செவ்வாய், 23 ஜூலை, 2013

மனித உடல்..

ஒரு ஆச்சர்யத்தின் மொத்த தொகுப்பு... தன்னுள் ஏற்படும் குறைபாடுகளை ஒரு அடையாளத்தின் மூலம் வெளிப்படுத்தவும்.. அதனை தனக்குத்தானே சரிசெய்துகொள்ளவும் ஆற்றல் பெற்ற அற்புத களஞ்சியம்...
தாக்கும் நோய்களுக்கு ஏற்ப உடலின் ஆங்காங்கே அமையப்பெற்ற அதிசய புள்ளிகளை கண்டறிந்து அதை தூண்டுவதன் மூலம் அனைத்து நோய்களையும் சரி செய்யும் நமது பாரம்பரிய மருத்துவ முறைதான் அக்குபஞ்சர்...

மருந்துகளின் அளவை குறித்தோ, அல்லது மருந்தே இல்லாமலோ இந்த மருத்துவமுறை கையாளப்படுவதால் பக்கவிளைவுகள் இல்லாதது என்பதற்கு நூறு சதவிகிதன் உத்திரவாதம் தரக்கூடியது...

உலகம் முழுக்க அக்குபஞ்சர் மருத்துவ சிகிச்சை போற்றப்படுகிறது... வர்மக்கலை (தொடு வர்மம்) என்ற நம் முன்னோர்கள் கண்டறிந்த இன்னொரு கலையின் மேம்பட்ட பரிணாமமே அக்குபஞ்சர்.

அங்காங்கு அமைந்த அந்த அதிசய புள்ளிகளையும் , அதனை ஒரு சிறிய ஊசியை செலுத்தியோ- அல்லது விரல்நுனியில் அழுத்தம் கொடுத்தோ தூண்டி நோயற்றவாழ்வை தரும்/பெரும் முறையையும் அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறையின் மூலம் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச்சென்ற பொக்கிஷத்தை எல்லோருக்கும் தெரிவிக்கும் நோக்கம் தான் இந்த பக்கம்...

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள்.. ஒரு விஷயத்தை கேட்க கேட்க , பார்க்க பார்க்க, உணர உணர அதன்மீது நமக்கும் ஆர்வமேற்பட்டு அதில் ஈடுபாடுகொண்டு கற்க தொடங்கினால் வல்லுனராகாவிடினும் கூட ஒரு விபரம் தெரிந்தவராக ஆகலாமே...

இதற்கான முறையான படிப்பை எளிய முறையில் வடிவமைத்து பல கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன... இந்த மருத்துவ முறையின் அடிப்படை அறிவை எல்லோருக்கும் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கமே இப்போது உங்கள் முன் கணினித்திரையில் விரிந்திருக்கிறது.... இனி வரும் காலங்களில் தொடர்ந்து விரியும்...

குறிப்பு....: இத்த காயங்கள், மருத்துவம் சார்ந்த முதலுதவிகள், அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டிய அதி தீவிர நிலைகளில் அக்குபஞ்சர் பலனளிக்காது...

1 கருத்து: