சனி, 5 ஏப்ரல், 2014

பாம்பின் விஷம்

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி மட்டுமல்ல.... நாமே நேரில் பார்த்து பழகிய மொழியும் கூட.... பாம்புகளில் பல வகைகள் உண்டு என்றாலும் எல்லா பாம்பும் விஷமுடையது அல்ல... ஆனால் பாம்பு என்றாலே விஷம்.. அந்த விஷம் நிச்சயம் மரணத்தை பரிசளிக்கும் என்பது நம் மனதில் ஆழமாய் பதிந்த காரணத்தால் பாம்பை கண்டால் நடுங்குகிறோம்...

தேள், பூரான், பூச்சிகள் என்று பெரும்பாலான பூச்சிகள் கூட விஷத்தன்மை உடையது என்றாலும் கூட பாம்பின் விஷம் மட்டும் மரணத்தை உடனே பரிசளிப்பது ஏன்..?? தொடர்ந்து படித்தால் தெரியும்...


பாம்பின் விஷம், செரிந்த புரோட்டீன்களினால் (highly toxin protein) ஆன பொருளாகும். இது நியூக்ரோ டாக்ஸிஸ் என்று அழைக்கப்படுகின்றது. புரோட்டீன் மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் நம் உடல் அமைப்பைப் பொருத்தவரை புரோட்டீன், வைட்டமின், மற்றும் தாதுப் பெருள்கள் யாவும் உணவுப்பொருட்களாக நம் வாயின் மூலம் எச்சிலோடு கரைந்து, வயிற்றில் செரிமானம் செய்யப்பட்டு, நம் உடலுக்குத் தேவையான புரோட்டீனாக மாற்றப்பட்டு (metabolism) தேவையற்ற கழிவை எல்லாம் அகற்றிவிட்டு பின் தான் அது இரத்ததில் கலக்கும். ஆனால் பாம்பு கடித்தால் விஷம் (highly protein) இரத்தத்தில் நேரடியாக கலப்பதால் அந்த இரத்தம் உடனே திரிந்து கெட்டிப்பட்டு விடுகிறது. இரத்த ஓட்டம் தடைப்பட்டு மரணம் உண்டாகிறது. நம் உடலின் இயல்பிற்கு எதிராக இருப்பதனாலும், நம் உடலின் திசுக்களும், கல்லீரலும், சிறுநீரகங்களும், நரம்பு மண்டலங்களும் பாதிப்படைந்து மரணத்திற்கு வழி வகுக்கின்றது.

பாம்பின் பற்கள் ஒரு டியூப் போல இருக்கிறது.. அதாவது நமக்கு மருத்துவ மனையில் மருந்து ஏற்றும் ஊசியை போல... பாம்பு மனிதனையோ. மற்ற விலங்குகளையோ கடிக்கும் போது பாம்பின் விஷப்பையில் சேமிக்கப்பட்ட விஷம் இந்த பற்குழாய் வழியாக கடிக்கப்பட்ட உயிரினத்தின் இரத்த ஓட்டத்தில் நேரடியாக கலக்கிறது... அப்படி கலந்த உடன் அந்த செறிவூட்டப்பட்ட புரோட்டீன் விஷமானது இரத்தத்தை கெட்டித்து , இரத்தத்தின் இயல்பான ஓட்டத்தை தடை செய்து , முடிவில் மரணம் நிகழ்கிறது....
பாம்பின் விஷம் இரத்தத்தில் கலந்த உடன் எப்படி கெட்டிப்படுகிறது என்பதை கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி படக்காட்சியாக காணலாம்...
http://www.manithan.com/news/20140215109832

"கண்டது பாம்பு... கடிச்சது கார முள்ளு" என்று கிராமங்களில் ஒரு சொல் வழக்கு உண்டு... அதாவது, ஒரு முள்ளு குத்திய நேரத்தில் அங்கே இருந்து ஒரு பாம்பு ஓடினால் கூட "நம்மை பாம்பு கடித்து விட்டது" என்று பயந்து அந்த பயத்திலேயே உயிர் விட்ட சம்பவங்களும் உண்டு. சில பாம்புகள் விஷத்தன்மை இல்லாதவை.. ஆனாலும் அது கடித்தால் கூட அந்த பயத்தில் மரணத்தை தழுவியவர்களும் உண்டு...
ஆகவே ஒரு வேளை பாம்பு கடிக்க நேர்ந்தால் பயத்தை தவிர்த்து , கடித்த இடத்திற்கு மேலாகவும், இன்னும் சற்று மேலாகவும் என இரண்டு இடங்களில் கயிற்றால் இறுக கட்டி , கடிபட்ட பகுதியில் இருந்து இரத்தம் மற்ற இடங்களுக்கு பாய்வதை தடுப்பது முதல் உதவியாகும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக