வியாழன், 19 நவம்பர், 2015

http://www.dinamalar.com/supplementary_detail.asp…
நான் எழுதுகின்ற உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான செய்திகள் அனைவரையும் சென்றடைய பாதை அமைத்துக்கொடுத்த தினமலர் நிறுவனத்தாருக்கும், ஆதரவளித்த உங்களுக்கும் நன்றிகள்.
தொடர்ந்து படித்து- படித்ததை செயல்படுத்தி ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள். 
காய்ச்சல், டெங்கு, டைபாய்டு, மலேரியா குணமாக.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஏழை-பணக்காரர், கிராமம்-நகரம், குடிசை-மாடி வீடு என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லாவற்றையும் “வெள்ளம்” என்ற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தெருவில் நிறுத்தி இருக்கும் மாமழை, சாக்கடை-நல்லநீர் என்ற வித்தியாசமும் இல்லாமல் செய்திருக்கிறது.
அரசும், அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் , பொதுமக்களும் பாதிக்கப்பட்டோரை வெள்ளத்தில் இருந்து மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
இப்போதைய நேரடி பாதிப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல வெள்ளம் வடிந்தபின் வரப்போகும் ஆரோக்கிய பிரச்சினைகளும்.
எங்கும் நிறைந்திருக்கும் சாக்கடை கலந்த நீர் ஆங்காங்கு தேங்கி கொசுக்களின் சொர்க்கமாய் மாறிவிடும். கொசுக்கள் மிகவும் ஆனந்தமாக மலேரியா முதல்- டெங்கு வரை நோய்களை பரப்பும்.
இந்த நேரத்தில் பொதுமக்கள் கூடுதல் விழிப்புடனும், அக்கறையுடனும் இருக்க வேண்டும். தேங்கி இருக்கும் நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தேங்காய் சிரட்டை முதல், விளையாட்டு பொம்மைகள், டயர்கள் என எங்கே சிறிதளவு நீர் தேங்கி இருந்தாலும், அதனை அலட்சியம் செய்யாமல் வெளியேற்ற வேண்டும்.
காய்ச்சல் வருவது போல தோன்றினால் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் இருந்தால் நிலவேம்பு கஷாயம் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை என ஒரு நாளில் நான்கு முறையும், விட்டு விட்டு காய்ச்சல் இருந்தால் பப்பாளி இலை சாறு 2 டீ ஸ்பூன் மூன்று நாளைக்கு வெறும் வயிற்றில் காலை உட்கொள்ள, சாதாரண காய்ச்சல் முதல், உயிர் கொல்லும் மலேரியா, டைபாய்டு, டெங்கு போன்ற காய்ச்சல்கள் கூட குணமாகும்.
கவனம் ஆரோக்கியமே முதல் மூலதனம்...
வாழ்க வளமுடன்.
வெண் புள்ளி (Leukoderma)
* * * * * * * * * * * * * * * * * * * * *
தன்னுடைய தாய் தன்னுடைய சாப்பாட்டு தட்டை கழுவி வீட்டிற்கு வெளியே வைத்ததை பார்த்த மகன் (குடும்பத்தில் மற்ற அனைவரின் சாப்பாட்டு தட்டுகளும் வீட்டிற்கு உள்ளே வைக்கப்படும்) மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்.
பெற்ற தாயே இந்த ஒரு மகனை மட்டும் வேறுபடுத்தி, ஒதுக்கி வைக்க காரணம் என்ன தெரியுமா?? லூக்கோடெர்மா என்று சொல்லக்கூடிய வெண்புள்ளி, வெண்குட்டம், வெண்படை எனவும், ஆங்கிலத்தில் "மெலனின் நிறமி குறைபாடு"
இதற்கு இது யாரிடமிருந்தும் யாருக்கும் தொற்றாது. பரம்பரை பாதிப்பும் கிடையாது. அதனால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அதைப் பற்றி இங்கு மக்களிடையே பரவியுள்ள உண்மைக்குப் புறம்பான வதந்திகள் தான் அதிகம். வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்கள் உலக அளவில் 2 சதவிகித மக்களும், இந்தியாவில் 4 சதவிகித மக்களும் என தகவல்கள் கூறுகின்றன.
மனித மனங்களை பெரிய அளவில் தாக்கும் ஒரு சில வியாதிகளில் மிக முக்கியமானது வெண் புள்ளி (leukoderma). நித்ய கண்டம், பூரண ஆயுள் என்பார்கள், அதுபோல மரணபயமில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் ஒருவித மன அழுத்தத்தை இந்த வியாதி உருவாக்கி தினசரி மனத்தால் மரணத்தை சந்திக்க கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.
நமது உடலில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால் தான் வெண்புள்ளிகள் உருவாகிறது. இத்தகைய குறைபாடுகளுக்கு முக்கிய காரணம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, எதிர் வினையை ஏற்படுத்துவதால், நிறப்பொருள் அணுக்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றன. அத்துடன் நரம்பு மண்டலத்தின் தூண்டுதல் இயல்பு நிலைக்கு மாறாக குறையுடன் செயற்பட்டாலும், நிறப்பொருள் அணுக்கள் தம்முடைய பணியைச் சரிவரச் செய்யாது.
இந்த நோய் வருவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தைராய்ட் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயற்பாடுகள், நீரிழிவு, நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகள், ஊட்டச்சத்துக் குறைவு, வைட்டமின் குறைபாடு ஆகியவைகளால் இவை உருவாகும்.
கதிரியக்க வலைக்குள் கட்டுப்பட்டு கிடக்கும் வாழ்க்கை முறையும், அசைவ உணவுகளுடன் பால் பொருள் உணவுகளை சேர்த்து சாப்பிடுவதும் மிக முக்கிய காரணங்கள். தோல் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் அதிகம் வருகிறது. அமீபியாஸ், குடல் நோய்கள், குடற் பூச்சிகள், இரத்தச்சோகை, டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்றவற்றின் தாக்குதலாலும் இவை ஏற்படும். இந்தக் குறைபாடு எப்போதுவேண்டுமானாலும், எந்த வயதிலும் தோன்றலாம்.
பொதுவாகவே அசைவ சாப்பாடு உடலுக்கு அத்தனை நலம் பயப்பதில்லை என்றாலும். நம் வாழ்க்கை – உணவு முறை அசைவத்திற்கு நம்மை அடிமையாக்கியே வைத்திருக்கிறது.
ஆனால் அந்த அசைவ உணவுடன், சிக்கன்-மட்டன்-மீன் போன்ற உணவுகளை சாப்பிடும் போது பால்-தயிர் போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் ஆபத்தின் அளவை குறைக்க முடியும். நம் முன்னோர்கள் நமக்கு பலவழிகளில், பலமுறை இவ்வுணவு முறைகளை அறிவுறுத்தி இருந்தாலும், நாம் அவர்களின் கூற்றுகளை புறக்கணித்ததின் விளைவே இந்நோய்.
படுப்பதற்கு முன் குழந்தைகள் பால் குடித்தால் நல்லது என்று யாரோ கிளப்பி விட்ட வதந்தியை பிடித்துக்கொண்ட நம்மூர் மக்கள், இரவில் வறுத்த-பொறித்த மீன்- இறைச்சிகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு, சற்று நேரத்திற்குள்ளாகவே பாலையும் காய்ச்சி குடிக்க கொடுப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு பதிலாக வெண்புள்ளி நோயை விருந்து வைத்து அழைப்பது போலாகும். ஒருமுறை இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகி விட்டால் அதை குணப்படுத்துவதற்கு எத்தனையோ செலவுகள் செய்து இரசாயண மருந்துகளை உட்கொண்டும் கூட, நோய் முற்றிலும் குணமாகாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுபவர்களை கண்கூடாக காண்கிறோம்.
இந்த நேரத்தில் இன்னொரு தகவலையும் பதிவு செய்தே ஆக வேண்டும். இன்றைய உலகின் பெரும்பாலான மருத்துவ கண்டுபிடிப்புகள் இராணுவ தேவைகளுக்கான ஆராய்ச்சியின் பலனே ஆகும். யுத்தகால ராணுவ உதவிக்காக ராணுவ-மருத்துவ ஆய்வு துறை கண்டுபிடித்து, பின்னாளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களே அதிகம் புழக்கத்தில் இருக்கிறது.
அந்த வகையில் இந்த வெண்புள்ளி நோயால், தினம் தினம் செத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக, மிக குறைந்த செலவில், எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல், நோய் முற்றிலும் குணமாகக் கூடிய மருந்தை நம் நாட்டு "மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்" கண்டுபிடித்திருக்கிறது. பக்கவிளைவுகளே இல்லாமல் என்ற உடன் நீங்கள் நம் பாரம்பரிய மூலிகைகளை நினைத்தால்... உங்கள் புரிதலும்- தெளிவும் முற்றிலும் சரியானது.
கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மருந்து முழுக்க முழுக்க இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஆங்கில மருந்தை நீண்ட நாள் சாப்பிட்டு வருபவர்களுக்கு அதில் இருக்கும் சில வேதிப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், மூலிகை மருத்துவத்தில் ஆரோக்கியம் மட்டுமே உங்களிடம் மீட்டு அளிக்கப்படும். இலவச இணைப்பாக வேறு எந்த பக்க விளைவுகளையும் இணைப்பதில்லை.
உடலியக்கத்தைச் சீராகச் செயற்பட வைப்பது தான் இதற்கான சரியான சிகிச்சைமுறை. இந்த நோய்க்கான சிகிச்சையை எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாத மூலிகை - இயற்கை வைத்திய முறைகளை மட்டுமே பயன்படுத்தி, நிரந்தர குணமாக்கும் சேவையை மிக குறைந்த செலவில் வழங்குகிறது எங்களின் "பீனிக்ஸ் ஹெல்த் கேர்" நிறுவனம். 
“ பீனிக்ஸ் ஹெல்த் கேர்” "PHOENIXX HEALTH CARE"
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
அக்குபஞ்சர் சிகிச்சை முறை மற்றும் பாரம்பரிய உணவு முறைகளால் மட்டுமே பக்கவிளைவுகளற்ற மருத்துவத்தை மக்களுக்கு கொடுத்து ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், தக்கவைக்கவும் முடியும் என்பதே என்னுடைய மாறாத நம்பிக்கை.
இந்த நம்பிக்கையின் அடுத்தகட்டமாக உடல்நலனில் பாதிப்படைந்தவர்களுக்கு நிரந்தர தீர்வளிக்கும் நோக்கத்துடனும் , மருந்தில்லா மருத்துவமுறைகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் எண்ணத்துடனும், உணவே மருந்து என்பதின் அவசியத்தை வலியுறுத்தும் நல்லெண்ணத்தில் சென்னை – வடபழனி, நூறடி சாலையில் அமைந்துள்ள அம்பிகா எம்பயர் ஹோட்டல் எதிரில்
“ பீனிக்ஸ் ஹெல்த் கேர்”
என்ற பெயரில் ஒரு உடல்நல பாதுகாப்பு மையத்தை திறக்க இருக்கிறோம்.
இரத்த கொதிப்பு, சர்க்கரை, தலைவலி இது போன்ற பல நாள்பட்ட ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டவர்கள் தகுந்த ஆலோசனையும், அக்குபஞ்சர் சிகிச்சையும் பெற்று நிரந்தர குணம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
மருந்தில்லா மருத்துவம். நிரந்தர ஆரோக்கியம்.
அன்புடன்,
“நலம் வாழ” ஈஸ்வரி,
அக்குபஞ்சர் சிகிச்சை நிபுணர்.
நாயுருவி இலை குழம்பு
---------------------------------------------
நாயுருவி இலை - ஒரு கைப்பிடி,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - பத்து பல்,
புளி - எலுமிச்சை அளவு,
குழம்பு மிளகாய்த்தூள் - தேவையான அளவு,
உப்பு, மஞ்சள் பொடி - தேவையான அளவு,
எண்ணெய் - தாளிக்க.
மண்சட்டியில் அரைடீஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் நாயுருவி இலையை வதக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து, விழுதை புளிக்கரைசலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு குழம்பு மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சப்பொடி சேர்த்து, மண்சட்டியில் எண்ணெய் விட்டு தாளித்து, பின் இந்த கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். மிளகாய் தூள் வாசம் போனதும் இறக்கி விடலாம்.
குழம்பு கொதிக்கும் போதே வாசம் சாப்பிட தூண்டும். சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். உண்ட உணவு இரண்டு-மூன்று மணி நேரத்துக்குள் சீராக செரிமாணம் ஆகி இருப்பதை உணராலாம்.
சரியான செரிமாணம் இல்லாதவர்கள் இந்த குழம்பை முயற்சி செய்து பாருங்கள். மிகவும் எளிதான செய்முறை கொண்ட இம்மூலிகையின் பலன்களை ஏற்கனவே
பதிவில் கூறி இருக்கிறேன்.