சனி, 5 ஏப்ரல், 2014

உடலின் சூட்சுமங்கள் - உணர்ந்து சொன்ன சித்தர்கள்...!!!

நம் சித்தர்கள் நம் உடலின் நரம்புகள், அவற்றின் இயக்கங்கள், சுரப்பிகள் (Glands), அவற்றில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் என எல்லாவற்றையும் பற்றி மிக விரிவாக, எவ்வித தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே கண்டறிந்து நமக்கு அருளிச்சென்று இருக்கிறார்கள்...

ஒரு நாளில் ஒரு மனிதன் 21,600 முறை சுவாசிக்கிறான் என்றும், அவனது மூளையை 1000 கோடி நரம்புகள் இயக்குகின்றன என்றும் அவர்கள் அன்றே அறிந்து இருக்கிறார்கள்... மேலும், மூளையில் இருக்கும் திசுக்களின் எண்ணிக்கை 1300கோடி , உடலில் இருக்கும் எலும்புகள் 216 , உடம்பின் மொத்த இரத்த குழாய்கள் 700, 555 தசைகள், 72 ஆயிரம் நரம்புகள் ஆகியவை இருக்கிறதென்றும் எவ்வித மருத்துவ உபகரணங்களோ, நவீன கருவிகளோ இன்றி அவர்கள் கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள்...

மனித உடலில் இயங்கும் பத்து வகையான காற்றின் செயல்கள் , நரம்பு மண்டலத்தின் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் இடகலை, பிங்கலை, தண்டுவடம் பற்றிய அரிய தகவல்கள், அணுக்கள், திசுக்கள், இரத்தத்தின் வேறுபாடுகள், நிறம், குணம் என பல்வேறு மருத்துவ அற்புத தகவல்களை தெள்ள தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்...


அன்று அவர்கள் தங்களின் ஞானத்தால் உணர்ந்து சொல்லிச் சென்றவைகள் எல்லாம்.. இன்றும் நவீன விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ உலகிற்கும் பெரும் சவாலாகவே இருக்கிறது... எந்த வியாதி வந்தாலும் அதற்கு தகுந்த உணவு பழக்கத்தை கையாண்டாலே போதும்.... உடல் தனக்குத்தானே எந்த வியாதியையும் சரி செய்து கொள்ளும் என்று சித்தர்கள் மட்டுமே நமக்கு உணர்த்திச் சென்ற உண்மைகள்.
உடலினை பற்றி நவீன விஞ்ஞானம் கூட புரிந்துகொள்ள முடியாத அரிய தகவல்களை நம் சித்தர்கள் விளக்கி இருப்பது இன்றும் விளங்கிக் கொள்ள முடியாத அதிசயங்கள்.
சித்தர்கள் சொன்னதை இன்றும் கூட வியப்பாய் பார்க்கும் நவீன மருத்துவம் தரும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு பக்கவிளைவுகளையும், உடல் உபாதைகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்...
நோயால் பாதிக்கப்பட்ட உடன் பயமும் மன உளைச்சலும் சேர்த்துக்கொண்டு சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற அவசர கோலத்தில் நாம் உட்கொள்ளும் இரசாயன மருந்து மாத்திரைகளால் உடல் சோர்ந்து சீக்கிரமே எதிர்ப்பு சக்தியை இழந்து வலுவிழந்து போகிறது...
உடல், உயிர், மனம் அனைத்தின் இரகசியங்களையும், சூட்சமங்களையும் புரிந்து வாழ்ந்தால் வாழும் காலம் ஆரோக்கியம் என்பதில் துளியும் ஐயம் இல்லை...

1 கருத்து: