சனி, 19 அக்டோபர், 2013

முகம் பொலிவு பெற

   பளிச்சென்ற முகம் இயற்கை முறையில் கிடைத்தால் அதன் பலன் கூடுமே தவிர குறையாது. ஆண், பெண் இருபாலரும் இம்முறையை உபயோகித்து இயற்கை முறையில் முகப் பொலிவை கூட்டலாம். ரசாயனக் கலவையால் இளவயதில் உண்டாகும் முகச்சுருக்கம் மற்றும் பக்க விளைவுகளில் இருந்து நம் முகத்தை காப்பாற்ற எளிய வழி.

பத்து பாதாம் பருப்பை இரவே ஊற வைத்து மறு நாள் பசும்பாலுடன் சேர்த்து நன்றாக பேஸ்ட்போல அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த விழுதை முகத்தில் பூசி 20லிருந்து25 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ முகம் பளிச்சென்று ஆகும்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

வெர்டிகோ (Vertigo)



அடிக்கடி வரும் தொடர் தலைச்சுற்றலே வெர்டிகோ எனப்படும்.

அடிக்கடி மயக்கம், தலைவலி, வேர்வை, தலைசுற்றல், எங்கோ பறப்பது போன்ற உணர்வு, குமட்டல், கண்கள் மங்கலாகவும் (அ) தெளிவில்லாத அசாதாரண கண் அசைவு, பேசும்போது நாக்குழறல், காது மந்தம் மற்றும் எப்போதும் ஒரு இரைச்சல், கை, கால்களில் பலவீனம், உட்கார்ந்தோ அல்லது நடந்து கொண்டிருக்கும் போதோ தலைசுற்றல், படுக்கையில் இருந்து எழுந்து நிற்கும் போது அறையே சுற்றுவது போல் தலைசுற்றல் போன்றவையே இந்நோயின் அறிகுறிகளாகும். இவர்களுக்கு குறிப்பாக கார், படகு ஓட்டும்போது தலை சுற்றல் வரும்.

இந்நோயின் பாதிப்பு மூளை நரம்பு மண்டலத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும். கண்டுக் கொள்ளதா வெர்டிகோ முடிவில் இருதய கோளாறில் நிறுத்தும். மேலும் இது முதுகுத்தணடுவடம் அதைச் சுற்றியுள்ள நரம்புகள், எலும்புப்பகுதி என அடுத்தடுத்து ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படைய ஆரம்பிக்கும்.

காபி, டீ , புகை, மது அறவே கூடாது. கொழுப்புசத்து நிறைந்த அசைவ உணவுகள், இனிப்பு, உப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி கீழே விழுந்து அடிபடுவதை தவிர்க்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் நரம்பு கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளுவது மிக்க நலம்.

நம் உடலில் தோன்றும் பெரும்பாலான வியாதிகளுக்கு மலசிக்கல் தான் காரணமாக அமைகிறது...இந்த வியாதிக்கும் முக்கிய காரணமே மலசிக்கல் தான்.இதுவே நாளடைவில் காதுகளின் உட்புற பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தலைசுற்றல் வந்தவுடன் உடனே அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டால் குறைய ஆரம்பிக்கும்.

நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்கள், கீரைகள், இளநீர், மோர் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்நோயால் பாதிக்கப் பட்டவர்கள் நெல்லிக்காய், இஞ்சி, தேன், சீரகம், சுக்கு, கொத்தமல்லி, கறிவேப்பலை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் மட்டுமே இந்த நோயின் பிடியிலிருந்து வெளிவரலாம். இந்நோய்க்கு உணவு மட்டுமே மருந்தாக முடியும்..

ஒரு சிலருக்கு உட்கார்ந்து எழுந்திருக்கும் போது சில நொடிகள் தலை சுற்றி பின் சரியாகும். அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த தலைசுற்றல் சிலருக்கு ரத்த அழுத்தம் குறைவதால், ரத்தக் கொதிப்பு அதிகமானாலும், குறைந்தாலும், சர்க்கரையின் அளவு கூடினாலும் குறைந்தாலும், தூக்கத்தின் அளவு குறைந்தாலும், கூடினாலும் தலைசுற்றல் வரும். தலைசுற்றல் வருவதற்கான மூலக் காரணங்களை கண்டுப்பிடித்து தீர்வு காணலாம்.

அக்குபஞ்சரில் நிரந்தர தீர்வு இந்த நோய்க்கு உண்டு என்று உறுதியுடன் கூறலாம்.

வலிப்பு நோய் (Fits )



இந்த நோய் குழந்தை முதல் முதியோர் வரை வயது வரம்பின்றி எந்த வயதினரையும் தாக்கும். பொதுவாக நோய்கள் குறித்த போதிய தெளிவின்றி நாமே எடுத்துக் கொள்ளும் மருந்துகளும், சிகிச்சைகளும், அறிவுரைகளும் நோயின் தன்மை அதிகமாகவதற்கு காரணமாக அமைகிறது. வலிப்பு நோயும் இதற்கு விதி விலக்கு அல்ல. வலிப்பு நோய் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லாத காரணத்தினால் இந்த நோயின் தாக்குதலும் தீவிரமாகவே இருக்கிறது.

வலிப்பு எனப்படுவது மூளைப்பகுதியில் ஏற்படும் இழுப்பு நோயின் தாக்குதல். மூளையிலிருந்து மைய நரம்பு மண்டலம் இயக்கத்தில் அடிக்கடி ஏற்படும் மாறுதல்கள், சிறிது நேரம் தடங்கல்கள் ஏற்பட்டு உறுப்புகள் கட்டுப்பாடில்லாமல் வெட்டி வெட்டி இயங்குவதே வலிப்பு எனப்படுகிறது.. இது காக்கா வலிப்பு, ஜன்னி, பிட்ஸ் மற்றும் எபிலெப்ஸி என்றும் வெவ்வேறு பெயர்களில் சொல்லப்படுகிறது.

விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்கள் , மூளையில் ஏற்படும் கட்டிகள், மூளைக் காய்ச்சல், பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள்/சிராய்ப்புகள், மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் , நரம்புமண்டலக் குறைபாடு , போதை பொருட்கள் மற்றும் மதுவால் ஏற்படும் மனம் மற்றும் நரம்பு மண்டல சிதைவு, உடலில் சர்க்கரை அளவு (அ) சோடியத்தின் அளவு குறைதல் , உறக்கமின்மை, காச நோய், அஜீரணம், குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாதல் போன்ற காரணங்களினால் வலிப்பு நோய் உண்டாகிறது. வேறு சிலருக்கு எந்த விதமான காரணமும் இல்லாமலும் வரலாம்.

கண் மேலே சொருகிக்கொண்டு மயக்கமடைதல், கை, கால் மற்றும் உடலில் உள்ள பாகங்கள் வெட்டிகொள்வதோடு வாயிலும் நுரை தள்ளுதல், தன்னிலை மறந்து பேசுதல், ஒரே இடத்தை கண்சிமிட்டாமல் பார்த்தல், அதிகபட்சமாக சிறுநீர் கழித்தல் ஆகியவை வலிப்பு நோயின் அறிகுறிகள் ஆகும்.

அதிக அளவு உணவு உட்கொள்வது, வெகுநேரம் தூங்காமல் விழித்திருப்பது, போதை பொருட்கள் மற்றும் மது அருந்துவது போன்றவற்றை வலிப்பு நோயாளிகள் தவிர்ப்பது அவசியம்.இந்நோய் உள்ளவர்களுக்கு கால்சியம், க்ளுக்கோஸ், சோடியம், அமிலம் மற்றும் எலக்ட்ரோலைட் போன்றவை சமனின்றி இருக்கும். எனவே அவர்கள் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் தவிர்த்து விட வேண்டும்.

வலிப்பு வந்தவரின் கைகளில் இரும்பு அல்லது சாவிக் கொத்தைத் திணித்தால் வலிப்புப் போய் விடும் என்று ஒரு நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. இது மூட நம்பிக்கையே தவிர குணமாக்கும் முறையும் இல்லை.முதலுதவியும் இல்லை. ஒரு தேக்கரண்டி (அ) கடினமான பொருளில் துணியை நன்றாக சுற்றி நோயாளியின் பற்கள் இடையில் வைத்தால் அவர்கள் தன நாக்கை கடித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

வலிப்பும் ஒரு நோய் தான் அதனால் இந்த நோய் உள்ளவர்களைக் கண்டு நாம் பயப்படாமல் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டாலே போதுமானது. சரியான சிகிச்சையால் முழுவதுமாக குணப்படுத்தி விடலாம்.

பூச்சி (Worms)

அதிகமாக பசி இருக்கும். சிலர் நன்கு சாப்பிட்டாலும் கூட எடை குறைவார்கள்.
இதற்கு காரணம் வயிற்றில் இருக்கும் பூச்சிகளே/ புழுக்களே ஆகும்.

இதன் அறிகுறிகளாக சளி மற்றும் வாந்தி, தூக்கத்தில் ஜொள்ளு (Salivation) வடிதல்,சில சமயம் வயிற்று போக்கும் ஏற்படும்.

மேலும் ஏனஸ்சில் (மலவாயில்) அரிப்பு மற்றும் தொப்புளுக்கு கீழ் அடிவயிற்றில் வலியும் இருக்கும்..

ஆண் மலடு ( Infertility in Men )

பொதுவாக கருத்தரிக்காத பெண்ணையும், ஒரு பெண்ணை கருத்தரிக்க வைக்க முடியாத ஆணையும் மலடு என்று குறிப்பிடுகிறார்கள்.

திருமணம் முடித்து ஒரு சில வருடங்களுக்கு பின்பு ஒரு பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அந்த பெண்ணிற்கு பிரச்சினை எதுவும் இல்லாத பட்சத்தில் அப்போது தான் ஒரு ஆண் தன் மலட்டு தன்மையை உணர ஆரம்பிக்கிறான்.
பெண்ணின் கருமுட்டை வளர்ச்சியடையாமல் மலட்டுத்தன்மை உண்டாவது போல , குறைவான விந்து எண்ணிக்கை மற்றும் வீரியமற்ற விந்தணுக்களால் ஒரு ஆண் தந்தையாக முடியாமல் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.

இதனால் அவர்களுக்கு இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவதோடு குழந்தையின்மையும் உண்டாகிறது. குடும்பத்தில் குழப்பமும் கூடுகிறது.
ஆண்களுக்கு மலட்டு தன்மை வர பல காரணங்கள் இருந்தாலும் சில பல காரணங்கள் இன்னும் அதிகமான பாதிப்பை உண்டு பண்ணுகின்றன.



லேப்டாப்பை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறைந்து குழந்தையின்மை ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது. மேலும் எண்டோகிரைன், வாஸ்குலர் நரம்பு, ஆண்களுக்கு விபத்தில் டெஸ்டிஸ்(விதைப்பை) காயம் (அ) அழுத்தம் ஏற்பட்டால், பொன்னுக்கு வீங்கி காரணமாக உண்டாகும் வைரஸ் தொற்று, மன அழுத்தம், பரம்பரை மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளே ஆண்களின் மலட்டு தன்மைக்கு காரணமாகி அவர்கள் நிம்மதியை தொலைத்து விடும்.

இதை சரிசெய்ய வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைகிறது. சீரான உடற்பயிற்சி, சூடான நீரில் தினமும் குளிக்காமல் இருத்தல், காபி, புகை மற்றும் மது பழக்கத்தை அடியோடு கை விடுதல், இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்தல் மிகுந்த பலன் அளிக்கும்.
யோகா, தியானம் போன்ற பழக்கங்களை அனுசரித்து வந்தால் விந்துவின் வீரியமும், எண்ணிக்கையையும் அதிகரிக்கும்.

ஆண், பெண் மலட்டு தன்மை என்பது ஒரு குறைபாடு தானே ஒழிய நோயே அல்ல.

வியாழன், 5 செப்டம்பர், 2013

கோகுலம் கதிரில் என்னை பற்றி....


பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடிய எந்த மருந்துகளையும் உட்கொள்ளாமல் அனைவரும் ஆரோக்கியமாய் வாழ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தை குறிக்கோளாக கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் அக்குபஞ்சர் மருத்துவத்தில் என்னுடைய சிறு பங்களிப்பை பற்றி கோகுலம் கதிர் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரை உங்கள் பார்வைக்கு...

என்னுடைய இந்த சிறு சேவையை பாராட்டி கட்டுரை வெளியிட்ட "கோகுலம் கதிர்" பத்திரிகை நிறுவனத்திற்கும் கட்டுரை வெளியாக காரணமாக இருந்த கே.இந்திரா அவர்களுக்கும் , "அறிவோம் அக்குபஞ்சர்" முகநூல் பக்கத்தின் வாயிலாக என்னுடைய சேவையை தொடர்ந்து உற்சாகத்துடன் செய்ய ஊக்குவித்து வரும் உங்கள் அனைவருக்கும் என் மனமாரந்த நன்றிகள்.

சோரியாசிஸ் (Psoriasis)


மிக எளிதில் குணமடையாத, மனிதனை மிகவும் பயமுறுத்தக் கூடிய நாட்பட்ட தோல் வியாதிகளில் இதுவும் ஒன்று. இந்த வியாதி ஏன், எதனால் வருகிறது என்று அறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் நிறைய காரணங்கள் தொடர்புடையதாய் இருக்கிறன.

உணவு ஒவ்வாமை, வளர்சிதை மாற்றங்கள், சுவாசகோளாறுகள் கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகள் ஏற்படும் தொந்திரவுகள் ஆகியவற்றின் மூலம் இது வரலாம்.. மன அழுத்தம், அதிகமாக மது குடிப்பது. புகைபிடித்தல், முக்கியமாக கடல் உணவு வகைகள் (தயிருடன் மீன் சேர்த்து உண்பது), சில மருந்துவகைகளின் ஒவ்வாமை போன்ற காரணங்கள் சோரியாசிஸ் நோயை அதிகப்படுத்துகின்றன. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இது தாக்க வாய்ப்பு உண்டு.

சோரியாசிஸ் யாருக்கு வேண்டுமானலும் வரலாம். இது தொற்றோ, வைரஸ், பாக்டீரியாவால் உருவாகும் நோயோ இல்லை. உயிருக்கு உடனே ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கடுமையான நோயும் இல்லை என்றாலும் உடல் அழகை பாதிப்பதால் தன்னம்பிக்கையை குறைத்து, மனச்சோர்வை உண்டு பண்ணும் என்பதில் ஐயம் இல்லை...
சாதாரணமாக மனிதனின் உடலில் தோலிலுள்ள செல்கள் சீராக வளர்ந்து நான்கு வாரங்களில் உதிர்ந்து விடும். ஆனால் இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் வெகு விரைவாக ஒரு சில நாட்களிலோ (அ) ஒரு வாரத்திலோ வளர்ந்து உதிர்ந்து விடும். அதிகப்படியான செல்களின் வளர்ச்சியே இதற்கு காரணம்..அளவுக்கு அதிகமாக உருவாகும் இந்த செல்களினால் தோல் தடிமனாகவும், சிவந்தோ (அ) வெள்ளை நிறத்திலோவும் காணப்படும். தோலின் மீதிருந்து வெண்மையான பளபளப்பான செதில்கள் மீன் செதில் போன்று உதிர ஆரம்பிக்கும்.


சிவந்த இந்த வகையான திட்டுகள் முதலில் சிறிய மற்றும் பெரிய அளவில் தோன்றும். இந்த வியாதி பெரும்பாலும் தலையில் பொடுகு போல தோன்றி அதுவே அரிப்பு, முடிகொட்டுதல் என ஆரம்பித்து பரவும்..ஆனால் இது சோரியாசிஸ் நோயின் பாதிப்பு என்று அறியாமல் பொடுகுக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டு இருப்போம். மாதகணக்கில் சரியாகாமல் உடலின் மற்ற பாகங்களில் பரவ ஆரம்பித்த பின் தான் வந்து இருக்கும் நோயின் தன்மை புரிய வரும். மேலும் முழங்கைகள், முழங்கால்கள் , கணுக்கால், கைகள், பாதம் மற்றும் இடுப்பின் கீழ்பகுதி , காதுக்கு பின்புறம், அக்குள், தொடையிடுக்கு, கை, கால் மடிப்புகள் ஆகிய இடங்களிலும் தோன்றும் சோரியாசிஸ் பெரிய வட்டங்களாக ,சிவப்பு நிறத்துடன் செதில்கள் போன்று இருக்கும். இந்த நோய் தலை முதல் இனப்பெருக்க உறுப்புகள் உட்பட எந்த பகுதியில் வேண்டுமானாலும் வரும்.

சொரிந்தால் இரத்த கசிவுடன் செதில் போல உதிர்தல், கைவிரல், கால்விரல் நகங்களில் சொத்தை, மூட்டுகளில் வலி என உடல் முழுவதிலும் பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துவதொடு மட்டுமில்லாமல் வெளித்தோற்றத்தையும் இது பாதிப்பதால் மற்றவர்களின் வித்தியாசமான, அருவருக்கத்தக்க பார்வைக்கு உள்ளாவதால் தீவிர மனஉளைச்சளையும் ஏற்படுத்தும். மேலும் நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் தண்டுவடம் மற்றும் மூட்டுகளையும் பாதித்து ஆர்த்ரைடீஸ் (arthritis) கண்டிப்பாக வரும்.

இது மனைவி (அ) கணவன் யாருக்கு இருந்தாலும் மற்றவர்களுக்குப் பரவாது. இந்த தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை தொடுவதாலோ, அவர்கள் உபயோகிக்கும் பொருட்களை நாம் உபயோகிப்பதாலோ இந்த நோய் பரவாது.. ஆனால் இந்த நோய் காரணிகள் மரபணுக்களின் வழியாக கடத்தப்படுவதால் இந்த நோயின் தாக்குதலுக்குள்ளானவர்களின் வாரிசுகளுக்கு இந்த நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்...சமயங்களில் மூன்றாவது, நான்காவது தலைமுறையில் கூட இதன் பாதிப்பு வெளிப்படும். மரபு வழி காரணம் சொல்ல பட்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுவும் ஒரு காரணமே...

இந்த வியாதி எந்த நாட்டு மக்களையும் விட்டு வைத்ததில்லை...இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கிறது . உலகின் மொத்த மக்கள் தொகையில் 2% பேர் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும்... இந்தியாவில் 16 மில்லியன் பேரும் , அமெரிக்காவில் 6 மில்லியன் பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஸ்வீடனின் மொத்த மக்கள் தொகையில் 3% பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன...

சோரியாசிஸ் தோல் வியாதிக்கு வெளிநாடுகளில் டாக்டர் பிஷ் அல்லது கர்ரா ரிஃபா (GURRA RUFA) என்ற மீன்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது... இந்த மீன் நிப்பிள் மீன்கள் என்றும் கங்கள் மீன்கள் என்றும் வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது... இது மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் நதிகளில் இருக்கும் மீன்களை கண்ணாடி தொட்டியில் வளர்த்து சோரியாசிஸ் நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை ஒரு தற்காலிக தீர்வை தருமே தவிர நிரந்தர தீர்வு ஆகாது... மரபணுக்களில் இருக்கும் இந்த நோய் காரணிகளை முற்றிலும் நீக்க முடியாது என்று கருத்து பரவலாக இருந்தாலும் இந்நோய் குறித்து கவலை, பயம் கொள்ளாமல் மனதை எப்போதும் அமைதியாக வைத்து கொள்ளுதல், யோகா, தியானம் மூலமாகவும் உடலின் தேவை அறிந்து உண்ணுதல் உறங்குதல் என் வாழ்ந்தால் இந்த வியாதியை பூரணமாக கட்டுப்படுத்தி நோயின் தாக்கத்திலிருந்து மீளலாம்.

மேலும் இந்த தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைக்காமல் அவர்களுடன் சகஜமாக பழகுவதன் மூலம் அவர்களுக்கு மனோ ரீதியாக பக்கபலமாகவும், ஆறுதலாகவும் இருக்கலாம