வியாழன், 28 ஆகஸ்ட், 2014

புகையால் கருகும் உறவுகள்.


புகைப் பிடிப்பவர்களுக்கு வாய், தொண்டை, நுரையீரல், சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை என மிக முக்கிய உறுப்புகளிலும் புற்றுநோய் வரும், ஆண்மைக் குறைபாடு, வாய் துர்நாற்றம் போன்ற உபரி பரிசளிப்பும் உண்டு என பல முறை இங்கு பதிவுகள் போட்டு எச்சரித்தாலும் இன்னும் நம்மில் பலர் அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வரவில்லை.

புகைப்பதால் உண்டாகும் கெடுதல்கள் குறித்து பல விழிப்புணர்ச்சி விளம்பரங்கள் வந்தாலும், அதையும் மீறி புகைப் பிடிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு வாரத்திற்கு நாற்பது மணி நேரம் வீதம் புகை பிடிப்பவர்கள் உடன் இருந்தால், உடன் இருக்கும் ஒரே பாவத்திற்காக மனைவி-பிள்ளைகள்-அலுவலகத்தில் உடன் பணிபுரிவோர் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்..இவர்களுக்கும் ஐந்தாண்டுகளில் நுரையீரல் புற்றுநோய் வரும் சாத்தியங்கள் அதிகம்..நுரையீரல் புற்றுநோய் மட்டுமில்லாமல் இன்னும் பல நோய்களும் அவர்களை தாக்கும்.

இனிமேல் உங்கள் அருகில் இருப்பவர் யாரும் புகைத்தால்.. "நீ செத்தா சாவு... என்னை ஏன் கொல்ற" ன்னு அந்த சிகரெட்டை பிடுங்கி எறிங்க.... 




ஒரு கூடுதல் தகவல்:- ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் அமைந்திருக்கும் "ஆல்கலிக்ஸ்" என்ற தனியார் நிறுவனம் புகை பிடிக்காதவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குகிறது

மார்பகப் புற்றுநோய்


மனித உடல் திசுக்களில் ஏற்படும் அசாதாரணத் தன்மையும், கட்டுப்பாடற்ற, முறையற்ற வளர்ச்சியுமே புற்றுநோய் எனப்படுகிறது. பலவகையான உயிரணுக்களால் (செல்களால்) ஆனது நம் உடல். உடலின் வளர்ச்சிக்கு உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்கும். இப்படிப்பட்ட முறையில் கோளாறு உண்டாகும் போது பழைய உயிரணுக்கள் அழிய வேண்டிய நேரத்தில் அழியாமல் அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துவிடும். உடலில் எப்போதும் போல புதிய உயிரணுக்கள் உருவாகும். உடலில் சேரும் அதிகப்படியான உயிரணுக்கள் கட்டியாக மாற ஆரம்பித்து விடும். உடலுக்கு அடிப்படையாக உள்ள செல்களை பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்ற வைரஸ்களும் புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.

இப்போதைய பெண்களை உலுக்கிக்கொண்டிருக்கும் கொடிய நோய்.. மார்பகப் புற்று நோய்.. மார்பகப்புற்றுநோய் பற்றிய விழிப்புணர்ச்சி தற்போது அனைத்து பெண்களுக்குமே அவசியமான ஒன்று.. அனைத்து வயதினரும் இதை பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும். இதன் அறிகுறிகள் என்ன என்பதை தெரிந்து வைத்திருந்தால் இந்த நோயை வராமல் இருக்கவும், வந்தால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் ஆயுளை நீட்டித்துக்கொள்ளலாம்...




பெண்களின் மார்பகம் ஒவ்வொன்றும் லோப்ஸ் எனப்படும் ஆறு முதல் ஒன்பது அடுக்குகளை கொண்ட மடிப்புத் தொங்கு சதைகள் கொண்டது. மார்பகத்தில் சதைப்பற்று ஏதுமில்லை. ஆனால் மார்பகத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று விலா எலும்புகளை மறைக்கின்றன. ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும், லிம்ப் (lymph) எனப்படும் வண்ணமற்ற திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் இருந்தாலும் மிக அதிகமாக அக்குள், தோள்பட்டை எலும்புகளின் மேலே மற்றும் மார்பகங்களிலும் உள்ளன. மார்பகத்தில் உள்ள சதைக் கோளங்கள் வளர்ச்சியின் காரணமாக மார்பகம் பெரிதாக இருப்பது போன்று தோன்றும்.
மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள முடியும். மார்பகங்களின் கீழிருந்து மேலாக, பக்கவாட்டில் மற்றும் அக்குளை ஒட்டிய பகுதியில் அழுத்தமாக தடவிப் பார்ப்பதன் மூலம் ஏதேனும் கட்டிகளோ, கொப்புளங்கள் போன்றோ, மேடிட்டோ காணப்படுமாயின் உடனடியாக தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுதல் வேண்டும். மேலும் கட்டிகள் அனைத்துமே கேன்சர் கட்டிகள் இல்லை. சிலசமயம் அழுத்தினால் கட்டிகள் இருப்பது போன்று தோன்றினால், அந்த கட்டிகளில் வலி இருந்தாலும், இல்லாவிட்டாலும் கேன்சருக்கான வாய்ப்பு உள்ளதா என முறையான பரிசோதனை செய்துகொள்வது நல்லது . புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை.

புற்றுநோய் ஏன், எதனால், எப்போது, எப்படி தாக்கும் என்பது குறித்து இதுவரை முழுமையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை .புற்றுநோய் உண்டாகும் சூழ்நிலைகள், காரணங்கள் மற்றும் அறிகுறிகளும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றன. தொடக்க நிலையிலே புற்றுநோய்களை கண்டறிய வழிகளும், அதிலிருந்து மீண்டு நீண்ட காலம் வாழ மாற்று மருத்துவ வழிமுறைகளும் இப்போது நடை முறையில் வந்து விட்டன.
ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது.
பொதுவாக 50 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றாலும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சுயபரிசோதனை செய்து கொள்ளவது அவசியம். மனித உடலை 250 வகையான புற்றுநோய்கள் தாக்குவதாகவும், மார்பக புற்றுநோயால் சென்னையில் மட்டும், 35 பெண்களில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடமும் எட்டு இலட்சம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கும் மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 2 சதவிகிதம் உள்ளது. மார்பக புற்றுநோயை பொறுத்தவரையில் பெண்கள் மிரளத்தான் செய்கிறார்கள். சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.

மாசு நிறைந்த சுற்றுச்சூழல், ரசாயனம் நிறைந்த உட்கொள்ளும் உணவுகள், தாய்மை அடையாத பெண்கள், குழந்தையின்மை, டென்ஷன், தவறான உணவு முறை, ரசாயன உரம் உள்ள உணவுப் பொருட்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம், பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். பெண்களை தாக்கும் மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் அதை தடுத்து உயிரை பாதுகாக்கலாம். 


எந்த வித அறிகுறியையும் காட்டாமல், நம் உடலில் ரகசியமாக உருவாகி, சிறிது சிறிதாக நம் மன உறுதியை உடைத்து இறப்பின் வாசலுக்கே அழைத்துச் செல்லும். சாகும் நாள் தெரிந்துவிட்டால் சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் கூட வாழும் நாள் நரகமாகவே இருக்கும்.. பிறக்கும் எல்லோருமே இறக்கபோவது உறுதி என்று தெரிந்து இருந்தாலும் கூட, மரணத்தை வாசலில் உட்காரவைத்து விட்டு அது எப்போது வேண்டுமானாலும் நம்மை தாக்கலாம் என்ற பயத்துடனே ஒவ்வொரு நொடியையும் வாழும் வாழ்க்கை நரகம் தான். உடலை வேதனைப்படுத்தி அதன் மூலம் மனதை, நம்பிக்கையை தளர்த்தி, தகர்த்தி கடைசியில் வெல்லும் ஒரு நோய்தான் புற்று நோய். அமைதி, மன உறுதி, நோயைப் பற்றிய தெளிவும் இருந்தால் எந்தவிதமான புற்றுநோயால் பாதிக்கப் பட்டாலும், அதிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு சந்தோஷமாக வாழலாம். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் நம்முடன் ஆரோக்கியமாக பலகாலமாக வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதற்கு இறப்பு ஒன்று தான் முடிவு என்ற நிலை மாறி, பக்கவிளைவுகள் இல்லாத பலவிதமான மாற்று சிகிச்சை முறைகள் வந்து விட்ட நிலையிலும், மருந்து கால், மனசு முக்கால் என்ற வைத்திய மொழியின் அடிப்படையில், வீணான பயங்களை அகற்றி, நம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக வாழலாம் என்ற விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கமே இந்த பதிவு 

மார்பக புற்று பெண்களை தாக்காமலும், நோயால் தாக்கப்பட்டால் நோயிலிருந்து விடுபட பெண்கள் அனைவரும் சிறிதளவாவது விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். பெண்கள் தங்களை தாங்களே எப்படியெல்லாம் மார்பகத்தை சுயபரிசோதனை செய்துக்கொள்ளலாம் என இனி காணலாம்.
பெண்கள் தங்கள் மார்பகத்தின் அளவு மற்றும் வடிவம் மாறி இருந்தாலோ, அக்குள், மார்பகங்களில் வழக்கத்துக்கு மாறாக தடித்தோ (அ) கட்டி மாதிரி இருந்தாலோ, மார்பகம் மேல் அசாதரணமாக சிவப்பு தடிப்புகள் தென்பட்டாலோ கண்டிப்பாக அதை சாதரணமாக எடுத்துக் கொள்ள கூடாது. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது, வலி, காம்புகளில் இருந்து இரத்தமோ வேறு திரவமோ கசிந்தால் உடனடியாக தகுந்த மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது. புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. மார்பகத் திசுக்கள், மார்பகப் பகுதியில் மட்டுமே இருப்பதில்லை, அக்குள் பகுதியிலும் உண்டு. அக்குள் பகுதிகளில் உருண்டையாக தசைக் கோளங்கள் போல உருவாகி இருந்தால் சில சமயம் அது கட்டியாக கூட இருக்கலாம், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்

புற்று நோய்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome) 
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
முதல் வகை புற்றுநோய் நாளங்கள் தடிப்பதின் மூலம் தொடங்கும்.
இரண்டாம் வகை புற்றுநோய் மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் தொடங்கும்.
மூன்றாம் வகை புற்றுநோய் மார்பகம் முழுவதும் பரவிய பின், அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களிலும், எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் எல்லா லிம்ப் நோட்களிலும் புற்று நோய்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. 
1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)
2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome) 
3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)
முதல் வகை புற்றுநோய் என்பது, நாளங்கள் தடிப்பதின் மூலம் தொடங்கும்.
இரண்டாம் வகை புற்றுநோய் என்பது, மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் தொடங்கும்.
மூன்றாம் வகை புற்றுநோய் என்பது மார்பகம் முழுவதும் முற்றிலும் பரவிய பின், அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களிலும், எலும்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் எல்லா லிம்ப் நோட்களிலும் பரவியிருக்கும். 

மார்பகப் புற்று நோயில் நான்கு நிலைகள் உள்ளன. 
1. வேறு எங்கும் பரவாமல் மிகச் சிறிய அளவில் மட்டுமே கட்டியாக முதலில் மார்பகம் மட்டுமே தாக்கிய நிலை.
2. மார்பகம் மற்றும் அக்குள் பகுதியையும் பாதித்து விட்ட நிலை.
3. மார்பக தோல் மற்றும் மார்பக சுவரை தாண்டியும், அக்குள் பகுதியிலுள்ள லிம்ப் நோட்களில் புற்றுநோய் அணுக்கள் முற்றிலும் பரவிய நிலை.
4. மூளை, எலும்புகள் என உடலின் மற்ற பாகங்கள், லிம்ப் நோட்கள் அனைத்திலும் முற்றிலும் பரவி விட்ட நிலை.

சிறுவயதிலிருந்தே தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு உடலில் உருவாகி, கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை எனக் கூறலாம். மேலும் கேரட்டில் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் (நோய் எதிர்ப்பு சக்தி) அதிகம் உள்ளதால், அடிக்கடி உணவில் கேரட்டை சேர்த்துக் கொண்டால் புற்றுநோயை அடியோடு வராமல் தடுக்கலாம். ஆம் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது கேரட். 
அகத்திக்கீரை, முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
மேலும் உணவில் முளைக்கட்டிய பயறு, நெல்லிக்காய், முட்டைக்கோஸ், கேரட், பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை, சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ், ஆப்பிள், மாதுளை, திராட்சை, பப்பாளிப் பழம் மற்றும் தர்பூசணிப் பழங்கள் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். 

நோயால் தாக்கப்பட்டால் அதன் பின் உணவு வகைகளில் அசைவத்தில் அறவே தவிர்க்க வேண்டியவை ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக்கறி. 

மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் வேப்பிலையும், மஞ்சளும் தினமும் ஆண்/பெண் இருபாலரும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் அணுக்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டு, எந்த வகையான புற்று நோயும் நம்மை அண்டாது

வல்லாரை கீரை பூரி


"பத்து வல்லாரை இலைகளை எடுத்து ஐந்து மிளகு சேர்த்து" அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூன்று மாதத்தில் மூளை திசுக்கள் வலுப்பெற்று, நரம்பு தளர்ச்சியை நீக்கி, தளர்வுற்ற தேகத்தை இறுகிப் பலம் பெற செய்யும். 




அளவில்லா மருத்துவ குணங்கள் நிறைந்த வல்லாரை கீரையை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, கொஞ்சம் தண்ணீர் கலந்து மிக்சியில் விழுது போல அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு கோதுமை மாவுடன் இந்த வல்லாரை கீரை விழுதையும் சேர்த்து பிசைந்து வழக்கம் போலவே பூரியாக செய்யலாம்.. இதில் எண்ணெய் ஒட்டாது... நன்றாக உப்பி வரும்.. மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்

வல்லாரை கீரை மட்டுமில்லாமல் புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, முடக்கத்தான், தூதுவளை என எந்த மூலிகை கீரையையும் இப்படி விழுதாக அரைத்து பூரி (அ) சப்பாத்தி செய்யலாம்...

இதேபோல கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்றவற்றில் விதவிதமாக செய்யப்படும் இட்லி, தோசை போன்றவற்றிலும் இந்த மூலிகை கீரை விழுதை கலந்து செய்யலாம். இதனால் சாதாரணமான உணவு வகைகள் சுவையுடன் மருத்துவ குணங்களும் நிரம்பி உடலுக்கு ஆரோக்கியம் தரும்..

இதற்கு தொட்டுக் கொள்ள அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சாம்பார், காளான் கிரேவி, பட்டாணி குருமா என செய்துகொள்ளலாம்... வித்தியாசமாக கலருடன் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்...

மூலிகை கீரைகளின் பயன்களை பற்றி நாம் ஏற்கெனவே பல்வேறு தகவல்களை பதிவிட்டிருக்கிறோம்.. அதை எப்படி சாப்பிடலாம் என்றும் சொல்லி விட்டோம்...இனி உங்கள் குடும்ப ஆரோக்கியம் உங்கள் முயற்சியிலும் ஆர்வத்திலும்தான் இருக்கிறது...
என்ன செய்ய போறீங்க..???

சோள தோசை


சோளச்சோறு, சோளதோசை, சோளக்கஞ்சி எல்லாம் அன்றைய காலகட்டங்களில் கிராம மக்களின் எளிமையான உணவாக இருந்தது... சோளத்தோசை மிகவும் சத்து மற்றும் ருசி நிறைந்த மிக எளிய பாரம்பரிய உணவு வகை. 



அரை ஆழாக்கு மக்கா சோளம் .. அரை ஆழாக்கு அரிசி, ஒரு கைப்பிடி உளுந்து , அரை டீஸ்பூன் வெந்தயம்.. ஆகியவற்றை நன்கு கழுவி களைந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்...பிறகு இதனைஅரைத்து (அளவு குறைவாக இருப்பதால் மிக்சியிலேயே அரைத்துக்கொள்ளலாம்) மூன்று அல்லது நான்கு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.. உதாரணமாக மதியம் அரைத்து வைத்தால் மாலை/இரவு தோசைக்கு தேவையான பதம் கிடைக்கும்... மாவு நன்கு பொங்கி வந்திருக்கும். பிறகு, எப்போதும் போல தோசைக்கல்லில் வார்த்து எடுக்கலாம்...

இது சாதாரண அரிசி-உளுந்து மாவு தோசையை விட கூடுதல் சுவையாகவும், அதீத சத்துக்கள் மிகுந்ததாகவும் இருக்கும்...
சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. ஃபோலிக் அமிலம், செரோட்டன், அஸ்கார்பிக் அமிலம் ஆகியவற்றுடன் தயாமின் என்ற வைட்டமினும் உள்ளது.

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை கொடுப்பதோடு இதயத்தை பாதுக்காக்கும். உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் துர்நாற்றத்தைப் போக்கும். கொஞ்சம் சூடு அதிகம் என்பதால் மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்து வருவதில்லை.

அழகுடன் ஆரோக்கியம் - கருஞ்சீரகம்



இயற்கை கொடுத்த மூலிகை மருந்துகளில் கருஞ்சீரகம் மிக முக்கியமானது.உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது நூற்றுக்கும் மேலான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இன்னும் கூட இதை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இன்னும் பலப் பல வியாதிகளுக்கு இந்த கருஞ்சீரகத்தின் துணையுடன், மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.




எகிப்து மக்களின் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் அருமருந்து கருஞ்சீரகம். எகிப்தில் பிரமிடுகளுக்குள் பாதுகாக்கப்பட்ட அரச குடும்ப "மம்மி" களுடன் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்கு இணையாக நிறைய மருந்துப்பொருட்களையும் சேர்த்தே பாதுகாத்திருக்கிறார்கள்... அப்படி பாதுகாக்கப்பட்டவைகளில் மிக முக்கியமான இடத்தை இந்த கருஞ்சீரகம் பிடித்திருக்கிறது..கருஞ்சீரகத்தினை பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அங்குள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்..இதன் பயன்பாடுகள் பற்றிய நீண்ட வரலாறு எகிப்தில் உண்டு. இதன் காரணமாகவே அனைவரது வீட்டு சமையலறையிலும் கருஞ்சீரகத்துக்கு ஒரு முக்கிய இடத்தை அம்மக்கள் இன்றளவும் கொடுத்து வருகிறார்கள்..

டூடுட் அங்க் அமான் என்கிற பாரோ எகிப்து மன்னன் தன்னுடைய மரணத்திற்கு பின்னான வாழ்க்கைக்கும் அவசியம் என்று தன்னுடைய கல்லறையில் இந்த கருஞ்சீரகத்தை வைக்க சொன்னதற்கான குறிப்புகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.... எகிப்தில் கடவுளுக்கு அடுத்த நிலையில் மக்கள் மத்தியில் வாழ்ந்து வந்த ஃபாரோஸ் மற்றும் மருத்துவர்கள் நாட்டில் நடக்கும் பெரிய விருந்துகளுக்கு பிறகு வயிற்றில் உண்டாகும் பிரச்சனைகளை தீர்க்கவும், அதனை சமன்படுத்தவும் இதே கருஞ்சீரகத்தை உபயோகித்துள்ளனர் என்று வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. மேலும் அவர்கள் தலைவலி, பல்வலி, சளி மற்றும் தொற்றுநோய்களுக்கும் இதையே மருந்தாக கையாண்டுள்ளனர்.

18ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த அழகியாக திகழ்ந்த அரசி ஃநெபிர்டிடி தன் அழகைப் பாதுகாக்கவும், பாரமரிக்கவும் கருஞ்சீரக எண்ணெயை உபயோகித்ததாகவும், மேலும் தன்னுடைய நகங்கள் மற்றும் முடியையும் இந்த எண்ணையைக் கொண்டே தன் வாழ்நாள் முழுவதும் பராமரித்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.


சமகாலத்தில் எல்லோரையும் மிரட்டும் வியாதியாக இருப்பது கேன்சர் அதிலும் உள்ளுறுப்புகளில் வரும் கேன்சரானது எவ்வித அறிகுறியையும் காட்டாமல் ரகசியமாய் வளர்ந்து மற்ற உறுப்புகளையும் முடக்கும் போதுதான் தெரியவரும்.. ஆனால் அப்போது அதை குணப்படுத்த முடியாத அளவு நிலைமை கைமீறி போய் இருக்கும்.

குறிப்பாக கணைய புற்றுநோய் (Pancreatic cancer)அத்தனை எளிதில் அறிகுறியும் தென்படாமல், வந்த பின் குணப்படுத்த மிகவும் கடினமான வியாதி. (சர்க்கரை நோயுடன் கர்ப்ப காலங்களில் புகைக்கும் பழக்கம் கொண்ட பெண்களுக்கு பிற்காலத்தில் இந்த கான்சர் வரும் வாய்ப்பு உண்டு) . அதோடு நம்மில் பலர் புகைப்பழக்கத்தால் தாமே இந்த கணைய புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள். இப்படிப்பட்ட மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான பிராணசக்தி குறையும் போது உடலுக்குள் உறைந்திருக்கும் கேன்சர் செல்கள் பல்கி பெருகி வளர்ச்சி அடைகின்றன.. கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான பிராண சக்தி, எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுடன், இயற்கை நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாகவும் (natural interferon), எலும்பு மஜ்ஜை உற்பத்தி சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்யவும் பேருதவி புரிகிறது..

மேலும் இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒமேகா-6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளடக்கியது. மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின்கள் B1, வைட்டமின்கள் B2, வைட்டமின்கள் B3 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய அறிய மூலிகையே இந்த கருஞ்சீரகம்.

அஜீரணம், இருமல், வாந்தி, வாயு, வீக்கம் போன்றவற்றை குணமாக்கும். பசியைத்தூண்டும், வயிற்றுப் போக்கை நிறுத்தும், புழுக்கொல்லியாக செயல்படும். இதயத்தில் உண்டாகும் வலியைக் குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். முகப்பரு அறவே போக்கும். கரப்பான், சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களைத் தீர்க்கும். பிரசவித்த பெண்களுக்கு பால் அதிகம் சுரக்க வைக்கும், பிரசவத்திற்கு பின் உண்டாகும் வலிகளைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. கீல் வாதம், தலைவலி, நாய்க்கடி, கண்வலி, கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

சிறப்பு குறிப்பு: கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் சளி தொல்லையிலிருந்து உடனடி நிவராணம் பெறலாம்.

பல வியாதிகளுக்கு கருஞ்சீரகம் ஒன்றே அருமருந்து. அருமருந்தான கருஞ்சீரகத்தை நாமும் நம்முடைய சமையலறையில் அமர்த்தி நோய்களின் வரவை தடுக்கலாமே.

உடல் பருமன்



சமகால (சோம்பேறித்தனத்துடன் கூடிய) அவசர வாழ்க்கையில் அனைத்து நோய்களுக்கும் முக்கிய காரணம் உடல் உழைப்பை துறந்து ஃபாஸ்ட் ஃபுட் என்று சொல்லக்கூடிய துரித உணவுவகைகளையும், எண்ணெயில் பொறித்த உணவு வகைகளையும் சாப்பிட்டு உடல் பருமனை கூட்டிக்கொல்(ள்)வதுதான். வியாதிகளை வரவேற்கும் பொறுப்பை உடல் பருமன் எனும் வரவேற்பாளர் தான் எடுத்துக்கொண்டிருக்கிறார்..




உடல் உழைப்பு தேவைப்படும் எல்லா வேலைகளுக்கும் (grinder, mixie,washing machine) இயந்திரங்களை வாங்கி வைத்துவிட்டு, உடல் பருமனானவுடன் அந்த பருமனை குறைக்கவும் ஒரு இயந்திரம் வாங்குவதுதான் நவீனம்.. அல்லது இயற்கை காற்று, சூரிய ஒளி எதுவுமே உடலில் படாதவாறு, குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி நிலையங்களில் வியர்க்காமல் உடற்பயிற்சி செய்வது தான் ஃபேஷன் ஆகிவிட்டது..

புகை‌பிடி‌த்தால் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், வாய், தொண்டை என பல உறுப்புகள் பாதிக்கப்பட்டு..பின் மொத்த உறுப்புகளும் பாதிக்கப்படும். ஆனால் உடல் எடை கூடினாலோ, புகை‌பிடி‌டிப்பதால் உண்டாகும் பாதிப்பை விட அ‌திக பா‌தி‌ப்பை‌த் தரு‌ம். அதிகப்படியான எடையுடன் இருப்பவர்கள் தன் வாழ்நாளை சுமார் 10 லிருந்து 13 ஆ‌ண்டுகளை‌க் இழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஒரு எளிய கணக்காக , நமது உடலில் உயரத்தை சென்டிமீட்டரில் அளந்துகொண்டு, அதில் 105 என்ற என்னை கழித்தால் மீதம் வரும் அளவு சரியான எடை என்பதை அறியலாம்... உதாரணமாக 168 செண்டி மீட்டர் உயரம் உள்ள ஒருவர் , 168-105 = 63 கிலோ இருந்தால் அது சராசரியான சரி எடை ஆகும்..கூடுமானவரையில் இந்த சராசரி அளவை நிர்வகிப்பதன் மூலம் பலவியாதிகளை வாயிலிலேயே திருப்பி அனுப்பலாம்

சிறுநீரகம்- செயல்பாடு-பாதிப்புகள் மற்றும் குணப்படுத்தும் முறைகள்



சிறுநீரகங்கள் (கிட்னி) பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 


ஒரு தாயின் வயிற்றில் கரு உருவான நான்காவது மாதத்தில் உருவாகி இயங்க ஆரம்பித்து கடைசி வாழ்நாள் வரையில் இடைவிடாது இயங்கும் மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம். நம் எல்லோருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன என்று தெரியும். இரத்தத்தில் சேரும் கழிவுப்பொருள்களை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் மிக முக்கியமான பணியை இவை செய்கின்றன. மனித உடலில் மிக முக்கிய செயலாற்றும் உறுப்பு இது..

நகரத்தில் வேலை செய்யும் துப்புரவுப்பணியாளர்கள் ஓரிருநாள் வேலை நிறுத்தம் செய்தால் எப்படி நகரம் நரகமாகி விடுமோ.. அது போல. உடலில் சிறுநீரகங்கள் வேலை நிறுத்தம் செய்தால் உடலே நரகமாகி விடும்..

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எலும்புக் கூண்டுக்குள் அவரை விதை வடிவில் சிறிதாக இருப்பவை. நம் உடலில் உள்ள உலகின் மிகச்சிறந்த, மிக நுண்ணிய சுத்திகரிப்பு ஆலை, கழிவுமண்டலத்தின் முக்கிய காரியதரிசி என்றே
சிறுநீரகங்களை கூறலாம். ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. கிட்டதட்ட 11லிருந்து14செ.மீ நீளமும், 6செ.மீ அகலமும் மற்றும் 4செ.மீ தடிமனும் கொண்டது.


இரத்தத்தைச் சுத்தம் செய்து அதிலிருக்கும் கழிவுகளை பிரித்தெடுத்து சிறுநீர் மூலம் கழிவாக வெளியேற்றுகிறது. உடல் முழுவதுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனில் 10 சதவீதம் சிறுநீரகத்துக்கு செல்கிறது. இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது. உடலில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீராக வெளியேற்றுவது மட்டுமே சிறுநீரகங்களின் வேலை இல்லை..ஒரு நிமிடத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றன. ஒருவரது உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1,500 மில்லி முதல் 2500 மில்லி வரை சிறுநீர் பிரிகிறது.

உடலுக்கு தேவையான நீர்சத்து சம நிலையில் இருக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும், உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும், இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும், அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. நாம் உண்ணும் உணவு ஜீரண உறுப்புகளால் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதே போல் உடல் உறுப்புகள் வெளியேற்றும் கழிவுகளும் ரத்தத்தில் கலந்து சீறு நீரகங்களுக்கு வருகிறது. ரத்தத்தில் கலந்து வரும் கழிவுகளான யூரியா, கிரியாட்டினன் போன்றவற்றை சிறு நீரகங்கள் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது.

தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. இவ்வாறு அத்தனை பணிகளையும், மேலும் பல பணிகளையும் ஒரு மனிதன் ஆயுள் முழுவதும் சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன.

சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு, கழிவுகளை வெளியேற்றாமல் உடலில் தங்கி விடும் போதுதான் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் அதுவே உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. ஓயாமல் இறுதி மூச்சுவரை உழைக்க தயாராக இருக்கும் சிறுநீரகங்கள் இடையில் திடீரென வேலை நிறுத்தம் செய்யவும், பழுதடையவும் காரணங்கள் என்ன?? சிறுநீரகங்கள் வேலை நிறுத்தம் செய்ததை எப்படி ஆய்வது.. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன..? சற்று விரிவாக பார்க்கலாம்..

முதலில் சிறுநீரகங்கள் பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
உடல் எடை இழப்பு, குமட்டல், பசியின்மை, வாந்தி, சுறுசுறுப்பின்மை, அதிக தாகம், அடிக்கடி விக்கல், சிறுவயதில் பற்கள் விழுதல், கர்ப்பப்பை கோளாறுகள், எப்போதும் சோர்வு, உடல்நலக் குறைவு, தலைவலி, தூக்கத்துடன் கூடிய மந்தமான நிலை, குழப்பம், மனப்பிரமை, நினைவற்ற நிலை, தோல் நிறம் வெளுத்துப் போதல், தசை துடிப்பு அல்லது தசை பிடிப்பு, உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது, இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி, சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல், வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம், கைகள் பாதங்கள் மற்றும் உடலில் சில பகுதிகள் மரத்துப் போதல், முறையற்ற நகங்களின் வளர்ச்சி, சுவாசிப்பதில் நாற்றம் மற்றும் சிரமம், கணுக்கால், பாதத்தில் வீக்கம், சிறுநீரகம் உள்ள இடத்துக்கு மேல் விலாபுறத்தில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரகங்கள் பழுதடைய ஆரம்பித்துள்ளன என்று நாமே உணரலாம்.

உடலின் மற்ற உள்ளுறுப்புகள் முறையாக செயலாற்ற முக்கிய காரணியாக திகழ்வது இந்த சிறுநீரகங்கள் தான். ஒரு மனிதனின் உயிர்சக்தி இருக்கும் இடமான மூலாதார சக்தி என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள் பாதித்தால் அதன் விளைவு என்னவென்று பார்த்தோம்.

எனவே சிறுநீரக ஓடுபாதைகளை ஆரோக்கியமாகப் பராமரித்தாலே எந்த விதமான சிக்கலும் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இந்நிலையில் இத்தனை சிறப்புமிக்க சிறுநீரகத்தினை சிறப்பாகப் பாதுகாத்து வருவதே ஆரோக்கியத்தின் அடிப்படை என அக்குபஞ்சர் மருத்துவம் வலியுறுத்துகிறது. 



சிறுநீரகங்கள் செயலிழப்பது எதனால்?
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
நமது கடந்த பதிவில் சிறுநீரகங்களை பற்றியும் அதன் வேலைகள் மற்றும் , பாதிப்புகள் பற்றியும் பாதிப்படைந்திருப்பதற்கான அறிகுறிகள் பற்றியும் விரிவாக பார்த்தோம்..

இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும் ஹார்மோனையும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும், எலும்புகளின் உறுதிக்கு பயன்படும் ஹார்மோனையும் சுரக்கசெய்வது உள்ளிட்ட பணிகளில் சிறுநீரகம் தீவிரமாக பங்கேற்கிறது. செல்கள் புரதத்தை பயன்படுத்தியது போக எஞ்சிய கழிவுகள், நைட்ரஜன் அடங்கிய யூரியாவாக மாறி இரத்தத்தில் கலந்து விடும். இவற்றைப் பிரித்தெடுத்து வெளியேற்றுவதுதான், சிறுநீரக மண்டலத்தின் முக்கியப் பணி.
நமது உடம்பில் சேரும் அசுத்த இரத்தத்தில் இருந்து யூரியா போன்ற கழிவுகளை அகற்றி, உடம்பை நல்ல நிலையில் வைப்பது தான் நெப்ரான்களின் பணியே. பொதுவாக, வெளி சிறுநீரக குழாய் அமைப்பில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. இது பெண்களுக்கு வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு-பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. உடலை பொறுத்தவரையில் கழிவுகள் என்பவை உடலை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவை. இவை இரத்தத்தில் சேர்ந்தால் உடல் முழுமையாக சீரழிந்துவிடும்.



உலகின் மிக சிறந்த, நுண்ணிய சுத்திகரிப்பு தொழிச்சாலையான சிறுநீரகங்கள் பாதிக்கப்பட என்ன காரணம்..?
இன்னதுதான் என்று ஒரே ஒரு காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது.. இந்த செயலிழப்பு கொஞ்சம் கொஞ்சமாகவும் ஏற்படும்... திடீரெனவும் ஏற்படும்..

முதலில் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழப்பதற்கான காரணங்களை பார்ப்போம்..நமக்கு நாமே மருத்துவராகி மருந்து கடைகளிலும் உள்ளூர் பெட்டிக்கடைகளிலும் வாங்கி விழுங்கும் மாத்திரைகள்... கொண்டாடவோ, துக்கத்தை போக்கவோ என ஏதாவது காரணத்திற்காக குடிக்கும் மது , சிகரெட் ஆகியவை மிக முக்கிய காரணங்கள்... கவனிக்காமல் விட்ட நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம்.. சர்க்கரை வியாதிகள்... இப்படியாக பற்பல காரணங்களால் சிறுநீரகம் பழுதடைகிறது...

.நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவுப் பொருட்களை, சிறுநீரினை வெளியேற்றும் தன்மை, மற்றும் உடலில் உள்ள கனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அடையும். உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மூட்டு வலி, தலைவலி, முதுகு வலிக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்பட்ட முறையற்ற மருந்துகளினால் சிறுநீரகங்கள் செயலிழந்து, உடலில் திரவம் மற்றும் தேவையற்ற கழிவுகள் இரத்தத்தில் சேர்ந்து அசோடிமியா, மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஐன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும். முக்கியமாக இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல் முக்கிய காரணமாகும். கருத்தடை மாத்திரைகளை தொடரச்சியாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகங்கள் கண்டிப்பாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் வலி நிவாரணிகளைச் சாப்பிட்டாலும், மாற்று மருத்துவர் துணையின்றி, மற்றவர் கூறும் ஆலோசனைப்படி அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்பட்ட தரமற்ற லேகியங்களை உட்கொண்டாலும் அதுவே சிறுநீரகத்தைப் பாதிக்கும். இணைப்பு திசுக்கள் நோய்களினாலும், எய்ட்ஸ் நோயினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். உடல் வலியை போக்க உதவும் மருந்துகள், காசநோய்க்கான பல்வேறு வகையான மருந்துகள் ஆகியவற்றினாலும் சிறுநீரக நோய்கள் உண்டாகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு செயலிழக்க நேரிடும். இது மட்டுமில்லாமல் .பல்வேறு மருந்துகளின் பாதிப்பினாலும் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து விடும். தேவைக்கு குறைவான இரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்வதால் சிறுநீரகத்தின் செயல் திறன் குறையும். சீரான இரத்தம் ஓட்டம் இல்லாததால் சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். புகை தான் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பைக்கு முதல் எதிரி.

நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறும். நாளடைவில் இவையே படிகங்களாக சிறுநீர் வெளியேறும் பாதைகளில் படிந்து பின் கற்களாக மாறி விடும் வாய்ப்பு உள்ளது. பாரா தைராய்டு மிகுதி நோயும், சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள், சிறுநீரக நோய்கள் போன்ற நோய்களும் சிறுநீர்ப்பையில் கற்கள் ஏற்பட முக்கியமான காரணமாகும். சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக காரணமாகிறது.
ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு என்று என்றாலும் அதை நம் அக்குபஞ்சர், உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்து திரும்ப வராமல் தடுக்கலாம்.

மேற்கண்டவை எல்லாம் சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்.. இவற்றை நமது விழிப்புணர்ச்சியின் மூலமும், யோகா, தியானம் போன்றவற்றின் மூலமும், முறையாக பயிற்சி பெற்ற அக்குபஞ்சர் மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடப்பதன் மூலமும் தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும்...

ஆனால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு அதிகபடியான இரத்த இழப்பு ஏற்பட்டால் சிறுநீரகத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து, சிறுநீரகங்கள் உடனடியாக செயலிழக்கும்...
சிறுநீரகம் சீராக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் சில மணி நேரங்களில் உயிரழப்பு கூட நேரிட வாய்ப்புண்டு. சில வலிகளுக்கு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை என்றாலும் அதனால் பக்கவிளைவுகள் கண்டிப்பாக உண்டு என்று அத்துறை சார்ந்த மருத்துவர்களே ஏற்றுகொள்கின்றனர். இப்படி இருக்க இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டால் கண்டிப்பாக சிறுநீரகங்கள் பாதிப்பு ஏற்படும் (அ) மற்ற உறுப்புகள் பாதிக்கப் பட்டு கடைசியில் சிறுநீரகங்களும் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புகள் அதிகம்.

சிறுநீரக பாதிப்புக்கான காரணங்களையும் தெரிந்துகொண்டோம்... சரி.. இவ்வளவு காலமும் அதை பற்றி விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்து விட்டோம்... ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது... அல்லது.. பாதிப்பு வராமல் தடுக்க என்ன செய்வது...


சிறுநீரகங்கள் (கிட்னி), சிறுநீர்ப்பை பாதித்தால், செயலிழந்தால் குணமாக
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * **********************************

நமது உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதே சிறுநீரகங்கள் (கிட்னி) மற்றும் சிறுநீர்ப்பை பற்றிய இந்த மூன்று பதிவுகளுமே.

இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் உள்ளதாககவும்,
ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதிகள் வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நிலையில் மருத்துவமனையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீரகப் பிரச்னை ஆரம்பத்திலேயே தெரியாது. முற்றிய நிலையில் தான் அதன் அறிகுறிகள் தெரியவரும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டுவிட்டால், அது சம்பந்தப்பட்டவரின் மனநிலையை உடைத்து, பயத்திலே அவர்கள் வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள். அதனால் தான் இதை உயிர்கொல்லி வியாதி என்று கூறுகிறார்கள். இப்படி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயைப் பற்றிய சரியான விழிப்புணர்ச்சி இல்லாமலும், அலட்சியத்தின் காரணமாகவும் ஆரம்பகாலங்களில் விட்டுவிட்டு நோய் மிகவும் முற்றிய நிலையில் அந்த வியாதியின் தீவிரம் உணருவது வேதனையே.

கழிவறை வசதி இல்லாதது.. பயணம் செய்யும்போது.. வேலைப்பளு போன்ற காரணங்களால் சிறுநீரை அடக்குவது பெரும் ஆபத்தில் முடியும்... சமீபகாலமாக சமூக வலைத்தளங்களின் சுவாரஸ்யம் சிறுநீர் கழிப்பதை கூட வெகுநேரம் தள்ளிப்போட வைக்கிறது... அடக்கி வைக்கப்டும் சிறுநீரால் சிறுநீரகங்கள் வேலை அதிகரித்து, அதன் ஆயுள் குறையும். (சிறுநீரை அடக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு.)



அடிக்கடி வலி நிவாரணி (painkiller) மாத்திரைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உட் கொள்வது நல்லது.
வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குளிர்ந்த நீர் கொழுப்புகளை இறுக்குவதால் ஜீரணிக்க முடியாமல் உடலின் இயக்கத்தை (metabolism) பாதிக்கும். சாப்பிடும்போது கோக், பெப்சி எடுத்துக் கொண்டால் சிறுநீரகக்கோளாறு அவர்களுக்கு கண்டிப்பாக உண்டு.

சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றொரு முக்கியமான விஷயம் புகைப்பிடிக்கும் பழக்கம். எனவே சிறுநீரகத்தை பாதுக்காக்கவேண்டும் என்றால் முதலில் புகை பிடிப்பதை அறவே நிறுத்தவேண்டும்நமது உணவு முறைகளையும், பழக்கவழக்கங்களையும் மாற்றியமைத்துக்கொண்டால் சிறுநீரக கோளாறுகள் வராமல் தடுக்கலாம்...

ரசாயனம் மிகுந்த செயற்கை உப்பு மிகுந்த துரித உணவு உணவுகள், சிப்ஸ்கள், மசாலா சேர்த்த உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெய் பொருட்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் மிகுதியாக உள்ள உப்புக்கள் சிறுநீரகத்தில் சிறுக சிறுக சேர்ந்து சிறுநீரகம் செயலிழிந்துவிடும். சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் அறவே சாக்லேட், காஃபி, டீ, மற்றும் கீரைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆல்கஹால் சிறுநீர் வெளியேற்றத்தை தூண்டும், அதே நேரம் யூரிக் ஆசிட் வெளியேறுவதை கட்டுப்படுத்தும். இதனால் சிறுநீரகக் கல் உருவாகும். ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு ஆரோக்கியமான உணவும், உடலும் தேவை. சரியான உணவு, தூக்கம், மலசிக்கலின்மை போன்றவை மிகவும் முக்கியம்.
மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் பல நோய்களை ஏற்படுத்த காரணங்களாக அமைந்து விடும் வாய்ப்பு உள்ளதால், சைவ உணவே ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கு சிறந்தது.
மீன்கள் , உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

முட்டைகோஸ், காலிப்ளவர், பூண்டு, வெங்காயம், பசலைக்கீரை, பரங்கிக்காய்,கேரட் , முள்ளங்கி, ஆப்பிள், சீமை களாக்காய், தர்பூசணி, அன்னாசிபழம், வெள்ளரிக்காய், எலுமிச்சை, மாதுளை, பிஸ்தா, பாதாம், இளநீர் ஆகியவையும் சிறுநீரகத்திற்கு நல்லது. எனவே எப்பொழுதும் பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் உடலும், உடல் உறுப்புக்களும் ஆரோக்கியமாக திகழும்.

முறையான உணவுப் பழக்கம், எளிய உடற்பயிற்சிகள், தியானம், யோகா போன்ற சில கட்டுப்பாடுகளை வாழ்க்கை முறையோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.
அக்குபஞ்சர் முறையில் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்பால் உண்டாகும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, முற்றிலுமாக வெளிவரலாம். மேலும் கை விரல்கள், கால்களில் பாதம், விரல்கள் மரத்துப் போதல், வளர்சிதை மாற்றங்களை முறைப்படுத்துதல், பழுதுப்பட்ட உறுப்புகளையும், தசைகளையும் சீர்படுத்துதல், போன்றவை மிக எளிமையாக மருந்துகளின்றி குணப்படுத்தலாம்.
சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை பாதிப்பால் உடலில் உண்டான தலைவலி, நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள், குழப்பமான மனநிலை, சுவாசம் மற்றும் செரிமானப் பிரச்சினைகள் அனைத்துமே அக்குபஞ்சர் முறையில் உடலில் மிகச்சரியான, தொடர்புடைய புள்ளிகளை தூண்டுவதன் மூலம் மிகப் பெரிய முன்னேற்றத்தை காண முடியும்.

நாட்பட்ட கிட்னி பிரச்சனைகள் அக்குபஞ்சரில் குணப்படுத்த மிக நீண்ட காலம் ஆகலாம். ஆனால் அவர்கள் உடல் உபாதையிலிருந்து வெகுவாக வெளிவர உதவும். கிட்னியில் பழுது உண்டான சில மாதங்களிலே அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடினால் அவர்கள் பூரண குணமடையலாம்.

படத்தில் காட்டி இருக்கும் புள்ளிகளில் ஒரு மணி நேரத்தில் 15 நிமிடத்துக்கு ஒரு முறை 3 லிருந்து 10வினாடிகள் வரை அழுத்தம் கொடுத்துக் கொண்டே மூச்சை நன்கு ஆழ்ந்து உள்ளிருத்தி, மெதுவாக வெளி விட வேண்டும். இப்படியே தொடர்ந்து வீட்டில் செய்துக் கொண்டு வருவதால் சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் போன்ற வியாதிகளில் இருந்து மீண்டு வர உதவும். இங்கு குறிப்பிட்ட முறையில் அழுத்தம் கொடுக்கும் போது, அவர்களே தன் உடலில் உண்டாகும் மாற்றங்களை உணர முடியும்.
இது ஒரு ஆரம்பகால தற்காலிக சிகிச்சை மட்டுமே.. சிறுநீரக கோளாறுகளில் இருந்து நிரந்தர நிவாரணம் பெற தகுந்த அக்குபஞ்சர் மருத்துவரை அணுகி முறையான மருத்துவம் மற்றும் உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வந்தாலே இந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதோடு, மற்ற உடல் உறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம் 

நீரிழிவு நோய்

ஒருகாலத்தில் பணக்கார வியாதியாக (???!!) இருந்த சர்க்கரை வியாதி இன்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றாக ஆகி விட்டது... அப்படியானால் எல்லோருமே பணக்காரர்கள் ஆகிவிட்டோமா என்ன..??? அப்படி இல்லை... பணக்காரர்கள் என்பவர்கள் எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் வைத்துக்கொண்டும், இயந்திரங்கள் வைத்துக்கொண்டும் இருப்பதால் அவர்களது உடல் "உழைப்பு" என்பதையே அறியாததாக இருக்கிறது... உடல் உழைப்பு இல்லை என்றால் வரக்கூடிய சர்க்கரை, கொழுப்பு, இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் பணக்கார வியாதிகள் என சொல்லப்பட்டது... ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் பணக்காரர்கள்/ஏழைகள் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோருமே உடல் உழைப்பை குறைத்து இயந்திரங்களின் உதவியை நாட ஆரம்பித்து விட்டோம்.... உடலில் சேரும் எரிக்கப்படாத சக்தி(கலோரீஸ்) உடலில் சேர்ந்து சேர்ந்து இன்று பல வியாதிகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகி விட்டோம்... அதில் மிக முக்கியமானது "சர்க்கரை வியாதி"
வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் போது கூட உங்களுக்கு டீ /காஃபி சர்க்கரை போடலாமா... இல்லாம தரவா?" என்று கேட்கும் அளவு எல்லோருக்கும் இந்த வியாதியின் தாக்கம் நிறைந்திருக்கிறது

இந்த சர்க்கரையும், உயர் அழுத்தமும் உடன்பிறவா சகோதரர்கள்.. ஒருவரை ஒருவர் பிரிவதும் இல்லை.. கைவிடுவதும் இல்லை... ஒருவர் ஒரு உடம்பில் வந்தால் உடனே மற்றவரையும் வரவழைத்து விடுவார்...

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோரில் அதிகம் பேர் இந்தியாவில் தான் இருக்கிறார்கள் என்று "உலக சுகாதார அமைப்பின்" (WHO ) புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன... இந்திய மக்களை குறிப்பாக தென்னிந்திய மக்களை அதிர வைக்கும், ஆட்டிப் படைக்கும், ஒட்டிப் பிறந்த சகோதரர்களாக, நோய்களில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயும் தான் முதலிடம் வகிக்கிறது. இது அடுத்த பத்து ஆண்டுகளில் இன்னும் இருபது சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் அந்த புள்ளி விபரம் எச்சரிக்கிறது...



இது எப்படி வருகிறது?

இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூடினாலோ, குறைந்தாலோ சர்க்கரை நோய் வரும்.. ஓ ... இவ்ளோ தானே... அதுபாட்டுக்கு இருந்துட்டு போகட்டுமே.... என்பவர்கள் கவனத்திற்கு... இந்த அறியாமைதான் சர்க்கரை நோயின் பலம்... இரத்தத்தில் கூடும் சர்க்கரையின் அளவானது இதய நோய்கள், நரம்பு மண்டல பாதிப்புகள், பார்வை இழப்பு, சிறுநீரக செயல் இழப்பு என படிப்படியாக நமது உறுப்புகளை சூறையாடி மரணத்தின் பிடியில் எளிதில் தள்ளி விடும்..

ஒருமுறை இப்படி சர்க்கரையின் அளவு கூடிவிட்டாலோ/குறைந்து விட்டாலோ.. பிறகு அதை சமநிலைப்படுத்த மாத்திரைகளை வாழ்நாள் முழுதும் உட்கொண்டே ஆக வேண்டிய நிலை தான் இப்போது இருக்கிறது... இதற்கு காரணம் சர்க்கரை நோயை பற்றி போதிய விழிப்புணர்ச்சி இல்லாததும், நமது உடல் நலனின் மீது அக்கறை இல்லாததும் தான்...
இடுப்பில் அதிக தசை, அதிக உடல் எடை, பரம்பரையாக இந்நோய் இருப்பது, அதிக ரத்த அழுத்தம், கொழுப்பு, உடற்பயிற்சி இல்லாமை, சரிவிகித சத்துக்கள் இல்லாத உணவு, மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது போன்றவை இந்நோய்க்கான சில காரணங்களாக அமைகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், சோர்வு, பசி, உடல் எடை இழத்தல், கண்பார்வை மங்குதல், எடை அதிகமாக இருப்பவர்கள், அடிக்கடி சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் உண்டாகும் தொற்று நோய் உடற்காயங்கள் மெதுவாக ஆறுவது மற்றும் உள்ளங்கை அல்லது பாதங்களில் மரத்துப்போதல் நீரிழிவு நோயின் அறிகுறிகள்.
மேலும் முற்றிய நிலையில் இந்நோயால் பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு உண்டாகும்.

நமது முன்னோர்கள் சொன்னபடி முறையான உணவுப்பழக்கத்தையும், சிறு சிறு உடல் உழைப்புகளையும் செய்தாலே போதுமானது..ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கையாள்வதாலும் நோய் பற்றிய விழிப்புணர்வாலும், முறையான உணவு, யோகா, தேவையான உடற்பயிற்சியிருந்தால் நீரிழிவு நோயை வராமல் நிச்சயமாகத் தடுக்கவும் முடியும்.

உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும். எண்ணெயில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இந்நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய் வந்து விட்டால் அதனை அக்குபஞ்சர் மருத்துவத்தால் குணப்படுத்த முடியும்..தன்னைத்தானே உடலை பாதுகாத்துக் கொள்ளவும், உடலின் இயல்பான தன்மையைத் தூண்டி விட அக்குபஞ்சர் துணைப் புரியும். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, ரத்த அழுத்தம், உடல் எடை, மற்றும் நோய் முற்றுவது ஆகியவை முறையான அக்குபஞ்சர் சிகிச்சையால் நோயும், நோயின் அறிகுறிகளும் வேகமாகக் குறைந்து விடும். மன அழுத்தம் வேகமாகக் குறைவதால் இன்சுலின் நன்கு வேலை செய்வதோடு, மேலும் அழுத்தத்தினால் ஏற்படும் ஹார்மோன் சுரப்புகளும் குறைவதால் இன்சுலின் செயல்பாடு சீராகும்.

படத்தில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு இடத்திலும் 3 நிமிட நேரம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒரு நாளில் மூன்று முறை அழுத்தம் கொடுத்து வர வேண்டும். (எளிய முறையில் மக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் சில குறிப்புகள் மட்டுமே இங்கு கூறப்பட்டுள்ளது) இப்படி அழுத்தம் கொடுத்துக் கொண்டும், சிறுதான்யங்களை உணவில் சேர்த்து உணவு முறையை சீராக்கி, பின் சர்க்கரை அளவை பரிசோதித்து பார்த்தால் நீங்களே உங்களின் உடலின் மாற்றத்தை உணர முடியும். மேலும் முழுவதும் குணமாக முறையான அக்குபஞ்சர் மருத்துவத்தை மேற்கொண்டு வந்தால் நிச்சயமாக பூரணமாக குணமாகலாம்.

தினமும் நான்கைந்து வேப்பிலை சாப்பிடுவது இன்சுலின் சுரப்பதை அதிகமாக்கும்.

முறையான உணவு, தினமும் எளிய உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஆசனம் செய்து வந்தால் எந்த நோயும் நம்மை அண்டாமல், நோயற்ற வாழ்வு வாழலாம். அக்குபஞ்சர் மற்றும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே நீரிழிவு நோயின் தாக்கத்திலிருந்து 100% மீண்டு வரலாம்.

சிரிப்பின் இரகசியம்

மனதில் உள்ள மகிழ்ச்சியானது புன்னகையின் வடிவில் தானாகவே எந்தவிதமான ஓசையையும் செய்யாமல் முகத்தில் காண்பிக்கும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாகும். உடல் ரீதியான சிரிப்பு, உளம்சார்ந்த சிரிப்பு என இரண்டு வகை சிரிப்பு இருந்தாலும் வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.

பயம், கோபம் போன்ற எதிரிமறை எண்ணங்களை மாற்றுகிறது. சிரித்து மகிழ்வதால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைப்பதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுவதுடன், வந்த நோய்களும் விரைவில் குணமாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அவசரமான வாழ்க்கையில் சிரிக்கக் கூட நமக்கு நேரமில்லை. ஒரு நாளில் குழந்தைகள் மட்டுமே சராசரியாக 400 தடவைகள் சிரிக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்களாம். சிரிப்பு நமது ஆயுளை அதிகரிக்கவும், கோபம் நமது ஆயுளை வீழ்த்தவும் செய்யும். பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு. சிரிப்பவர்களுக்கு பாஸிடிவ் எனர்ஜி அதிகமாவதால், சிரிப்பவர்கள் மட்டுமே எங்கும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் தான் சிரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் இயல்பை ‘சிரிப்பு’ முடுக்கிவிடுகிறது என்பதைச் சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வில் உறுதி செய்துள்ளார். சிரிக்கும் போது உடலில் ஆரோக்கியமான வேதிப்பொருட்கள் (Healthy Enzymes) உற்பத்தியாவதால் மனம், உடல் நலனை மேன்மையுறச் செய்து, சிரிப்பே நோயைத் தீர்க்கும் மருந்தாகிறது.




சிரிப்பு என்பது இயற்கையாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செயலாகும். மன இறுக்கத்திற்குக் காரணமான ஹார்மோனைக் கட்டுப்படுத்தி மனத்தை தளர்த்துகிறது. கடுமையான நோய்களையும் எளிமையாக மாற்றுவது சிரிப்பு. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, உடலில் உள்ள அனைத்து தசைகளும் இயக்கப்படுகிறது. சிரித்திடும் சமயம் நமது முக அசைவுகள் அனைத்தும் தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பிகளின் திசுக்களை இயல்பாக்கி அமைதிப்படுத்துகின்றன. குறிப்பாக முகத்திலுள்ள தசைகளும், நெஞ்சுத் தசைகளும் பலம் பெற்று நோய்களினின்றும் தன்னைக் காத்து முக வசீகரம் மற்றும் அழகைக் கூட்டும். சிரிப்பதால் உதரவிதானம், நுரையீரல், வயிறு, கால்கள், முகம், முதுகு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் பலன் கிட்டுகிறது.

சிரிக்கும்போது உடலில் 300 தசைகள் அசைகின்றன. கோபம் உச்சநிலை அடையும் சமயம் 100க்கும் மேற்பட்ட தசைகள், நரம்புகள் வேகம் கொண்டு முறுக்கேறி இரத்தத்தில் அமிலத்தை தேவையில்லாமல் அதிகமாக சுரக்கும். கோபம் முகத்தை விகாரமாக்கும். சிரிப்பு மன அழுத்தத்தை குறைத்து, உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகின்றன.

உயிர் எழுத்துக்களல் ‘அ’ முதல் ‘ஓ’ வரை வரிசையாகத் தொடர்ந்து வேகமாக உச்சரித்தால் சிரிப்பு அலைகள் உருவாகுமாம். சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல.

"மனம் போல் வாழ்வு"


"தீர்மானிக்கும் மனதின் இரகசியம் கற்பனையில்தான் 
முழுக்க முழுக்க புதைந்து கிடக்கிறது" -கிறிஸ்டியன் டி லார்சன் 


நம் முன்னோர்கள் சொன்னதும், வெளிநாட்டு அறிஞர் பெருமக்கள் சொன்னதும் ஒரே விஷயம் தான்... நம்முடைய ஒட்டு மொத்த வாழ்வும் நாம் என்னவாக ஆக போகிறோம் என்பதுவும் நாம் செய்து வைத்து இருக்கும் கற்பனையை பொறுத்தே அமையும்.
முடிந்த அளவு சிறப்பான, மேன்மையான விஷயங்களை தொடர்ந்து நாம் செய்யும் உணர்வுப்பூர்வமான கற்பனைகளே, நிஜத்திலும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வினைகளாக அமையும்.

"முடியாது" என்ற காரியங்களை தன் கற்பனை வளத்தால் முடியும் என்று கற்பனை செய்தவர்கள் தான் மனித குலத்தின் குறைபாடுகளை உடைத்த செயல்வீர்ர்களாக திகழ்கிறார்கள். எந்த துறையாக இருந்தாலும் கற்பனையும் அதை தொடர்ந்த முயற்சியும் மட்டுமே தான் அவர்கள் துறையில் அவர்களை வெற்றி பெற வைத்ததோடு இல்லாமல் வரலாற்றில் இடம் பிடித்தவர்களாகவும் ஆக்குகிறது . பல புதிய கண்டுபிடிப்புகள் , கண்டுபிடித்தவரின் கற்பனையே சரித்தரமாக மாற்றியும் இருக்கிறது.

"கற்பனை தான் படைப்பின் துவக்கம், நீங்கள் ஆழமாக
விரும்புவதைக் கற்பனை செய்யுங்கள். நீங்கள் கற்பனை
செய்யும் விஷயத்தில் மன உறுதி கொள்ளுங்கள்., இறுதியில்,
நீங்கள் மன உறுதியுடன் இருக்கும் விஷத்தை நீங்கள்
உருவாக்குவீர்கள்". - ஜார்ஜ் பெர்னார்டு ஷா, நோபல் பரிசு பெற்ற நாடக ஆசிரியர்





நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதையே பெறுகிறீர்கள் என்று ஈர்ப்பு விதி கூறுவதை நினைவில் கொள்ளுங்கள். ஈர்ப்புவிதியை ஒரு கண்ணாடி, எதிரொலி, ஜெராக்ஸ் மெஷின் மற்றும் பூமராங்காகவோ நினைக்கும் பட்சத்தில் நம்முடைய மனக்கண்ணில் எண்ணும் எண்ணங்களே திரும்ப கிடைக்கும் என்ற தெளிவை பெற உதவும். கண்ணாடி எப்படி நம்மை அப்படியே துல்லியமாக பிரதிபலிக்குமோ, எதிரொலி என்பது எதை நாம் வெளிபடுத்துகிறோமோ, மிகச் சரியாக அதே எதிரொலி தான் நம்மிடம் திரும்ப கிடைக்கச் செய்யுமோ அதுவே ஈர்ப்பு விதி ஆகும். மேலும் இந்த ஈர்ப்பு விதி பூமராங் போலவே நாம் எதை வெளியே எறிகிறோமோ அதுவ நம்மிடம் திரும்ப வருவது போலத்தான். ஜெராக்ஸ் மெஷின் போல நாம் வைப்பதை பிரதி எடுத்து கொடுக்கும் ஆற்றல் பெற்றது தான் ஈர்ப்பு விதி என்பதும்.

"இவ்வுலகம் நம் கற்பனைகளுக்கான ஓவியத் திரை" - ஹென்றி டேவிட் தோரோ, ஆழ்நிலைவாத எழுத்தாளர்.

எந்தவொரு நேர்மறையான விஷயத்தையும் அன்பாக செய்கிறோமோ அதுவே நம்முள் நிலைக்கும் சக்தியாக உருமாறும். அதை தான் நாம் தீவிரமாக பெறுவோம். எந்த ஒரு எதிர்மறையான விஷயமோ, செயலோ வெறுமனே கற்பனை செய்யப்பட்டாலும் கூட அதை அனுப்பியவரிடமே அதே வேகம், உக்கிரத்துடன் திரும்பி வரும் எனபதும் உறுதி. நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ அதையே பெறுவீர்கள்.

போராடிக் கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கும் தெரியாமல் எப்போதும் அவர்களுக்கு பிடிக்காதவற்றை, நேசிக்காதவற்றை, விருப்பமில்லாதவற்றை பற்றியே நினைப்பதும் , கற்பனை பண்ணுவதுமாகி விடுவார்கள். எதிர்மறையான கருத்துக்கள் நம்முள் பரவி நம்மை நல்லெண்ணங்களுடன் இணைய விடாமல் செய்யும். நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே மாறுவோம். ஒரு நல்ல ஓவியனாக வேண்டும் என்றோ, கவிஞனாக வேண்டும் என்றோதான் கற்பனை செய்யவேண்டும் என்பது இல்லை.. எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் உங்களால் முடிந்தவரை அது நல்லவைகளாக இருக்கட்டும்...

உங்கள் தாய் தந்தை உங்களை எப்படி நடத்தவேண்டும் என்று நினைத்தீர்களோ.. அப்படியே உங்கள் மகன்/மகள்களை நடத்துங்கள்... மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ.. அதேபோல நீங்கள் மற்றவர்களிடம் நடந்துகொள்ளுங்கள்...

எண்ணிய முடித்தல் வேண்டும்..
நல்லாவே எண்ணல் வேண்டும்...
திண்ணிய நெஞ்சம் வேண்டும்..
தெளிந்த நல்லறிவு வேண்டும்..
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதி முன் பனியை போலே..
நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய் என்று மகாகவி பாரதியாரும்..

"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்." என்று வள்ளுவரும் நமக்கருளிச்சென்ற நற்கருத்துக்கள் இதுதான்.

நோய்களும், காரணங்களும் - கருடபுராணக் குறிப்புகள்



"என்ன பாவம் பண்ணேன்னு தெரியல..இப்படி ஒரு கஷ்டம் படறேன்"னு பொதுவாக அனைவரும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறாமல் இருக்க மாட்டோம்.

போட்டியும், பொறாமையும் நிறைந்த இந்த உலகத்தில் எதையாவது செய்தால் தான் வாழ முடியும் என்ற நிர்ப்பந்தத்தில் பலரும், அந்த தவறுகள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரியாமலேயே பொழுதுபோக்காக சிலரும் தவறுகளை செய்து வருகின்றனர். செய்யும் பாவங்களுக்கு தகுந்தாற் போல மோசமான விளைவுகளை கண்டிப்பாக நாம் திரும்ப அனுபவிக்க வேண்டும் என்ற பய உணர்வை உணர்த்தவே கருடபுராணத்தில் பல குறிப்புகள் கூறப்பட்டு இருக்கின்றன.

நீதி நெறிகளை கடைபிடித்து மக்கள் வாழ வேண்டும் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கருடபுராணத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் இவை.

ஒரு பிறவியில் குற்றமும், பாவமும் புரிந்தால், அடுத்த பிறவியில் அவர்கள் வாழ்க்கையும், உடல் நலமும் எப்படிப் பட்ட வேதனைகளை படும் என சுட்டிக்காட்டவே இக்குறிப்புகள் கூறப்பட்டிருக்கலாம்.

ஒருவருக்கு வரும் நோயின் தன்மை, அதற்கு முன்னதாக அமைந்த காரணங்கள் பற்றிய விளக்கம். ஒரு சில உதாரணங்கள் உங்கள் பார்வைக்கு.

பசுவை கொன்றால் கூனராகவும், சபல புத்தியுள்ளவராகவும்(இப்போது பசுவை கொல்வோர் அனேகம் பேர்),கன்னிப்பெண்ணை கொல்பவர் தொழுநோயாளியாகவும், ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளிடம் சேர்பவன் அலியாகவும், குருவின் பள்ளியறையை களங்கப் படுத்தியவர் தோல்வியாதியாலும், கருவுற்ற பெண்ணை கொல்பவர் நோய் முற்றிய காட்டுமிரண்டியாகவும், பிராமணனை கொல்பவர் காச நோயால் அவதிப்பட்டும் செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவிப்பர்.

அகந்தையால் குருவை நிந்திப்பவர் காக்காய் வலிப்பு நோயாலும், வேதங்களையும், சமய நூல்களையும் இகழ்பவர் மஞ்சட்காமாலை நோய்க்கும், புனிதம் மிகுந்த சமய நூல்களை திருடுபவர் குருடனாகவும்,பொய் சாட்சி கேட்பவர் செவிடனாகவும் பிறப்பது நிச்சயம் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் , நஞ்சு கலப்பவன் பைத்தியமாகவும், திருமணங்களை நிறுத்துவோர் பிளந்த உதட்டோடும் பொய் பேசுபவன் திக்கு வாயாகவும், தீ வைத்து கொளுத்துபவர் வழுக்கைத் தலையனாகவும் பிறப்பர்.

மனித வாழ்க்கையை நெறிமுறைப்படுத்த , ஒழுக்கமாய் வாழ வைக்க , வாழும்வரை மற்றவர்களுக்கு துன்பம் தராமலும் கூடுமானவரை மற்றவர்களுக்கு உதவியாகவும் வாழவைக்க நம் முன்னோர்கள் பற்பல ஒழுக்க நெறிகளை போதித்து சென்றிருக்கிறார்கள்...
கருட புராணம் உண்மையா, அங்கே யார் போய் பார்த்துவிட்டு வந்தார்கள் என்றெல்லாம் கேள்விகள் கேட்பதன் மூலம் வழக்கம் போல நம் புத்திசாலிகள் என்று காட்டிக்கொள்வதை விடுத்து கருடபுராணம் குறிப்பிட்டிருக்கும் தண்டனைகளை தான் இப்போது நம்மில் எல்லோருமே அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக்கொள்ளலாம்..

ஆனால், இதே தண்டனைகள் அடுத்த பிறவியிலும் தொடர வேண்டுமா?? வாழும்வரை பாபகாரியங்கள் செய்யாமலும், முறையான உணவுப்பழக்கங்களை கையாண்டும், தீய பழக்கங்களை தவிர்த்தும் நம் முன்னோர்கள் ஆலோசனைப்படியே வாழ்ந்தோமானால் எவ்வித பயமும் இன்று இந்த பிறவியிலும் அடுத்த பிறவியிலும் கூட நோயின்றி வாழலாம்..

ஏனென்றால் எதையாவது செய்துவிட்டு,.. அய்யோ...இது நம்மை பாதிக்குமோ என்று பயந்து பயந்து வாழ்ந்தால் அந்த பயமே மேலும் மேலும் வியாதிகளை கொண்டுவந்து சேர்க்கும்..

உலகில் பிறந்த யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு நோய் (அ) துன்பம் இல்லாமல் வாழ முடியாது. எப்போதுமே மனதை தாக்கும் முதல் வியாதி பயம் மட்டுமே..அந்த பயமே வியாதியாக உடலுக்கு மாற்றம் செய்யப் படுகிறது. அடுத்தவருக்கு நன்மை செய்யாவிட்டாலும், முடிந்த வரை தீமை செய்யாமல் வாழ பழகலாம். இது வரை தெரிந்தோ, தெரியாமலோ சில, பல தவறுகளை செய்து இருந்தாலும் இனி வரும் காலங்களில் முற்றிலும் தவிர்த்து, மறப்பதும், மன்னிப்பதுமாக வாழ முயற்சிக்கலாமே.

நரம்பு மண்டலம்



மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம் என்றே கூறலாம். உடலின் அனைத்து பாகங்களிலிருந்து தகவல்களை தண்டுவடம் மற்றும் மூளைக்கும் , தண்டுவடமும் மூளையும் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடலின் மற்ற பாகங்களுக்கும் தொடர்ந்து இடைவிடாமல் இந்த நரம்பு மண்டலமே பரிமாறிக்கொண்டிருக்கிறது 

தகவல்களை மூளை மற்றும் தண்டுவடத்திற்கு கொண்டு சேர்க்கும் வகை நரம்புகள் உணர்வு (sensory) நரம்புகள். இவை உட்செல் (afferent) நரம்புகள் எனப்படும் . மூளை மற்றும் தண்டுவடம் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடலின் மற்ற பாகங்களுக்கு கொண்டு சேர்க்கும் நரம்புகள், செயல்(motor) நரம்புகள் இவை வெளிச்செல் நரம்புகள் எனப்படும். சமகால சாதாரண வார்த்தைகளில் சொல்வதென்றால் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் நரம்புகள்

நம் உடலில் 72,000 நரம்புகள் உண்டு என்று நாம் அறிந்தது தான்...அவை எங்கே , எத்தனை இருக்கின்றன என்பதை பார்ப்போம்.
தலை 15000
செவிகள் 3300
கண்கள் 4000
மூக்கு 3349
தோள், பிடரி 6000
கண்டம் 5000
கரங்கள் 3000
முண்டம் 2170
இடை 8000
விரல்கள் 3000
லிங்கம் 7000
மூலம் 5000
சந்துகள் 2000
பாதம் 5150

ஆக மொத்தம் -72000 .. இந்த 72000 நரம்புகளுமே நம்மை தொடர்ந்து இயக்கிக்கொண்டிருக்கின்றன.

மனமும், உடலும்



மனித உடல் என்பது அளப்பரிய ஆற்றலையும் சக்தியையும் உள்ளடக்கியது. இந்த சக்தியானது மனதோடும் சம்பந்தப்பட்டே... பிரபஞ்ச சக்தியுடன் இணைந்து இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

மனதில் எழும் எண்ணங்கள் சக்தி அலைகளாக உருமாறி உடலை புத்துணர்ச்சியாகவோ/தளர்ந்து போகவோ செய்யும்... அதாவது... நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் , இன்று மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறோம், அழகாக இருக்கிறோம், நமக்கு நிறைய அறிவு இருக்கிறது போன்ற எண்ணங்கள் தொடர்ந்து உருவாக உருவாக மனதோடு இணைந்த இந்த உடல் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. அதேபோல எதிர்மறை எண்ணங்களான "என்னவோ தெரியல.. ரொம்ப டயர்டா இருக்கு.. உடம்பு சரி இல்லாதது போல இருக்கு.... இன்னிக்கு என் முகமே நல்லா இல்ல.." இப்படியான எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக அதிகமாக மனமது சோர்ந்து போக உடலும் அப்படியே பிரதிபலிக்கிறது...

இந்த சக்தியானது உடலுக்குள் மட்டுமல்லாமல் உடலுக்கு வெளியேயும் பிரயோகிக்கப்படுகிறது.. ஒவ்வொரு மனிதரும் இப்படியாக வெளியிடும் சக்தி அலைகள் ஒன்றோடொன்று இணைகின்றன...

அனைத்து மதங்களிலும் பிரார்த்தனை செய்ய கோயில்,மசூதி, தேவாலயம், குருத்வாரா, விஹார் என பற்பல இடங்களை ஏற்படுத்தி அவ்விடங்களில் மக்கள் கூடி பிரார்த்தனை செய்ய வைத்தது இந்த அடிப்படியில் தான்.... இப்படியான வழிபாட்டுத்தலங்களில் கூடும் மக்களில் சுமார் 90% பேர் நல்லவிஷயங்களை மட்டுமே நினைப்பார்கள் அல்லது வேண்டிக் கொள்வார்கள்.. அப்போது அவர்களின் உடலில் இருந்து என்ன அலைகளின் சக்தியானது வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தும்.பிரார்த்தனைகள் எங்கு அதிகம் இருக்கிறதோ அங்கு அமைதியும், ஆனந்தமும் மட்டுமே இருக்கும்.

"நன்றும் தீதும் பிறர் தர வாரா" நம்முடைய நல்ல எண்ணங்கள் தான் நம்மையும், நம்மோடு இருப்பவரையும் வழி நடத்தும் மிக முக்கிய பிரபஞ்ச காரணிகள். மனதோடும், எண்ணங்களோடும் தொடர்பில் உள்ள இந்த உடலை, நல்லெண்ணங்கள் மற்றும் நற் செய்கைகளால் ஆக்கபூர்வமான வழியில் செயல்படுத்தினால் மனமும் உடலும் வலுப்படும், வாழ்வும் சிறப்புறும்.

மனமது செம்மையானால் செயலும் செம்மையாகும். இந்த உடல் நம்மிடம் எதிர்ப்பார்ப்பது மனதை தளர்த்தி, ஓய்வு மட்டும் கொடுங்கள் என்பது மட்டும் தான். மற்ற அனைத்து செயல்களையும் நம் விருப்பு, வெறுப்பு எதையும் எதிர்பார்க்காமல் முறையாக இயங்கி கொண்டே இருக்கும் ஆற்றல் பெற்றது நம் உடல்.

முறையற்ற எண்ணங்களை, செயல்களைத் தவிர்த்து...தினமும் சில மணி நேரங்கள் மனதிற்கு அமைதியும், ஓய்வு கொடுக்க முயற்சி செய்யுங்கள். மனதால் முடியாதது எதுவுமே இல்லை. பஞ்சபூதங்களின் இயக்கத்தால் இந்த உடல் பிரபஞ்ச சக்தியின் துணையுடன், நம்முள் இருக்கும் ஆற்றலுக்கு வலுக்கொடுத்து.....எல்லா வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வைக்கும்.

மனித உடல் - கருடபுராணம் சொல்லும் புள்ளிவிபரங்கள்





நவீன விஞ்ஞானம் கூட தடுமாறக்கூடிய உடலைப் பற்றிய விளக்கங்களை, கருடபுராணம் துல்லியமாய் நம் கண் முன் வைக்கிறது.
உடம்பில் மூன்று கோடியே ஐம்பது இலட்சம் உரோமங்கள், தலையில் எழுபது இலட்சம் உரோமங்கள், இருபது நகங்கள், முப்பத்திரண்டு பற்கள் உள்ளதாகவும், மனிதனின் உடம்பில் உள்ள மொத்த தசையின் எடை ஆயிரம் பலம், இரத்தம் நூறு பலம், கொழுப்பு பத்து பலம், தோலின் எடை ஏழு பலம், மஜ்ஜையின் எடை பன்னிரெண்டு பலம், மிகவும் உயர்ந்த இரத்தம் மூன்று பலமும் உள்ளதாக கூறுகிறது.

நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கூறப்பட்டுள்ள இந்த புள்ளி விபரங்களை, நவீன மருத்துவம் முழுமையாக கூற முடியாமல் இன்றும் எல்லாவற்றிக்கும் ஒரு சராசரியான அளவைத் தான் கூறி வருகிறது.

(ஒரு தோலா- பத்து கிராம் (வடஇந்திய நகை கடைகளில் இந்த தோலா அளவு இன்றும் சொல்லப்படுகிறது), மூன்று தோலா = ஒரு பலம், ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம், அதாவது ஒரு பலம் என்பது 6/5 அவுன்ஸ்)

வயிற்று வலி, வயிற்றில் வீக்கம், அல்சர் போக எளிய வழி (அக்குபிரஷர்)


கூடுதல் சுவையுடன் உணவு கிடைத்தல் ஒரே நேரத்தில் வயிறு முட்ட அவசர அவசரமாக சாப்பிட்டு, பின்னர் மூச்சு கூட விட முடியாமல் தவிப்பது நம்மில் பலருக்கு வாடிக்கை.. ஆனால் இது மிக மிக தவறான விஷயமாகும்.. "நொறுங்கத் தின்றால் நூறு வயது"...உணவை நன்கு மென்று சுவைத்து, உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.. “அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று நம் முன்னோர்கள் சொன்னவை அனைத்தும் வார்த்தைக்காக இல்லை.. அனுபவ உண்மை..

ருசிக்காக அதிக அளவு சாப்பிடுவது எவ்வளவு பக்க விளைவுகளை ஏற்படுத்துமோ, அதில் சற்றும் குறைவில்லாத விளைவுகளை பசி எடுக்கும் நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதும் ஏற்படுத்தும்.. உணவை ஜீரணிப்பதற்காக சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலமானது , ஜீரணமாக உணவு இல்லாத பட்சத்தில் குடலின் சுவற்றை பாதிக்கும்... இது அல்சர் எனப்படும்.. இதனாலும் வயிற்றில் தாங்கமுடியாத வலி உண்டாகும்.

பசித்து உண்ணாமல் இருப்பதும் தவறு. பசிக்காமல் உண்ணுவதும் தவறு.

சிக்கும் போது அளவுக்கு அதிகமாக விருப்பபட்ட உணவைச் சாப்பிட்டப் பிறகு, உடல் அதிக சோர்வுடன் (அ) எதுவுமே செய்ய முடியாத நிலையில் அதிக சோர்வும், தூக்கமும் வரும். சில நேரம் வயிறு வலி, வீக்கம், அடிவயிற்றில் அதிக அளவில் வலி, உண்டாகும். அதற்கு செரிமானமின்மை, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயுப் பிடிப்பினால் வலி, அல்சர் இப்படி பல காரணங்கள் வரிசையாக அடுக்கி கொண்டே போகலாம். 


அக்குபிரஷர் முறைப்படி இத்தனை வியாதிக்கும் மிக எளிய முறையில் தீர்வு காணலாம். 3 நிமிடங்கள் தொடர்ந்து சீராக வயிற்று பகுதியில் நெஞ்செலும்பின் கீழ் பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். (எளிமையாய் புரிய படத்தை பார்க்கவும்.) இப்படி தொடர்ந்து ஒரு நாளைக்கு 2 (அ) 3 முறை செய்யவும்.. படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் லேசாக அழுத்திப் பிடித்துக் கொண்டு, மூச்சை ஆழமாக இழுத்து விடும்போது நமது உடலுக்கு உடனடி சக்தி கிடைப்பதோடு வலியிலிருந்தும் விடுபடலாம்.

உணவில் கீரைகள், பழங்கள், சிறுதான்யங்கள் என்று சரிவிகத உணவு முறையையும், மேற்கூறிய அக்குபிரஷர் முறையும் இணையும் போது தான் விரைவில் குணமடைய முடியும்.
சரியான உணவுப் பழக்கம், தூக்கம், எளிய உடற்பயிற்சி இவற்றோடு அக்குபஞ்சர் சேர்ந்தால் உடல் எளிய முறையில் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும்.

அளவிற்கு அதிகமான சக்தியை தன்னுள்ளே கொண்டுள்ள உடலுக்கும் ஒரு முறை வாய்ப்பு கொடுத்து தான் பார்க்கலாமே...

உயர் இரத்த அழுத்தம் போக்க எளிய வழி (அக்குபிரஷர்)



"டென்ஷன்.. டென்ஷன்.. டென்ஷன்..." எதெற்கெடுத்தாலும் டென்ஷன்... எப்போதுமே நாம் டென்ஷனாக இருக்கிறோம்,.. அல்லது யாரையாவது டென்ஷனாக்கிக்கொண்டிருக்கிறோம் .... இது நமது தவறோ.. மற்றவர்களின் தவறோ அல்ல...

சமகால வாழ்க்கை கொடுத்த பரிசு அது... வேகம்.. வேகம்.. எதிலும் வேகம்.. நமக்கு நாமே ஒரு கற்பனையை சிருஷ்டித்துக்கொண்டு அதன்படி நாமே நடக்க முடியாமை , மற்றவர்கள் அவ்வாறு நடக்கவில்லை என்ற கோபம்... ரசாயனங்கள் கலந்துவிட்ட உணவு, மாசுபட்டுவிட்ட காற்று... உடல் உழைப்பை முடக்கிப்போட்டுவிட்ட நவீனம்.. எல்லாம் சேர்ந்து மன அழுத்தம்.. அந்த மன அழுத்தம் 90% நோய்களை கொண்டுவருகிறது

மிக முக்கியமாக உயர் இரத்த அழுத்தம்... உடல் உழைப்பு இல்லாத காரணத்தால் எடை கூடி, எரிக்கப்படாத சக்தி (கலோரி) இரத்தத்தில் சேர்ந்து கொழுப்பாக மாறி உயர் இரத்த அழுத்தமாக உருவெடுக்கிறது... தலை வலி, எரிச்சல் என்ற சாதாரண அறிகுறிகளாக முதலில் தென்படும்.. இரத்த அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க அது கொடுமையான தலைவலி, கை கால்கள் மரத்துப்போதல், நெஞ்சு எரிச்சல் என பல பிரச்சனைகளை கொண்டுவரும்.. நாளடைவில் மூளையில் இருக்கும் மெல்லிய இரத்த குழாய்கள் வெடித்து பெராலிசிஸ் எனப்படும் பக்கவாதத்தையோ இல்லை மரணத்தையோ கொண்டுவரும்..

புகை, மது அறவே கூடாது..மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, சீரான உணவுப் பழக்கம், தேவையான அளவு தூக்கம், மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால் இந்த வியாதி வர வாய்ப்பே இல்லை எனலாம்...

உயர் இரத்த அழுத்தம் போக்க மிக எளிய வழி அக்குபிரஷரில் உண்டு.
உயர் இரத்த அழுத்தத்திற்கு பல புள்ளிகள் இருந்தாலும் இது உடனடியாகவும், நாமே செய்து கொள்ள மிக எளிமையாகவும் இருக்கும்....படத்தில் காட்டியுள்ள படி இரு கைகளாலும் 3 நிமிடங்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே மூச்சை ஆழமாக இழுத்து விட வேண்டும். ஒரு நாளைக்கு 2, 3 முறை கூட செய்து வர வேண்டும். டென்னிஸ் பந்து இரண்டை அந்த இடத்தில் வைத்து பத்து நிமிடங்கள் படுத்து ஓய்வு எடுக்கலாம்.

இன்னும் சில எளிய முறைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும், சியாட்டிகா என்றழைக்கப்படும் இடுப்புச் சந்து வாதம் உள்ளவர்களுக்கும் தோப்புக்கரணம் நல்ல பயனளிக்கும்.