வியாழன், 5 செப்டம்பர், 2013

சோரியாசிஸ் (Psoriasis)


மிக எளிதில் குணமடையாத, மனிதனை மிகவும் பயமுறுத்தக் கூடிய நாட்பட்ட தோல் வியாதிகளில் இதுவும் ஒன்று. இந்த வியாதி ஏன், எதனால் வருகிறது என்று அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் நிறைய காரணங்கள் தொடர்புடையதாய் இருக்கிறன.

உணவு ஒவ்வாமை, வளர்சிதை மாற்றங்கள், சுவாசகோளாறுகள் கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகள் ஏற்படும் தொந்திரவுகள் ஆகியவற்றின் மூலம் இது வரலாம்.. மன அழுத்தம், அதிகமாக மது குடிப்பது. புகைபிடித்தல், முக்கியமாக கடல் உணவு வகைகள் (தயிருடன் மீன் சேர்த்து உண்பது), சில மருந்துவகைகளின் ஒவ்வாமை போன்ற காரணங்கள் சோரியாசிஸ் நோயை அதிகப்படுத்துகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இது தாக்க வாய்ப்பு உண்டு.

சோரியாசிஸ் யாருக்கு வேண்டுமானலும் வரலாம். இது தொற்றோ, வைரஸ், பாக்டீரியாவால் உருவாகும் நோயோ இல்லை. உயிருக்கு உடனே ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கடுமையான நோயும் இல்லை என்றாலும் உடல் அழகை பாதிப்பதால் தன்னம்பிக்கையை குறைத்து, மனச்சோர்வை உண்டு பண்ணும் என்பதில் ஐயம் இல்லை...
சாதாரணமாக மனிதனின் உடலில் தோலிலுள்ள செல்கள் சீராக வளர்ந்து நான்கு வாரங்களில் உதிர்ந்து விடும். ஆனால் இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் வெகு விரைவாக ஒரு சில நாட்களிலோ (அ) ஒரு வாரத்திலோ வளர்ந்து உதிர்ந்து விடும். அதிகப்படியான செல்களின் வளர்ச்சியே இதற்கு காரணம்..அளவுக்கு அதிகமாக உருவாகும் இந்த செல்களினால் தோல் தடிமனாகவும், சிவந்தோ (அ) வெள்ளை நிறத்திலோவும் காணப்படும். தோலின் மீதிருந்து வெண்மையான பளபளப்பான செதில்கள் மீன் செதில் போன்று உதிர ஆரம்பிக்கும்.


சிவந்த இந்த வகையான திட்டுகள் முதலில் சிறிய மற்றும் பெரிய அளவில் தோன்றும். இந்த வியாதி பெரும்பாலும் தலையில் பொடுகு போல தோன்றி அதுவே அரிப்பு, முடிகொட்டுதல் என ஆரம்பித்து பரவும்..ஆனால் இது சோரியாசிஸ் நோயின் பாதிப்பு என்று அறியாமல் பொடுகுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டு இருப்போம். மாதகணக்கில் சரியாகாமல் உடலின் மற்ற பாகங்களில் பரவ ஆரம்பித்த பின் தான் வந்து இருக்கும் நோயின் தன்மை புரிய வரும். மேலும் முழங்கைகள், முழங்கால்கள் , கணுக்கால், கைகள், பாதம் மற்றும் இடுப்பின் கீழ்பகுதி , காதுக்கு பின்புறம், அக்குள், தொடையிடுக்கு, கை, கால் மடிப்புகள் ஆகிய இடங்களிலும் தோன்றும் சோரியாசிஸ் பெரிய வட்டங்களாக ,சிவப்பு நிறத்துடன் செதில்கள் போன்று இருக்கும். இந்த நோய் தலை முதல் இனப்பெருக்க உறுப்புகள் உட்பட எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும்.

சொரிந்தால் இரத்த கசிவுடன் செதில் போல உதிர்தல், கைவிரல், கால்விரல் நகங்களில் சொத்தை, மூட்டுகளில் வலி என உடல் முழுவதிலும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துவதொடு மட்டுமில்லாமல் வெளித்தோற்றத்தையும் இது பாதிப்பதால் மற்றவர்களின் வித்தியாசமான, அருவருக்கத்தக்க பார்வைக்கு உள்ளாவதால் தீவிர மனஉளைச்சளையும் ஏற்படுத்தும். மேலும் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் தண்டுவடம் மற்றும் மூட்டுகளையும் பாதித்து ஆர்த்ரைடீஸ் (arthritis) கண்டிப்பாக வரும்.

இது மனைவி (அ) கணவன் யாருக்கு இருந்தாலும் மற்றவர்களுக்குப் பரவாது. இந்த தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதாலோ, அவர்கள் உபயோகிக்கும் பொருட்களை நாம் உபயோகிப்பதாலோ இந்த நோய் பரவாது.. ஆனால் இந்த நோய் காரணிகள் மரபணுக்களின் வழியாக கடத்தப்படுவதால் இந்த நோயின் தாக்குதலுக்குள்ளானவர்களின் வாரிசுகளுக்கு இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்...சமயங்களில் மூன்றாவது, நான்காவது தலைமுறையில் கூட இதன் பாதிப்பு வெளிப்படும். மரபு வழி காரணம் சொல்ல பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுவும் ஒரு காரணமே...

இந்த வியாதி எந்த நாட்டு மக்களையும் விட்டு வைத்ததில்லை...இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கிறது . உலகின் மொத்த மக்கள் தொகையில் 2% பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும்... இந்தியாவில் 16 மில்லியன் பேரும் , அமெரிக்காவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்வீடனின் மொத்த மக்கள் தொகையில் 3% பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன...

சோரியாசிஸ் தோல் வியாதிக்கு வெளிநாடுகளில் டாக்டர் பிஷ் அல்லது கர்ரா ரிஃபா (GURRA RUFA) என்ற மீன்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது... இந்த மீன் நிப்பிள் மீன்கள் என்றும் கங்கள் மீன்கள் என்றும் வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது... இது மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் நதிகளில் இருக்கும் மீன்களை கண்ணாடி தொட்டியில் வளர்த்து சோரியாசிஸ் நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை ஒரு தற்காலிக தீர்வை தருமே தவிர நிரந்தர தீர்வு ஆகாது... மரபணுக்களில் இருக்கும் இந்த நோய் காரணிகளை முற்றிலும் நீக்க முடியாது என்று கருத்து பரவலாக இருந்தாலும் இந்நோய் குறித்து கவலை, பயம் கொள்ளாமல் மனதை எப்போதும் அமைதியாக வைத்து கொள்ளுதல், யோகா, தியானம் மூலமாகவும் உடலின் தேவை அறிந்து உண்ணுதல் உறங்குதல் என் வாழ்ந்தால் இந்த வியாதியை பூரணமாக கட்டுப்படுத்தி நோயின் தாக்கத்திலிருந்து மீளலாம்.

மேலும் இந்த தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களுடன் சகஜமாக பழகுவதன் மூலம் அவர்களுக்கு மனோ ரீதியாக பக்கபலமாகவும், ஆறுதலாகவும் இருக்கலாம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக