ஞாயிறு, 21 ஜூன், 2015

வேர்க்கடலை பர்பியில் வெள்ளை விஷம்!!

வேர்க்கடலை பர்பியில் வெள்ளை விஷம்!!
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
இராணுவத்தினர் காடு-மலைகளில் நீண்டகாலம், தூரம் பயணம் செய்யும் போதும், மலைச்சிகர பயணம் மேற்கொள்வோருக்கும் மிக முக்கியமாக கொடுக்கப்படும் உணவு என்ன தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள்!! நம்மூர் வேர்க்கடலை பர்பிதான் அது.
வேர்க்கடலையை ஒரு புரத வங்கி என்று சொன்னால் மிகையாகாது. வெல்லமும் வேர்க்கடலையும் சேர்ந்த பர்பி தமக்குள்ளே ஒரு புரதக்கடலையே வைத்திருக்கிறது. மிகக்குறைந்த எடையில் பெரிய சக்தியை கொடுப்பதால் தான் ராணுவத்தினரும், மலையேற்ற பயணிகளும் அதை கொண்டுச் செல்கிறார்கள்.
வெறும் புரதம் மட்டுமல்ல, முப்பது விதமான ஊட்டச்சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன. வேர்க்கடலையில் உள்ள கொழுப்புச் சத்து உடம்புக்குத் தேவையான நல்ல கொழுப்பு. வேர்கடலையில் வைட்டமின் A, நீரில் கரையக்கூடிய வைட்டமின் B3, புரதம், லைசின் எனும் அமினோ அமிலம் உள்ளது. வேர்க்கடலை உடல் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அதிக அளவில் பாதுகாக்கும். இரத்தம் ஓட்டம் சீராக்கும். நரம்புகள் நன்றாகச் செயல்பட உதவும். வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.
நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும். புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழிக்க உதவும். பார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்கும். வைட்டமின் B3 அதிகம் இருப்பதால் மூளைக்கும், இரத்த ஒட்டத்திற்கும் நல்லது. குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியாவசியமான உணவுப் பொருள் இந்த வேர்க்கடலை.
இப்படிப்பட்ட வேர்க்கடலையை வெல்லத்தோடு சேர்த்து நம் வீடுகளில் கடலை உருண்டை, பர்பி செய்வார்கள். இதே முறையில் தான் தேங்காய், எள்ளுருண்டையும் செய்வார்கள்.
ஆனால் கடைகளில் கிடைக்கும் இந்த உருண்டை, பர்பிகளில் க்ளுகோஸ் சேர்க்கப்படுகிறது. (glucose- its chemical formula is C6,H12,O6 and this empirical formula is shared by other sugars.) உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருள் என்ற அடிப்படையில் கடைகளில் எளிதாக கிடைப்பதால் அனைவரும் வாங்குகிறோம். ஆனால் அவர்கள் சர்க்கரையை கூட்டி, வெல்லத்தை குறைத்து வெள்ளை விஷத்தை நமக்கு விற்பனை செய்கிறார்கள்.
வழக்கம் போல வாழை இலையை தொலைத்துவிட்டு, வாழை இலை மாதிரியே இருக்கும் பாலித்தீனினாலான கம்ப்யூட்டர் வாழை இலை என்றும், பருத்தித் துணியிலானான இயற்கைக்கு தீங்கு செய்யாத மஞ்சள் பைகளை தொலைத்துவிட்டு பைபர் இழைகளினாலான மஞ்சள் நிறப் பைகளையும் கொண்டு வந்து நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் வியாபாரிகள் கடைசியில் இந்த வேர்க்கடலை பர்பியையும் விட்டு வைக்கவில்லை.
கரும்பில் சாறு எடுத்து அதை காய்ச்சி வரும் கரும் பழுப்பு நிற வெல்லத்தின் வண்ணத்தை, செயற்கையான பொருட்களாலும், நிறமிகளாலும் வெளிர் மஞ்சள் கலராக்கி மக்களைக் கவர்ந்து ஏமாற்றி சந்தைப்படுத்துகிறார்கள். நாமும் அந்த வண்ணத்தை கண்டு ஏமாந்து விஷம் என்று தெரியாமல் உட்கொள்கிறோம்.
வெல்லப்பாகு காய்ச்சி அதில் வறுத்த வேர்க்கடலையை கொட்டி உருண்டை பிடித்தால் அதுவே வேர்க்கடலை உருண்டை. தட்டில் போட்டு வெட்டி எடுத்தால் அதுவே பர்பி. இத்தனை எளிய சத்துக்கள் நிறைந்த இது போன்ற உணவு வகைகளை வீட்டிலேயே செய்து கொண்டால், ஏமாற்று வியாபாரிகள் இனி வரும் காலங்களில் மாறுவார்கள் அல்லது காணமல் போவார்கள்.
கவனிக்கவும்....
இந்த வேர்க்கடலை பர்பியை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துபவர்கள் கார்ப்ரேட் கம்பெனிகள் அல்ல. நமது ஊரில், நமது தெருவில் இருக்கும் நம்மில் ஒருவர் தான் அந்த வியாபாரிகள். மக்களின் நலனை அடகு வைத்து சம்பாதிக்க நினைப்பதில் கார்ப்ரேட்-உள்ளூர் களவாணிகள் எல்லாமே ஒன்றுதான். 

உடல் மற்றும் மனதில் அதீத சோர்வா?

உடல் மற்றும் மனதில் அதீத சோர்வா?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நம்முடைய உடல் தனக்கு ஏற்படும் பாதிப்புகளை ஏதாவது ஒரு அறிகுறியாக வெளிப்படுத்தும். இது உடல்நிலை மற்றும் மனநிலை மாற்றமாகவும் இருக்கலாம்.
அதீத உடல், மனச் சோர்வு, மனநிலையில் மாற்றம், கவலையுடன் கூடிய மனஅழுத்தம், அடிக்கடி கோபப்படுதல், கவனக்குறைவு, உறக்கமின்மை, இரவில் வியர்த்தல், ஞாபக மறதி, காய்ச்சல், தலைவலி, உணவுக்குழாயில் பிரச்சனைகள் அல்லது வலி, பசியின்மை, தசைப்பிடிப்புக்கள், தசை மற்றும் மூட்டுகளில் வலி, அடிக்கடி சுவாசக்குழாயில் உண்டாகும் தொற்று, தொண்டைப்புண், நோய் எதிர்ப்பு திறன் குறைபாடுகள், கண்களைச் சுற்றி கருவளையங்கள், சுருக்கங்கள் என பலவித அறிகுறிகளாக இருக்கும்.
தற்கால வாழ்க்கை முறையில் அனைவருக்குமே மேற்சொன்ன பிரச்சினைகள் இருக்கிறது. குறைந்தபட்சம் இவற்றில் ஒரு நான்கைந்து அறிகுறிகளாவது இருக்கும்.
இப்படிப்பட்ட அறிகுறிகளை வைத்து, பாதிக்கப்பட்ட உறுப்பு எது, எதனால் அந்த உறுப்பு பாதிக்கப்பட்டது என்பதை எளிய முறையில் கண்டறிந்து, இதற்கான தீர்வையும் காணலாம்.
மருந்தில்லாமல், பக்கவிளைவுகள் இல்லாமல் நம் உண்ணும் உணவோடு, அக்குபஞ்சர் மருத்துவமுறையில் எவ்வாறு நிரந்தர தீர்வு காண முடியும் என்பதை ஒவ்வொன்றாக காணலாம்.
குறிப்பு : மேற்கூறியவற்றில் நம் உடலில் என்ன பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிய ஸ்கேன் மற்றும் இரத்த பரிசோதனை என்று எதுவுமே தேவை இல்லை. நமக்கு நாமே மருத்துவர் என்ற முறையில் நம் உடலின் மொழியை நாமே உணர முடியும்.
உங்களில் யாருக்கேனும் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் கமெண்டில் தெரிவிக்கவும். 
உள்ளுறுப்புகளின் பாதிப்பையே உடல் தன் மொழியின் மூலம் அறிகுறிகளாக வெளிப்படுத்துகிறது. அந்த அறிகுறிகளை பற்றியும், அந்த அறிகுறி தென்பட்டால் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை பற்றியும் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
ஒரு உறுப்பை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அந்த உறுப்பு நமது உடலில் அமைந்துள்ள இடம், அதன் வேலைகள் பற்றி தெரிய வேண்டும். அதன் பிறகு அதற்கு ஏற்படும் பாதிப்புகள், அந்த பாதிப்பு உடலின் மற்ற உறுப்புகளை எவ்விதம் பாதிக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதனால் நமது ஆரோக்கியத்தை பற்றிய கவனமும், உடல் மொழியை மொழிபெயர்த்து புரிந்துகொள்ளும் விபரமும் கிடைக்கும்.

முதல் அறிகுறி
கண்களை சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்.
கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் கல்லீரல் பாதித்து இருக்கிறது என்பதன் அறிகுறியே ஆகும்.
மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான். உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. மனிதனின் உடல் சீராக இயங்க தேவையான ஐநூறுக்கும் மேற்பட்ட செயல்களை செய்வதோடு மட்டுமில்லாமல், கெட்டுப் போனாலோ அல்லது அடிபட்டாலோ , மீண்டும் தன் பழைய நிலைக்கு வளர்ந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பும் கல்லீரல் மட்டுமே. மார்பு எலும்புக்கூட்டிற்குள் வயிற்றின் மேல்புறத்தின் வலது பக்கம் இரைப்பைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நீர்மம் சுரக்கும் உள்ளுறுப்பு .
கல்லீரல் மட்டும் தான் உணவை ஜீரணம் செய்வது, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுப்பது என நம் உடலின் இரசாயனத் தொழிற்சாலையாக இயங்குகிறது. கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளை ஜீரணிக்கச் செய்யும் பித்தநீரை கல்லீரல் தான் உருவாகுகிறது. கருவில் இருக்கும் குழந்தைகளின் சீரான இயக்கத்திற்குத் தேவையான இரத்தத்தை உருவாகுகிறது.
இரத்த சிவப்பணுக்களைச் சீர்செய்து இரத்ததை தூய்மைப்படுத்தும். வளர்சிதை மாற்றங்களில் கல்லீரலின் பங்கு மிக முக்கியம் வாய்ந்தது. உடலுக்கு தேவையான சக்தியை கொடுப்பதோடு நோய்த் தொற்றுக் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இரத்தம் உறைவதற்கு தேவையான பொருட்களையும், இரத்த நாளங்களுக்குள் இரத்தம் உறையாமல் இருக்க வேண்டிய பொருட்களையும் உற்பத்தி செய்கிறது. உடல் இயக்கத்திற்கு தேவையான குளுகோஸ், கார்போஹைட்ரேட் , கொழுப்புச் சத்து போன்றவைகளை தேவைக்கேற்ப சேமித்து வைப்பதோடு இரும்புச்சத்து, வைட்டமின் பி12, வைட்டமின் ஏ ஆகியவற்றையும் சேமித்து, உடல் வளர்ச்சிக்குத் தேவையான புதிய புரதச் சத்துகளையும் உருவாக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்பு கல்லீரல்.
சிறுகுடலிலிருந்து உறிஞ்சப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்பட்டு அவையாவும் உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றப்படுகிறது. மேலும் அதில் இருக்கும் நஞ்சுகளைக் கழிவுப் பொருட்களாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றுகிறது.
இவ்வளவு வேலைகளை செய்யும் கல்லீரல் எதனால் பாதிக்கப்படுகிறது???
முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், பசிக்கும் நேரத்தில் உண்ணாமல் இருப்பது, இரவு பத்துமணிக்கு மேல் அளவுக்கு அதிகமாக உணவு உண்பது, இரவு அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் சாப்பிடுபவர்கள், அடிக்கடி காபி பழக்கமுள்ளவர்கள் , மது அருந்துவது, பான்பராக் போடுவது, புகை பிடிப்பது, ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொள்வது, நீண்ட நாட்களாக வியாதிகளுக்கு மாத்திரைகளை உட்கொண்டு இருப்பது, மன அழுத்தம், மனக் கிளர்ச்சி போன்ற செயல்களால் கல்லீரல் வீக்கம் அடைகிறது. முக்கியமாக புகை, மது குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டுவதால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகிய நோய் வர வாய்ப்பு காரணமாக உள்ளது. அதிகமாக மது அருந்துபவர்களுக்கு கொழுப்பு படிந்த கல்லீரல் என கல்லீரல் சுருங்கி புற்று நோய் உண்டாக வழி வகுக்கும்.
கல்லீரல் சரியாக இயங்காத பட்சத்தில் கண்களை சுற்றி கருவளையம் தோன்றும். கண்கள் சோர்வாக காணப்படும். தொடர்ந்து , சருமத்தில் பாதிப்பு, தசைகள், மூட்டுகளில் வலி ஏற்படும்.
கல்லீரல் பாதிகக்கபட்டவர்கள் அசைவ உணவுகள், எண்ணையில் பொறிக்கப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், ஜங்க் புட், எளிதில் ஜீரணமாகாத உணவுகள், வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகள், மது, புகைப் பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறைந்தது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உப்பு, புளி குறைக்க வேண்டும், அதிக அளவு கீரைகள், பச்சை காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மண்ணீரல் கோளாறுகள் ௭ல்லாம் வந்த சுவடு தெரியாமலும், பக்கவிளைவுகள் இல்லாமலும் போகும்.
கல்லீரல் மண்ணீரல் கோளாறுகளை வராமல் தடுக்க இனி புகை ,மது, கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்ளும் முறைகளை தவிர்த்து சீரான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி மேற்கொண்டு கல்லீரல் காப்போம். கல்லீரல் உடலின் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கிய பங்கு வகிப்பதால் ஆரோக்கியமாக வாழ கல்லீரலை பாதுகாப்பது மிக முக்கியமாகும்.
நலம் வாழ வாழ்த்துகள்!
தொடர்வோம்...!!!