புதன், 21 ஆகஸ்ட், 2013

தண்ணீர்!!!!

ஒருவரின் உடல் ஆரோக்கியதிற்கு குடிநீருக்கே முதற்பங்கு இருக்கிறது. 5௦% நோய்கள் உண்டாக காரணமே குறைந்த அளவு (தாகம் எடுத்தால் கூட குடிக்காமல்) தண்ணீர் குடிப்பதே ஆகும்.

எப்போதும் தண்ணீரை அமர்ந்தே குடிக்க வேண்டும்..நின்று குடித்தால் கணுக்கால் வலி உண்டாகும். இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் தண்ணீர் நேரே குடற்பாதையில் இழுக்கப்பட்டு தசைப்பிடிப்பு ஏற்படும்
தண்ணீர் எந்த கலப்படமும் இல்லாமல் இருந்தால் தான் மட்டுமே அது அனைத்து செல்களுக்கும் “ஆஸ்மோஸிஸ்” (Osmosis) என்ற முறையில் சென்றடையும்.

உணவு உண்பதற்கு முன்பும் , உண்ட பின்னும் ½ மணிநேரம் இடைவெளி விட்டு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்ணும் போதும் இடையில் தண்ணீர் குடிக்க கூடாது. அப்போது தான் உணவு சரியான முறையில் ஜீரணமாகும். ஏனெனில் தண்ணீர் ஜீரணத்திற்கு தேவையான அமிலங்களை நீர்த்து போக செய்து விடும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக