சனி, 5 ஏப்ரல், 2014

வல்லாரை

வல்லாரை னினிலை மருவுகற்ப மாய்க்கொள் 
வெல்லாப் பணிகளு மிலாமையா மெய்யினில்
அகத்தியர் குணபாடம். 


உடலை நோயின்றி காக்கும் காயகல்ப மூலிகைகள் பலவுண்டு. அனைத்தும் அளவில்லா மருத்துவ குணங்களை தன்னுள்ளே கொண்டுள்ளது.
ஆனால் வல்லாரை மட்டும் பிரம்ம மூலிகை, சரஸ்வதி மூலிகை என்றும் பெருமையுடன் அழைக்கப்படுகிறது சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, நார்ச்சத்து என அதிக அளவில் முக்கிய சத்துக் களையும், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளையும் உள்ளடைக்கிய ஒரே அரியவகை மூலிகை வல்லாரையே.

தூக்கத்துக்கு மாத்திரை, இரத்த அழுத்தத்திற்கு மாத்திரை, நீரிழிவுக்கு மாத்திரை, டென்ஷனுக்கு மாத்திரை, தலைவலிக்கு மாத்திரை, சைனஸ்க்கு மாத்திரை என எதற்கு எடுத்தாலும் மாத்திரை மாத்திரை.. மாத்திரை.... இப்படியே மாத்திரையை விழுங்கி கொண்டு வந்தால் கடைசியில் நமக்கு மிஞ்சுவது நரம்பு தளர்ச்சி தான்.
அறியாமையின் காரணமாகவோ, தவறான வழிகாட்டுதலினாலோ தொடர்ந்து மாத்திரைகளை உட்கொண்டு நரம்புத்தளர்ச்சியால் அவதிப்படுவோருக்கு இயற்கை தரும் அற்புத மூலிகை வல்லாரை. பொதுவாக ஞாபக சக்திக்கு வல்லாரை மிகவும் உதவும் என்பதை ஓரளவுக்கு எல்லோருமே அறிவர். ஆனால் வெறும் ஞாபக சக்திக்காக மட்டுமில்லாமல் இது பல அறிய செயல்களை நம் உடம்பில் நிகழ்த்துகிறது...

இரத்ததை சுத்திகரிக்கும், ஆறாத புண்கள், தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி, உடற்சோர்வு, சீதபேதி, அஜீரணக் கோளாறு, எக்சிமா, பால்வினை நோய்கள், வெண்குஷ்டம், சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம், குடல் புண், குடல்நோய், வாய்ப்புண், வாய் நாற்றம், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, யானைக்கால், காய்ச்சல் போன்ற பல வியாதிகளைப் போக்கும் ஆற்றல் பெற்றது.

"பத்து வல்லாரை இலைகளை எடுத்து ஐந்து மிளகு சேர்த்து" அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூன்று மாதத்தில் மூளை திசுக்கள் வலுப்பெற்று, நரம்பு தளர்ச்சியை நீக்கி, தளர்வுற்ற தேகத்தை இறுகிப் பலம் பெற செய்யும்.

காசநோய், யானைக்கால், தொழுநோய், வெண்குஷ்டம் போன்ற கொடிய வியாதிகளுக்கும் வல்லாரையே தலைசிறந்த மூலிகை. ஒரே மூலிகையில் மூன்று சுவைகள்... முக்கிய சத்துக்களும் உள்ளடக்கி அது எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தி, ஞாபக சக்தியையும் வளர்க்குமென்றால் இதனை பிரம்ம மூலிகை, சரஸ்வதி மூலிகை என்று சொல்வது சாலப்பொருத்தமான ஒன்றன்றோ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக