சனி, 5 ஏப்ரல், 2014

புகை நமக்கு பகை – (சிறுநீரகங்கள், மற்றும் சிறு நீர்ப்பை புற்று)

நம் உடல் உறுப்புகள் உடலின் இயக்கத்திற்கான வேலைகளை தனித்தனியாக செய்தாலும் கூட அவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டே இயங்குகின்றன... உடல் உறுப்புகளின் பெயர்கள் வேறுவேறாக இருந்தாலும் அவைகள் யாவும் இணைந்து உயிர் காக்கும் கூட்டுமுயற்சியில் தான் இயங்குகின்றன. ஒரு உறுப்பு செயலிழந்தால் அது தொடர்பான மற்ற உறுப்புகளும்..பின் மற்ற உறுப்புகளும் செயலிழக்க தொடங்கும். இதுதான் உடலின் அடிப்படை தத்துவம்.

சிகரெட் அட்டையில் எழுதி இருக்கும் தார், நிக்கோடின், மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப்பொருட்கள் சுவாச மண்டலத்தின் வழியாக நுரையீரலில் படிந்து கேன்சர் உள்ளிட்ட பல வியாதிகளை அள்ளிக்கொடுத்தாலும்.. அவைகளோடு மட்டும் விட்டு விடாமல் இன்னும் பற்பல சிறப்பு பரிசுகளையும் போனஸாக தருகிறது....
இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காச நோய், பக்கவாதம் (ஸ்ட்ரோக்) உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற வியாதிகளுடன் இரத்தப்புற்று (Blood Cancer) , நுரையீரல் புற்று (Lung Cancer), கழுத்து புற்று (Neck Cancer), சிறுநீரக மற்றும் சிறு நீர்ப்பை புற்று (Kidney & Urinary Bladder) என வித விதமான புற்றுநோயையும் தருகிறது...

நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் புகைப்பவர்களுக்கு இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டு விந்தணுக்களின் வீரியம் குறைதல் , ஆணுறுப்பின் விறைப்புத் தன்மை குறைதல், குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் மனோரீதியான பாதிப்புகளையும், தாம்பத்திய வாழ்வில் சிக்கலையும் உருவாக்கி நிம்மதி இழந்து மன உளைச்சலால் தற்கொலை வரை இழுத்து செல்லும்....இது எல்லோருக்குமே தெரிந்த உண்மை... ஆனாலும் புகை பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை விடுவதாயில்லை...

சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்று வர மிக மிக முக்கிய காரணம் புகைதான்... எல்லாம் தெரிந்தும் பலர் புகைப்பதை கவுரவமாகவும், கம்பீரமாகவும் கருதுகிறார்கள்.... தவணை முறையில் தற்கொலை செய்து கொள்ள எப்படி இவர்கள் சந்தோஷமாய் சம்மதிக்கிறார்கள்..

உடலின் சூட்சுமங்கள் - உணர்ந்து சொன்ன சித்தர்கள்...!!!

நம் சித்தர்கள் நம் உடலின் நரம்புகள், அவற்றின் இயக்கங்கள், சுரப்பிகள் (Glands), அவற்றில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் என எல்லாவற்றையும் பற்றி மிக விரிவாக, எவ்வித தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே கண்டறிந்து நமக்கு அருளிச்சென்று இருக்கிறார்கள்...

ஒரு நாளில் ஒரு மனிதன் 21,600 முறை சுவாசிக்கிறான் என்றும், அவனது மூளையை 1000 கோடி நரம்புகள் இயக்குகின்றன என்றும் அவர்கள் அன்றே அறிந்து இருக்கிறார்கள்... மேலும், மூளையில் இருக்கும் திசுக்களின் எண்ணிக்கை 1300கோடி , உடலில் இருக்கும் எலும்புகள் 216 , உடம்பின் மொத்த இரத்த குழாய்கள் 700, 555 தசைகள், 72 ஆயிரம் நரம்புகள் ஆகியவை இருக்கிறதென்றும் எவ்வித மருத்துவ உபகரணங்களோ, நவீன கருவிகளோ இன்றி அவர்கள் கண்டறிந்து சொல்லி இருக்கிறார்கள்...

மனித உடலில் இயங்கும் பத்து வகையான காற்றின் செயல்கள் , நரம்பு மண்டலத்தின் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கும் இடகலை, பிங்கலை, தண்டுவடம் பற்றிய அரிய தகவல்கள், அணுக்கள், திசுக்கள், இரத்தத்தின் வேறுபாடுகள், நிறம், குணம் என பல்வேறு மருத்துவ அற்புத தகவல்களை தெள்ள தெளிவாக விளக்கி இருக்கிறார்கள்...


அன்று அவர்கள் தங்களின் ஞானத்தால் உணர்ந்து சொல்லிச் சென்றவைகள் எல்லாம்.. இன்றும் நவீன விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ உலகிற்கும் பெரும் சவாலாகவே இருக்கிறது... எந்த வியாதி வந்தாலும் அதற்கு தகுந்த உணவு பழக்கத்தை கையாண்டாலே போதும்.... உடல் தனக்குத்தானே எந்த வியாதியையும் சரி செய்து கொள்ளும் என்று சித்தர்கள் மட்டுமே நமக்கு உணர்த்திச் சென்ற உண்மைகள்.
உடலினை பற்றி நவீன விஞ்ஞானம் கூட புரிந்துகொள்ள முடியாத அரிய தகவல்களை நம் சித்தர்கள் விளக்கி இருப்பது இன்றும் விளங்கிக் கொள்ள முடியாத அதிசயங்கள்.
சித்தர்கள் சொன்னதை இன்றும் கூட வியப்பாய் பார்க்கும் நவீன மருத்துவம் தரும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு பக்கவிளைவுகளையும், உடல் உபாதைகளையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்...
நோயால் பாதிக்கப்பட்ட உடன் பயமும் மன உளைச்சலும் சேர்த்துக்கொண்டு சீக்கிரம் குணமாக வேண்டும் என்ற அவசர கோலத்தில் நாம் உட்கொள்ளும் இரசாயன மருந்து மாத்திரைகளால் உடல் சோர்ந்து சீக்கிரமே எதிர்ப்பு சக்தியை இழந்து வலுவிழந்து போகிறது...
உடல், உயிர், மனம் அனைத்தின் இரகசியங்களையும், சூட்சமங்களையும் புரிந்து வாழ்ந்தால் வாழும் காலம் ஆரோக்கியம் என்பதில் துளியும் ஐயம் இல்லை...

தும்மல்

நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.
மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள் (தூசிகள், துகள்கள்) நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.
நுரையீரலில் இருந்து வெளிப்படும் நாம் போடும் (தும்மல்) காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும் . உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.
ஆனால் அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழைந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர்...



அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்கவும்.(கோலி அடிப்பதுபோல) அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும்.

ஆனால் இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது. ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.
அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்துக் கொள்ள வேண்டும்.

சுண்டுவிரல்தானே அதால என்ன செய்யமுடியும்னு நினைக்காதீங்க.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுங்க.... காசா.. பணமா..... முயற்சித்துதான் பாருங்களேன்...

சுக்கு - மைக்ரேன் தலைவலிக்கு



மைக்ரேன் எனப்படும் கடுமையான தலைவலியா?
உண்ணும் ஒவ்வொரு உணவிலும் சிறிதளவு சுக்கைச் சேர்த்துக் கொண்டே வந்தால்... மைக்ரேன் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் பறந்தே போகும். சுக்கு காபிக்கு பனைவெல்லம் சேர்த்துக்கொள்ளலாம். பாலும், சர்க்கரையும் சேர்க்கக் கூடாது.

அக்குபஞ்சரில் ஐம்பூத புள்ளிகள்


அக்குபஞ்சர் என்பது பரம்பரிய சீன மாற்று மருத்துவம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறை. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான அக்குபஞ்சர் மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகளும் இல்லை. பக்கவிளைவுகளும் இல்லை.
அக்குபஞ்சர் மனித உடலில் உள்ள முக்கியமான (பாதிக்கப்பட்ட உறுப்பின்) புள்ளிகளில், மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளைச் செலுத்தி உள்ளுறுப்புகளை சரியான முறையில் தூண்டி சீராக செயல்பட வைத்து நோயைக் குணமாக்கும் ஒரு மருந்தில்லா மருத்துவம்.
மேலும் நம் உடலில் உள்ள நாடித்துடிப்பு (Pulse) மூலம் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை எளிய முறையில் கண்டறிந்து முற்றிலும் குணமாகக்கூடிய வைத்திய முறையாகும். ஆங்கில மருத்துவம் கைவிட்ட பல நோய்களுக்கு மாற்று மருத்துவ முறைகள் மட்டுமே மிகச் சிறந்த நிரந்தர நிவாரணி மற்றும் தீர்வு என மக்கள் அறிந்து தேடியும் நாடியும் வர ஆரம்பித்து விட்டார்கள்.


அக்குபஞ்சர் முறையில் உடலில் பாதிக்கப்பட்டுள்ள உறுப்பின் சக்தி நாளங்களைத் தூண்டுவதால் அவை நரம்பு மண்டலம் மற்றும் வயிற்றின் உள்ளுறுப்புகளை ஒழுங்குபடுத்திச் சீராக இயங்கச் செய்கிறது. நோய்களுக்கு தீர்வும் கிடைக்கிறது. உடலும் ஆரோக்கியம் பெற்று உறுப்புக்களுக்கு வலிமை கூட்டுகிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) அக்குபஞ்சர் மருத்துவ முறையை அங்கீகரித்தப் பிறகே பல நாடுகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அக்குபஞ்சர் மருத்துவத்தை முறையாக கற்பித்து வருகின்றன.

மனிதனின் உடற்கூறுகள் எலும்பு, நரம்பு, தசை, மூட்டு, தோல், என ஐந்து வகைகளாய் கூறப்படுகிறது. இந்த பிரபஞ்சம் எப்படி நிலம் , நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் இயங்குகிறதோ... அதே போல நமது உடலும் பஞ்ச பூதங்களால் தான் இயங்குகிறது. இந்த பஞ்ச பூதங்களும் ஒன்றை ஒன்று சார்ந்தும், கட்டுப்படுத்தியும் வைத்திருப்பதையும் மறுக்க இயலாது... நமது உடலும் அப்படித்தான்... இந்த பஞ்ச பூதங்களும் நமது உடலில் ஆதிக்கம் செலுத்தி இயங்க வைக்கிறது. இவைகள் சீராக இயங்கும் வரை உடலும் சீராக இயங்கும். இந்த பிரபஞ்சத்திலும், நம் உடலளவிலும் பஞ்சபூதம் சரிவர இயங்காமலோ, அல்லது அதிவேகமாய் இயங்கத் தொடங்கினாலோ அப்போது தான் பிரச்சனைகள் பல ரூபத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும்.

நமது உடலில் மொத்தம் 361 அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன . முக்கியமான 12 உறுப்புகளில் ஒரு உறுப்பிற்கு 5 புள்ளிகள் வீதம் 60 பஞ்சபூத புள்ளிகளை அக்குபஞ்சர் மிக முக்கிய புள்ளிகளாக அடையாளப்படுத்துகிறது... அந்த முக்கியமான 12 உறுப்புகள் யாவை..அவற்றின் செயல்பாடுகள் என்னென்ன... அவற்றில் இந்த பஞ்ச பூத புள்ளிகள் எங்கெங்கு அமைந்திருக்கிறது.... அந்த உறுப்புகளுக்கு வரும் பாதிப்பை இந்த பஞ்ச பூத புள்ளிகளை கொண்டு அக்குபஞ்சர் மருத்துவம் எவ்வாறு சரிசெய்கிறது என்பதை பற்றி எல்லாம் விரிவாக இனி வரும் கட்டுரைகளில் பார்க்கலாம்....

இஞ்சி (Ginger)

இஞ்சி நெஞ்செரிச்சல், அஜீரணம், மூட்டுவலி, வீக்கம், குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி, ஜலதோஷம், வறட்டு இருமல்,ஆஸ்துமா என பல வியாதிகளை நீக்கி புத்துணர்ச்சி கொடுத்தாலும்... நாம் உண்ணும் உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை எரித்து, செரிமானத்தை எளிமையாக்கும் மிக முக்கியப் பணியை செய்கிறது இஞ்சி....

டீ, காபி!!!

உணவுக்கு பின் டீ, காபி குடித்தால் ..... உணவில் இருக்கும் இரும்புச் சத்தை உடலோடு கலக்க விடாமல் செய்து, இரத்தச்சோகையை உண்டாக்கி விடும். இனி சாப்பிட்ட பின் டீ, காபி குடிப்பீங்களா?...