சனி, 7 ஜூன், 2014

ரோஜா குல்கந்து மருத்துவப் பலன்களும், செய்முறையும்

ரோஜா குல்கந்து உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், கல்லீரல், மண்ணீரல் மூன்றையும் நல்ல முறையில் இயங்க வைக்கக் கூடிய இயற்கை உணவு.
உடலுக்கு குளிர்ச்சியை தரும். இதயத்தை பலப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த விருத்தியாக்கும். இரத்த சோகை வராமல் பாதுகாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். பித்த அளவை சமன்படுத்தும். ஜீரண சக்தியை தூண்டும். மலமிளக்கியாக செயல்பட்டு , மலச்சிக்கலைப் போக்கும். அதிக அமில சுரப்பை குறைத்து, அல்சருக்கு சிறந்த மருந்தாக செயல்படும் . பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கோளாறுகளைகளை கட்டுப்படுத்தும். ஆண்மையைப் பெருக்கும். சரும நோய்கள், முகப்பருவைப் போக்கி, உடலுக்கு நல்ல பளபளப்பையும் அழகையும் தரும். மன அழுத்தத்தை போக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். உடலுக்கு வலிமை கொடுக்கும். இதய நோயுள்ளவர்களுக்கு இந்த ரோஜா குல்கந்து ஒரு அருமருந்தாகும்.



ரோஜா குல்கந்து செய்முறை
-------------------------------------------
நல்ல, தரமான பன்னீர் ரோஜாவை வாங்கி அதன் இதழ்களைப் பிரித்து எடுத்து உப்புத் தண்ணீரில் முதலில் கழுவி எடுக்க வேண்டும். (உப்பு இரசாயனத் தன்மையைப் போக்கும்) பின் இரண்டு (அ) மூன்று முறை நல்ல தண்ணீரில் கழுவி, சுத்தம் செய்து ஈரம் போக துடைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.ரோஜா இதழ்களையும், ரோஜா இதழ்களின் எடையைப் போல இரண்டு மடங்கு சீனாக் கற்கண்டையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மத்தால் இடித்து ஒரு கண்ணாடி ஜாடியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் இதை மூன்று நாட்கள் வெயிலில் கண்ணாடி ஜாடியுடன் வைத்து எடுத்த பின்,தேவைக்கு சிறிதளவு தேனை விட்டு நன்றாக கிளற வேண்டும். இப்போது ரோஜா குல்கந்து ரெடி.
கடையில் கிடைக்கும் ரோஜா குல்கந்துவில் இதழ்கள் நல்ல முறையில் கழுவி எடுக்கப் பட்டதா என்று நமக்கு தெரியாது. அதோடு மட்டுமில்லாமல் அதில் இனிப்புக்கு வெள்ளைச் சர்க்கரை சேர்ப்பார்கள். நம் வீட்டிலையே இதை தயாரித்தால் விலை குறைவாகவும், ருசியாகவும், சுத்தமான முறையிலும் நமக்கு கிடைக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக