செவ்வாய், 14 அக்டோபர், 2014

தமிழ் கல்வெட்டுகள்

இந்தியாவில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட 72000 கல்வெட்டுகளில், 45000 கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் இருப்பதாக இந்திய தொல்பொருள் துறையின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. (நம்மாழ்வார் சிலை திறப்பு மற்றும், இயற்கை விதை அங்காடி மூன்றாம் ஆண்டு விழாவில் ஆறாம் திணை, ஏழாம் சுவை திரு.சிவராமன் அவர்கள் சொல்லக் கேட்டது)

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, தங்களின் வாழ்க்கை முறை, சமகால வரலாறுகளை அழிந்து விடாமல் பதிவு செய்து, அதனை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் தமிழர்களிடம் ஆதிகாலம் தொட்டே இருந்திருக்கிறது...
அப்படி அவங்க பதிவு பண்ண விஷயங்கள்ல போர் வெற்றிகள், தந்திரங்கள், வாழ்க்கை முறைகள், தொழில்கள் என பல விஷயங்கள் இருக்கும்.. அதெல்லாம் தேவையானவங்க தெரிஞ்சவங்க பார்த்துக்குவாங்க. நாம நமக்கான தகவல்கள் எதுவும் இருக்கா பாக்கலாம்.







கல்வெட்டு காலத்திற்கு போக வேணாம். நம் முன்னோர்கள் என்ன சொன்னாங்கன்னு மட்டுமே பார்க்கலாம். ஆனால் துரதிஷ்ட வசமாக, மேலை கலாச்சாரத்தின் போலித்தனமான வெளிச்சத்தில் சிக்கி அந்த பொக்கிஷங்களை பாதுக்காக்க நாம் மறந்துட்டோம்.

உணவே மருந்து. ஆமாங்க....எப்படி விவசாயம் பண்ணாங்க.. அத எப்படி சாப்பிட்டு ஆரோக்கியமா நூறு வருஷத்துக்கும் மேல வாழ்ந்தாங்கன்னு கூட நமக்கு சொல்லிட்டு தான் போயிருக்காங்க! மூலிகைகள், காய்கறிகள், பழங்கள், கம்பு, வரகு சாமை, திணைன்னு சிறுதான்ய வகைகள், அதன் மருத்துவ குணங்கள் பத்தி சொல்லி இருக்காங்க. ஆனா நாம அதை எல்லாம் விட்டுட்டு.. "கோணலா இருந்தாலும் என்னோடதாக்கும்" "க்ரீமா.. சாக்லேட்டா" ன்னு விளம்பரங்கள்ல மயங்கி ஜிகினா பேப்பர் சுத்தின விஷத்த வாங்கி சாப்பிட்டு சிறுக..சிறுக செத்துகிட்டிருக்கோம்.

நம் முன்னோர்கள் வழிமுறையில் இயற்கை, பஞ்சபூத கோட்பாடுகள், உணவு, தியானம், யோகா போன்றவற்றை புறந்தள்ளாமல், அவர்கள் வழியில் பயணிப்போம். ஆரோக்கிய வாழ்விற்கு இயற்கையா கிடைக்கிற மூலிகை மற்றும் உணவு வகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவங்கள மாதிரி நூறு வருஷம் வாழாட்டியும், நோய் நொடி இல்லாம வாழும் காலம் ஆரோக்யமா வாழலாமே. (இத சொல்றது நான் தான்)..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக