சனி, 7 ஜூன், 2014

மலச்சிக்கல்

நமது உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு நல்ல உடல் உழைப்பும் பசியும் மற்றும் செரிமானமும் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் மலச்சிக்கல் இருக்காது. வாழ்நாளில் ஒரு தடவையாவது மலச்சிக்கல் உண்டாகாமல் யாருமே இருக்க மாட்டார்கள். மலச்சிக்கலுடனேயே பலர் வாழ்ந்து கொண்டும் இருகின்றனர். 

சித்தர்களின் கூற்றுப்படி ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பேதி மருந்து சாப்பிட்டு வயிற்றை சுத்தம் செய்தல், உப்பு நீர் கலந்து குடித்து வாந்தி, பித்த வாந்தி எடுத்தல் மனித ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும்.

மலச்சிக்கலால் மூலநோய் மட்டுமில்லாமல் உடல் சோர்வு, வாய்வுத் தொல்லை, தலைவலி, பசியின்மை, து}க்கமின்மை, உடல் நாற்றம், சிறுகுடல் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறு குடல் புற்று நோய் போன்ற பல நோய்ககள் வர வாய்ப்புகள் உள்ளன.

மலச்சிக்கலை தவிர்க்க மலம் கழிப்பதற்கு முன்பு, தலையை முன்னும் பின்னும் பக்கவாட்டில் திருப்பும் கழுத்துப் பயிற்சி, முன்புறமாக குனிந்து பாதங்களைத் தொடுதல், தோப்புக்கரணம் போன்ற பயிற்சிகள் செய்தால் எந்த சிக்கலும் இல்லாமல் மலம் வேகமாக வெளியேறும்.

வாரம் ஒரு முறை உடல் முழுவதும் நல்லலெண்ணை தேய்த்து குளித்தல், தினமும் உணவில் ஏதாவது ஒரு கீரை, (முருங்கை கீரை மிக நல்லது) பச்சை காய்கறிகள், பழங்கள் வகையை சேர்த்துகொள்ளுதல் போன்ற பழக்கங்கள் மலச்சிக்கல் வராமல் தடுக்கும் . . இரவில் பாஸ்ட் புட் மற்றும் பரோட்டா போன்ற துரித வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். உடலின் மொத்த வியாதிக்கும் மலச்சிக்கலே காரணமாகி விடும்.

நமது வாழ்கையின் முற் பகுதி முழுவதும் பணம் பணம் என்று உடல் நலத்தை அலட்சியம் செய்து பணம் சம்பாதிப்பதிலேயே கழித்து, பிற் பகுதியில் கெட்டுப்போன நம் உடல் நலத்தை சீராக்குவதற்கு சம்பாதித்த பணத்தை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

மலச்சிக்கல் வராமல் தடுக்க மிக சுலபமான பயிற்சிகள், உணவுப் பழக்கவழக்கங்களை கையாண்டாலே போதும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக