ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ஆண் மலடு ( Infertility in Men )

பொதுவாக கருத்தரிக்காத பெண்ணையும், ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியாத ஆணையும் மலடு என்று குறிப்பிடுகிறார்கள்.

திருமணம் முடித்து ஒரு சில வருடங்களுக்கு பின்பு ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அந்த பெண்ணிற்கு பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் அப்போது தான் ஒரு ஆண் தன் மலட்டு தன்மையை உணர ஆரம்பிக்கிறான்.
பெண்ணின் கருமுட்டை வளர்ச்சியடையாமல் மலட்டுத்தன்மை உண்டாவது போல , குறைவான விந்து எண்ணிக்கை மற்றும் வீரியமற்ற விந்தணுக்களால் ஒரு ஆண் தந்தையாக முடியாமல் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

இதனால் அவர்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவதோடு குழந்தையின்மையும் உண்டாகிறது. குடும்பத்தில் குழப்பமும் கூடுகிறது.
ஆண்களுக்கு மலட்டு தன்மை வர பல காரணங்கள் இருந்தாலும் சில பல காரணங்கள் இன்னும் அதிகமான பாதிப்பை உண்டு பண்ணுகின்றன.



லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. மேலும் எண்டோகிரைன், வாஸ்குலர் நரம்பு, ஆண்களுக்கு விபத்தில் டெஸ்டிஸ்(விதைப்பை) காயம் (அ) அழுத்தம் ஏற்பட்டால், பொன்னுக்கு வீங்கி காரணமாக உண்டாகும் வைரஸ் தொற்று, மன அழுத்தம், பரம்பரை மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளே ஆண்களின் மலட்டு தன்மைக்கு காரணமாகி அவர்கள் நிம்மதியை தொலைத்து விடும்.

இதை சரிசெய்ய வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைகிறது. சீரான உடற்பயிற்சி, சூடான நீரில் தினமும் குளிக்காமல் இருத்தல், காபி, புகை மற்றும் மது பழக்கத்தை அடியோடு கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் மிகுந்த பலன் அளிக்கும்.
யோகா, தியானம் போன்ற பழக்கங்களை அனுசரித்து வந்தால் விந்துவின் வீரியமும், எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

ஆண், பெண் மலட்டு தன்மை என்பது ஒரு குறைபாடு தானே ஒழிய நோயே அல்ல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக