புதன், 14 ஜனவரி, 2015

தீராத தலைவலியா- விரல் நுனியில் ஆரோக்கியம்

தீராத தலைவலியா- விரல் நுனியில் ஆரோக்கியம் 
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
தலைவலி வந்துவிட்டால் உடனே கைவசம் இருக்கும் உடலுக்கு கேடான "பெய்ன்கில்லர்' போடும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு உண்டு. இந்த மாத்திரைகள் ஐம்பது வயதைத் தாண்டியதும், நரம்புத் தளர்ச்சியில் கொண்டு போய் விட்டு விடும் என்பதை யாருமே உணருவதில்லை. உணரும்போது காலங்கள் கடந்து இருக்கும்.

உடலுக்கு தேவையான ஓய்வு, தூக்கம் இல்லாதது, சட்டென்று உண்டாகும் மனஅழுத்தம், எரிச்சல், சோர்வு போன்றவையே தலைவலிக்கு முக்கிய காரணங்கள்.

தலைவலி வந்துவிட்டால் உடனே எந்த வேலை இருந்தாலும் நிறுத்திவிட்டு, சிறிது நேரம் திறந்த வெளியில் இயற்கை காற்றை சுவாசித்தால் தலைவலிக்கு உடனே நிவராணம் கிடைக்கும். யோகா பயிற்சியும் நல்ல பலனை தரும்.

அக்குபஞ்சரில் தலைவலி தீர எளிய வழி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தலையின் முன்பக்கம், பின்பக்கம் விடாத (அ) அடிக்கடி தலைவலி, ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) அவதிப்படுபவர்களா? கவலையே வேண்டாம். உங்கள் விரல் நுனியிலையே ஆரோக்கியம் இருக்கிறது. கை கட்டை விரலின் மேல்பகுதியின் முன்பக்கம், பின்பக்கம் என கட்டைவிரலை சுற்றி (படத்தில் காட்டியுள்ளபடி) ஒரு சில நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து வந்தால் நாட்பட்ட தீராத தலைவலிகள் எல்லாம் தீர்ந்து போகும். அக்குபஞ்சர் சிகிச்சை முறை, எந்தவிதமான பாதிப்பும், பக்கவிளைவுகளும் இல்லாத எளிய முறை. முயற்சி செய்து தான் பாருங்களேன். அக்குபஞ்சர் அறிவோம்Aaranyam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக