செவ்வாய், 14 அக்டோபர், 2014

கொய்யா- இந்தியாவின் நான்காவது சிறந்த பழம்

ஆதிகால மனிதனுக்கு எளிதாக கிடைத்த மிகவும் பழமையான உணவு பழங்கள் மட்டுமே. மனிதனுக்கு தேவையான அனைத்து உயிர்சத்துக்களும் பழங்களில் கிடைத்து விடும். பழங்களில் ஏராளமான பயன்கள் உள்ளன. பழங்கள் சாப்பிடுவதால் நமது உடலில் உண்டாகும் நோய்கள் அனைத்திற்கும் தீர்வு உண்டு. எப்போதும் நாம் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய வாழ்க்கையை வாழலாம். ஆனால் இயற்கைக்கு முரண்பட்டு நாம் செய்யும் காரியங்களே வியாதிகளுக்கு ஆணிவேராக அமைந்தும் விடுகிறது.
பழங்களின் வண்ணங்களும், நிறங்களும், சுவைகளும் அதில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களை பொறுத்தே மாறுபடுகிறது. பொதுவாக அமிலத்தன்மை அதிகமா இருந்தால் புளிப்பு சுவையும், சர்க்கரை சத்து அதிகம் இருந்தால் இனிப்பும், அமிலமும், சர்க்கரையும் சம அளவில் இருந்தால் புளிப்பும், இனிப்பும் கலந்தும் இருக்கும்.

நற்பலன்கள் பலவற்றை தன்னகத்தே குவித்து வைத்துள்ள பழங்களில் நாம் இன்றைக்கு பார்க்கப் போவது அமெரிக்காவை தாயகமாக கொண்ட, இந்தியாவின் நான்காவது சிறந்த பழமாக கருதப்படும், வெப்பமண்டல பகுதியின் ஆப்பிள் என்றழைக்கபடும் கொய்யாவைப் பற்றி தான்.

நம் ஊர் சீதோஷ்ண நிலையில் நன்றாக வளரும் கொய்யாப் பழத்தில் நெல்லிக்காய்க்கு அடுத்து வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. எப்போதும் எங்கும் மிக குறைந்த விலையில் கிடைக்கும் விலை மலிவான பழமான கொய்யாவில் முக்கிய வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாது உப்புக்களும் கொட்டிக் கிடக்கின்றன.

நான்கு ஆப்பிளுக்கு சமமான சத்து ஒரு கொய்யா பழத்தில் இருக்கிறது. கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்க உதவும். உடலில் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் இரத்தத்தில் கலந்தால், கொய்யாவில் நிறைந்துள்ள சத்துக்கள் விஷக்கிருமிகளை உடனே கொன்று விடும்.

அனைத்து நோய்களுக்கும் மூல காரணமே மலச்சிக்கல் தான். மலச்சிக்கல் போக எளிய வழி தினம் ஒரு கொய்யா சாப்பிடுவது மட்டுமே. மேலும் மலக்கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டது. ஆரம்ப காலங்களில் உள்ள மூல நோய்க்கும் இந்த பழமே சிறந்த மருந்து.

இப்போதைய உணவுப் பொருட்களில் இரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் உணவுக்குப் பின் ஒரு கொய்யா சாப்பிட்டால் வயிறு, குடல் இரைப்பை, கல்லீரல் மண்ணீரல், செரிமான உறுப்புகளைப் பலப்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு வியாதி உள்ளவர்களுக்கு மிகவும் உகந்த பழம்.

கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும். பற்களில் இரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவற்றை சரி செய்து பற்களையும், ஈறுகளையும் வலுவாக்கும். வாய்ப்புண்ணை குணமாக்கும். உடலை குளிர்ச்சியடைச் செய்யும். சொறி, சிரங்கு மற்றும் சரும நோய்களை போக்கும். நரம்புகளை பலப்படுத்தும். அதிக இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தும். இதய படபடப்பு போக்கும். எலும்புகள் பலப்படும். அறிவுத்திறன் அதிகரிக்கும். மாந்தம், இழுப்பு, வலிப்பு நோய்களுக்கு சிறந்த மருந்து கொய்யா.

இரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் 48 நாட்களுக்கு தொடர்ந்து தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால், இதில் உள்ள அதிக இரும்புச் சத்து இரத்தச் சோகை வராமலும், இரத்தத்தை சுத்திகரித்தும், உடலில் சக்தி ஏற்றும் உணவாகவும் செயல்படுகிறது.

வியாதிகள் பல இருந்தாலும் உலகமே நடுங்கும் வியாதியான புற்றுநோயை கூட தடுக்கும் சக்தி கொய்யாவுக்கு உண்டு. கொய்யாப்பழத்தில் லைகோபைன் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் உள்ளதால், புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும் குணம் கொய்யாவில் நிறைந்து இருப்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

நோய்களில் சிக்கியவர்கள், நோய் அண்டமால் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப்பழம் உண்டு நோயின்றி வாழலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக