில் இருக்கும்  நஞ்சுகளைக் கழிவுப் பொருட்களாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றுகிறது.

முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், பசிக்கும் நேரத்தில் உண்ணாமல் இருப்பது, இரவு பத்துமணிக்கு மேல் அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, இரவு அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள்  சாப்பிடுபவர்கள்,  அடிக்கடி  காபி பழக்கமுள்ளவர்கள் , மது அருந்துவது, பான்பராக் போடுவது, புகை பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது, நீண்ட நாட்களாக வியாதிகளுக்கு மாத்திரைகளை உட்கொண்டு இருப்பது, மன அழுத்தம், மனக் கிளர்ச்சி போன்ற செயல்களால் கல்லீரல் வீக்கம் அடைகிறது. முக்கியமாக புகை, மது குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டுவதால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகிய நோய்  வர  வாய்ப்பு காரணமாக உள்ளது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கொழுப்பு படிந்த கல்லீரல் என  கல்லீரல் சுருங்கி புற்று நோய் உண்டாக வழி வகுக்கும்.
கல்லீரல் சரியாக இயங்காத பட்சத்தில் சருமத்தில் பாதிப்பு, உடலில் அதிகபடியான சோர்வும்  காணப்படும். கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களும்  காணப்படும். கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் பாதித்து இருக்கிறது என்பதன் அறிகுறியே ஆகும்.

கல்லீரல் பாதிகக்கபட்டவர்கள் அசைவ உணவுகள், எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், ஜங்க் புட்,  எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகள், மது, புகைப் பழக்கத்தை முற்றிலும்  தவிர்க்க வேண்டும்.  குறைந்தது ஆறு  மணி நேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உப்பு,  புளி குறைக்க வேண்டும், அதிக அளவு கீரைகள், பச்சை காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 
துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும்  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மண்ணீரல்  கோளாறுகள் ௭ல்லாம் வந்த சுவடு தெரியாமலும், பக்கவிளைவுகள் இல்லாமலும்  போகும். 

கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளை வராமல்  தடுக்க இனி  புகை ,மது, கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ளும் முறைகளை  தவிர்த்து  சீரான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு கல்லீரல் காப்போம்.  கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிப்பதால் ஆரோக்கியமாக வாழ கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமாகும்.




சிறுகுடலிலிருந்து உறிஞ்சப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அவையாவும் உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றப்படுகிறது. மேலும் அதில் இருக்கும் நஞ்சுகளைக் கழிவுப் பொருட்களாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றுகிறது.

முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், பசிக்கும் நேரத்தில் உண்ணாமல் இருப்பது, இரவு பத்துமணிக்கு மேல் அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, இரவு அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி பழக்கமுள்ளவர்கள் , மது அருந்துவது, பான்பராக் போடுவது, புகை பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது, நீண்ட நாட்களாக வியாதிகளுக்கு மாத்திரைகளை உட்கொண்டு இருப்பது, மன அழுத்தம், மனக் கிளர்ச்சி போன்ற செயல்களால் கல்லீரல் வீக்கம் அடைகிறது. முக்கியமாக புகை, மது குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டுவதால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகிய நோய் வர வாய்ப்பு காரணமாக உள்ளது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கொழுப்பு படிந்த கல்லீரல் என கல்லீரல் சுருங்கி புற்று நோய் உண்டாக வழி வகுக்கும்.
கல்லீரல் சரியாக இயங்காத பட்சத்தில் சருமத்தில் பாதிப்பு, உடலில் அதிகபடியான சோர்வும் காணப்படும். கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களும் காணப்படும். கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் பாதித்து இருக்கிறது என்பதன் அறிகுறியே ஆகும்.


கல்லீரல் பாதிகக்கபட்டவர்கள் அசைவ உணவுகள், எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், ஜங்க் புட், எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகள், மது, புகைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உப்பு, புளி குறைக்க வேண்டும், அதிக அளவு கீரைகள், பச்சை காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மண்ணீரல் கோளாறுகள் ௭ல்லாம் வந்த சுவடு தெரியாமலும், பக்கவிளைவுகள் இல்லாமலும் போகும்.

கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளை வராமல் தடுக்க இனி புகை ,மது, கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ளும் முறைகளை தவிர்த்து சீரான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு கல்லீரல் காப்போம். கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிப்பதால் ஆரோக்கியமாக வாழ கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமாகும்.

ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்)

ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்) பற்றிய சிந்திக்க வைக்கும் கட்டுரை ஒன்று நியூயார்க் டைம்ஸில் வந்துள்ளது.

1990ல் வெறும் 6 லட்சம் குழந்தைகளுக்கு இருந்த ஏ.டி.எச்.டி இன்று 35 லட்சம் குழந்தைகளுக்கு இருக்கிறது. 20 ஆண்டுகளில் எப்படி இத்தனை லட்சம் குழந்தைகளுக்கு இது வந்தது? மருந்து விற்பனையை அதிகரிக்க ஏ.டி.எச்.டி ஸ்டான்டர்டுகள் தளர்த்தபட்டன என்கிறது இக்கட்டுரை.

"ஏடிசிடி டிஸார்டர் என்பது மருந்துகம்பனிகள் திட்டமிட்டு ஆபத்தான, விலை உயர்ந்த மருந்துகளை விற்பனை செய்ய உருவாக்கிய சிண்ட்ரோம்"

Photo: ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்)
* * * * ** * * * * * * * * * * * * * * * * ** * *
ஏ.டி.டி (அட்டன்ஷன் டெபிசிட் டிஸார்டர்) பற்றிய சிந்திக்க வைக்கும் கட்டுரை ஒன்று நியூயார்க் டைம்ஸில் வந்துள்ளது.

1990ல் வெறும் 6 லட்சம் குழந்தைகளுக்கு இருந்த ஏ.டி.எச்.டி இன்று 35 லட்சம் குழந்தைகளுக்கு இருக்கிறது. 20 ஆண்டுகளில் எப்படி இத்தனை லட்சம் குழந்தைகளுக்கு இது வந்தது? மருந்து விற்பனையை அதிகரிக்க ஏ.டி.எச்.டி ஸ்டான்டர்டுகள் தளர்த்தபட்டன என்கிறது இக்கட்டுரை.

"ஏடிசிடி டிஸார்டர் என்பது மருந்துகம்பனிகள் திட்டமிட்டு ஆபத்தான, விலை உயர்ந்த மருந்துகளை விற்பனை செய்ய உருவாக்கிய சிண்ட்ரோம்"

நேரடியாக மக்களிடமே விளம்பரம் செய்து "உங்கள் குழந்தைகளுக்கு ஏ.டி.எச்.டி இருக்கலாம்" என மருத்துவர் மூலம் மக்களை அணுகாமல் நேரடியாக அணுகியதால் பீதியடைந்த பலரும் பள்ளியில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு எல்லாம் ஏ.டி.எச்.டி இருப்பதாக் சந்தேகப்பட்டு மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். ஏ.டி.ச்.டி விளம்பரங்கள் "நல்ல புத்திசாலிதனமாக இருக்கும் உங்கள் பிள்ளை குறைந்த மதிப்பெண்களை பரிட்சையில் பெறுகிறானா? அப்ப அவனுக்கு ஏ.டி.எச்.டி தான்" என விளம்பரம் செய்தன.

ஐன்ஸ்டீன் கூட பள்ளியில் குறைவான மதிப்பெண் பெற்றவர் தான். கணிதமேதை ராமானுஜம் ஆங்கிலத்தில் பெயில் ஆனவர்.

கேர்லஸ் ஆக இருப்பது, பொறுமையற்று இருப்பது எல்லாம் இன்று ஏ.டி.எ.ச்.டி ஆக கருதப்பட்டு அக்குழந்தைகளுக்கு மிக தீவிரமான ஏ.டி.எச்.டி இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் கொடுக்கபடுகின்றன. அதுபோக மருந்து கம்பனிகள் இப்போது நேரடியாக குழந்தைகளிடமே விளம்பரம் செய்கின்றன. பல காமிக் புத்தகங்களில் ஏச்.டி.எச்.டி மருந்துகள் விளம்பரங்கள் வெளிவருகின்றன.

இந்த மருந்துகளின் விளைவாக தூக்கமின்மை, பசி எடுக்காமை, ஹலூசினேஷன், மிக எக்ஸ்ட்ரீம் கேஸ்களில் தற்கொலை, மனநிலை பாதிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு நேர்கின்றன.

ஏ.டி.எச்.டி உண்மையான வியாதிதான். ஆனால் ஏ.டி.எச்.டி இல்லாத பலரும் இதற்கான சிகிச்சை எடுக்கும் வகையில் மருந்துகள் விற்பனை செய்யபட்டன என்கிறது இக்கட்டுரை.

ஆறு நிமிடம் ஒருவரிடம் பேசி, கேள்வி கேட்டு அவருக்கு ஏ.டி.எ.ச்.டி என "கண்டுபுடித்து" மருந்துகளை எழுதிகொடுக்கும் உதாரணம் ஒன்று கட்டுரையில் காட்டுகிறது. இவை எல்லாம் நிகழ ஆன நேரம் வெறும் 6 நிமிடங்கள்!!!!

ஒருவருக்கு ஏ.டி.எச்.டி இருக்கு என்பதை கண்டுபிடிக்க எந்த உறுதியான மெடிக்கல் சோதனையும் கிடையாது. மருந்து கம்பனிகளின் விளம்பர, ஸ்பான்சர் பணத்தில் இயங்கும் அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் ஏ.டி.எச்.டி வியாதி இருப்பதற்கான தரகட்டுப்பாட்டை தளர்த்திக் கொண்டே வருகிறது. இதன்படி

"கேர்லஸ் மிஸ்டேக் செய்வது"

"தன் முறை வரும்வரை காத்திருப்பதில் எரிச்சல் அடைவது"

இவை எல்லாம் ஏ.டி.எச்.டியின் அறிகுறியாக இன்று கருதப்படுகிறது.

ஏ.டி.எச்.டி மருந்து விற்பனை இன்று வெறும் 10 வருடங்களில் 2 பில்லியன் டாலரில் இருந்து 8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது!!!!!! @Neander Selvan ..நன்றி!


நேரடியாக மக்களிடமே விளம்பரம் செய்து "உங்கள் குழந்தைகளுக்கு ஏ.டி.எச்.டி இருக்கலாம்" என மருத்துவர் மூலம் மக்களை அணுகாமல் நேரடியாக அணுகியதால் பீதியடைந்த பலரும் பள்ளியில் குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு எல்லாம் ஏ.டி.எச்.டி இருப்பதாக் சந்தேகப்பட்டு மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள். ஏ.டி.ச்.டி விளம்பரங்கள் "நல்ல புத்திசாலிதனமாக இருக்கும் உங்கள் பிள்ளை குறைந்த மதிப்பெண்களை பரிட்சையில் பெறுகிறானா? அப்ப அவனுக்கு ஏ.டி.எச்.டி தான்" என விளம்பரம் செய்தன.

ஐன்ஸ்டீன் கூட பள்ளியில் குறைவான மதிப்பெண் பெற்றவர் தான். கணிதமேதை ராமானுஜம் ஆங்கிலத்தில் பெயில் ஆனவர்.

கேர்லஸ் ஆக இருப்பது, பொறுமையற்று இருப்பது எல்லாம் இன்று ஏ.டி.எ.ச்.டி ஆக கருதப்பட்டு அக்குழந்தைகளுக்கு மிக தீவிரமான ஏ.டி.எச்.டி இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் கொடுக்கபடுகின்றன. அதுபோக மருந்து கம்பனிகள் இப்போது நேரடியாக குழந்தைகளிடமே விளம்பரம் செய்கின்றன. பல காமிக் புத்தகங்களில் ஏச்.டி.எச்.டி மருந்துகள் விளம்பரங்கள் வெளிவருகின்றன.

இந்த மருந்துகளின் விளைவாக தூக்கமின்மை, பசி எடுக்காமை, ஹலூசினேஷன், மிக எக்ஸ்ட்ரீம் கேஸ்களில் தற்கொலை, மனநிலை பாதிப்பு ஆகியவை குழந்தைகளுக்கு நேர்கின்றன.

ஏ.டி.எச்.டி உண்மையான வியாதிதான். ஆனால் ஏ.டி.எச்.டி இல்லாத பலரும் இதற்கான சிகிச்சை எடுக்கும் வகையில் மருந்துகள் விற்பனை செய்யபட்டன என்கிறது இக்கட்டுரை.

ஆறு நிமிடம் ஒருவரிடம் பேசி, கேள்வி கேட்டு அவருக்கு ஏ.டி.எ.ச்.டி என "கண்டுபுடித்து" மருந்துகளை எழுதிகொடுக்கும் உதாரணம் ஒன்று கட்டுரையில் காட்டுகிறது. இவை எல்லாம் நிகழ ஆன நேரம் வெறும் 6 நிமிடங்கள்!!!!

ஒருவருக்கு ஏ.டி.எச்.டி இருக்கு என்பதை கண்டுபிடிக்க எந்த உறுதியான மெடிக்கல் சோதனையும் கிடையாது. மருந்து கம்பனிகளின் விளம்பர, ஸ்பான்சர் பணத்தில் இயங்கும் அமெரிக்க மனநல மருத்துவர் சங்கம் ஏ.டி.எச்.டி வியாதி இருப்பதற்கான தரகட்டுப்பாட்டை தளர்த்திக் கொண்டே வருகிறது. இதன்படி

"கேர்லஸ் மிஸ்டேக் செய்வது"

"தன் முறை வரும்வரை காத்திருப்பதில் எரிச்சல் அடைவது"

இவை எல்லாம் ஏ.டி.எச்.டியின் அறிகுறியாக இன்று கருதப்படுகிறது.

ஏ.டி.எச்.டி மருந்து விற்பனை இன்று வெறும் 10 வருடங்களில் 2 பில்லியன் டாலரில் இருந்து 8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது!!!!!! @Neander Selvan ..நன்றி!

வரகு அரிசி சமையல்

Photo: வரகு அரிசி சமையல்
* * * * * * * * * * * * * * *
உணவே மருந்தாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எளிதாக ஜீரணிக்கும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்கி பலவித நோய்களை வர விடாமலும், வந்த நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவேதான் இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது.

நம் முன்னோர்கள் வரகு அரிசியில் அதிக சத்துக்கள் இருப்பதை உணர்ந்து அதிக அளவில் விரும்பி உட்கொண்டனர். பிற்காலங்களில் அரிசி உணவு பிரதானமாக புழங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் சமைப்பதற்கு எளிமையானது என்ற ஒன்றே தான் .சிறுதானியங்களின் (small millet's) பயன்பாடு மிகவும் குறைந்து காணாமல் போகும் சூழ்நிலையை மாற்றி இளைய தலை முறையினரும் சிறுதானியங்களின் அருமைகளை தெரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இது.

கோதுமை, அரிசியை விட வரகு  சிறந்த உணவு. ஏனெனில் இரும்பு, கால்சியம், பி வைட்டமின்கள்,புரதச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாகவும், பைட்டிக் அமிலமும், மாவுச்சத்தும் குறைவாகவும் காணப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். தாதுப்பொருட்களும் அதிகஅளவில் உள்ளன. அதிக சத்துக்கள் நிறைந்த வரகை உபயோகப்படுத்தி இட்லி,தோசை,ஆப்பம்,பனியாரம், பொங்கல்,
பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.

வரகு அரிசி கஞ்சி
---------------------------
தேவையான அளவு வரகு அரிசியை (இப்போது கடைகளில் உடைத்து குருணையாக கிடைக்கிறது) தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம், வெந்தயம், தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து குடிக்கலாம்.

விருப்பப்பட்டவர்கள் காய்கறிகள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிறிதளவு கொத்தமல்லி, புதினா இவற்றை சேர்த்து வதக்கி கொதிக்க வைத்த வரகு கஞ்சியில் மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வெஜிடபிள் வரகு கஞ்சியாகவும் குடிக்கலாம். மிகவும் அருமையாக இருக்கும்.

வரகு அரிசி உப்புமா
-----------------------------
வரகுஅரிசி,வெங்காயம்,கேரட்,குடமிளகாய்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி,பச்சை மிளகாய்,கடுகு,உளுத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய்,உப்பு தேவையான அளவு.
ரவை உப்புமா செய்வது போலவே இதையும் செய்யலாம். (ஒன்றுக்கு இரண்டு என்று கூடுதலாக தண்ணீர் விட வேண்டும்) .

வரகு புளியோதரை
----------------------------
வரகு ஒருகப், புளி தேவையான அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 6, தனியா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை கடுகு தாளிக்க, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

தனியா, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து புளிக் கரைசல், உப்பு, வறுத்த மிளகாய், தனியா பொடி,பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த வரகையும் சேர்த்து வேக வைத்து இறக்கவும்.

வரகு இட்லி
-------------------
வரகு 500 கிராம், வெள்ளை உளுந்து 200 கிராம், கொள்ளு, வெந்தயம் தலா 2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு.
வரகு, உளுந்து, கொள்ளு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து 5மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின் எப்போதும் போல இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்து சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

வரகு கார அப்பம்
-------------------------
வரகு 200 கிராம், உளுந்து 50 கிராம், தேங்காய் 1 கப் இஞ்சி 1துண்டு, புளித்த மோர் ,பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு, சின்ன வெங்காயம் 10.
வரகுடன் உளுந்து, இஞ்சி,பச்சை மிளகாய்,தேங்காய்,உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு,கடுகு.சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் சேர்த்து வதக்கி மாவில் கொட்ட வேண்டும். பின் குழிப்பணியார சட்டியில் ஊற்றி எடுத்தால் சுவையும், சத்தும் நிறைந்த வரகு கார அப்பம் ரெடி.

வரகு இனிப்பு பணியாரம்
-------------------------------------
வரகு 200 கிராம், உளுந்து 50 கிராம், தேங்காய் 1 கப் வாழைப்பழம் 1, வெல்லம் 100 கிராம், ஏலக்காய் 1, எண்ணெய் தேவையான அளவு

வரகையும் உளுந்தையும் அரைமணி நேரம் ஊறவைத்து வாழைப்பழம், தேங்காய், வெல்லம், ஏலக்காய், உப்பு என அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் உண்ண சூடான சுவையான வரகு இனிப்பு பணியாரம் ரெடி.

வரகு அரிசி பொங்கல்
--------------------------------
வரகு அரிசி 200 கிரம், பாசி பருப்பு 50 கிரம் மிளகு, சீரகம், இஞ்சி,நெய், எண்ணெய், முந்திரி பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, தண்ணீர் தேவையான அளவு.

மண்சட்டி (அ) குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் முந்திரி லேசாக தட்டி வைத்த மிளகு, சீரகம், பெருங்காயம், சிறுதுண்டுகளாக வெட்டிய இஞ்சி, கருவேப்பிலை தாளித்து வரகு அரிசி, பாசி பருப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இறக்கியதும் நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி வரகு அரிசி பொங்கல் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.



உணவே மருந்தாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எளிதாக ஜீரணிக்கும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்கி பலவித நோய்களை வர விடாமலும், வந்த நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவேதான் இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது.

நம் முன்னோர்கள் வரகு அரிசியில் அதிக சத்துக்கள் இருப்பதை உணர்ந்து அதிக அளவில் விரும்பி உட்கொண்டனர். பிற்காலங்களில் அரிசி உணவு பிரதானமாக புழங்கப்பட்டதற்கு முக்கிய காரணம் சமைப்பதற்கு எளிமையானது என்ற ஒன்றே தான் .சிறுதானியங்களின் (small millet's) பயன்பாடு மிகவும் குறைந்து காணாமல் போகும் சூழ்நிலையை மாற்றி இளைய தலை முறையினரும் சிறுதானியங்களின் அருமைகளை தெரிந்து கொள்ள ஒரு சிறு முயற்சியே இது.

கோதுமை, அரிசியை விட வரகு சிறந்த உணவு. ஏனெனில் இரும்பு, கால்சியம், பி வைட்டமின்கள்,புரதச் சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாகவும், பைட்டிக் அமிலமும், மாவுச்சத்தும் குறைவாகவும் காணப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவாக அமைகிறது. விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். தாதுப்பொருட்களும் அதிகஅளவில் உள்ளன. அதிக சத்துக்கள் நிறைந்த வரகை உபயோகப்படுத்தி இட்லி,தோசை,ஆப்பம்,பனியாரம், பொங்கல்,
பாயாசம் என்று வகை வகையாக சமைத்து உண்ணலாம்.

வரகு அரிசி கஞ்சி
தேவையான அளவு வரகு அரிசியை (இப்போது கடைகளில் உடைத்து குருணையாக கிடைக்கிறது) தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம், வெந்தயம், தேவையான உப்பு சேர்த்து வேகவைத்து குடிக்கலாம்.

விருப்பப்பட்டவர்கள் காய்கறிகள், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சிறிதளவு கொத்தமல்லி, புதினா இவற்றை சேர்த்து வதக்கி கொதிக்க வைத்த வரகு கஞ்சியில் மிளகுத்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து வெஜிடபிள் வரகு கஞ்சியாகவும் குடிக்கலாம். மிகவும் அருமையாக இருக்கும்.

வரகு அரிசி உப்புமா

வரகுஅரிசி,வெங்காயம்,கேரட்,குடமிளகாய்,பீன்ஸ்,உருளைக்கிழங்கு பச்சைப் பட்டாணி,பச்சை மிளகாய்,கடுகு,உளுத்தம்பருப்பு,
பெருங்காயத்தூள், ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, எண்ணெய்,உப்பு தேவையான அளவு.
ரவை உப்புமா செய்வது போலவே இதையும் செய்யலாம். (ஒன்றுக்கு இரண்டு என்று கூடுதலாக தண்ணீர் விட வேண்டும்) .

வரகு புளியோதரை

வரகு ஒருகப், புளி தேவையான அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 6, தனியா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை கடுகு தாளிக்க, உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

தனியா, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து புளிக் கரைசல், உப்பு, வறுத்த மிளகாய், தனியா பொடி,பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த வரகையும் சேர்த்து வேக வைத்து இறக்கவும்.

வரகு இட்லி

வரகு 500 கிராம், வெள்ளை உளுந்து 200 கிராம், கொள்ளு, வெந்தயம் தலா 2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு.
வரகு, உளுந்து, கொள்ளு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து 5மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின் எப்போதும் போல இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்து சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.

வரகு கார அப்பம்
வரகு 200 கிராம், உளுந்து 50 கிராம், தேங்காய் 1 கப் இஞ்சி 1துண்டு, புளித்த மோர் ,பச்சை மிளகாய், உப்பு தேவையான அளவு, சின்ன வெங்காயம் 10.
வரகுடன் உளுந்து, இஞ்சி,பச்சை மிளகாய்,தேங்காய்,உப்பு மற்றும் மோர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு,கடுகு.சீரகம், வெந்தயம் கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைப் சேர்த்து வதக்கி மாவில் கொட்ட வேண்டும். பின் குழிப்பணியார சட்டியில் ஊற்றி எடுத்தால் சுவையும், சத்தும் நிறைந்த வரகு கார அப்பம் ரெடி.

வரகு இனிப்பு பணியாரம்
வரகு 200 கிராம், உளுந்து 50 கிராம், தேங்காய் 1 கப் வாழைப்பழம் 1, வெல்லம் 100 கிராம், ஏலக்காய் 1, எண்ணெய் தேவையான அளவு

வரகையும் உளுந்தையும் அரைமணி நேரம் ஊறவைத்து வாழைப்பழம், தேங்காய், வெல்லம், ஏலக்காய், உப்பு என அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் உண்ண சூடான சுவையான வரகு இனிப்பு பணியாரம் ரெடி.

வரகு அரிசி பொங்கல்
வரகு அரிசி 200 கிரம், பாசி பருப்பு 50 கிரம் மிளகு, சீரகம், இஞ்சி,நெய், எண்ணெய், முந்திரி பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, தண்ணீர் தேவையான அளவு.

மண்சட்டி (அ) குக்கரில் நெய், எண்ணெய் சேர்த்து சூடானதும் முந்திரி லேசாக தட்டி வைத்த மிளகு, சீரகம், பெருங்காயம், சிறுதுண்டுகளாக வெட்டிய இஞ்சி, கருவேப்பிலை தாளித்து வரகு அரிசி, பாசி பருப்பு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இறக்கியதும் நறுக்கிய கொத்துமல்லி இலை தூவி வரகு அரிசி பொங்கல் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

வாயு கோளாறு (Flatulence)


Photo: வாயு கோளாறு  (Flatulence)
* * * * * * * * * * * * * * * * 
ஏப்பம், அடிவயிற்றில் வலி, குதத்தின்(Anus) வழியாக அதிக காற்று(gas) வெளியேறுவது போன்ற பிரச்சனை இருப்பர்வர்கள் தரையில் அமர்ந்து உணவை நன்கு மென்று சாப்பிட்ட பின் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். இதனால் மிக விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து மீளலாம்.


ப்பம், அடிவயிற்றில் வலி, குதத்தின்(Anus) வழியாக அதிக காற்று(gas) வெளியேறுவது போன்ற பிரச்சனை இருப்பர்வர்கள் தரையில் அமர்ந்து உணவை நன்கு மென்று சாப்பிட்ட பின் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். இதனால் மிக விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து மீளலாம்.


தினம் ஒரு மூலிகை

ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் மூலிகைச்சாறு மற்றும் பழரசங்களில் (செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை) எந்த ஒரு சத்துக்களும் கிடைக்காது. நோய்கள் தான் பெருகும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம்.

Photo: தினம் ஒரு மூலிகை
* * * * * * * * * * * * * * 
ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். சந்தையில் விலை மலிவாக கிடைக்கும் மூலிகைச்சாறு மற்றும் பழரசங்களில் (செயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை) எந்த ஒரு சத்துக்களும் கிடைக்காது. நோய்கள் தான் பெருகும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம். 

திங்கள் – அருகம்புல்
 ---------------------------------
ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும். 
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும். 

செவ்வாய் – சீரகம்
--------------------------------
இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம்,மந்தம் நீங்கும். 

புதன் – செம்பருத்தி 
---------------------------------
இரண்டு செம்பருத்தி பூ( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும். 
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்தவிருத்தி, இரத்தசுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும். 

வியாழன் – கொத்துமல்லி
-------------------------------------------
 ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். 
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மைஆகியவை நீங்கும். 

வெள்ளி – கேரட் 
------------------------------------
ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். 
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும்.இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

 சனி – கரும்பு சாறு
------------------------------------
 கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும். 
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும்.உடல் பருமன், தொப்பை குறையும். 

ஞாயிறு – இளநீர் 
---------------------------
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும். 
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.



திங்கள் – அருகம்புல்

ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும்.
அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும்.

செவ்வாய் – சீரகம்

இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும் . ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி , இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம்,மந்தம் நீங்கும்.

புதன் – செம்பருத்தி

இரண்டு செம்பருத்தி பூ( மகரந்தம், காம்பு நீக்கியது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய், இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.
இதனால் பெண்களுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். மாதவிடாய் கோளாறு, வயிற்றுப்புண், வாய்ப்புண், நீர் சுருக்கு, இருதய நோய் போன்றவை நீங்கும். முகப்பொலிவு பெறும். இரத்தவிருத்தி, இரத்தசுத்திகரிப்பு அதிகரிக்கும். உடல் பளபளப்பாகும்.. தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

வியாழன் – கொத்துமல்லி

ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மைஆகியவை நீங்கும்.

வெள்ளி – கேரட்

ஒரு கேரட்(உள்ளங்கை அளவு), ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர்( காய்ச்சி ஆற வைத்தது), இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும்.ஆண், பெண் மலட்டுத் தன்மையை சரி செய்யும் . கண்பார்வை தெளிவுறும்.இதய சம்பந்தபட்ட நோய்கள் சரி ஆகும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் கரையும்.மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக காரட் ஜூஸ் நல்ல மருந்து.

சனி – கரும்பு சாறு

கரும்பு சாறு (இஞ்சி, எலுமிச்சை, ஐஸ் சேர்க்காதது) ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் பெற்றது. கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். மலச்சிக்கல் தீரும். காமாலை வராமல் தடுக்கும்.உடல் பருமன், தொப்பை குறையும்.

ஞாயிறு – இளநீர்

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும்.இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.

மாட்டிறைச்சியை உண்டால் இளவயதில் மரணம்

ந்து மதத்தில் பசு கடவுளாக வணங்கப்பட்டாலும் சில சமூகத்தினர் மாட்டிறைச்சியை உண்பதில் சளைத்தவர்கள் இல்லை. பெளத்த மதத்தினர் மாட்டிறைச்சி உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை.

மாட்டிறைச்சி உலகளவில் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கிறார்கள். மேல் நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோக்ளோபின் (Myoglobin) என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Photo: மாட்டிறைச்சியை உண்டால் இளவயதில் மரணம்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இந்து மதத்தில் பசு கடவுளாக வணங்கப்பட்டாலும் சில சமூகத்தினர் மாட்டிறைச்சியை உண்பதில் சளைத்தவர்கள் இல்லை. பெளத்த மதத்தினர் மாட்டிறைச்சி உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. 

மாட்டிறைச்சி உலகளவில் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்கிறார்கள். மேல் நாடுகளில் பன்றி, கோழி இறைச்சிகளை விட மாட்டிறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோழி அல்லது பன்றி இறைச்சியை விட மாட்டுக்கறியில் மயோக்ளோபின் (Myoglobin) என்ற புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பதால் உடலுக்கு அதிக அளவில் தீங்கு விளைவிப்பதாக ஹார்வர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மையோக்ளோபின் எந்த அளவு கறியில் இருக்கிறதோ அந்த அளவே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவையும் நிர்ணயம் செய்யும். தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் இருபது சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்களில் அதிகமானவர்கள் இளமையிலேயே இதயபாதிப்பு பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை இதயநோய், புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகின்றன.

நிறைய பால் கொடுக்க வேண்டும், மாடுகள் சீக்கிரம் பெரிதாக வளர்ந்து மாமிசத்துக்கு தயாராக வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக துரித வளர்ச்சி ஹார்மோன் (Recombinant Bovine Growth Hormone -RBGH) ஊசி மாடுகளுக்கு போடப்படுகிறது. மாடுகளின் மாமிசத்தில் கலந்து இருக்கும் இந்த ஹார்மோன்களால் மாட்டிறைச்சி மனிதர்களுக்கு நிறைய பக்க விளைவுகளைத் தான் உண்டு பண்ணுகிறது.

மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணம் என ஆய்வுகள் கூறினாலும் அதை உண்பவர்கள் நிறுத்துவதாய் இல்லை. எனவே மாட்டிறைச்சியை குறைவாக உண்டு (அ) உண்பதைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மையோக்ளோபின் எந்த அளவு கறியில் இருக்கிறதோ அந்த அளவே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவையும் நிர்ணயம் செய்யும். தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் இருபது சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்களில் அதிகமானவர்கள் இளமையிலேயே இதயபாதிப்பு பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை இதயநோய், புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாகின்றன.

நிறைய பால் கொடுக்க வேண்டும், மாடுகள் சீக்கிரம் பெரிதாக வளர்ந்து மாமிசத்துக்கு தயாராக வேண்டும் என்பது போன்ற காரணங்களுக்காக துரித வளர்ச்சி ஹார்மோன் (Recombinant Bovine Growth Hormone -RBGH) ஊசி மாடுகளுக்கு போடப்படுகிறது. மாடுகளின் மாமிசத்தில் கலந்து இருக்கும் இந்த ஹார்மோன்களால் மாட்டிறைச்சி மனிதர்களுக்கு நிறைய பக்க விளைவுகளைத் தான் உண்டு பண்ணுகிறது.

மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணம் என ஆய்வுகள் கூறினாலும் அதை உண்பவர்கள் நிறுத்துவதாய் இல்லை. எனவே மாட்டிறைச்சியை குறைவாக உண்டு (அ) உண்பதைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

பாரம்பரியமான கேழ்வரகு தானிய உணவு செய்யும் முறைகள்

ணவே மருந்தாக இருக்கவேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த எளிதாக ஜீரணிக்கும் பொருட்களை உணவாக உட்கொள்ளும் போது செரிமான மண்டலம் சீராக இயங்கி பலவித நோய்களை வர விடாமலும், வந்த நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது. ஆகவேதான் இந்திய பாரம்பரியமான உணவு வகைகள் அனைவரின் உடலிற்கும் சுற்றுப்புற தட்பவெப்ப நிலைக்கும் ஏற்றவாறு அமைகிறது.

உடலின் கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு. உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுப்பொருட்களில் மிக முக்கிய சத்தான தானியங்களுள் கம்புக்கு அடுத்து இருப்பது கேழ்வரகு மட்டுமே.சிறு குழந்தைகள், வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற உணவாக கேழ்வரகு. பெருமளவில் புரதம், பாஸ்பரஸ், இரும்பு, தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் காணப்படுகின்றன. இரத்தத்திலுள்ள கொழுப்பையும் மற்றும் கொழுப்பு அமிலங்களையும் கரைத்து கெட்ட கொழுப்பை நல்ல கொழுப்பாக மாற்றும் அற்புத ஆற்றலை படைத்தது கேழ்வரகாகும்.

இதில் பெருமளவில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பாஸ்பரஸ், தையமின் மற்றும் ரைபோபிளேவின் வைட்டமின்கள் மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைப்பதோடு மட்டுமில்லாமல் சேதமடைந்த திசுக்களை சரி செய்து உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் செய்யும்.

கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், தேவையில்லாமல் மற்ற உணவு வகைகள் உண்பது தடுக்கப்படும், அதனால் உடல் எடை கூடுவதும் தவிர்க்கப்படும். கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும். நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும். இதில் இருக்கும் இரும்புச்சத்து ரத்தசோகையை குணப்படுத்தும். உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும். தேவை இல்லாத கொழுப்பை அகற்றி கல்லீரலை வலுப்படுத்தும். உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா ஆகிய நோய்களும் குணமாக்கும். குடல் வலுப்பெறும். தாய்ப்பால் சுரக்க பேருதவி புரியும்.

உடலில் ஆக்சாலிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் தன்மை கேழ்வரகுக்கு உண்டு. அதனால் சிறுநீரக கல் இருக்கும் நோயாளிகள் அடிக்கடி உணவில் கேழ்வரகை சேர்த்துக் கொள்ள கூடாது.

கேழ்வரகு களி, கூழ்,கேழ்வரகு அடை, கேழ்வரகு இட்லி, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு சேமியா புட்டு, கேழ்வரகு சேமியா உப்புமா , கேழ்வரகு மாவு லட்டு என பல வகைகள் உண்டு. அதில் சில உணவு வகைகள் உங்களுக்காக.










கேழ்வரகு அடை
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: தேவைக்கு
முருங்கைகீரை : 1 கப்
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்: தேவைக்கேற்ப
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிய பின் கடைசியாக கீரையை வதக்கி வதங்கியதும் அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரத்துணி (அ) எண்ணெய் தடவி மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டி தோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

கேழ்வரகு இட்லி
கேழ்வரகு மாவு : 2 கப்
உளுந்து : 1/2 கப்
வெந்தயம் : 1/4 ஸ்பூன்
உப்பு : தேவைக்கேற்ப
உளுந்தை வெந்தயம் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பதுப்போல அரைத்து, அத்துடன் கேழ்வரகுடன் உப்பு சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். மறுநாள் காலையில் சாதாரண தோசை, இட்லி செய்முறையில் செய்யலாம்.

கேழ்வரகு புட்டு
கேழ்வரகு மாவு - ஒரு கப்
உப்பு: 3 சிட்டிகை
பனங்கற்கண்டு : தேவையான அளவு
தேங்காய் துருவல் : தேவையான அளவு
கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். பிசைந்த மாவை கையில் எடுத்து பிடிகொழுக்கட்டைக்குப் பிடிப்பதுபோல் பிடித்தால் கையில் ஒட்டாமல் பிடிக்க வரவேண்டும்.பிறகு அதையே உதிர்த்தால் உதிரவும் வேண்டும்.இந்தப் பக்குவத்தில் மாவைப் பிசைந்த பிறகு ஒரு 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து கட்டிகளில்லாமல் உதிர்த்து விடவும். இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், பனங்கற்கண்டு கலந்து உண்ணலாம்.

கேழ்வரகு களி
கேழ்வரகு மாவு: ஒரு கப்
உப்பு: தேவைக்கு
ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து இரண்டு கப் (மாவின் அளவை போல் இரு மடங்கு) தண்ணீர் விட்டு,உப்பு போட்டு கொதி வந்ததும் மாவை சிறிது சிறிதாக கொட்டிக்கொண்டே விடாமல், கட்டித் தட்டாதவாறு கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வெந்து, வாசனை வந்ததும் இறக்கிவிட வேண்டும். இது போன்றே ஓட்ஸ்,கம்பு,பார்லி போன்ற தானியங்களின் மாவிலும் களி செய்யலாம்.

கேழ்வரகு சேமியா புட்டு
எண்ணெயும் சேர்க்காததால் மிகுந்த ஆரோக்கியமானதும்கூட‌.
சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் ஊற வைத்து நீரை வடித்துவிட்டு,இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் அவித்து எடுக்க வேண்டும்.
வெந்ததும் எடுத்து அதனோடு இனிப்புக்கு பனங்கற்கண்டு உதிர்த்து வைக்கவும்.

கேழ்வரகு சேமியா உப்புமா
வெங்காயம்,இஞ்சி,பச்சை மிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ் இவற்றை மிக மெல்லியதாக நறுக்கவும்.
ஒரு வாணலை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைத் தாளித்துவிட்டு, வெங்காயம்,இஞ்சி, பச்சைமிளகாய்,கேரட், பீன்ஸ் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.காய் வேக சிறிது தண்ணீர் தெளித்து, சிறிது உப்பு மேலாக தூவி மூடி வேக வைக்கவும். சேமியாவை அது மூழ்கும் அளவு தண்ணீரில் சிறிது உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் ஊற வைத்து நீரை வடிய வைக்கவும்.
காய் வெந்ததும் உதிர்த்து வைத்துள்ள சேமியாவைச் சேர்த்துக் கிளறிவிடவும். எல்லாம் சேர்ந்து சேமியா சூடேறியதும் எலுமிச்சை சாறு,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

கேழ்வரகு மாவு லட்டு

கேழ்வரகு மாவு-ஒரு கப்
வெல்லம்:1/2 கப்
முந்திரி:5
ஏலக்காய்:1
நெய்:தேவைக்கு
முந்திரியைப் நெய் விட்டு பொன் வறுவலாக வறுத்தெடுத்துக்கொண்டு, கேழ்வரகு மாவைப் போட்டு வாசனை வரும்வரை விடாமல் கிளற வேண்டும்.
மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துப்போட்டு அது மூழ்கும் அளவு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி வெல்லம் முழுவதும் கரைந்து நுரைத்துக்கொண்டு பொங்கிவரும் போது தீயை நிறுத்திவிட்டு மாவைக் கொட்டிக்கொண்டே விடாமல் கிளறி முந்திரி, ஏலத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.



தூக்கமின்மை (Insomnia)

தூக்கமின்னமையும், மலச்சிக்கலுமே ஒரு மனிதனின் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். தூக்கமின்மையே வாழ்க்கையின் மிகப்பெரிய அவலமாக மாறி விடுகிறது. குழந்தைகள் குறைந்தது ஒன்பது மணிநேரம் இரவில் தூங்க வேண்டும். பெரியவர்கள் குறைந்தது ஆறிலிருந்து ஏழு மணி நேரம் அவசியம் தூங்க வேண்டும்.

பிறந்த குழந்தை எப்போதுமே தூங்கிக்கொண்டிருக்கும்.. வளர வளர அதன் தூக்கத்தின் அளவு குறைந்துகொண்டே வருவதை நாம் கண்கூடாக கண்டிருக்கிறோம்... எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் உடலும் மனமும் அமைதியாக இருக்கும்போது நன்கு தூக்கம் வரும்... கவலைகள் மனதில் குடிகொள்ள குடிகொள்ள தூக்கத்தின் அளவு குறையும்... தூக்கத்தின் அளவு குறைய குறைய உடல் ஆரோக்கியமும் குறையும்.

ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிக முக்கியமான செயல் இயல்பான நிம்மதியான நல்ல தூக்கம் மட்டுமே. படுத்ததும் தூங்குவது என்பது வரம் போன்றது. ஆனால் நவீன வாழ்க்கை முறையில் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வரம் வாய்க்கிறது. உடல் உழைப்பின்மை, ஸ்ட்ரெஸ் (மன உளைச்சல்) பொருளாதார நெருக்கடி என்ற பல காரணங்களால் பலர் தூக்கம் இழந்த நிலையில் பல வியாதிகளோடு போராடிக் கொண்டு தான் இன்றும் இருக்கிறார்கள். தூக்கம் இழந்த ஒரு மனிதனின் கடைசி நிலை மனநிலை பாதிப்பு தான்.

தூக்கம் இல்லாதவர்களின் மனம், உடல் இரண்டுமே பாதிப்புக்கு உள்ளாகும். தூக்கம் மிகவும் உடலிற்கு மிக அத்தியாவசியமான ஒன்று என்று எத்தனை ஆய்வுகள் கூறினாலும் எல்லாம் தெரிந்தது போல, தாங்களும் தூங்காமல் அடுத்தவர்கள் தூங்குவதை கேலி செய்ய ஒரு கூட்டம் உண்டு.

தூக்கமின்மைக்கு பல்வேறு காரணங்களால் கூறப்பட்டாலும் உடல் நலமின்மை, மன அழுத்தம், எரிச்சல், கோபம், இயலாமை, ஆத்திரம், என அடுக்கி கொண்டே போகலாம். தெளிவற்ற மனநிலை எப்போதும் தவறன முடிவுகளையே எடுக்க வைக்கும். நிம்மதியாய் தூங்கினாலே போதும்.. உடலில் பல நோய்கள் வராமலும், மன அமைதியுடன் நிதானமான - தெளிவான முடிவெடுத்தலின் மூலம் குடும்பத்தில் பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

பார்கின்ஸன், அல்சீமர், நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் தூக்கம் இல்லாமல் இருப்பவர்களையே தாக்கும் மிக முக்கிய வியாதிகள். தற்கொலைக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று தூக்கமின்மை . ஆழ்ந்த தூக்கம் நிறைய வியாதிகளில் இருந்து நம்மை மீட்டு கொண்டு வரும்.

நிம்மதியான தூக்கத்திற்கு
- - - - - - - - - - - - - - - - - - - - -

1. பகல் தூக்கம் தூங்குபவர்களுக்கு இரவு தூக்கம் கண்டிப்பாக தாமதம் ஆகும். மதிய உணவிற்கு பின் உறங்கும் பழக்கம் நிறைய பேரின் வாழ்க்கையில் பல வியாதிகளை அவர்களுக்கு அன்பளிப்பாக தரும் என்பதில் துளியும் ஐயம் வேண்டாம்.

2.தூங்கும் போது அறையை வெளிச்சம் இல்லாமல் இருட்டாக வைத்திருப்பது. (அ) கண்கள் மேல் வெளிச்சம் படாமல் பார்த்துகொள்வது மிக அவசியம். வெளிச்சம் நம் நரம்பு மண்டலம், மூளையை தூண்டி தூக்கத்தை தடை செய்யும். தூங்குவதற்கு முன்னால் டிவி, கம்ப்யூட்டர், மொபைல், என வெளிச்சம் அதிகம் உள்ள பொருட்களை உபயோகிக்க கூடாது. மேலும், அதன் ஒளித்திரையை அணைக்காமல் படுத்தால் தீடீரென்று விழித்து பார்க்கும் போது அந்த வெளிச்ச திரைகள் கண்ணில் பட்டு மீண்டும் தூக்கம் வர சிரமமாகும்.

3. தூக்கத்தில் இருந்து விழித்தால் அதிக பசி இருந்தால் மட்டுமே உண்ண வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஏதாவது உணவு பொருட்களை உட்கொண்டால் திரும்பவும் தூக்கம் தொலைக்க வேண்டி இருக்கும்.

4. நல்ல தூக்கத்திலோ (அ) தூக்கம் வரமால் இருந்தாலோ நீங்கள் உங்கள் கவலை, துக்கம் எதுவாக இருந்தாலும் பக்கத்தில் ஒரு பேப்பர் வைத்துக் கொண்டு அதில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதனால் நீங்கள் அந்த கவலைகளை வெளியே சொல்லிவிட்ட ஒரு மன திருப்தி உங்களுக்குள்ளே உண்டாகும். நல்ல தூக்கமும் வரும்.

5. ஒவ்வொரு உறுப்பையும் மனம் உள்பட இறுக்கமாக வைக்காமல் லேசாக தளர்த்தி கண்மூடி இருக்க முயன்றாலே மனமும், உடலும் அமைதியாகி தூக்கம் கண்களை மூடிக்கொள்ளும்.

6. மிக முக்கியம் மாலை நேர அமைதியான நீண்ட நடைப் பயிற்சி. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதிக தூரம் நடப்பதால் உடல் அதற்கு தேவையான ஓய்வை தூக்கம் மூலம் அதுவே எடுத்துக் கொள்ளும்.

7. தூங்குவதற்கு முன் அதிக கொழுப்புள்ள உணவு வகைகள், மது, சிகரெட் போன்றவற்றை தவிர்க்கவும்.

தூக்கம் வராமல் வேதனைப்படுபவர்கள் மேல கூறி இருப்பதை பின்பற்றி வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம். மனதை லேசாகவும் உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருந்தால் தூக்கம் நம்மோடு இருக்கும்..அதை தொலைத்து விட்டு தேட வேண்டிய அவசியம் இல்லை.

எந்த மருந்துகளும் இல்லாமல் உடல் அதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் அதனுள்ளே இருந்து பெற்றுக் கொள்ளும் அற்புத ஆற்றல் பெற்றது. உடலின் மொழி புரிந்து கொண்டு அதை நாம் வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும். பஞ்சபூதங்கள், இயற்கை, உடல் எப்போதும் நம்மை ஒரு போதும் ஏமாற்றாது என்ற நம்பிக்கை வைக்க வேண்டும்.

பித்தப்பை கல் (Gallbladder Stone)

பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு.
நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இப்படி பித்தப் பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள்.

Photo: பித்தப்பை கல் (Gallbladder Stone)
* * * * * * * * *  * * * * * * * * * * 
பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் பேரிக்காய் வடிவில் சுமாராக 8 செ.மீ. நீளமும் 4 செ.மீ. அகலமும் கொண்ட ஒரு உறுப்பு. 
நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய உதவும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும். நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும்  உதவுகிறது. இப்படி பித்தப் பை சுருங்கி விரியமால் போனால் பித்தப் பையில் உண்டாகும் ஜீரண நீர்  கற்களாக மாறும் வாய்ப்புள்ளது.

ஒருவருடைய பித்தப்பையில் கற்கள் உண்டானால் சிறிது சாப்பிட்டாலே அவர்கள் வயிறு வீங்கி விடும். மேலும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் நெஞ்செரிச்சல், புளியேப்பம் போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். பொதுவாக எந்த வயதினருக்கும் பித்தப்பையில் கற்கள் உண்டாகலாம். ஆனால் பெண்கள் தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். 

உடல்பருமன், அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் . மேலும் , இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள்,  செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள் ,குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன. 

தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்,வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.

அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.

பித்தப்பை கல் இருப்பது உறுதியானால் அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும். வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக்  கூடாது.பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் , பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும். மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது. உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.
உடல்பருமன், அதிகபடியான மாத்திரைகளை உட்கொள்பவர்கள், கொழுப்புவகை உணவுகளை அதிகம் உண்பவர்கள், கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு மிக மிக அதிகம் . மேலும் , இரத்த சிவப்பணுக்கள் சுழற்சி மிக விரைவாக உள்ளவர்கள், இரத்தசோகை நோய் இருப்பவர்கள், செக்ஸ் ஹார்மோன் மாற்றங்கள், உணவுமண்டலத்தில் பாக்டீரியா (அ) குடல் புழுக்கள் மற்றும் டைபாயிடு போன்ற நோய் கிருமி பாதிப்புக்குள்ளானவர்கள் ,குடல் புண்ணால் பாதிப்பு உள்ளவர்கள், கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் , புற்றுநோய் உள்ளவர்கள் போன்றோருக்கும் பித்தப் பையில் கற்கள் எளிதில் உண்டாகின்றன.

தலைவலி, வலது நெஞ்சில் வலி , நேர் பின்னே முதுகில் வலி, வலது தோள்பட்டை முதல் உள்ளங்கை வரை வலி உண்டாவதல்,வயிற்றின் மேல் பாகத்தில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாயுத் தொல்லை மற்றும் செரிமானத்தில் கோளாறு போன்ற பித்தப்பையில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்.

அறுவை சிகிச்சை மூலம் பித்தபையை அகற்றினால் பிற்காலங்களில் அஜீரண கோளறு, அல்சர் மஞ்சள் காமாலை நோய் போன்ற பல வியாதிகள் வரும்.

பித்தப்பை கல் இருப்பது உறுதியானால் அசைவ உணவை அறவே நிறுத்திவிட வேண்டும். வறுத்த மற்றும் அதிக கொழுப்பன உணவு வகைகளை உண்ணக் கூடாது.பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். ஃப்ரிட்ஜில் வைத்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். ஃபிரைடு ரைஸ் மற்றும் பரோட்டா, நூடுல்ஸ், மக்ரோனி போன்ற மைதா உணவுகளை சாப்பிடுதலை தவிர்க்கவேண்டும் , பீசா, பர்க்கர் போன்ற ஜங்க் ஃபுட் வகைகளை சாப்பிடுவதை அறவே தவிர்க்கவேண்டும். மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது. உணவில் அதிகமான பழங்களை சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

சனி, 16 நவம்பர், 2013

பாரம்பரியமான கம்பு உணவு

கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.

வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.


கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. 


தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் A உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது. அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.



வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள், அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், இரவு நேர வேலையில் இருப்பவர்கள், நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் (நம்மில் பலர்) இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும். கம்பு உணவை காலை, மதிய வேளைகளில் உண்டு வந்தால் உடல் வலுவடைந்து உடல் சூடு குறையும். 


நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்னி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டுபிடித்துச் மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள். 

கம்பஞ்சோறு
* * * * * * * * *
கம்பு குருணையை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து குக்கர் (அ) மண்சட்டியில் வேகவிடவும்.
கம்பஞ் சோறுடன் குழம்பு, ரசம், மோர் சேர்த்து அரிசி உணவு மாதிரியே உண்ணலாம் (அ) சிறுசிறு உருண்டைகளாக்கி ஒரு மண்பானையிலிட்டு நீரை ஊற்றி வைத்து விட்டால் இரண்டு நாட்களுக்கு கெடாமல் இருக்கும். 


கம்பு இட்லி.
* * * * * * * * 
கம்பு - 2 கப்,
முழு உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


கம்பு அடை
* * * * * * * *
கம்பு மாவு- ஒரு கப்
சின்ன வெங்காயம்- 10
வர மிளகாய்- 4
சோம்பு- சிறிதளவு 
கொத்துமல்லி, கறிவேப்பிலை இலை- ஒரு கைப்பிடி 
நல்லெண்ணெய் மற்றும் உப்பு- தேவையான அளவு 


கம்பு சட்னி
* * * * * * * * 
கம்பு - கால் கப்
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவியது- சிறிதளவு
வர மிளகாய் – 6
உப்பு தேவைக்கு ஏற்ப 
கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க

இனிப்பு கம்பு அடை
* * * * * * * * * * * * *
கம்பு மாவு - ஒரு கப்
பனக்கற்கண்டு – 4 மேசைக்கரண்டி
தேங்காய் துருவியது -‍ ஒரு கைப்பிடி 
ஏலக்காய் – 1
நல்லெண்ணெய் ,உப்பு - தேவையான அளவு 


கம்பு உப்புமா
* * * * * * * * * 
கம்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 5 
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறு துண்டு
உளுந்து, கடலை பருப்பு கடுகு, சீரகம், கறிவேப்பிலை கொத்தமல்லி –சிறிதளவு.

கம்மங்கொழுக்கட்டை
* * * * * * * * * * * * * * *
கம்பு மாவு - 1/4 கிலோ,
வெல்லம் - 200 கிராம்,
துருவிய தேங்காய் - 1 மூடி,
ஏலக்காய் - 2

கம்பு புட்டு
* * * * * * * 
கம்பு மாவு - 1/4 லிட்டர்,
பனங்கற்கண்டு – தேவையான அளவு,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் – 2,
உப்பு - சிறிது,
நெய் - 2 தேக்கரண்டி.

கம்பு இனிப்பு, கார பொங்கல்
* * * * * * * * * * * * * * * * * * * 
கம்பு - 100 கிராம்
வெல்லம் - 50 கிராம் (இனிப்பு பொங்கல்)
மிளகு, சீரகம் -1 டீஸ்பூன் ( கார பொங்கல்)
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் – 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 1

கம்பங்கூழ்
* * * * * * * *
உடைத்த கம்புகுருணை : ஒரு கப்
தண்ணீர் : 3 கப்
மோர் : 2 கப்
சின்ன வெங்காயம் : 3 
உப்பு : தேவையான அளவு


கீழ்கண்ட அனைத்து கம்பு உணவுகளையும் மண்சட்டியில் செய்தால் சுவைகூடுவது மட்டுமில்லாமல் உடலிற்கும் மிகவும் நல்லது.



உணவே மருந்து

உணவின் சுவைகளை உவர்ப்பு, துவர்ப்பு, கைப்பு, கார்ப்பு, இனிப்பு, புளிப்பு என ஆறு வகைகளாகக் கூறுவதுண்டு. அறுசுவைகளால் ஆனதே இந்த உடல்.

நாம் இப்போது எந்த வகை உணவு நம் உடலிற்கு உகந்தது இல்லையோ அதைத் தான் அதிகம்உண்கிறோம். நவீன உணவுகள் என்ற பெயரில் அதிக பட்சம் மைதாவால் ஆன நூடுல்ஸ், மக்ரோனி, பாஸ்தா போன்ற உணவுகளை உட்கொள்வதுதான் நாகரீகம் என்ற விளம்பர மோகத்தில் சிக்கியதால் , நம் பழமையான பாரம்பரிய உணவு வகைகளை தீண்ட தகாத பொருட்களை பார்த்து விட்டதை போல எண்ணம் பலருக்கு. அதை உண்டால் நம் தரம் தாழ்ந்து விட்டது போல எண்ணுகிறார்கள்... கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, திணை, சம்பா கோதுமை, மக்காசோளம், பார்லி, குதிரை வாலி, பனங்கற்கண்டு இந்த பெயர்களை எல்லாம் இனி வரும் காலங்களில் பிள்ளைகள் அறியாத விஷயமாக ஆகி விடும்.

இனியும் கூட இந்த வகை பாரம்பரிய உணவுகளை எடுத்து கொள்ளா விட்டால் வாழும் நாட்களை வியாதிகளுடன் நரகமாக வாழ வேண்டியது தான்.

வாரத்திற்கு ஒரு நாள் என பகல் நேரங்களில் கம்பு, புழுங்கலரிசி, தினை, வரகு, சாமை, கோதுமை ரவை, மக்காசோளரவை இவற்றில் சாதம் செய்து பச்சை காய்கறிகள், கீரை வகைகளை குழம்பாக்கி சேர்த்து உண்டு வர சர்க்கரை மட்டும் இல்லை நம் உடம்பில் இருக்கும் மற்ற பிரச்சனைகள் மொத்தமும் குணமாகும். கேரட், வெள்ளரி போன்றவற்றை சாலட் ஆகவும் இதனுடன் சேர்த்து கொள்ளலாம்.


இரவில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பாத்தி மட்டுமே சாப்பிடாமல் கேழ்வரகு அடை, கம்பு அடை, கம்பு இட்லி என்றும் காலையில் வரகரிசிப் பொங்கல், திணை பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி, கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் என்று சாப்பிட்டால் உடல் எப்போதும் எந்த கோளாறும் இல்லாமல் இயங்கும்.

கம்பு, திணை, வரகு, சாமை, மக்காசோளம், சம்பா கோதுமை, மற்றும் கொள்ளு போன்றவற்றை ரவை போல (அரிசி நொய் போல ) உடைத்து கஞ்சியாக செய்து , இரவு வேளையில் இரண்டு அல்லது மூன்று டம்பளர்கள் குடித்தால் மிகவும் நல்லது .. அனைவருக்கும் ஏற்ற இரவு உணவு இது. பெரும்பாலும் இரவில் வயிறு நிறைய உணவு உண்ணக்கூடாது.. அதிலும் சர்க்கரை வியாதிக்காரர்கள் முழு வயிறு நிறையும் அளவு உண்ணவே கூடாது என்றாலும் கூட, இந்த கஞ்சியை சர்க்கரை வியாதிக்காரர்கள் இரவில் முழு வயிறு நிறையும் அளவு கூட குடிக்கலாம்... இதனால் உடலில் சர்க்கரையின் அளவு ஏறாது..இது இவர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாகும்.
இஞ்சி,புதினா, கொத்துமல்லி, பிரண்டை, கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றில் துவையல் செய்து இந்த கஞ்சிக்கு தொட்டும் சாப்பிடலாம்.

கேழ்வரகு தானியங்களில் அதிக சத்துமிக்கது. இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் நிறைந்தது.

கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. கால்சியம், இரும்புச் சத்து, நார்ச் உள்ளது. பி 11 வைட்டமின் ரைபோபிளேவின் நயாசின் சத்து உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது. வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் உள்ளது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகள் சோள உணவு சாப்பிட கூடாது.



வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. வரகு மாதவிடாய் கோளாறுகளை சரி பண்ணும்.

சாமை மலச்சிக்கலைப் போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும். ஆண்களின் விந்து உற்பத்தியை அதிகமாக்கி ஆண்மை குறைவையும் போக்கும்.

கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மலச்சிக்கல் போக்கும்.

பார்லியை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம். இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பார்கள். உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும். மலச்சிக்கலை போக்க வல்லது. காய்ச்சலை தடுக்கும். உடலின் வெப்பநிலையை சீராக்கும். சிறுநீர் தடையில்லாமல் செல்ல உதவும். எலும்புகளுக்கு உறுதி கொடுக்கும். இருமலை நிறுத்தும். குடல் புண்ணை ஆற்றும்.

பைபோலர் டிஸ்ஆர்டர் (Bipolar Disorder)

இரண்டு வெவ்வேறு குணாதிசயங்களை ஒரு சேரக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சில வேளைகளில் ஆத்திரம், கோபம், மன அழுத்தம், அதிக சந்தேகம் ஆகிய குணாதிசயங்களுடனும் , சில வேளைகளில் அளவுக்கு அதிகமான சந்தோஷத்துடன், அதிபுத்திசாலித்தனத்துடனும் காணப்படுவார்கள்.

இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த வேலையும் செய்யாமல் யாருடனும் சேராமல் ஒரு மூலையில் அமைதியாக இருப்பார்கள். அதிக அளவு உணர்ச்சி வசப்படுவார்கள். எப்போதும் தூக்கமே இல்லாமல் படுக்கையிலேயே மணிக்கணக்காக விழித்திருப்பார்கள். இல்லையென்றால் நாள் முழுவதும் உறங்கிக்கொண்டே இருப்பார்கள்.

மிகவும் பலம் வாய்ந்தவர்களாகவும், களைப்படையாமலும், சுறுசுறுப்புடனும், வேகமாவும் பேசிக்கொண்டு வேலை செய்வார்கள். திடீரென்று அமைதியாக, சோகமாக மிகுந்த கவலையுடன் காட்சியளிப்பார்கள்.
அதிக அளவில் பாதிப்பு உள்ளவர்கள் தன்னையோ (அ) அடுத்தவரையோ தாக்குவார்கள். தற்கொலை முயற்சியில் ஈடுபடுதல் என மோசமான நிலைக்கு தன்னையுமறியாமல் தள்ளப்படுவர்.

மனநிலையை ஒழுங்குபடுத்துதல், தியானம், யோகா போன்றவற்றால் பைபோலர் டிஸ்ஆர்டரை வேகமாக குணபடுத்த முடியும்.

தன்னிலை மறந்து இருப்பவர்களை நாம் பேசி புரிய வைப்பது என்பது முடியாத காரியம். அவர்கள் சுற்றி என்ன நடக்கிறது என்பதையே அவர்களால் உணர முடியாது.. அவர்களை மிகவும் கவனத்துடனும், அன்புடனும் கரிசனத்தோடு கவனித்து சீர்படுத்தி கொண்டு வரலாம்.

சனி, 19 அக்டோபர், 2013

முடி உதிர்தல் (Hair loss)

முடி கொட்டுதல் இன்று உலகளாவிய அளவில் அனைவரின் மிகப்பெரிய தலையாய பிரச்சனையாய் கருதப்படுகிறது..... கோபமான வேளைகளில் "போனா என் ம.... போச்சு.. போ" என்று சொல்லிக்கொண்டாலும் கூட முடி உதிர்வதை யாரும் சாதாரணமாய் எடுத்துக்கொள்வது இல்லை..

நமது தோற்றத்தை அழகாக்குவதில் முடிக்கும் பெரும் பங்கு உண்டு. ஒவ்வொருவருக்கும் சாதரணமாக ஒரு நாளைக்கு 50 லிருந்து 100 முடிகள் உதிர்வது இயல்பு. உடலில் ஏற்படும் பாதிப்பு தான் முடி உதிர்தலின் அடிப்படை காரணமாகும். நமக்கு முடி உதிர ஆரம்பிக்கும் போது கூடவே கவலையும், மனதளவில் பெரும் பாதிப்பும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகி அந்த அழுத்ததிலையே இன்னும் முடி அதிகமாக கொட்ட ஆரம்பிக்கும்.

முடி உதிர்தல் என்பது வெறும் அழகு பிரச்சனை மட்டுமில்லை. அது உடல் சார்ந்த பிரச்சனையின் வெளிப்பாடே என்பதை உணர்ந்தால் பயமில்லை. உடலில் ஏற்படும் சத்து குறைபாடோ மற்றும் வேறு நோய்களோ கூட முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கலாம். முடி உதிர்தலை அலட்சியபடுத்தாமல் காரணத்தை ஆராய்ந்து வியாதியை தொடக்கதிலேயே குணப்படுத்தினால் நீண்ட ஆரோக்கியத்துடனும், முடி இழப்பும் இல்லாமலும் சந்தோஷமாக வாழலாம். இப்போதெல்லாம் சிறு வயதிலேயே முடி கொட்டி வழுக்கை தலையுடன் வலம் வருகிறார்கள்..அதை மறைக்க எத்தனை பாடு... இதற்காக எத்தனை செலவுகள்...

நம் உடலில் உண்டாகும் தைராய்டு பிரச்சனை, ஹார்மோன் குறைபாடு, டைபாய்டு, மலேரியா, மன அழுத்தம், நச்சுப் பாதிப்பு, மனக்கவலை, வேலைப்பளு முதலியவையே முடி உதிர்வதற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. வெயிலில் வேலை அதனால் உண்டாகும் வேர்வையுடன் அதிக நேரம் இருத்தல் போன்ற காரணங்களால் கூட முடி உதிரலாம்.

இரசாயனங்கள் அதிகம் கலந்த ஷாம்பு, சோப்புகள், ஹேர் டை உபயோகிப்பது, சுருள் முடியை நேராக்குவது, நீளமாக இருக்கும் முடியை சுருள் சுருளாக மாற்றுவது போன்ற இத்தகைய நம் செயலால் முடியின் தன்மையே பாதிக்கப்பட்டு முடி உடைந்து, சிதைந்து போவதோடு மட்டுமில்லாமல் இன்னும் அதிகமாக உதிர ஆரம்பிக்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் புரதம், அனைத்து வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் நிறைந்த உணவுகள் இரும்பு சத்து உணவுவகைகள் உட்கொள்ளாதபோது முடி உதிரும் அளவும் அதிகரிக்கும். சினைப்பையில் இருக்கும் நீர்க்கட்டிகளால் மாதவிடாய் கோளாறுகள் பிரச்சனை ஒருபுறம் இருக்க நீர்க்கட்டிகளால் முடியின் தன்மை பலவீனமாகி மெலிந்து முடி உதிர அதுவும் ஒரு காரணமாகும்.

முடிந்த வரை தேங்காய் எண்ணெய் தவிர்ப்பது நல்லது. வாரத்திற்கு ஒரு முறையாவது தலை மற்றும் உடல் முழுவதும் நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம், தலையில் அழுக்கு சேர்வது கட்டுப்பட்டு முடி உதிர்வது குறையும்.

முடி உதிரும் பிரச்சனை அழகு சம்பந்தப்பட்ட பிரச்சினையே இல்லை. அழகு சாதனப்பொருட்கள் மற்றும் அழகுநிலையங்கள் மூலமாகவோ சரி செய்ய நினைத்தால் பணமும், முடியும் நம்மை விட்டு போவது உறுதி. உடலில் உள்ள குறைகளை கண்டுபிடித்து நல்லெண்ணெய், சிகைக்காய், கடலைமாவு, பச்சைபயறு, வெந்தயம், செம்பருத்தி இலை மற்றும் பூ, நெல்லிக்காய், கருவேப்பிலை இயற்கை முறையில்... நம் உடலுக்கு உள்ளே உண்ணும் பொருட்களை தலைக்கும் உபயோகிப்பது நல்ல பலனைத் தரும் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம்.



தலை முடியை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை தலையை தினமும் கழுவுதல் மிக முக்கியம். தினமும் தலையில் நீர் ஊற்ற முடியாத பட்சத்தில் வாரத்தில் இரண்டு நாள் அவசியம் தலை குளிக்க வேண்டும். இதற்கு தீர்வு உண்டு என்று நம்பி சில பல ஆங்கில மருந்துகளை உட்கொண்டு, மேலுக்கும் பூசி முடியை காப்பாற்ற முடியாமல் மொத்தமும் இழந்தோர் பலருண்டு நம்மிடையே...

முடி உதிர்தலை உடனடியாக கட்டுப்படுத்த எளிய வழி ஒன்று உண்டு...இரவு நேரம் சீக்கிரமாக தூங்க சென்றால் முடி கொட்டும் பிரச்சனைக்கு பாதி தீர்வு கிடைத்து விடும்.இரவு சரியாக தூங்கவில்லையென்றால் மறு நாளே தலை சீவும் போது முடி உதிர்வதை காணலாம்..

வாழ்க்கை முறை, நெருக்கடிகள், அதனால் வரும் மன உளைச்சல் ஆகியவற்றால் நாம் யாருமே இப்போது சரியாக தூங்குவதே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அவற்றை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நேரத்தோடு தூங்கி உடலுக்கு தேவையான ஓய்வை கொடுத்து பாருங்கள் முடி கொட்டுவது நிற்பதை கண்கூடாக காணலாம்..

Allergy - அலர்ஜி (ஒவ்வாமை)

அலர்ஜி என்பது நோய் அல்ல. பாக்டீரியா, வைரஸ், தட்பவெப்பம், உணவு, சுற்றுச்சூழல், மாசு, வாசனை திரவியங்கள், பூக்களின் மகரந்தம், உடலின் எதிர்ப்பு சக்தி குறைபாடு, செல்லப் பிராணிகளின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி என் பல காரணங்களினால் உடலில் ஏற்படும் ஒவ்வாமையே அலர்ஜி ஆகும்.

மேலை நாடுகளில் மட்டுமே அலர்ஜியின் தாக்கம் அதிகம் எனும் நிலை மாறி இப்போது நம் நாட்டிலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

அலர்ஜி எந்த வயதிலும் வரலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அலர்ஜி இருக்கும். காரணம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடலாம். சிலருக்கு சிறிய மாற்றங்கள் கூட , அதாவது உணவு, வாசனை பொருட்கள் கூட ஒவ்வாமையை உண்டு பண்ணும்.
காலை எழுந்தவுடன் அடுக்குத் தும்மல், கண்களில் தொடர்ந்து நீர் வடிதல், கண்களில் எரிச்சல் (அ) நமைச்சல், தோல் அரிப்பு, தோலில் சிவந்த தடிப்பு, மூக்கடைப்பு, இவைகள் எல்லாம் சமகாலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகள். இவற்றிற்கு காரணம் அலர்ஜியே..

சரியான காரணத்தை கண்டுபிடித்து அலர்ஜியை குணப்படுத்த முடியும். ஆனால் அலர்ஜியை ஆரம்பத்தில் பலரும் ஒரு பொருட்டாகவே கருதாமல் விட்டு விடுவதால் பின்னாளில் பல வியாதிகளை எதிர் கொள்கிறார்கள்.

நாய், பூனை, கிளி மற்றும் புறா போன்ற செல்ல பிராணிகளுடன் ஒட்டி உறவாடுவதன் மூலமும், தோலிற்கு ஒவ்வாமல் அரிப்பு ஏற்படுத்தும் துணி வகைகளை அணிவதனாலும், துணிகளில் உள்ள சாயம் போன்ற வேதி பொருட்களாலும், பூச்சிக்கடி , பிளாஸ்டிக்பொருட்கள், பால் மற்றும் சில உணவு வகைகளாலும், மருந்து வகைகளாலும் அலர்ஜி உண்டாகலாம்.

புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்கு அலர்ஜியை உண்டு பண்ணும். நாம் உண்ணும் உணவில் உள்ள தக்காளி, கத்தரிக்காய், முட்டை, இறைச்சி, ஊறுகாய், வற்றல், கருவாடு, கரம் மசாலா, சிக்கன், சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி உண்டாகும். பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. சிலருக்கு மாத்திரைகளால் கூட அலர்ஜி உண்டாகும். அலர்ஜியால் உடம்பில் கொப்புளம், தடிப்பு, அரிப்பு, திட்டு திட்டாக சிவந்து போதல், தோல் வெடித்து புண்ணாதல் , காய்ச்சல் என பல நோய்கள் தோன்றும். பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் சுத்தமாக பராமரிப்பது மிக முக்கியம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவு மற்றும் மருந்து வகைகளை கண்டறிந்து தவிர்ப்பதன் மூலம் தொல்லைகளிருந்து மீளலாம். சுற்று புறத்தை தூசுகளின்றி தூய்மையாக வைப்பதன் மூலமும், தூசு அதிகமுள்ள இடங்களில் இருப்பதை தவிர்ப்பதன் மூலமும், ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் அலர்ஜியில் இருந்து விடுபடலாம்.

இதற்கு நிரந்த தீர்வு கண்டிப்பாக உண்டு.

புகை (Smoking)


புகை பிடிப்பதால் நுரையீரல் பெரும் அளவில் பாதிப்படையும் என்று நாம் அறிந்ததே இருந்தாலும் சிகரெட் புகைப்பதை மட்டும் நிறுத்த முயற்சி செய்வதே இல்லை...

புகை பிடிப்பதால் நுரையீரல், வாய், உணவுக்குழாய் புற்று என பலவிதங்களில் நம் உடலுறுப்புகளில் உண்டாகும் புற்றுநோய் பட்டியல் நீண்டு கொண்டே போனாலும், சிறுநீர்ப்பை புற்று வர மிக முக்கியமான காரணங்களில் முதலிடம் வகிப்பது புகைப்பழக்கம் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

முகம் பொலிவு பெற

   பளிச்சென்ற முகம் இயற்கை முறையில் கிடைத்தால் அதன் பலன் கூடுமே தவிர குறையாது. ஆண், பெண் இருபாலரும் இம்முறையை உபயோகித்து இயற்கை முறையில் முகப் பொலிவை கூட்டலாம். ரசாயனக் கலவையால் இளவயதில் உண்டாகும் முகச்சுருக்கம் மற்றும் பக்க விளைவுகளில் இருந்து நம் முகத்தை காப்பாற்ற எளிய வழி.

பத்து பாதாம் பருப்பை இரவே ஊற வைத்து மறு நாள் பசும்பாலுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட்போல அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகத்தில் பூசி 20லிருந்து25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ முகம் பளிச்சென்று ஆகும்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வெர்டிகோ (Vertigo)



அடிக்கடி வரும் தொடர் தலைச்சுற்றலே வெர்டிகோ எனப்படும்.

அடிக்கடி மயக்கம், தலைவலி, வேர்வை, தலைசுற்றல், எங்கோ பறப்பது போன்ற உணர்வு, குமட்டல், கண்கள் மங்கலாகவும் (அ) தெளிவில்லாத அசாதாரண கண் அசைவு, பேசும்போது நாக்குழறல், காது மந்தம் மற்றும் எப்போதும் ஒரு இரைச்சல், கை, கால்களில் பலவீனம், உட்கார்ந்தோ அல்லது நடந்து கொண்டிருக்கும் போதோ தலைசுற்றல், படுக்கையில் இருந்து எழுந்து நிற்கும் போது அறையே சுற்றுவது போல் தலைசுற்றல் போன்றவையே இந்நோயின் அறிகுறிகளாகும். இவர்களுக்கு குறிப்பாக கார், படகு ஓட்டும்போது தலை சுற்றல் வரும்.

இந்நோயின் பாதிப்பு மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும். கண்டுக் கொள்ளதா வெர்டிகோ முடிவில் இருதய கோளாறில் நிறுத்தும். மேலும் இது முதுகுத்தணடுவடம் அதைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி என அடுத்தடுத்து ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படைய ஆரம்பிக்கும்.

காபி, டீ , புகை, மது அறவே கூடாது. கொழுப்புசத்து நிறைந்த அசைவ உணவுகள், இனிப்பு, உப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கீழே விழுந்து அடிபடுவதை தவிர்க்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் நரம்பு கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளுவது மிக்க நலம்.

நம் உடலில் தோன்றும் பெரும்பாலான வியாதிகளுக்கு மலசிக்கல் தான் காரணமாக அமைகிறது...இந்த வியாதிக்கும் முக்கிய காரணமே மலசிக்கல் தான்.இதுவே நாளடைவில் காதுகளின் உட்புற பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தலைசுற்றல் வந்தவுடன் உடனே அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டால் குறைய ஆரம்பிக்கும்.

நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள், இளநீர், மோர் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்நோயால் பாதிக்கப் பட்டவர்கள் நெல்லிக்காய், இஞ்சி, தேன், சீரகம், சுக்கு, கொத்தமல்லி, கறிவேப்பலை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே இந்த நோயின் பிடியிலிருந்து வெளிவரலாம். இந்நோய்க்கு உணவு மட்டுமே மருந்தாக முடியும்..

ஒரு சிலருக்கு உட்கார்ந்து எழுந்திருக்கும் போது சில நொடிகள் தலை சுற்றி பின் சரியாகும். அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த தலைசுற்றல் சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவதால், ரத்தக் கொதிப்பு அதிகமானாலும், குறைந்தாலும், சர்க்கரையின் அளவு கூடினாலும் குறைந்தாலும், தூக்கத்தின் அளவு குறைந்தாலும், கூடினாலும் தலைசுற்றல் வரும். தலைசுற்றல் வருவதற்கான மூலக் காரணங்களை கண்டுப்பிடித்து தீர்வு காணலாம்.

அக்குபஞ்சரில் நிரந்தர தீர்வு இந்த நோய்க்கு உண்டு என்று உறுதியுடன் கூறலாம்.

வலிப்பு நோய் (Fits )



இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை வயது வரம்பின்றி எந்த வயதினரையும் தாக்கும். பொதுவாக நோய்கள் குறித்த போதிய தெளிவின்றி நாமே எடுத்துக் கொள்ளும் மருந்துகளும், சிகிச்சைகளும், அறிவுரைகளும் நோயின் தன்மை அதிகமாகவதற்கு காரணமாக அமைகிறது. வலிப்பு நோயும் இதற்கு விதி விலக்கு அல்ல. வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாத காரணத்தினால் இந்த நோயின் தாக்குதலும் தீவிரமாகவே இருக்கிறது.

வலிப்பு எனப்படுவது மூளைப்பகுதியில் ஏற்படும் இழுப்பு நோயின் தாக்குதல். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் இயக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மாறுதல்கள், சிறிது நேரம் தடங்கல்கள் ஏற்பட்டு உறுப்புகள் கட்டுப்பாடில்லாமல் வெட்டி வெட்டி இயங்குவதே வலிப்பு எனப்படுகிறது.. இது காக்கா வலிப்பு, ஜன்னி, பிட்ஸ் மற்றும் எபிலெப்ஸி என்றும் வெவ்வேறு பெயர்களில் சொல்லப்படுகிறது.

விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்கள் , மூளையில் ஏற்படும் கட்டிகள், மூளைக் காய்ச்சல், பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகள், மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் , நரம்புமண்டலக் குறைபாடு , போதை பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் மனம் மற்றும் நரம்பு மண்டல சிதைவு, உடலில் சர்க்கரை அளவு (அ) சோடியத்தின் அளவு குறைதல் , உறக்கமின்மை, காச நோய், அஜீரணம், குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாதல் போன்ற காரணங்களினால் வலிப்பு நோய் உண்டாகிறது. வேறு சிலருக்கு எந்த விதமான காரணமும் இல்லாமலும் வரலாம்.

கண் மேலே சொருகிக்கொண்டு மயக்கமடைதல், கை, கால் மற்றும் உடலில் உள்ள பாகங்கள் வெட்டிகொள்வதோடு வாயிலும் நுரை தள்ளுதல், தன்னிலை மறந்து பேசுதல், ஒரே இடத்தை கண்சிமிட்டாமல் பார்த்தல், அதிகபட்சமாக சிறுநீர் கழித்தல் ஆகியவை வலிப்பு நோயின் அறிகுறிகள் ஆகும்.

அதிக அளவு உணவு உட்கொள்வது, வெகுநேரம் தூங்காமல் விழித்திருப்பது, போதை பொருட்கள் மற்றும் மது அருந்துவது போன்றவற்றை வலிப்பு நோயாளிகள் தவிர்ப்பது அவசியம்.இந்நோய் உள்ளவர்களுக்கு கால்சியம், க்ளுக்கோஸ், சோடியம், அமிலம் மற்றும் எலக்ட்ரோலைட் போன்றவை சமனின்றி இருக்கும். எனவே அவர்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் தவிர்த்து விட வேண்டும்.

வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பு அல்லது சாவிக் கொத்தைத் திணித்தால் வலிப்புப் போய் விடும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இது மூட நம்பிக்கையே தவிர குணமாக்கும் முறையும் இல்லை.முதலுதவியும் இல்லை. ஒரு தேக்கரண்டி (அ) கடினமான பொருளில் துணியை நன்றாக சுற்றி நோயாளியின் பற்கள் இடையில் வைத்தால் அவர்கள் தன நாக்கை கடித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

வலிப்பும் ஒரு நோய் தான் அதனால் இந்த நோய் உள்ளவர்களைக் கண்டு நாம் பயப்படாமல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டாலே போதுமானது. சரியான சிகிச்சையால் முழுவதுமாக குணப்படுத்தி விடலாம்.

பூச்சி (Worms)

அதிகமாக பசி இருக்கும். சிலர் நன்கு சாப்பிட்டாலும் கூட எடை குறைவார்கள்.
இதற்கு காரணம் வயிற்றில் இருக்கும் பூச்சிகளே/ புழுக்களே ஆகும்.

இதன் அறிகுறிகளாக சளி மற்றும் வாந்தி, தூக்கத்தில் ஜொள்ளு (Salivation) வடிதல்,சில சமயம் வயிற்று போக்கும் ஏற்படும்.

மேலும் ஏனஸ்சில் (மலவாயில்) அரிப்பு மற்றும் தொப்புளுக்கு கீழ் அடிவயிற்றில் வலியும் இருக்கும்..

ஆண் மலடு ( Infertility in Men )

பொதுவாக கருத்தரிக்காத பெண்ணையும், ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியாத ஆணையும் மலடு என்று குறிப்பிடுகிறார்கள்.

திருமணம் முடித்து ஒரு சில வருடங்களுக்கு பின்பு ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அந்த பெண்ணிற்கு பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் அப்போது தான் ஒரு ஆண் தன் மலட்டு தன்மையை உணர ஆரம்பிக்கிறான்.
பெண்ணின் கருமுட்டை வளர்ச்சியடையாமல் மலட்டுத்தன்மை உண்டாவது போல , குறைவான விந்து எண்ணிக்கை மற்றும் வீரியமற்ற விந்தணுக்களால் ஒரு ஆண் தந்தையாக முடியாமல் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

இதனால் அவர்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவதோடு குழந்தையின்மையும் உண்டாகிறது. குடும்பத்தில் குழப்பமும் கூடுகிறது.
ஆண்களுக்கு மலட்டு தன்மை வர பல காரணங்கள் இருந்தாலும் சில பல காரணங்கள் இன்னும் அதிகமான பாதிப்பை உண்டு பண்ணுகின்றன.



லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. மேலும் எண்டோகிரைன், வாஸ்குலர் நரம்பு, ஆண்களுக்கு விபத்தில் டெஸ்டிஸ்(விதைப்பை) காயம் (அ) அழுத்தம் ஏற்பட்டால், பொன்னுக்கு வீங்கி காரணமாக உண்டாகும் வைரஸ் தொற்று, மன அழுத்தம், பரம்பரை மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளே ஆண்களின் மலட்டு தன்மைக்கு காரணமாகி அவர்கள் நிம்மதியை தொலைத்து விடும்.

இதை சரிசெய்ய வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைகிறது. சீரான உடற்பயிற்சி, சூடான நீரில் தினமும் குளிக்காமல் இருத்தல், காபி, புகை மற்றும் மது பழக்கத்தை அடியோடு கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் மிகுந்த பலன் அளிக்கும்.
யோகா, தியானம் போன்ற பழக்கங்களை அனுசரித்து வந்தால் விந்துவின் வீரியமும், எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

ஆண், பெண் மலட்டு தன்மை என்பது ஒரு குறைபாடு தானே ஒழிய நோயே அல்ல.

வியாழன், 5 செப்டம்பர், 2013

கோகுலம் கதிரில் என்னை பற்றி....


பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடிய எந்த மருந்துகளையும் உட்கொள்ளாமல் அனைவரும் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் அக்குபஞ்சர் மருத்துவத்தில் என்னுடைய சிறு பங்களிப்பை பற்றி கோகுலம் கதிர் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை உங்கள் பார்வைக்கு...

என்னுடைய இந்த சிறு சேவையை பாராட்டி கட்டுரை வெளியிட்ட "கோகுலம் கதிர்" பத்திரிகை நிறுவனத்திற்கும் கட்டுரை வெளியாக காரணமாக இருந்த கே.இந்திரா அவர்களுக்கும் , "அறிவோம் அக்குபஞ்சர்" முகநூல் பக்கத்தின் வாயிலாக என்னுடைய சேவையை தொடர்ந்து உற்சாகத்துடன் செய்ய ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமாரந்த நன்றிகள்.

சோரியாசிஸ் (Psoriasis)


மிக எளிதில் குணமடையாத, மனிதனை மிகவும் பயமுறுத்தக் கூடிய நாட்பட்ட தோல் வியாதிகளில் இதுவும் ஒன்று. இந்த வியாதி ஏன், எதனால் வருகிறது என்று அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் நிறைய காரணங்கள் தொடர்புடையதாய் இருக்கிறன.

உணவு ஒவ்வாமை, வளர்சிதை மாற்றங்கள், சுவாசகோளாறுகள் கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகள் ஏற்படும் தொந்திரவுகள் ஆகியவற்றின் மூலம் இது வரலாம்.. மன அழுத்தம், அதிகமாக மது குடிப்பது. புகைபிடித்தல், முக்கியமாக கடல் உணவு வகைகள் (தயிருடன் மீன் சேர்த்து உண்பது), சில மருந்துவகைகளின் ஒவ்வாமை போன்ற காரணங்கள் சோரியாசிஸ் நோயை அதிகப்படுத்துகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இது தாக்க வாய்ப்பு உண்டு.

சோரியாசிஸ் யாருக்கு வேண்டுமானலும் வரலாம். இது தொற்றோ, வைரஸ், பாக்டீரியாவால் உருவாகும் நோயோ இல்லை. உயிருக்கு உடனே ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கடுமையான நோயும் இல்லை என்றாலும் உடல் அழகை பாதிப்பதால் தன்னம்பிக்கையை குறைத்து, மனச்சோர்வை உண்டு பண்ணும் என்பதில் ஐயம் இல்லை...
சாதாரணமாக மனிதனின் உடலில் தோலிலுள்ள செல்கள் சீராக வளர்ந்து நான்கு வாரங்களில் உதிர்ந்து விடும். ஆனால் இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் வெகு விரைவாக ஒரு சில நாட்களிலோ (அ) ஒரு வாரத்திலோ வளர்ந்து உதிர்ந்து விடும். அதிகப்படியான செல்களின் வளர்ச்சியே இதற்கு காரணம்..அளவுக்கு அதிகமாக உருவாகும் இந்த செல்களினால் தோல் தடிமனாகவும், சிவந்தோ (அ) வெள்ளை நிறத்திலோவும் காணப்படும். தோலின் மீதிருந்து வெண்மையான பளபளப்பான செதில்கள் மீன் செதில் போன்று உதிர ஆரம்பிக்கும்.


சிவந்த இந்த வகையான திட்டுகள் முதலில் சிறிய மற்றும் பெரிய அளவில் தோன்றும். இந்த வியாதி பெரும்பாலும் தலையில் பொடுகு போல தோன்றி அதுவே அரிப்பு, முடிகொட்டுதல் என ஆரம்பித்து பரவும்..ஆனால் இது சோரியாசிஸ் நோயின் பாதிப்பு என்று அறியாமல் பொடுகுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டு இருப்போம். மாதகணக்கில் சரியாகாமல் உடலின் மற்ற பாகங்களில் பரவ ஆரம்பித்த பின் தான் வந்து இருக்கும் நோயின் தன்மை புரிய வரும். மேலும் முழங்கைகள், முழங்கால்கள் , கணுக்கால், கைகள், பாதம் மற்றும் இடுப்பின் கீழ்பகுதி , காதுக்கு பின்புறம், அக்குள், தொடையிடுக்கு, கை, கால் மடிப்புகள் ஆகிய இடங்களிலும் தோன்றும் சோரியாசிஸ் பெரிய வட்டங்களாக ,சிவப்பு நிறத்துடன் செதில்கள் போன்று இருக்கும். இந்த நோய் தலை முதல் இனப்பெருக்க உறுப்புகள் உட்பட எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும்.

சொரிந்தால் இரத்த கசிவுடன் செதில் போல உதிர்தல், கைவிரல், கால்விரல் நகங்களில் சொத்தை, மூட்டுகளில் வலி என உடல் முழுவதிலும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துவதொடு மட்டுமில்லாமல் வெளித்தோற்றத்தையும் இது பாதிப்பதால் மற்றவர்களின் வித்தியாசமான, அருவருக்கத்தக்க பார்வைக்கு உள்ளாவதால் தீவிர மனஉளைச்சளையும் ஏற்படுத்தும். மேலும் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் தண்டுவடம் மற்றும் மூட்டுகளையும் பாதித்து ஆர்த்ரைடீஸ் (arthritis) கண்டிப்பாக வரும்.

இது மனைவி (அ) கணவன் யாருக்கு இருந்தாலும் மற்றவர்களுக்குப் பரவாது. இந்த தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதாலோ, அவர்கள் உபயோகிக்கும் பொருட்களை நாம் உபயோகிப்பதாலோ இந்த நோய் பரவாது.. ஆனால் இந்த நோய் காரணிகள் மரபணுக்களின் வழியாக கடத்தப்படுவதால் இந்த நோயின் தாக்குதலுக்குள்ளானவர்களின் வாரிசுகளுக்கு இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்...சமயங்களில் மூன்றாவது, நான்காவது தலைமுறையில் கூட இதன் பாதிப்பு வெளிப்படும். மரபு வழி காரணம் சொல்ல பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுவும் ஒரு காரணமே...

இந்த வியாதி எந்த நாட்டு மக்களையும் விட்டு வைத்ததில்லை...இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கிறது . உலகின் மொத்த மக்கள் தொகையில் 2% பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும்... இந்தியாவில் 16 மில்லியன் பேரும் , அமெரிக்காவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்வீடனின் மொத்த மக்கள் தொகையில் 3% பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன...

சோரியாசிஸ் தோல் வியாதிக்கு வெளிநாடுகளில் டாக்டர் பிஷ் அல்லது கர்ரா ரிஃபா (GURRA RUFA) என்ற மீன்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது... இந்த மீன் நிப்பிள் மீன்கள் என்றும் கங்கள் மீன்கள் என்றும் வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது... இது மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் நதிகளில் இருக்கும் மீன்களை கண்ணாடி தொட்டியில் வளர்த்து சோரியாசிஸ் நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை ஒரு தற்காலிக தீர்வை தருமே தவிர நிரந்தர தீர்வு ஆகாது... மரபணுக்களில் இருக்கும் இந்த நோய் காரணிகளை முற்றிலும் நீக்க முடியாது என்று கருத்து பரவலாக இருந்தாலும் இந்நோய் குறித்து கவலை, பயம் கொள்ளாமல் மனதை எப்போதும் அமைதியாக வைத்து கொள்ளுதல், யோகா, தியானம் மூலமாகவும் உடலின் தேவை அறிந்து உண்ணுதல் உறங்குதல் என் வாழ்ந்தால் இந்த வியாதியை பூரணமாக கட்டுப்படுத்தி நோயின் தாக்கத்திலிருந்து மீளலாம்.

மேலும் இந்த தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களுடன் சகஜமாக பழகுவதன் மூலம் அவர்களுக்கு மனோ ரீதியாக பக்கபலமாகவும், ஆறுதலாகவும் இருக்கலாம