சனி, 7 ஜூன், 2014

இடுப்பு-கை-கால்-தலை வலிகளைப் போக்க எளிய வழி (அக்குபிரஷர்)



ல்லீரல், பித்தப்பை போன்ற உறுப்புக்களில் உண்டாகும் பாதிப்பு, சிறுநீரகத்தின்( Kidney) செயல்பாட்டில் பிரதிபலிக்கும். 
இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகமாகவோ (அ) குறைந்தோ காணப்பட்டு, எலும்புகள்(bones), எலும்பு மஜ்ஜை (bone marrow), எலும்புகளைப் இணைக்கும் தசைநார்கள் (ligaments), தசை நாண்கள் (tendons), தசைகள் (muscles) இவ்வுறுப்புகளில் சில பாதிப்புகளை உண்டாக்கும்.

இந்த உறுப்புகளில் உண்டாகும் பாதிப்பை நமது உடல், இடுப்புவலி, நரம்புகள் பிடிப்பு, சுளுக்கு, கழுத்து சுளுக்கு, தலைவலி, மயக்க உணர்வு, கை, கால் மரத்துப் போதல், காதிரைச்சல் (tinnitus) போன்ற வலிகள் மூலம் வெளிப்படுத்தும்.

கல்லீரல் - பித்தப்பை, சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் உண்டான தடைப்பட்ட இயக்கத்தை சீராக்கவும், அந்த உறுப்புகள் வெளிப்படுத்திய நோயின் அறிகுறிகளைப் போக்க அக்குபிரஷர் முறையில் எளிய வழி உள்ளது..

கணுக்கால் முட்டியின் மேற்புறம் (படத்தில் காட்டியுள்ளது போல) ஒரு நிமிடம் நன்கு அழுத்திப் பிடித்துக் கொண்டு நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். பின் மெதுவாக அழுத்தம் கொடுப்பதை நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் அந்த இடத்தில் கட்டை விரலால் தடவி விட வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் நமது உடல் வெளிப்படுத்திய அறிகுறிகள் (வலிகள்) கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நமது உடல் புத்துணர்ச்சி பெறுவதை நன்கு உணரலாம்...ஒரு நாளில் வலியைப் பொறுத்து எத்தனை முறை வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக