சனி, 7 ஜூன், 2014

மருந்தில்லா மருத்துவம் - (சுகப்பிரசவம்)

பெண் என்ற பிறவி முழுமை அடைவது தாய்மையை அடையும் போது தான். குழந்தையை சுமக்கும் ஒவ்வொரு தாயும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை அனுபவிப்பர்.

ஒரு பெண்ணின் கர்ப்பகாலம் முழுவதும் கருப்பையின் தசைகள் சுருங்கி விரிந்து பிரசவத்திற்குத் தயாராகும். கர்ப்பத்தின் கடைசிக் காலத்தில் இந்த சுருக்கங்கள் அடிக்கடி நிகழும். தொடக்கத்தில் மிகக்குறைந்த அளவிலான தசைச் சுருக்கங்களே காணப்படும். ஒவ்வொரு சுருக்கத்திற்கும் சிறிது இடைவெளி இருக்கும். படிப்படியாக சுருக்கங்கள் அதிகமாகி, அடிக்கடி வரத் தொடங்கும். இந்த நேரத்தில் ஏற்படும் வலி சற்று அதிகமாகவே இருக்கும். இதுதான் பிரசவம் நிகழப்போகும் நேரம். தாயின் பிரசவ வலியின் அளவு 57 Dels. மனித உடலில் 20 எலும்புகளை ஒரே நேரத்தில் உடைத்தால் உண்டாகும் வலி தான் பிரசவ வலி!!



பிரசவ வலி என்பது உண்மை... அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த வலியின் தீவிரம் புரியும்... குழந்தையை சுமக்கும் அனைவருக்குமே இந்த வலி இருக்குமென்றாலும் எல்லோராலும் இந்த வலியை தாங்க முடிவதில்லை... ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது போலவே முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, வீட்டு வேலைகள் ஆகியவற்றின் மூலம் குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவமாக மாற்றிவிடலாம். திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பவர்கள் தாங்கும் அளவு பலகீனமானவர்களால் தாங்க முடிவதில்லை...


அதோடு நவீன விஞ்ஞானம் இயல்பான பிரசவத்தை மிகவும் சிக்கலாக்கியோ, பயமுறுத்தியோ பணம் சம்பாதிப்பதற்காகவே பெரும்பாலான பிரசவங்களை அறுவை சிகிச்சை மூலமாகவே செய்கிறது... (உண்மையாகவே சிக்கலான தருணங்களில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை இங்கே குறிப்பிடவில்லை) அதே நேரம் "பிரசவ வலி" க்கு பயந்து பெண்களே கூட சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள தயாராகி விடுகிறார்கள்... ஆனால்... எண்ணெய் சட்டிக்கு பயந்து நெருப்பில் விழுந்தது போல.. சில மணி நேர வலிக்கு பயந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு அதன் பிறகு வாழ்நாளெல்லாம் வலியை சுமக்கும் வேதனை சொல்லில் அடங்காது...

நிறைமாத கர்ப்பிணிகள் பிரசவத்தில் எந்தவிதமான குறைபாடும், வலியும் இல்லாமல் சுகப்பிரசவமாக குழந்தையை பெற்று எடுக்க அக்குபஞ்சரில் அதற்கு எளிய வழியும் உண்டு. நம் உடலில் பெருங்குடல் (large intestine) மற்றும் மண்ணீரல் (spleen) இரண்டு உறுப்புகளிலும் உள்ள ஒரு முக்கியமான புள்ளியை தினமும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் சுகப்பிரசவம் நடைபெறும்.

மேலும் சிலருக்கு குழந்தை சரியான முறையில் திரும்பவில்லை..அதனால் உடனே ஆபரேஷன் மூலமே குழந்தையை எடுக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை மூலமே பிரசவங்கள் நடைபெற்று வருகிறது.

தலைகீழாக, தலை திரும்பாத குழந்தைகளை கூட அக்குபஞ்சர் மூலம் நல்லபடியாக இயற்கையான முறையில் பிரசவம் உண்டாக்கலாம். எப்படி என்பதை பார்ப்போம்.
சிறுநீரகப்பையில் (Urinary Bladder) அமைந்துள்ள முக்கியமான ஒரு புள்ளிக்கு சக்தி கொடுப்பதன் மூலம் அட்ரீனல் சுரப்பி செயல்பாடு அதிகமாகும். அட்ரீனலுக்கும் கர்ப்பபைக்கும் என்ன சம்பந்தம்? அந்தச் சுரப்பி தான் கர்ப்பப்பையின் செயல்பாடுகளை கவனித்துக் கொள்கிறது. நல்ல முறையில் இயங்க ஆரம்பிக்கும் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டால் இயல்புக்கு மாறான நிலையில் கருவிலிருக்கும் சிசுவின் இயக்கமும் சீராகிறது. குழந்தையும் நல்ல முறையில் பிறக்கிறது. (எந்தப் புள்ளி என்று யாரும் இங்க கேள்வி கேட்க கூடாது. அக்குபஞ்சர் படித்தவர்களுக்கு நன்கு புரியும். தெரியும்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக