சனி, 7 ஜூன், 2014

மது என்னும் மாயப்பிசாசு..

ரைப்பை நீரிலுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் நாம் உண்ட உணவில் உள்ள நோய்கிருமிகளையும் கொன்று விடும். இரைப்பையிலிருந்து அரைக்கப்பட்ட உணவானது சிறுகுடலுக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் சேர்ந்து செரிமாண வேலையை முழுமைப்படுத்தும். எலும்பு போன்ற திட உணவுகள் கூட செரிக்கப்பட்டு விடும். ஆனால் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் இந்த ஆல்கஹாலை மட்டும் எதுவும் செய்ய முடியாது. செரிக்கப்பட முடியாத நிலையில் தான் ஆல்கஹால் நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகிறது. அமிலத்தாலேயே ஒன்றும் செய்ய முடியாத ஆல்கஹால் என்னவெல்லாம் செய்யும் என்பதை நாம் அறிந்தால் அதை நெருங்கவே மாட்டோம்.


உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது, கால்கள் மரத்துப்போவது மாத்திரமன்றி சிலருக்கு உள்ளங்கால் எரிச்சல் போன்ற வேதனைகளும் இருக்கலாம். பக்கவாதம் வரும்போது அங்கங்கள் செயலிழப்பது மட்டுமின்றி எரிவு, விறைப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. அதேபோல வலிப்பு நோய் வருபவர்களிலும் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டு விறைப்பு, எரிவு போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுண்டு. மது அருந்துபவர்களிலும் விறைப்பு எரிவு நோய்கள் வருவது அதிகம்.
பெரும்பாலான விறைப்பு எரிவு என்பன படிப்படியாக வருபவை.
திடீரென உங்களது உடல் உறுப்புகளை அசைக்க முடியாது போனாலும்.

சிறுநீர், மலம் வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியாத நிலை, திடீரென தோன்றும் மயக்கம், நடைத்தடுமாற்றம், மறதி, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் இதன் தாக்கம் அதிகம் உள்ளது என்று நாமே புரிந்து கொள்ளலாம். மதுவும் புகைத்தலுமே இதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

இப்படிப்பட்ட மதுவும் புகையும் தேவையா..????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக