வியாழன், 5 செப்டம்பர், 2013

உயர் இரத்த அழுத்தம்



உயர் இரத்த அழுத்தம் இல்லாதவர்களே இன்றைய சூழ்நிலையில் இல்லை எனும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனலாம்...

கவலையும், கோபமும் தான் மனிதனை கொல்லும் முதல் எதிரிகள்...எதற்கு எடுத்தாலும் கோபம், எரிச்சல் ஆத்திரம் தான் அனைவரின் வாழ்விலும் இப்போது நிரம்பி வழிகிறது...அமைதி என்பது கடுகளவு கூட இருப்பது இல்லை..

கோபம், அதீத வேலை பளு,எரிச்சல், ஆத்திரம், அதனால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவை உயர் இரத்த அழுத்தம் வர காரணங்கள் என்றாலும் மிக முக்கியமான காரணம் மலச்சிக்கல் தான்.. எளிதில் ஜீரணமாகாத உணவை உண்பதன் மூலம் இதயம் அதிக அளவில் வேலை செய்ய நாமே காரணமாகிறோம்..


நம் உடலுக்கு தகுந்த உணவு என்று உணர்ந்து உண்டு வந்தால் இதயத்திற்கும் ஓய்வு கொடுக்கலாம்.... மேலும், மனச்சுமை, மற்றும் வேலையை சிறிது குறைத்துக் கொண்டால் சரியாகிவிடும்...

“தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்”
இது உயர் இரத்த அழுத்தம் உடையவர்களுக்கும், அதிகமாக கோபப்பட்டு உயர் இரத்த அழுத்தம் வர வரவழைத்துக் கொள்ளப் போகிறவர்களுக்கும் அன்றே திருவள்ளுவர் சொல்லி வைத்து இருக்கிறார்....

ஆரம்ப காலங்களில் தோன்றும் சிறு சிறு வியாதிகளான தலைவலி, மயக்கம், மங்கிய கண்பார்வை, குமட்டல், வாந்தி, தைராய்டு, சிறுநீரகப்பை கோளாறுகள், சர்க்கரை, தொப்பை (Obesity), சுவாசகோளாறுகள், நெஞ்சு வலி எனும் இந்த வியாதிகளே சில நேரங்களில் உயர் இரத்த அழுத்தம் வரவும், கூடவும் காரணமாகிறது...

ஆரம்ப நிலையிலே இதற்கான மூல காரணம் என்ன எந்த உறுப்பு பாதித்து இருக்கிறது என்று ஆராய்ந்து சரி செய்யாவிட்டால் இப்படிப்பட்ட நாட்பட்ட... உயர் இரத்த அழுத்தமே…..கீழ்க்கண்ட மிகப்பெரிய வியாதிகளை உருவாக்கி ஒரு மனிதனை தன்னிலை இழக்கச் செய்து வாழ்வை முடக்கச் செய்யும் காரணிகள்

.... நெஞ்சுவலி, இதயம் செயலிழப்பு, பக்கவாதம், வலிப்பு நோய்கள், சிறுநீரக செயலிழப்பு, படிப்படியாக கண்பார்வை இழத்தல், நடக்கவே முடியாத அளவிற்கு கால்களில் நிரந்தர வலி....இப்படி அடுக்கி கொண்டே போகலாம்......நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம் இதயத்தையும், இரத்த குழாய்களையும் அதிக அளவில் பாதித்து அதன் செயல்பாட்டை முற்றிலும் நசுக்கும்.

ஆனால் இப்படிப்பட்ட உயர் இரத்த அழுத்தத்திற்கு தீர்வும் உண்டு..அதிகபடியான உடல் எடை இருந்தால் நாமே வீட்டிலேயே சரி பண்ணிகொள்ளலாம்......
உணவை கொஞ்சம்..கொஞ்சமாக குறைத்து, அதிகபடியான கலோரிகளை எரிக்க 3௦ நிமிடங்கள் நடைபயிற்சி செய்தும் குறைக்கலாம்...
இதனால் அதிகபடியான கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு நல்ல கொழுப்பு அதிகமாகிறது....
நம் உடல் ஒவ்வொரு நொடியும் லட்சக்கணக்கான உயிரணுக்களை களைந்தும், உற்பத்தியும் செய்து கொண்டே இருக்கிறது... மேலும் தீர்வு என்று பார்த்தால் திரும்பவும் புகைத்தல், குடி இரண்டையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
முறையான உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள், உடல் எடை கூடாமல் சீராக வைத்துக் கொள்ளுவது, எதற்கு எடுத்தாலும் வரும் கோபம், மனஉளைச்சல் தவிர்த்து ...அமைதியான சூழ்நிலையில் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து கொண்டால் எந்த வியாதியுமே நம்மிடம் அண்டாது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக