செவ்வாய், 23 ஜூலை, 2013

உடல் மாற்றங்கள் உறுப்புகளுக்கு ஏற்ப மனநிலையில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

தட்ப வெப்ப நிலைகள் மாற்றம் மற்றும் சுற்று சூழல் மாற்றம் மனித உடலுக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும் ... இந்த உடல் மாற்றங்கள் உறுப்புகளுக்கு ஏற்ப மனநிலையில் வெளிப்படும் ... இந்த மனநிலையை நிச்சயமாய் நாம் இன்னொருவர் மீது வெளிப்படுத்துவோம் ... அப்படியாக வெளிப்படுத்தும் மனோ நிலையை சற்று நேரம் நாமே கூர்ந்து கவனித்தோமானால் அது எந்த உறுப்பின் செயல் திறனில் குறைபாட்டை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அறியும் திறன் பெறலாம் ... இந்த மாற்றம் அந்த உறுப்புகளின் செயல்படும் திறனில் குறைபாடு ஏற்பட தொடங்கி இருப்பதற்கான அறிகுறிகள். ..

கல்லீரல் (கோபம் )

எப்போதும் யார்மீதாவது கோபம் ... அல்லது எதன் மீதாவது கோபம் ... வீட்டில் இருப்பவர்களுடன்.. சாலையில் வாகனம் ஓட்டுபவர் மீது ... விதிகளுக்கு முரணாக செயல் படுபவர் மீது .. ஊழல் செய்யும் அரசியல் வாதிகள் மீது ... இப்படி நமக்கு நேரடியாய் தொடர்பு உள்ளவர்கள்.. நேரடியாய் தொடர்பில்லாதவர்கள் எல்லோர் மீதும் காரணமில்லாமல் கோபம் வந்தால் .. நம்முடைய கல்லீரல் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறி......

இரைப்பை ( இரக்கம் )

எல்லோரையும் பார்த்து இரக்கப்பட தோன்றினால் அது நல்ல விஷயம் தான் ... ஆனால் அதே நேரம் இரைப்பை பாதிப்பின் அறிகுறியே இரக்க மன நிலையாக வெளிப்படும் ..

நுரையீரல் (துன்பம் )

எந்த நேரத்திலும் துன்பத்தில் உழல்வதாக ... நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று கவலை கொள்வது நுரையீரல் பாதிப்பின் அறிகுறி ..

இருதயம் ( அதீத சந்தோஷம் )

நான் எல்லாவற்றையும் சாதிப்பவனாக்கும் ... என்னால் செய்ய முடியாதது எதுவும் இல்லை .. பாருங்களேன் .. நான் என்னென்ன செய்திருக்கிறேன் ... எல்லோரும் என்னையே பார்க்கிறார்கள் ... என்று வறட்டு பெருமையும் கர்வமும் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாய் நினைத்துக்கொண்டால் .. அது நல்ல விஷயம் இல்லை .. உங்கள் இருதய செயலபாட்டில் குறை இருப்பதற்கான அறிகுறி .....

சிறு நீரகங்கள் ( பயம் )

நடக்கும் போது கால் இடறி விழுந்துவிடுவோமோ .... நாற்காலியில் உட்காரும் போது அதன் கால் உடைந்து விடுமோ .. சாலையில் வரும் ஏதாவது ஒரு வாகனம் நம் மீது மோதி விடுமோ ... நம்மை யாரும் ஏமாற்றி விடுவார்களோ .. என்று அதீத கற்பனையில் பயந்துகொண்டே இருப்பது முன்னெச்சரிக்கை இல்லை .... உங்கள் சிறு நீரகங்கள் தன்னுடைய இயல்பான செயல் பாட்டிலிருந்து சற்றே குறைய தொடங்கி இருக்கிறது என்பதற்கான அறிகுறி ...

அமைதியாக நமது மன நிலையை நாமே கவனித்தால் உறுப்புகளின் குறைபாடுகளை தொடக்க நிலையிலேயே சரி செய்து மீண்டும் நல்ல நிலையிலேயே செயல் பட வைக்கலாம்...

ஆகவே நம்மை நாமே கூர்ந்து கவனித்தால் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிந்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம் !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக