ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வெர்டிகோ (Vertigo)



அடிக்கடி வரும் தொடர் தலைச்சுற்றலே வெர்டிகோ எனப்படும்.

அடிக்கடி மயக்கம், தலைவலி, வேர்வை, தலைசுற்றல், எங்கோ பறப்பது போன்ற உணர்வு, குமட்டல், கண்கள் மங்கலாகவும் (அ) தெளிவில்லாத அசாதாரண கண் அசைவு, பேசும்போது நாக்குழறல், காது மந்தம் மற்றும் எப்போதும் ஒரு இரைச்சல், கை, கால்களில் பலவீனம், உட்கார்ந்தோ அல்லது நடந்து கொண்டிருக்கும் போதோ தலைசுற்றல், படுக்கையில் இருந்து எழுந்து நிற்கும் போது அறையே சுற்றுவது போல் தலைசுற்றல் போன்றவையே இந்நோயின் அறிகுறிகளாகும். இவர்களுக்கு குறிப்பாக கார், படகு ஓட்டும்போது தலை சுற்றல் வரும்.

இந்நோயின் பாதிப்பு மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும். கண்டுக் கொள்ளதா வெர்டிகோ முடிவில் இருதய கோளாறில் நிறுத்தும். மேலும் இது முதுகுத்தணடுவடம் அதைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி என அடுத்தடுத்து ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படைய ஆரம்பிக்கும்.

காபி, டீ , புகை, மது அறவே கூடாது. கொழுப்புசத்து நிறைந்த அசைவ உணவுகள், இனிப்பு, உப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கீழே விழுந்து அடிபடுவதை தவிர்க்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் நரம்பு கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளுவது மிக்க நலம்.

நம் உடலில் தோன்றும் பெரும்பாலான வியாதிகளுக்கு மலசிக்கல் தான் காரணமாக அமைகிறது...இந்த வியாதிக்கும் முக்கிய காரணமே மலசிக்கல் தான்.இதுவே நாளடைவில் காதுகளின் உட்புற பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தலைசுற்றல் வந்தவுடன் உடனே அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டால் குறைய ஆரம்பிக்கும்.

நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள், இளநீர், மோர் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்நோயால் பாதிக்கப் பட்டவர்கள் நெல்லிக்காய், இஞ்சி, தேன், சீரகம், சுக்கு, கொத்தமல்லி, கறிவேப்பலை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே இந்த நோயின் பிடியிலிருந்து வெளிவரலாம். இந்நோய்க்கு உணவு மட்டுமே மருந்தாக முடியும்..

ஒரு சிலருக்கு உட்கார்ந்து எழுந்திருக்கும் போது சில நொடிகள் தலை சுற்றி பின் சரியாகும். அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த தலைசுற்றல் சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவதால், ரத்தக் கொதிப்பு அதிகமானாலும், குறைந்தாலும், சர்க்கரையின் அளவு கூடினாலும் குறைந்தாலும், தூக்கத்தின் அளவு குறைந்தாலும், கூடினாலும் தலைசுற்றல் வரும். தலைசுற்றல் வருவதற்கான மூலக் காரணங்களை கண்டுப்பிடித்து தீர்வு காணலாம்.

அக்குபஞ்சரில் நிரந்தர தீர்வு இந்த நோய்க்கு உண்டு என்று உறுதியுடன் கூறலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக