செவ்வாய், 14 ஜனவரி, 2014

மலேரியா



கொசுக்கள்
மூலமாக பரவும் நோய்களில் மிக முக்கியமானது மலேரியா ஜுரம். மலேரியா கிருமி இரத்த ஓட்டத்தில் கலந்து சிவப்பணுக்களுக்குள் ஊடுருவி ஹீமோகுளோபினை அழித்து பல்கி பெருகும். இதன் விளைவாக இரத்த சிவப்பணுக்கள் சீர்குலைந்து கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் மற்றும் மூளை போன்றவை செயலிழக்க தொடங்கும்.

மலேரியா ஜுரம் வந்தவுடன் நாம் பயந்து போய் மருத்துவமனைக்கு ஓடி மருத்துவர் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொள்வோம்... ஜுரம் குறையும். ஆனால் முழுதாக குணமாகாத பட்சத்தில் ஒரு வாரத்தில் மறுபடியும் ஜுரம் வரும். அதோடு, ஜுரத்திற்கு பயந்து நாம் உட்கொண்ட மருந்து மாத்திரைகள் என்ன செய்கிறது தெரியுமா??? அவைகள் கல்லீரலில் தங்கி இருக்கும் மலேரியா கிருமிகளை தாக்கி அழிக்கின்றன.. கிருமிகளை மட்டும் அழிப்பதில்லை.. கல்லீரலை பலவீனப்படுத்தி செயல்பாட்டையும் குறைத்து விடுகின்றன... கல்லீரலின் வேலைத்திறன் குறைவதோடு, மீண்டும் காய்ச்சல் வரும்பட்சத்தில் உடல் பலவீனம், சோர்வு,ரத்த சோகை, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் உருவாகும் வாய்ப்பும் அதிகமாகும்.

மலேரியா எனும் இந்த ஜுரத்தை மருந்து, மாத்திரைகள் இல்லாமல் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாமல் குணமாக்க முடியுமா...?? என்ற கேள்விக்கு இயற்கை மருத்துவம் கொடுக்கும் பதில்.. "முடியும்" என்பது தான்.
“உற்ற சுரத்துக்கும் உறுதியாம் வாய்வுக்கும்
அற்றே வருமட்டும் அன்னத்தை காட்டதே.”
என்பது திருமூலர் வாக்கு.
லங்கணம் பரமெளஷதம் என்பது சமஸ்கிருதப் பழமொழி. மேற்கண்ட இரண்டும் கூறுவது பட்டினி மட்டுமே சிறந்த மருந்து என்பதுதான்...

உடலின் மொழி, உணவின் இரகசியம் இரண்டையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். பசிக்காமல் உணவு மற்றும் நீர் அருந்தவே கூடாது. பட்டினியாக இருப்பதால் செரிமாண உறுப்பிற்கு போதுமான ஓய்வு கிடைக்கும். வாய்ப்பகுதியில் தொடங்கும் நம் செரிமாண மண்டலம் மலவாயில் முடிவடைகிறது. பூரண குணம் பெற வேண்டுமானால் முழு ஓய்வும், பட்டினியும் மிக அவசியம்.

பசிக்கும் பட்சத்தில் உணவே மருந்தாக உடைத்தகடலை(பொட்டுகடலை), தேங்காய், எண்ணெய் விடாமல் வறுத்த வரமிளகாய் (தேவைக்கு காரம் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல) இவற்றை எடுத்துக் கொண்டு புளி இல்லாமல் துவையல் செய்து, இரண்டு வேளையும் உண்டு வர வேண்டும். முதலில் இத்துவையலை கொஞ்சம் சூடான சாதத்தில் கலந்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட வேண்டும்.. மீதி சாதம் நம் விருப்பம் போல உண்ணலாம். இரண்டு, மூன்று நாட்களில் ஜுரம் போய் உடல் நலம் பெறுவதை காணலாம்.

மேலும் நமது சமையலறையிலேயே இருக்கும் மிளகு - சீரகம் சேர்த்து பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர... ஜுரம் காணாமல் போவதை கண்கூடாக உணரலாம்...

அதோடு உணவே மருந்து என்பதையும் உணரலாம். பயந்து மருத்துவரிடம் ஓடி பக்க விளைவுகளை வாங்கி வர போகிறோமா... நமது சமையலறை பொக்கிஷங்களை கொண்டு ஆரோக்கியமாக வாழ போகிறோமா...??

விந்தணு குறைபாடு

உடலில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் மனிதர்கள் இயற்கைக்கு புறம்பாக, ஆரோக்கியமற்ற முறையில் வாழும் வாழ்க்கை முறை தான். இன்றைய நிலைமையில் உலகமெங்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் சந்ததிக்கே சவாலாக விளங்குவது குழந்தையின்மைப் பிரச்னை தான் . குழந்தையின்மைக்கு பெண்கள் தரப்பில் பல காரணங்கள் இருந்தாலும், ஆண்கள் தரப்பில் முக்கிய காரணம் விந்தணுக்கள் குறைபாடே. விந்தணு குறைபாடு ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிக மோசமான பிரச்சனை. இந்த விந்தணு குறைபாடு உண்டாக முக்கிய காரணம் குடி, புகைப்பிடித்தல் மற்றும் முறைத் தவறிய பழக்கவழக்கங்கள் மட்டுமே.

இப்போதுள்ள சராசரி கணெக்கெடுப்பின் படி மனிதனின் விந்தணு எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 2 சதவீதம் என குறைந்து, இன்னும் 50 ஆண்டுகளில் விந்தணுக்கள் உள்ள மனிதர்களை பார்ப்பது அரிது என்று அதிர்ச்சியான தகவலையும், ஐயத்தையும் நம் முன் வைக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இப்போதைய காலகட்டத்தில் முப்பது வயதிலேயே பல ஆண்கள் விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் மிகவும் வேதைனையான உண்மை .

விந்தணு குறைபாட்டுக்கு மிக முக்கிய காரணங்களாக அளவுக்கு அதிகமாக புகைத்தல், குடித்தல், துரிதவகை உணவுகள், சுற்றுப்புற மாசு, ப்ளாஸ்டிக் பொருட்கள், தைராய்டு சுரப்பியானது சரியாக செயல்படாததால் உண்டாகும் உடல் பருமன், நீரிழிவு, போதிய தூக்கம் இல்லாதது , அலைகற்றை இணைப்புடன் இருக்கும் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் எப்போதும் வைத்திருத்தல், லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்வது, இறுக்கமான உள்ளாடை, இறுக்கமான ஜீன்ஸ் போன்றவற்றை தொடர்ந்து அணிவது , தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவது, போதிய தூக்கம் இல்லாமை, மன உளைச்சல், ஸ்டெராய்டுகள் உபயோகித்தல், நோய்த்தொற்றுகள் போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தாமதமான திருமணங்களும், குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவதும் விந்தணு குறைபாட்டிற்கு மேலும் ஒரு காரணம்.

இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என எல்லாவற்றையும் உடலுக்கு உள்ளேயே அமைத்து மனிதனை படைத்த இறைவன் (அல்லது இயற்கை) விதைப்பைகளை மட்டும் வெளியில் இருக்கும்படி அமைத்த ஆச்சர்யம் ஏனென்றால் , மனித உடல் சூட்டை விட குறைவான சூட்டில் இந்த விதைப்பைகள் இருக்க வேண்டும் என்பதால்தான்... உடலின் வெப்பம் இந்த விதைப்பையில் உருவாகும் உயிரணுக்களை அழித்துவிடும் என்பதாலேயே அது உடலை விட்டு தனியாக வெளியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால்...இறுக்கமான உள்ளாடை, இறுக்கமான ஜீன்ஸ் போன்றவற்றை நீண்ட நேரம் அணிவதால், விந்தணுக்களின் வளர்ச்சி, ஆரோக்கியம், உற்பத்தி மற்றும் செயல்பாட்டை தடைப்படுத்தி பாதிப்பை ஏற்படுத்தும். விதைப்பையானது வெப்பமடைந்து, விந்தணுக்கள் அழிந்துவிடும்.

அதே போல தினமும் தொடர்ச்சியாக வண்டியை ஓட்டுவதும், ஆண்கள் நீண்ட நேரம் மடி கணினியை மடியில் வைத்து வேலை செய்வதும் ,அதிலிருந்து வெளிவரும் வெப்பமானது, விதைப்பையை வெப்பமடையச் செய்து விந்தணுவை அழித்துவிடும்.

அளவுக்கு அதிகமாக புகை மற்றும் குடியினால் டெஸ்டோஸ்டிரோன் எனும் ஆண் ஹார்மோன் அளவு குறைந்து, ஆண்மை குறைபாடு உண்டாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. டெஸ்டோஸ்டிரோனை நாளமில்லா சுரப்பிகள் போதிய அளவில் உற்பத்தி செய்யாவிட்டாலும் விந்தணுக் குறைபாடு உண்டாகும்.

துரிதவகை உணவுகளில் எந்த விதமான ஊட்டச்சத்துக்களும் கிடையாது. அதில் உள்ள வெறும் கொழுப்புக்கள் விந்தணு குறைபாட்டைத் தான் ஏற்படுத்தும்.

நேரம் கடந்து உறங்குவதால் போதிய தூக்கம் உடலுக்கு கிடைக்காமல், ஆற்றலின்றி சோர்ந்து, சக்தி குறைந்து விந்தணுக்கள் செயல்படும் திறனின்றி போய் விடும்.

ஸ்டெராய்டுகள் அடிக்கடி எடுத்துக் கொள்வது இனப்பெருக்க மண்டலத்திற்கு பெரும் தீங்கை விளைவித்து, விதைப்பையை சுருக்கி, விந்தணுவின் எண்ணிக்கையையும் குறைத்துவிடும்.

மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்கும் போது, மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்றும் அதிர்வு, விதைப்பைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விந்தணுவின் உற்பத்தியும் பாதிக்கும். (சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயத்தை பாதிக்கும் என்பது ஒரு தனிக்கதை.)

தைராய்டு சுரப்பியானது சரியாக செயல்படாமல், உடல் பருமனை உண்டாக்கினாலும் விந்தணு உற்பத்தி தடைப்படும். மன அழுத்தம் உடலின் ஆரோக்கியத்தை கெடுத்து, விந்தணுவின் எண்ணிக்கையையும் குறைந்துவிடும்.

நீரிழிவு நோயால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை விந்தணுவின் தரத்தைக் குறைத்துவிடும்.

ஒரு சிலருக்கு வைரஸ் நோய்த்தொற்றுகளால் கூட விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

மண்ணில் அளவிற்கு அதிகமான இரசாயன உரங்களைப் போட்டு மண்ணை மலடாக்கினால், இன்றைய இளம் தலைமுறையினர் மலடாவார்கள் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இயற்கையோடு கூடிய உணவு பழக்கங்களும், அமைதியும், உடல் பயிற்சியும் மேற்கொண்டு இயற்கையோடு இசைந்து இயற்கை வாழ்வு வாழ முயற்சி செய்வோம் இனி வருங்காலங்களில்.

ஓடி ஓடி ஓய்வில்லாமல் உழைத்து, துரித உணவை உண்டு, மனப்பாரத்துடன், நிம்மதியில்லாமல் கஷ்டப்பட்டு நம் சந்ததிகளுக்காக பணம், பொருள் சேர்த்துவைத்தால் மட்டும் போதாது.. அவற்றை அனுபவிக்கவும் வழிவழியாய் தொப்புள் கொடி உறவு தழைக்கவும் சந்ததிகளையும் சேர்க்க வேண்டும்.....!!!

பால்!!!!

எந்த இரத்தமும், சத்துக்களும் கலந்து பாலாக மாறியதோ... எந்த ஈரல் சுத்திகரித்து பாலாக சுரந்ததோ... அந்த பசுவின் இறைச்சியை உணவாக உண்ணலாமாம்...ஆனால் பால் மட்டும் குடிக்க கூடாதாம்.... பாலே கூடாதெனில் அந்த பால் தரும் பசுவும், மற்ற அசைவமும் உணவாகக் கூடாதல்லவா?.... சித்தர்களின் வைத்திய அனுபான முறைகளில் பால் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதுண்டு... ஆனால் அசைவத்தை முன்னிறுத்தும் கலியுக சித்தர்கள் பாலே அருந்தக்கூடாது என்கிறார்கள்... .... பால் கூடாது என்று மறுக்கும், பிரச்சாரம் செய்யும் கலியுக சித்தர்களிடம்தான் (??!!) முற்கால சித்தர்கள் பாடம் படிக்க வேண்டும் போல.... தாய் இல்லாமல்.. தாய்ப்பால் இல்லாமல் வளரும் குழந்தைகளுக்கும் , பால் அருந்தக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்பவர்களின் குழந்தைகளுக்கும் கூட பசுவின் பாலே உயிர் வளர்க்கும் காரணியாக அமைகிறது.... பசுவின் மாமிசம் அல்ல.

அச்சில் என் கட்டுரைகள்

அக்குபஞ்சர் அறிவோம் பக்கத்திற்கும், மருந்தில்லா மருத்துவம் குறித்த என்னுடைய கட்டுரைகளுக்கும் 2013 ல் நீங்கள் கொடுத்த பேராதரவின் நம்பிக்கையில்....

அவற்றை தொகுத்து "அக்குபஞ்சர் - உடற்கூறுகளும் - உணவுமுறைகளும் " என்ற புத்தகமாக 2014 ல் உங்கள் முன் வைக்கிறேன்....

சென்னை புத்தக கண்காட்சியில் உங்கள் பார்வைக்கு ...

ஹைபோதாலமஸ் (Hypothalamus)

ஹைபோதாலமஸ் மூளையில் பாதாம் கொட்டையின் அளவில் உள்ள உடலை இயக்கக் கூடிய மைய இயக்கு விசையாக செயல்படும் முக்கிய உறுப்பு. நமது செயல் பாடுகளை இயக்க கூடிய இயக்க சக்தியாக இது கருதப்படுகிறது.
ஹைபோதாலமஸில் உள்ள தனித்தனி செல் தொகுப்புகளில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், ஹார்மோன் கட்டுப்பாடு, பசி,தாகம், தூக்கம், விழிப்பு, உடலின் எதிர்ப்பு சக்தி, மறு உருவாக்கம் என பல முக்கிய வேலைகள் முறைப்படுத்தப்படுகிறது. வயதை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாக செயல்படுகிறது. மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ். ஹைபோதாலமஸ் பகுதிக்குள் பாய்ந்து செல்லும் ரத்தத்தின் வெப்பநிலையை வைத்தும், வெப்பத்தை நன்கு உணர்ந்துகொள்ளும் தன்மை கொண்ட, தோலின் கீழே முடிவடையும் நரம்புகள் அனுப்பும் தகவல்களின் அடிப்படையிலும்தான் செயல்படுகிறது.



நரம்பு மண்டலம், பிட்யூட்டரி சுரப்பியின் செயல்கள் வளர்சிதை மாற்ற விளைவுகள் வளர்ச்சி, இரண்டாம் நிலை பாலின உறுப்புகள் பெருக்கம் இவைகளை சீரிய முறையில் ஒருங்கிணைக்கும் முக்கிய உறுப்பு. பிட்யூட்டரி சுரப்பியின் மூலமாக ஹைபோதாலமஸ் பல ஹார்மோன்களை தூண்டி செயல்படுவதால் இந்த அமைப்பு ஒரு நரம்பு மண்டல நாளமில்லா சுரப்பி மண்டலமாக செயல்படுகிறது எனலாம்.

மேலும் பாம்பு, தவளை உடல் மிகவும் குளிர்ந்து விட்டால் ஒரு நிலைக்குமேல் அவற்றால் உயிர்வாழ முடியாது அதனால் அவை உடல் வெப்பத்தை அதிகரிக்க வெயிலில் காய்ந்து உயிரை தக்க வைத்துக்கொள்ளும். மனிதர்களுக்கு வெப்பச் சமநிலையை மூளையே பராமரிக்கும். வழக்கமான வெப்பநிலையை விட உடல் வெப்பநிலை அதிகரித்தால்,வெப்பநிலை குறைந்தால் அவற்றைச் சரியாக உணர்ந்துகொண்டு நம் மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் செயல்படும் வகையில் அமைந்துள்ளது.

உடலின் வெப்பநிலை அதிகரித்தால், வியர்வை மூலம் வெப்பத்தையும், குளிர் அதிகரித்தால் தசைகளுக்கு நடுக்கம் கொடுத்து கூடுதல் வெப்பநிலை உருவாக்கும். உடல் செயல்பாடுகளின் ஒரு பகுதியான அனிச்சைச் செயல்பாடுகள், நரம்புப் பாதைகளில் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் உடலின் வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது. கடுமையான வெப்பநிலையை தாங்கிக்கொள்ள முடியாமல், உடலில் உள்ள நீர் பெருமளவு வெளியேறி சன் ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழக்கும் ஆபத்துக்களை ஹைபோதாலமஸ் தான் தடுக்கிறது.

ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். நமது உணவுப் பழக்க வழக்கங்களின் கட்டுப்பாடு நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸில் தான் உள்ளது.
நம் உடலில் ஹைபோதாலமஸ் ஆற்றும் பங்கை வரையறுத்து கூறிவிட முடியாத அதிசயம் எனவே கூறலாம். இன்னும் ஆரய்ச்சியில் முடிவேகாணப்படாத நிலையில் உள்ள மிக மகத்தான உறுப்பு. ஹைபோதாலமஸ் இயற்கை நமக்கு கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்

அதிர்ச்சி தரும் துரித வகை உணவுகளின் உண்மைகள்

துரித உணவில் MSG (Mono sodium Glutamate)
-------------------------------------------------------
Fast Food மையங்களில் விற்பனையாகும் அனைத்து உணவு வகைகளிலும் MSG என்ற ரசாயன உப்பு கலக்கப்படுகிறது . எந்த வகை ஹோட்டலாக இருந்தாலும் துரித வகை உணவு என்றால் ருசிக்காக MSG சேர்க்கப்படுகிறது. பிட்சா, பர்கர், ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் வகை போன்ற நிறைய உணவு வகைகளில் MSG சேர்க்கப்படுகிறது.



MSG ன் வாசனை மூளையின் ஹைபோதாலமஸ் பகுதியை தூண்டுகிறது . ஹைபோதாலமஸ் இன்சுலின், அட்ரினலின் போன்றவை சுரப்பதையும் அதிகப்படுத்தும். இதனால் அதிகமாகவும் அடிக்கடி உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு தூண்டப்படும் . இதனால் பலர் அடிக்கடி மற்றும் அளவில்லாமல் உண்கின்றனர். இதன் பக்கவிளைவு உடல் எடை கூடுவது மட்டும் இல்லாமல் MSG சேர்க்கப்படும் துரிதவகை உணவுகளால் துத்தநாகம் குறைபாடு ஏற்பட்டு ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு என பல பிரச்சினைகள் ஏற்படும். மேலும் , தலைவலி, மனச்சோர்வு, உடல் சோர்வு , உடல் எடை அதிகரிப்பு, உணவுக்கு ஏங்குதல் போன்ற வியாதிகளும் உண்டாகும்.
விபரீதங்கள், உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாமை, வயிற்று வலி, மூட்டு வலி, நாக்கு வீங்குதல் ஏற்படுவதுடன் நரம்பு செல்களும் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். தவறான நடத்தைகளுக்கு மிக முக்கிய காரணமே MSG தான்.
வரும்காலம் ஆரோக்கியத்திற்கு இந்த MSG கலக்கப்பட்ட துரித வகை உணவு பெரும் ஆபத்து என்பது மறுப்பதற்கு இல்லை.

திருமூலர் வாக்குப்படி உடல்வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் என்று உணவே மருந்தாக இருக்க வேண்டுமே ஒழிய உணவே விஷமாக மாறக்கூடாது. பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பது தான் மருந்தில்லா மருத்துவம்.