வெள்ளி, 24 ஜூன், 2016

கரிசாலை கூந்தல் தைலம்
* * * * * * * * * * * * * * * * * * * * * *
இளைய தலைமுறையினர் முதல் அனைத்து வயதினரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை முடி நரைப்பது, முடி கொட்டுவது போன்றவை. வெகு சாதாரணமாக வசவு வார்த்தையாகவும், எதற்கும் உதவாததாகவும் சித்தரிக்கப்பட்டாலும் உண்மையிலேயே இது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. இள வயதில் வழுக்கை ஏற்பட்டவர்களின் மன உளைச்சல் சொல்லி மாளாது.
தலையில் முடி இருந்து, அது கருப்பாகவும் இருந்து அதற்கு கலரிங் செய்பவர்களை விட நூறு மடங்கு அதிகமானோர் நரைத்த / செம்பட்டையான முடியை கருப்பாக்க நேரத்தையும்-பணத்தையும் விரயம் செய்கிறார்கள்.
எண்ணெய்யில் பொறித்த உணவு வகைகள், சாலையோர கடைகளில் சாயம் கலந்த இரசாயன உணவுப்பொருட்களை உண்ணுதல், எதற்கெடுத்தாலும் பக்கவிளைவுகள் நிறைந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி உட்கொள்ளுதல் இப்படி உணவுமுறையும், பழக்க வழக்கங்களும் மாறியதன் விளைவு முடி கொட்டுதல், வழுக்கை, புழுவெட்டு, இளநரை.
சராசரியாக இதய-சிறுநீரக நோய்களுக்கு மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகையை விட இந்த முடி பிரச்சினைகளுக்காக செலவிடப்படும் தொகை பன்மடங்கு அதிகம் என்பது அனுபவ உண்மை. ஆம்...ஒருவர் ஒரு சிறிய நோய்க்காக ஒரு லட்சம் செலவிடும் நேரத்தில், பத்தாயிரம் பேர் முடி பிரச்சினைக்காக நூறு ரூபாய் செலவிடுகிறார்கள். ஆக மொத்தம் 10000X100 = 1000000 ரூபாய்.
இதனால்தான் உள்நாட்டு நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை போட்டி போட்டுக்கொண்டு ஷாம்பூ விற்கவும், வண்ணச்சாயம் விற்கவும் இறங்கி இருக்கிறார்கள்.
டி வி விளம்பரங்கள் காட்சிப்படுத்தும் இரசாயன மருந்துகளில் “நோ அம்மோனியா” என்று சொல்லப்பட்டாலும், இது முற்றிலும் இயற்கையானது என்று பறைசாற்றப்பட்டாலும் அதில் இருக்கும் வேதிப்பொருட்கள் தலை முடி வழியாக ஊடுருவி மூளை செயல்திறன் குறைவு, கண்பார்வை குறைபாடு , தோலில் ஒவ்வாமை (அலர்ஜி), கேன்சர், கட்டிகள் என பலவிதமான பிரச்சினைகளை கொடுப்பதை கண்கூடாக உணரலாம்.
எல்லாவற்றிற்கும் இயற்கை முறையிலேயே பரிகாரம் கண்ட நம் முன்னோர்கள் இதையும் விட்டுவிடவில்லை.
செம்பட்டை முடிகள் கருமையாகவும், முடி உதிர்தலை தடுக்கவும், முடி அடர்ந்து வளரவும் வெவ்வேறு இயற்கை மூலிகைகளை கலந்து கூந்தல் தைலம் உருவாக்கி இருக்கிறார்கள்.
நம் முன்னோர்களின் வழிமுறையில் சற்றும் மாறாமல் ஒரு மாதத்திற்குள் கருமையான அடர்ந்த முடி வளர்ச்சியுடன், முடி உதிராமல் தடுத்து, வழுக்கை தலையிலும் முடி நன்கு வளர 32மூலிகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட தைலம் “கரிசாலை தைலம்”. உள்ளுக்கும் உட்கொள்ள மூலிகைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரே பேக்கிங்கில் தலைமுடிக்கான வெளி உபயோகத் தைலமும், உட்கொள்ள கூடிய மூலிகைகளும் இருப்பது இதன் சிறப்பு. இவைகள் வெறும் முடிக்கான போஷாக்கையும், கருமையையும், அடர்த்தியையும் மட்டும் தருவதில்லை. அதோடு சிரசில் ஏற்படும் பொடுகு, சொறி-சிரங்கு, அரிப்பு, தடிப்பு, கட்டிகள், நீர்கோர்வை, தலைப்பாரம் போன்ற 96 வகையான நோய்களுக்கும் நிவாரணமாகக் கூடும் இந்த தைலம்.
இந்த தைலத்தை நேரிலோ- கொரியர் மூலமாகவோ பெற்றுக்கொள்ளலாம். குறைந்த அளவிலான தயாரிப்பு என்பதால் தனி நபர் உபயோகத்திற்கு 100 மில்லி பாட்டிகளில் மட்டுமே கிடைக்கும்.. விலை ரூபாய் 200 /- மட்டும் (கொரியர் செலவு தனி )
தைலத்தை பெற அலைபேசி எண் +91 99401 75326 (அ) easwarisherbs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
V.Easwari
STATE BANK OF INDIA
KANDIGAI BRANCH,
AC.NO:35387725926
CIF NO:88797451281
IFSC:SBIN0018365
MICR:600002284.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக