செவ்வாய், 23 ஜூலை, 2013

சிறுநீரகங்கள்

Photo: சிறுநீரகங்கள்
மனித உடலில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பது சிறுநீரகங்கள் (கிட்னி). நம் உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று. உலகின் மிகச்சிறந்த , மிக நுண்ணிய சுத்திகரிப்பு ஆலை என்றே சொல்லலாம்.. கருவில் நான்காவது மாதத்திலிருந்து துவங்கி மனிதனின் இறுதி மூச்சு வரை இடைவிடாது தொடர்ந்து இயங்குகின்ற உறுப்பு. 11–14 cm நீளத்திலும் , 6 cm அகலமும் மற்றும் 4 cm தடிமனும் கொண்ட இவ்வுறுப்பு இரத்தத்தை சுத்தம் செய்து அதிலிருக்கும் கழிவுகளை பிரித்தெடுத்து கழிவாக வெளியேற்றுகிறது.
இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது.உடலில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீராக வெளியேற்றுவது மட்டுமே சிறுநீரகங்களின் வேலை இல்லை.. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும், உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும், இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும், அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான். உடலில் பிற உறுப்புகள் முறையாக செயலாற்றக் கூடிய முழு காரணியே நம் சிறுநீரகங்கள் தான்.....
நெப்ஃரான்களால் ஆனது நமது சிறுநீரகம்...இவைதான் ரத்தத்தை சுத்தம் செய்யும்.. இவை எப்போது பழுதடைந்து ரத்தம் சுத்திகரிக்கும் வேலையை சரிவர செய்ய இயலாமல் போகிறதோ அப்போது செயலிழக்க ஆரம்பிக்கும்.....
உணவு பழக்கம் தான் சிறுநீரகக் கோளாறுக்கு முக்கிய காரணம் . பாஸ்ட் புட் வகை உணவுகளை தவிர்க்க வேண்டும். நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு இரண்டும் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கிறது. இந்த நிலைக்கு செல்லாமல் இருக்க சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
நீண்டநாள் இரத்தக்கொதிப்பு, நீண்டநாள் நீரிழிவு, பரம்பரை குடும்பவழி மரபணுக்கள் பாதிப்பு, நாட்பட்ட சிறுநீர்குழாய் அடைப்பு, வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வது போன்ற , இரசாயன பொருட்களையும் தொடர்ந்து சாப்பிடுவது, சிறுநீரக இரத்தக்குழாய்களில் ஏற்படும் ஒவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படுவது நாளடைவில் வரும் சிறுநீரக செயலிழப்பாகும்.
சிறுநீரக செயல்திறன் குறைகின்ற போது நமது உடலிருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுப் பொருட்களான யூரியா, கிரியாடினின் மற்றும் பிற தாதுப் பொருட்கள் இரத்தத்தில் கலந்து விடுவதால், சிறுநீர் சரிவர வெளியேற முடியாத நிலையில் மூச்சுத்திணறல், அதிக இருமல், நெஞ்சுவலி, சளியில் இரத்தம் வருதல், விக்கல், பசியின்மை, இரத்த வாந்தி, நினைவிழத்தல், குழப்பம்,கைநடுக்கம், நரம்பு தளர்ச்சி, தோல்வறண்டு அரிப்பு, இரத்தசோகை ஏற்படுதல் இதன் அறிகுறிகள்..............இதனால் சிறுநீரகத்தை தொடர்ந்து இதயம், மூளை, நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
நம் உயிர் சக்தியான ஜீவாதார மூலச்சக்தி இருப்பதே சிறுநீரகங்களில் தான் ....ஆனால் நம்மில் பெரும்பலானோர் வரும் முன் காப்பதை விட வந்த பின் பார்த்து கொள்ளலாம் என்பதிலே கண்ணும் கருத்துமாய் இருப்பர் .....
இந்த மாதிரி பிரச்சனைகளில் இருப்போர் பெரும்பாலும் பயத்தினாலே இறந்து விடுவர்......காரணம் ...இதற்கு சிகிச்சையே இல்லை, இதற்கு பிறகு வாழ்க்கையே இல்லை என்று மிரட்டியே கொன்று விடுவர்கள் நம்மவர்கள்
எல்லோருக்குமே சிறுநீரகங்களின் பாதிப்பு ஒரே காரணத்தினால் உண்டாவது இல்லை.....அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சிறுநீரக பாதிப்பு உள்ள மற்ற நோயாளிகளிடம் கேட்டு அதன்படி நடக்காமல் உடலின் பிரச்சனைக்கு தகுந்தாற்போல நம்மை நாமே முறை படுத்தி கொள்ளலாம் ... எதற்குமே ஒரு மாற்று உண்டு...எந்த ஒரு விளைவுக்கும் ஒரு காரண காரியமும் , அதற்கு ஒரு மூலகாரணமும் இருக்கும் ...அதை தேடி கலைந்தால் எல்லாமும் கைகூடும் ...முடியாதது எதுவுமே இல்லை......
அனைத்து உறுப்புகளின் பாதிப்புகளில் இருந்து வெளிவரவும், சிறுநீரகங்களை மறுபடியும் நல்ல நிலையில் இயங்க வைக்கவும் முடியும் .....

அக்குபஞ்சரில் தகுந்த புள்ளிகளை தூண்டுவதன் மூலமாகவும், உணவு கட்டுப்பாடுடனும், பயத்தை அறவே நீக்கிவிட்டு மன அமைதியுடன் இருந்தால் மொத்த பிரச்சனைகளில் இருந்தும் வெளிவருவதுடன் சிறுநீரகங்களையும் மறுபடியும் தன் நிலைக்கு கொண்டு வரலாம் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக